Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள பெளத்த பாசிச சக்திகளிடமிருந்து அழுத்கம முஸ்லிம்களை பாதுகாப்போம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய ரகுநந்தன், எலா தரப்பில் இருந்தும் சரமாரியாக குற்றச்சாட்டுக்கள் வீசப்படலாம். ஆனால் இனியேனும் நாழை வெற்றிபெற இன்று எது செய்யவேனும் என சிந்திக்க வேண்டாமா?

 

எல்லா நெருக்கடிகளிலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் நமக்கு அனுதாபமாக இருந்தார்கள் என்பதைக் குற்றம் சுமத்தும் பலர் அறிந்திருக்கவில்லை.

எங்கள் அவசரத்தேவை தேசிய சர்வதேசிய அரசியல் வெளியை புதிது புதிதாக உருவாக்குவதும் அகலப் படுத்துவதாகும். உலக அரசியல் இராணுவ வரலாறு முழுவதிலும் போதிய அரசியல் வெளியில்லாமல் உருவாக்கப்பட்ட இராணுவ வெளிகள் எல்லாம்  மணல் மீது கட்டிய மாழிகையாகச் சிதைதிருக்கிறது. 

 

விமர்சனம் மட்டுமே எமக்கு கைவந்தகலை. விமர்சனத்தில் இருந்து எதிரிக்கு பதில் சொல்ல கற்றுகொள்ளல்லாம். ஆனால் சுய விமர்சனத்தில் இருந்து மட்டுமே தோல்வியில் இருந்து வெற்றிக்குப் போகும் மார்க்கத்தை நாம் கற்றுக்கொள்ள முடியும். காலம் கடக்கிற தருணத்தில் விழித்துக்கொண்டு புதிதாக அரசியல் வெளிகளை உருவாக்கி தமது இராணுவ தேட்டங்களை பாதுகாத்து விடுதலை அடைந்த தெற்க்குச் சூடான், பொஸ்னியா, கொசோவோ  போன்ற புதிய நாடுகளின் அனுபவங்களில் இருந்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்ளவேனும். 

 

இதுவரை நாம் ஐநா மேற்குநாடுகள். மனித உரிமை இயக்கங்கள் நவிப்பிள்ளையின் உறுதி தமிழ்நாட்டு அழுத்தம் என்பவை உருவாக்கிய சிறிய அரசியல் வெளியிலேயே செயல்ப்படுகிறோம். அதனை அகலபடுத்தாமையும் புதிய அரசியல் வெளிகளை உருவாக்காதமையும்தான் நாம் எதிர்நோக்கும் பாரிய  பிரச்சினை.

இன்று முஸ்லிம் மக்களுக்கும் அதே பிரச்சினை. சரனாகதிகளின்மூலம் பேரம்பேசும் சக்தியை தக்கவைப்பதே அவர்களது அரசியலாக இருந்தது. இன்று அவர்களும் அரசியல் போராட்ட வெளிகளை உருவாக்க முனைகிறார்கள்.

 

இந்த தருணத்தில் தமிழ்பேசும் முஸ்லிம் சகோதரர்களுக்குக் கைகொடுத்து சிங்கள பெள்த்த பாசிச சக்திகளை முடக்குவதே பெரு வெற்றியாகும். இதன் மூலம் அரசியல் வெளிகளை நாமும் முஸ்லிம் மக்களும் விரிவு படுத்திட வேன்டும். இது எப்பவும் குறிப்பிடத்தக்க பொதுப் போராட்ட வெளிகளை உருவாக்கும். இதுதான் தமிழ் மக்கலுக்கும் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுக்கிருக்கும் ஒரே தெரிவு. 

 

 

தமிழர்கள் இன்று இலங்கையில் குரல் இழந்தவர்கள். அவர்கள் சொல்வதை யாருமே கேட்கப்போவதில்லை. தமக்காகவே தமது குரலை அவர்கள் எழுப்ப முடியாதபோது, முஸ்லீம்களுக்காக எப்படிக் குரல் கொடுக்க முடியும்.

 

சரி, சர்வதேச அளவில் குரல் கொடுப்பதென்றாலும் கூட, இன்றைக்கு தமிழர் பிரச்சினை பற்றியே வீதிக்கு வந்து போராடத் தயங்கும் நாங்கள், எப்படி முஸ்லீம்களுக்காக சர்வதேச வீதிகளில் இறங்கமுடியும் ? 

 

எம்மைப் போன்றே, நாட்டைவிட்டு புலம்பெயர்ந்த முஸ்லீம்கள் சர்வதேசமெங்கிலும் வாழ்கிறார்கள், குறைந்தது அவர்களாவது தமது சகோதரர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்களா??

 

தமிழருக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான நம்பிக்கையீனம் பலகாலமாகக் விருட்சம் விட்டுப் படர்ந்திருக்கிறது. இதில் யாராவது யாருக்காவது ஆதரவுக்கரம் நீட்டுவதென்றால், இந்த நம்பிக்கையீனம் முற்றாகக் கலைக்கப்பட்டால் ஒழிய சாத்தியமில்லை. 

