Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.ஜ.க ஆட்சி உறுதியாகிறது: அனைத்து டிவி கருத்துக் கணிப்புகளின் முழு விவரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுவதால் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்:

டைம்ஸ் நவ்

பா.ஜ.க கூட்டணி 249, காங்கிரஸ் 148, இதர கட்சிகள் 146 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க- 31, தி.மு.க- 7, காங்கிரஸ் -1 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.

ஏ.பி.பி.- ஏ.சி. நீல்சன்

பா.ஜ.க கூட்டணிக்கு 272க்கும் அதிகமான இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று கூறியுள்ளது.

சி.என்.என்.-ஐ.பி.என்.

பாரதிய ஜனதா கூட்டணிக்கு 270 முதல் 282 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 92 முதல் 102 இடங்களும் கிடைக்கும் என்றும், இதில் காங்கிரசுக்கு மட்டும் 72 முதல் 82 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே- சியோரோ போஸ்ட்

பாஜக கூட்டணி 261- 283 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 110-120 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக 20-24, திமுக 10-14, பாஜக கூட்டணி 2-4, இதர கட்சிகள் 1-3 இடங்களில் வெற்றிபெறும் என்று கணித்துள்ளது.

ஜீ நியூஸ்

பாஜக கூட்டணி 299, காங்கிரஸ் கூட்டணி 112, இதர கட்சிகளுக்கு 132 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

புதிய தலைமுறை

பாஜக கூட்டணிக்கு 289 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும், மற்றவர்கள் 153 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. 27 இடங்களிலும், திமுக கூட்டணிக்கு 6 இடங்களிலும், பாஜ கூட்டணி 5 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது.

தந்தி டிவி

அ.தி.மு.க.வுக்கு 29 இடங்களும், தி.மு.க கூட்டணிக்கு 5 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

என்.டி.டி.வி.

பாஜக கூட்டணிக்கு 283, காங்கிரஸ் 99, இதர கட்சிகள் 161 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.

நியூஸ் எக்ஸ்- சி வோட்டர்

பாஜக கூட்டணிக்கு 289 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும் இதர கட்சிகளுக்கு 148 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. பாஜக தனியாக 249 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 78 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இந்தியா நியூஸ்

பாஜக கூட்டணிக்கு 315 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 80 இடங்களும் பிற கட்சிகளுக்கு 148 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா டிவி

பாஜக கூட்டணி - 317, காங்கிரஸ் கூட்டணி - 104, மற்றவை - 122 இடங்களைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க 22- 28 இடங்களையும், தி.மு.க 7-11 இடங்களையும், பா.ஜ.க கூட்டணி 4-6 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறியுள்ளது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27868

ராகுல் டம்மி காந்திக்கும் தகப்பனை போல் அரசியல் துண்டற தெரியாது.

குடும்ப விமானத்தில் சுற்றிவிட்டு தேர்தல் நேரம் படங்காட்டுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூடுதலான கணிப்பின்படி ஒரு தொங்கு ஆட்சிதான் அமையம் போலை இருக்கு. பாப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அபிப்பிராய தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதாக் கட்சி வெற்றிபெறுமா?

 

ஐரோப்பியசெய்தியாளர்

Modi_CI.jpg

இந்தியாவில் சகல கட்டத் தேர்தல்களும் முடிவடைந்த நிலையில் வெளியான தேர்தல் முடிவுகள் பற்றிய அபிப்பிராயமானது, நரேந்திர மோடியின் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றிபெறுமெனக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற நான்கு அமைப்புகளின் தேர்தலிற்கு பின்னான கருத்துக் கணிப்புகளும், நரேந்திர மோடி முதன் மந்திரியாகத் தேர்வு செய்யப் படுவாரெனத் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சி இந்தியாவை சுயேட்சையாக ஆளக் கூடிய பெரும் பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும் அந்த அமைப்புகளின் ஆய்வு அபிப்பிராயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நரேந்திர மோடி இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைப் பெற நேரின் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உண்டெனவும், நிதானமான அரசொன்று இந்தியாவில் அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்து வாதக் கொள்கைகளைக் கொண்ட நரேந்திர மோடி, ஆட்சி பீடத்தில் அமர்ந்தால், முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனும் அச்சம் முஸ்லீம் மக்கள் மத்தியிற் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த பத்து ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சி நடாத்திய ஆட்சியில் அராஜகமும், வேலையில்லாத் திண்டாட்டமும், ஊழலும் பெருகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியப லோக்சபாவிற்கான 545 ஆசனங்களில், 270 இலிருந்து 282 ஆசனங்களை பாரதிய ஜனதாக் கட்சி பெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டென்றும், காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 92 இலிருந்து 102 ஆசனங்களை மட்டுமே பெறும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பின் படி நிகழக் கூடுமாயின், நேரு-காந்தியின் தலைமையில் உருவான காங்கிரஸ் சந்திக்கும் மிக மோசமான தேர்தல் தோல்வியாக இது அமையுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2002 களில் மோடியின் பதவிக் காலத்தில் குஜராத்தில் இடம் பெற்ற கலவரத்தில் பல ஆயிரக் கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டமையும், 2005 களில் அமெரிக்கா, மத சுதந்திரத்தை மறுத்ததாகக் காரணம் காட்டி நரேந்திர மோடிக்கு பிரயாண அனுமதி வழங்க மறுத்தமையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வருகின்ற வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடப்படும் வேளை, 2004 களில் இடம் பெற்ற தேர்தலில் நரேந்திர மோடியின் கட்சி வெற்றி பெரும் என்ற அபிப்பிராயம் பொய்யானதும் நினைவு கூறப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/106872/Default.aspx

 

"ஆட்சி பீடத்தில் அமர்ந்தால், முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனும் அச்சம் முஸ்லீம் மக்கள் மத்தியிற் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது"

பாகிஸ்தான் டீமுக்கு இந்தியாவில் இருந்து கொடியாட்டி வெடி கொழுத்தாவிட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி முந்திக்கொண்டு மோடிக்கு எதிரான விசா தடையை நீக்கியது ஏனென்று இப்ப விளங்கும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியசுவாமி சிறிலங்கா அரசின் பாதுகாப்புக் கூட்டத்துக்குச் சென்று வந்த கையோடு இரண்டு உறுப்பினர் கொண்ட தன் கட்சியைக் கலைத்து விட்டு, பாஜகவோடு ஐக்கியமான சிங்கள அரசின் நரித்தனமும் இப்போது விளங்க வேண்டுமே...

வெளிப்படையாகத் தெரியாத அரசியல் செயல்களை, சாந்தப்படுத்தும் செயல்களைச் சுப்பிரமணியஞ்சுவாமி மூலம் சிங்கள அரசு நடந்து கொள்ளக் கூடும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.