Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதனை, கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

31-1406785166-chicken-600.jpg

 

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி:

ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

 

டெல்லி: கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம்.

 

இயற்கை விவசாயம் எங்கே?

இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

 

வாரந்தோறும் சிக்கன் அவசியமா?

அதேபோலத்தான் கறிக்கோழியும். முன்பெல்லாம் கிராமங்களில் கோயில் கொடை விழாக்களிலும், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற அந்தந்த மதத்தாரின் கொண்டாட்ட தினங்களில்தான் மட்டன், சிக்கன் சாப்பிடுவார்கள். ஆனால் நகரமயமாதல், விளம்பரமயமாதல் தாக்கத்தால் வாரம்தோறும் வீட்டில் சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக்கியதன் விளைவு, நாட்டு கோழிகள் பற்றாக்குறையானது. இதனால், கோழியின் உற்பத்தியை பெருக்க பிராய்லருக்கு நகர்ந்தது சமூகம்.

 

ஆன்ட்டி பயாட்டிக் ஆபத்து.

பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

பரிசோதனை கூடத்தில் ஆய்வு.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 70 கோழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் அவை ஆய்வு செய்யப்பட்டன. அந்த கோழிகளினர் ஈரல், தசை, கிட்னி ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 40 சதவீத கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டி பயாட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

 

அளவுக்கு அதிகம்.

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்றார்.

 

கோழி உடலில் பல வகை மருந்துகள்.

பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 5 வகை மருந்துகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன அனைத்து கோழிகளிலும் காணப்பட்டன. அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் உறுதியாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதன் மாறிவிட்டான்.

சிக்கனால், மனிதர்கள் பாதிக்கப்படுவதை சிஎஸ்இ ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

 

டைபாய்டு ஏற்பட வாய்ப்பு.

சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சிஎஸ்இ எச்சரித்துள்ளது. இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. இனியாவது இயற்கைக்கு எதிராக மனித குலம் திரும்பாமல் இருக்க வேண்டும்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மட்டும்தான் இந்தப் பிரச்சனையா??? அல்லது ஐரோப்பாக் கோழிகளுக்குமா சிறி ????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மட்டும்தான் இந்தப் பிரச்சனையா??? அல்லது ஐரோப்பாக் கோழிகளுக்குமா சிறி ????

 

அனேகமாக ஆசிய  நாட்டு கோழிகளுக்கு தான்.... என்று நினைக்கின்றேன்.

அங்கு தான்... சட்டத்தையும், விதி முறைகளையும் பணத்தால் முறியடிக்கலாம்.

ஐரோப்பா கோழிகளும்... பெரிய திறம் என்று சொல்ல முடியாது. சுமோ.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பத்தையான் கோழி இறைச்சி கனக்க சாப்பிட்டால் ஹோர்மோன் பிரச்சனையள் கனக்க வரும் எண்டு சொல்லுறாங்கள்.....குறிப்பாய் பொம்புளையளுக்கு....

நான் அதிகமாக இங்கு வாங்குவது Curry chicken எனப்படும் முட்டையிடும் கோழிகளைத் தான்.

 

எப்படித்தான் நல்ல வெள்ளை வெளேர் என்று இருக்கும் ப்றொய்லர் கோழிகளைச் சாப்பிட்டாலும் சும்மா நச்சுன்னு இருக்கின்ற நாட்டுக்கோழியின் சுவையைப் போல ஒன்றும் வராது. அதன் ஒவ்வொரு பாகமும் சுவைக்க அருமையாக இருக்கும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகமாக இங்கு வாங்குவது Curry chicken எனப்படும் முட்டையிடும் கோழிகளைத் தான்.

 

எப்படித்தான் நல்ல வெள்ளை வெளேர் என்று இருக்கும் ப்றொய்லர் கோழிகளைச் சாப்பிட்டாலும் சும்மா நச்சுன்னு இருக்கின்ற நாட்டுக்கோழியின் சுவையைப் போல ஒன்றும் வராது. அதன் ஒவ்வொரு பாகமும் சுவைக்க அருமையாக இருக்கும். :icon_mrgreen:

 

அப்ப வஞ்சகம் இல்லாமல் வெள்ளைக் கோழியும் சாப்பிட்டு இருக்கறியள் :rolleyes::lol:

இந்தியாவில் மட்டும்தான் இந்தப் பிரச்சனையா??? அல்லது ஐரோப்பாக் கோழிகளுக்குமா சிறி ????

 

எல்லா இடத்திலையும் பிரச்சனைதான். என்ன இந்தியா இலங்கை மாதிரி நாடுகளிலில் தானாக செத்த கோழிகளையும் இறச்சி ஆக்கிப் போடுவாங்கள். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.