Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த குசந்தன் மாஸ்ரர்? முழுமையான தகவல்கள்!

Featured Replies

 
KAW053114-181x300_zps582afacb.jpg

குசந்தன்

அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது.

தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோதும், சில மாதங்களிலேயே விமானப்படையில் இணைக்கப்பட்டிருந்தார்.

KAS053114-600x451_zpsbc036d0c.jpg

அச்சுதன் மற்றும் கேணல் சங்கருடன் குசந்தன்

கேணல் சங்கரின் தலைமையில் இயங்கி விமானப்படையிணில் மிக விரைவிலேயே தேர்ச்சி பெற்ற விமானியாக அவர் உருவாகிவிட்டார். மேலதிக பயிற்சிகளிற்காக மலேசியா சென்று விமான ஓட்டுனர் பயிற்சியை பெற்றவர், அடுத்து கனடாவில் விமானப்பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். இதன்பின்னர் 1998 இல் இலங்கைக்கு திரும்பியுள்ளார். இதன்பின்னர்தான் விடுதலைப்புலிகளின் வான்படை துரித வளர்ச்சி பெற்றுள்ளது. அதுவரை சிறிய சிலின் ரக விமானங்களை வைத்து பறப்பு முயற்சிகளில் மட்டும் ஈடுபட்டு வந்த புலிகள், குசந்தனின் வரவின் பின்னர் வேறு வடித்திற்கு மாறியுள்ளனர். சிலின் ரக விமானங்களை உள்ளூர்வளங்களை மட்டும் பாவித்து தாக்குதல் விமானங்களாக மாற்றினார். இந்த விமானங்களையே இறுதிவரை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள். முல்லைத்தீவின் கேப்பாப்புலவு மற்றும் கிளிநொச்சியின் இரணைமடு பகுதிகளிலேயே இந்த பணிகள் தீவிரமாக நடந்தன. மற்றொரு முக்கிய வான்புலியாகிய அச்சுதனும் இதில் தீவிர பங்காற்றியிருக்கிறார்.

KA053114A-300x197_zpsc2d27e16.jpg

விமானப்பறப்பு முயற்சி ஒன்றில் குசந்தனும் அச்சுதனும்

குசந்தன் விடுதலைப்புலிகளின் விமானியாக தீவிர பணியாற்றியது தொடர்பான தகவல்களை தாம் ஏற்கனவே வைத்திருந்ததாக இராணுவப்புலனாய்வுத்துறை கூறுகிறது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இறுதி யுத்தகாலத்தில் கிடைத்ததாகவும் கூறியது.

MA053114A-600x336_zpsc224422e.jpg

குசந்தனின் திருமண நிகழ்வில் விடுதலைப்புலிகளின் தலைவர் தனது மனைவியுடன்

 

http://pagetamil.com/?p=5685

 

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் போட்டுக் கொடுத்தவர் நந்தவனத்தில் இருந்தவராம். அவரைப் போட்டுக் கொடுத்தவர்களும் அவரது நண்பர்களாம். எல்லோரையும் எல்லோரும் போட்டுக் கொடுக்கும் போராட்டம்தான் இப்போது நடக்கின்றது.

இவரைப் போட்டுக் கொடுத்தவர் நந்தவனத்தில் இருந்தவராம். அவரைப் போட்டுக் கொடுத்தவர்களும் அவரது நண்பர்களாம். எல்லோரையும் எல்லோரும் போட்டுக் கொடுக்கும் போராட்டம்தான் இப்போது நடக்கின்றது.

 

"ஈழத் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து செல்லடா'

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ரத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தொடர்கதை

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக் கொடுக்கிறது எல்லா போராட்ட வரலாறிலும் உள்ள ஒன்று தான். யாழ் இப்படியான செய்திகளுக்கு இடம் வழங்கி தானும் அதை செய்ய வேண்டுமா? இப்படியா ஊடகச் செய்திகளை வெளியிடுவதிலும் உள்நோக்கங்கள் இருக்கலாம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எங்கு எவர் தலைமையை ஏற்று நடக்கிறோமோ அவருக்கு எதிரான மற்றத் தலைமைகளால் காட்டிக்கொடுப்புகள் நடாத்தப்பட்டவண்ணம்தான் இருக்கின்றன... இதுதான் இப்போதைய நிலவரம் மீளும் நிலையை அடைய சாத்தியம் உள்ளதா என்றால் கேள்விக்குறி மட்டுமே மிஞ்சி கிடக்கிறது.

காட்டிக் கொடுக்கிறது எல்லா போராட்ட வரலாறிலும் உள்ள ஒன்று தான். யாழ் இப்படியான செய்திகளுக்கு இடம் வழங்கி தானும் அதை செய்ய வேண்டுமா? இப்படியா ஊடகச் செய்திகளை வெளியிடுவதிலும் உள்நோக்கங்கள் இருக்கலாம் இல்லையா?

 

குசந்தன் கைது செய்யப்பட்டதும், அது காட்டிக் கொடுப்பு நிகழ்ந்து இருக்காவிடின் நடந்து இருக்காது என்பதும் நிதர்சனமான உண்மைகள் எனும் போது யாழுக்கு மட்டும் அதனை மறைக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

 

நாம் மட்டும் மறைப்பது வான்கோழி தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொளவது போன்றதுதான்.

  • தொடங்கியவர்

குசந்தன் கைது முதலில் அவர் அகதி என்னும் விசாவுடன் இருந்ததாகவும் பின்னர் அதை மாற்ற இலங்கை புத்தகம் தேவை படுவதால் அவர் அங்கு உள்ள இலங்கை தூதரம் ஊடாக பாஸ்போர்ட்  கேட்டு இருந்தார் அதை கவனித்தே அவர் மலேசியாவில் இருப்பது உறுதிபடுத்தபட்டதாக தகவல் ..

 

அவனுக்கே வெளிச்சம் ... :(  :(

LTTE Air Wing Deputy Chief “Kushanthan” is Prize Catch Among Three Tigers Arrested and Deported From Malaysia

By D.B.S.Jeyaraj

It was in April this year that I exclusively reported about how Subramaniam Kapilan alias Nanthagopan had been deported on March 6th 2014 to Sri Lanka from Malaysia with the assistance of law enforcement authorities in Iran and Malaysia.The 45 year old deputy leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) “Nediyavan” faction had been stopped on his way to Europe at the Teheran airport and sent back to Kuala Lumpur...

http://dbsjeyaraj.com/dbsj/archives/30260

எனக்கொரு சந்தேகம்.  எத்தனையோ போராளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பி வந்திருக்கிறார்கள்.  இவர் கனடாவுக்கு வேறு வந்து படித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.   அதனால் ஓரளவிற்கேனும் ஆங்கில அறிவு கூடுதலாக இருக்கும்.  வெளிநாட்டு நடைமுறைகளும் அத்துப்படியாக இருந்திருந்கும்.  இத்தனை திறமைகள் உள்ள இவர்கள் தங்களது திறமைகள் எதிர்காலத்திலேனும் தமிழீழத்திற்குப் பயன்பட வேண்டுமென நினைத்திருந்தால் ஏதாவதொரு நாட்டிற்குச் சென்றிருக்கலாமே?    மாறாக, இவர் ஏன் இதுவரை போராளிகள் பிடிபடும் மலேசியாவிலிருந்தார்?   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.