Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரத்தியேக செய்தி : மஹிந்தவிடம் மோடி கூறியவை என்ன?

Featured Replies

exculusiv%204568.jpg

 

* இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது.

 

* தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் படையினரை இயன்றளவு விரைவில் வெளியேற்றி, உடனடியாக அந்தப் பொறுப்புக்களை பொலிஸாரிடம் கையளிக்க வேண்டும். *

 

பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபையிடம் கையளிக்கும் பணிகளை உடன் ஆரம்பிக்கவேண்டும்.

 

* ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். -

 

இந்த நான்கு விடயங்களையுமே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, திட்டவட்டமாகவும் தெளிவாகவும், நேரடியாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷவிடம் எடுத்துக் கூறினார் என புதுடில்லி ராஜதந்திர வட்டாரங்கள் 'மலரும்' இணையத்தளத்துக்குத் தகவல் தந்தன.

 

நேற்று இந்தியப் பிரதமர் - இலங்கை ஜனாதிபதி நேரடிச் சந்திப்பு சுமார் 20 நிமிட நேரமே நீடித்தது. எனினும், எந்த இழுபறியுமின்றி எடுத்த எடுப்பிலேயே நேரடியாக விடயத்தைக் கையாளும் ஓர் இறுக்க நிலையே அந்த இருபது நிமிட நேரமும் நீடித்தது என நம்பகரமாக அறியவந்தது.

 

தமிழர் தாயகப் பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தல், படையினரை விலத்தி பொலிஸாரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தல், பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைக்குக் கையளித்தல் ஆகிய மூன்று விடயங்களையும் எடுத்த எடுப்பிலேயே இந்தியப் பிரதமர் பிரஸ்தாபித்தாராம். அவற்றைச் செயற்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருக்குமாயின் இந்தியா நேரடியாகத் தலையிட்டு உதவத் தயாராக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டாராம்.

 

இந்தியப் பிரதமரின் காட்டமான இந்தக் கருத்துக்கு நேரடியாகப் பதில் கூறமுடியாத இலங்கைத் தரப்பு இந்த விடயங்களை ஒரே நாளில் நடைமுறைப்படுத்தி விடமுடியாது, இப்போதுதான் யுத்தம் முடிவடைந்திருக்கின்றது, இன்னும் காலம் பிடிக்கும் என்ற சாரப்பட பதிலளிக்க முயன்றதாம்.

 

"இல்லை, இல்லை. ஏற்கனவே யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகிவிட்டன. இதற்கு மேலும் காலம் தேவைப்படும் என்று கூறுவது அர்த்தமற்றது." - என்ற பாணியில் பதிலளித்த இந்தியப் பிரதமர் தமது வெளிவிவகாரச் செயலாளர் சுஜாதா சிங் பக்கம் திரும்பி, ஏற்கனவே இந்தியப் பிரதமராகவிருந்த மன்மோகன் சிங்கிற்கு இலங்கைத் தரப்பில் கூறப்பட்ட உறுதிமொழி என்ன என்று கேள்வி எழுப்பினராம்.

 

அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது என்று இந்திய வெளிவிவகாரச் செயலாளர் பதிலளித்தார். அளித்த உறுதிமொழியை விரைவில் நீங்கள் நடைமுறைப்படுத்துவதை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம் என்று மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார் என புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவின் புதிய பிரதமரின் இறுக்கமான நிலைப்பாடும் அதனை அவர் கோடிகாட்டிய விதமும் இலங்கைத் தரப்பினருக்குப் பேரதிர்ச்சியாக அமைந்தது என்றும் கூறப்பட்டது.

 

1980 களின் ஆரம்பத்தில் இலங்கை விவகாரத்தைப் புதுடில்லி கையாண்டபோது காட்டப்பட்ட இறுக்கத்தை சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது மீண்டும் கொழும்பு எதிர்கொள்ளும் நிலைமை உருவாகிவிட்டது என்று அந்தப் புதுடில்லி வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. -

 

malarum.com

Edited by nunavilan

இனி வரும் காலங்களில் தெரியும் எவ்வளவு இறுக்கம் காட்டினார் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

இவை நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் சிங்கனால் இவற்றை நிறைவேற்ற முடியாது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடியொண்டையும் மகிந்த நிறைவேற்றாட்டி மோடியர் என்ன செய்வாராம்? :D

செய்தியில் நிறைய பாலும் தேனும் கிடக்கு.. அனால் அள்ளி எடுக்கத்தான் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியொண்டையும் மகிந்த நிறைவேற்றாட்டி மோடியர் என்ன செய்வாராம்? :D

 

திரும்பவும் அழைத்து கறாராக வலியுறுத்துவார்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கத்திலை நிண்டு கேட்ட மாதிரி எழுதியிருக்கிறார்.  மகிந்த அல்லது மோடி தமிழ் நிருபர்களுக்கும் விசேட அழைப்பு விடுக்கப்பட்டதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.