Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானும் உயிருடன் இருக்கிறேன்

Featured Replies

நானும் உயிருடன் இருக்கிறேன்.

கொழும்பிலிருந்து  பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த  வொறி ஈறப்பெரியகுளம் என்ற இடத்தில் மறிக்கப்பட்டது. அதில் லொறிச் சாரதியும் உதவிளாளர்கள் இருவரும் இருந்தார்கள்.

 

லொறி உதவியாளர் “அண்ணை சிங்களக் காடையங்கள் சுற்றிவர நிற்கிறாங்க…. என்ன பிரச்சினையோ  தெரியாது” என்றான்.

 

“நம்மடை ஆட்களைத்தான் மறிச்சு வைத்துக்கொண்டிருக்கிறாங்க…”  என்றார் மற்றவர்.

 

சாரதி அங்கும் இங்கும் பார்த்தபடி லொறியை ஒரு ஓராமாக  நிற்பாட்டினார்.

 

லொறியைச் சுற்றிச் சிங்களவர்கள் கூட்டம்.

 

ஒருவன் வந்து சிங்களத்தில் “இறங்குக்கடா” எனத் தகாத வார்த்தையுடன் பேசினான்.  

 

மற்றவன், இறங்கும்போது காலால் உதைத்தபடி “அங்கால போய் குப்பறப் படுங்கடா ’’என்றான்.

 

லொறிச் சாரதிக்கும் மற்ற இருவருக்கும் தங்களை ஏதோ செய்யப்போறாங்க என்ற பயம் ஏற்பட்டது.

 

லொறிச் சாரதி தான் செலுத்தி வந்த லொறியைப் பார்த்தார். அதிலிருந்த பொருட்களைப்  பலர் இறக்கிக்கொண்டிருந்தார்கள்.  என்ன செய்ய முடியும் என்று சிந்தித்தபடி கொலைக் களத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஆட்டின் நிலையில் சென்றார்.

 

லொறி உதவியாளர்கள் இருவரும் முகம்வெழுறி  பேயறைந்தவன் நிலை என்பார்களே, அந்த நிலையில் நடந்தார்கள்.

 

நடக்கும்போது  மூவருக்கும் உருட்டுக்கட்டையால் அடி நடந்தபடி இருக்கிறது.

 

“ஐயோ… அம்மா…” என்று குழறியபடி  விழுந்தும் எழும்பியும் நடந்தார்கள்.  

 

சிறிது தூரம்   செல்ல றோட்டுக்கரையில்  இரத்த வெள்ளத்தில் பலர் வளர்த்தப்பட்டுக் கிடந்தார்கள்.

 

“அதிலபோய்ப் படுங்கடா” என்று ஒருவன் அதட்டினான். சாரதிக்கும் உதவியளாளர்களுக்கும் சிங்களம் தெரிந்தபடியால் அதன்படி நடந்தார்கள்

 

அடியும் உதையும் ஒரு பக்கம். சகிக்க முடியாத வார்த்தைப் பிரயோகம் ஒரு பக்கம். என்ன செய்ய முடியும். மூவரும்  குப்பறக் கிடக்கும் தமிழருக்கிடையிலே போய் படுத்தார்கள்.

 

கூட்டிக்கொண்டுவந்தவர்கள் லொறியடிக்குச் திரும்பிச்  சென்று விட்டார்கள்.

 

சில நிமிடங்களில் வேறு மூவர் துவக்குடன் வந்தார்கள்.   படபட வென, கிடந்தவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

 

எங்கும் மரண அமைதி.

 

சாரதி கண்ணை மெல்லத் திறந்து பார்த்தார்.

 

படுத்துக்கிடக்கும் தமிழரைத் தவிர வேறு எவரையும்  காணவில்லை. என்றாலும் தலை நிமிர்த்தப் பயம். கண்ணை மூடீக்கொண்டு இறந்தவர்போலவே பாசாங்குபண்ணி மீண்டும் படுத்துவிட்டார்.

 

படுத்துக்கிடக்கும்போது பக்கத்தில் பிரதம்போல் கிடந்தவரின் கை அவரை நுள்ளியது.

 

கடவுளே பக்கத்தில் கிடப்பவர்  உயிருடன் இருக்கிறார்போல் இருக்கிறது, என எண்ணி தானும் உயிருடன் இருப்பதை நினைவுபடுத்தி அவரை நுள்ளினார்.

 

“போயிற்றாங்க போல இருக்கு…”

 

“ஒரு ஆரவாரத்தையும் காணவில்லை… அப்படித்தான் தெரியுது”

 

இருவரும் தலையை நிமிர்த்தினார்கள்.

 

பலர் இறந்து கிடந்தார்கள். ஒரு சிலர் முனுகியபடி அiரைகுறை உயிருடன் கிடந்தார்கள்.  
எரிக்கப்பட்ட நிலையில் பல லொறிகள் கிடந்தன.
தெய்வச் செயலால் அரைகுறையாக எரிந்த லொறிகளும் சில நின்றன.

 

“என்ன செய்வம்…”

 

“கடவுள் புண்ணியமாகத் தப்பியிட்டம் … எனியாரு வாறாங்களோ தெரியாது… ஓடுவம்”

 

இருவரும் எழும்பினார்கள்.

 

அரைகுறையாக எரிந்த லொறி ஒன்றுக்குள் உயிருடன் கிடந்த சிலரைத் தூக்கிப்போட்டுக்கொண்டு யாழ்ப்பாணம் ஓடிச் சென்றுவிட்டார்கள்.

உண்மைச் சம்பவம்.
இதனைக் கூறியவர் நோர்வேயில் இருக்கிறார்.

செண்பகன்
23.07.2014
   
 

Edited by Sembagan

  • 3 weeks later...

பகிர்வுக்கு நன்றி செண்பகன். 83 இல் இருந்து 90 வரைக்கும் வவுனியா - கொழும்பு மற்றும் மட்டக்கிளப்பு -கொழும்பு வீதிகளில் இவ்வாறு கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கையே ஆயிரத்தினைத் தாண்டும். அநேகமானோர் சிங்கள குண்டர்களாலும், பொதுமக்களாலும் கொல்லப்பட்டவர்கள். என் அப்பாவும் இப்படியான ஒரு சம்பவம் ஒன்றில் இருந்து மயிரிழையில் தப்பியவர்.

 

அன்றும் இன்றும் இப்படி கொலை செய்த ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் எந்தவித தண்டனையும் இன்றி சமூகத்தில் ஒரு தந்தையாகவோ, தாத்தாவாகவோ, அரசியல்வாதியகவோ அல்லது ரவுடிகளாகவோ வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரியான மிருகங்களுடன்தான் நல்லிணக்கம் என்பது கொடுமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கொடுமையான சம்பவங்கள். நினைக்கவே மனம் பதறுகின்றது.
 
இதற்கும் ஒருசிலர் காரணம் வைத்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.