 

இன்றுவரை தமிழர் ஆதரவுக்கரத்தை பற்றுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் முஸ்லீம்கள் வேண்டுமென்றே உதாசீனப்படுத்தித்தான் வந்திருக்கிறார்கள். முதலில் இணக்க அரசியலின் மூலம் தமது இனத்திற்கு சுதந்திரம் வேண்டித்தரமுடியும் என்கிற போலியான நம்பிக்கையிலிருந்து முஸ்லீம் சமூகம் வெளியே வரவேண்டும். தமிழருக்கு நடந்த இனக்கொலை தமக்கும் நடக்கலாம் என்கிற உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்.

 

தமிழரின் மீதான இனக்கொலையை வெறும் செய்தியாகப் படித்த முஸ்லீம்களுக்காக தமிழர்கள் இன்று ஏதாவது செய்வார்களா என்று எதிர்பார்ப்பது சாத்தியப்படாதது என்பதுதான் எனது நிலை.

 

தனிப்பட்ட ரீதியில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக வருந்துகிறேன். சமூகம் என்கிற ரீதியில் அவர்களுக்காகப் போராடுவதற்கு நாம் இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
எல்லா நெருக்கடிகளிலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் நமக்கு அனுதாபமாக இருந்தார்கள் என்பதைக் குற்றம் சுமத்தும் பலர் அறிந்திருக்கவில்லை.

 

 

இது பச்சைப் பொய்.

 

உண்மைச் சம்பவம். நாங்கள் கொழும்பில் கல்வி கற்கும் போது.. கூட வந்த முஸ்லீம் மாணவர்களே உளவாளிகளாக செயற்பட்டு.. தமிழ் மாணவர்கள் இருந்த விடுதிகளும்.. வீடுகளும் சோதனை இடப்படுவதற்கும் கைதுகள் நிகழ்வதற்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

 

இப்படி பல தமிழ் மக்கள் தென்பகுதி முஸ்லிம்களால் அனுபவித்த தொல்லைகள் அதிகம்.

 

தமிழ் மக்கள் நன்கறிந்த.. தமிழ் மக்களை தென்பகுதியில் வதைத்த முஸ்லீம் உளவாளிகளும்.. உளவுப் படையினர் பற்றியும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

முஸ்லீம் தலைவர்களே இப்போது சொல்லிப் பெருமைப்படும் விடயம்.. தமிழர்களின் போராட்டத்தை நாம் எப்படி எல்லாம் சிங்களவர்களுக்கு உளவாளிகளாக இருந்து காட்டிக்கொடுத்தோம்.. அழித்தோம் என்று. அதற்கான பிரதிபலனை அவர்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.. என்பதும் மிகையல்ல.

 

இங்கு கவிஞர் வைக்கும் பல கருத்துக்கள் அவர் சார்ந்த நட்புகள்.. பெற்ற நலன்கள் சார்ந்தே உள்ளன. சாதாரண தமிழ் மக்கள் சார்ந்தல்ல. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லீம்கள் மீது சிங்களவர்கள் தாக்குதலாம்.

இதொன்னும் புதிசில்லைங்க.. உது காலம் காலமா நடக்கிற சங்கதி தான். இலங்கையில் சிங்களவர்களின் தமிழ் இன அழிப்போடு உதுவும் பரவலா நடக்குது. முஸ்லீம்கள் சிங்களவர்களோடு சேர்ந்து தமிழர்களை அழித்து சிங்களவனுக்கு நல்ல பிள்ளையா நடிச்சாலும் உது நடக்கத்தான் செய்யுது.

இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்க முதலே இருந்து.. இது நடக்கிற சங்கதி தான். அடி வாங்கிக்கிட்டு.. அப்புறம் மந்திரிப் பதவி கிடைக்குதுன்ன உடன.. சிங்களவன் என் அண்ணன் என்று ------- கூட்டத்தை நம்பி.. என்ன அரசியலை.. மனிதாபிமானத்தை காட்ட முடியுமுன்னு நினைக்கிறீங்க. !!!!!

எல்லாம் விதி. !!!!!

 

 

நியானி: தவிர்க்கப்படவேண்டிய சொல் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் படித்த முஸ்ஸிலிம் மாணவனை ஓமானிற்கு Ministry இல் வேலை எடுத்துக்கொடுத்தேன், அதுவரை என்னுடன் நன்றாக இருந்த மனேஜர், அவன் சொன்ன பல பொய்களை கேட்டு தமிழர்களையே எடுப்பதை நிற்பாட்டிவிட்டார். நானும் விலகிவிட்டேன் விரைவில்.

 

இதைபோல் பல கசப்பான அனுபவங்கள்.

 

முஸ்ஸிலிம்களுக்கு உதவ முதல் இரண்டு தடவையென்ன பல தடவை யோசிக்கனும்.

 

அவர்களுக்கு எல்லாம் அல்லா கொடுத்த து. எங்களுக்கு அவர்கள் கொடுப்பது அல்வா???

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நெருக்கடிகளிலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் நமக்கு அனுதாபமாக இருந்தார்கள் என்பதைக் குற்றம் சுமத்தும் பலர் அறிந்திருக்கவில்லை.

தென்பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படும் போதெல்லாம் சில நல்ல சிங்களவர்கள் காப்பாற்றினார்கள். ஆகவே தமிழர்கள் நன்றியுணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இப்படி சில சிங்களவர்கள் சொலலிக் கேட்டிருக்கிறேன். கவிஞரின் வாதங்களின் அடிப்படையில் சிங்களவருக்கு எதிராகவும் போக வேண்டியதில்லை.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.