Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் நீரோட்டத்தில் - மார்க்கம் நகரசபை ஐந்தாம் வட்டாரத்தில் போட்டியிடுகிறார் ராஜ் சுப்ரமணியம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
raje-subramaniyam-030814-200-seithy.jpg

கடந்த காலங்களில் எம் இனத்துக்கான விடுதலை வழித்தடத்தில் உங்களுடன் நானும் இணைந்தே பயணித்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் எதிர்வரும் மார்க்கம் மாநகரசபைத் தேர்தலில் ஐந்தாம்(5) வட்டாரத்தில் உங்கள் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். எம் இனத்தினிடையே எத்தனையோ ஆற்றலாளர்கள் அறிவாளிகள் உள்ளனர். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் நாம் பங்கெடுத்து எம்பங்களிப்பினை உறுதியாகவும் நேர்மையாகவும் ஆற்றுகின்ற வேளையில்தான் இந்த உலகம் எம்மை இன்னும் உன்னிப்போடு கவனிக்கும்.

  

எனவே நகர மட்டத்திலான அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுத்து எனது பிரதேசத்தில் வாழும் எல்லா இன மக்களின் தேவைகளையும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உண்மையுடனுன் நேர்மையுடனும் திறமையாக செயற்படுவேன் என்பதை உறுதியுடன் கூறுகின்றேன். மேலும் இவ்வாறு செய்வதால் மட்டுமே எமது இன மக்கள் மீதான அவர்களின் நன்மதிப்பை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

"ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"

என்ற வள்ளுவர் வரிகளைச் சாத்தியப்படுத்த நான் விழைகின்றேன்.

மார்க்கம் நகரசபை ஐந்தாம் வட்டாரம் வாழ் தமிழ் பேசும் உறவுகளே !!!!

உங்கள் ஒவ்வொருவரினதும் வாக்குகளும் பெறுமதியானவை. அவற்றைச் சிதறடிக்காது வாக்களித்து என்னை வெற்றிப்பெற வைப்பீர்கள் என உறுதியாக நம்புகின்றேன். நாம் நேர்மையாகவும் திறமையாகவும் உயர்வு பெற நமக்கான அரசியல் பாதை திறந்தாக வேண்டும். அனைவரையும் உடன்பிறந்தவர்களாகப் பார்க்கும் என்னை நீங்கள் ஒருமித்த குரலுடன் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றேன். நான் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடு முற்றுமுழுதாக அனைத்து சமூகங்களினதும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது.

நாம் இன்றும் பல இன்னல்களையும் துயரங்களையும் எதிர்கொண்டாலும் நாமும் வல்லவர்கள் என இவ்வுலகம் எம்மை ஏற்றுக்கொள்வதற்காக இந்தப்பயணத்தைத் நான் துவங்குகின்றேன். அனைத்து மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற இந்தப் பாதை நமக்கு உதவும் என்பதால் இதில் நம்பிக்கையுடன் பயணிக்கின்றேன். எல்லோர் மனங்களையும் இதயங்களையும் வென்று நம் இலக்கை நோக்கிய எனது இந்தப் பயணத்தில் என்னுடன் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

எனது நிலைப்பாடுகளான வரி அதிகரிப்பை உயர்த்தாமை உள்ளூர் தொழில் வாய்ப்பை உறுதிப்படுத்துதல் வெளிப்படைத்தன்மை பொறுப்புக் கூறும் ஆட்சி மேம்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்துச்சேவை சிறந்த முறையிலான போக்குவரத்து உட்கட்டுமானங்கள் பசுமைச்சு10ழல் பாதுகாப்பு மற்றும் மரபுரிமை இடங்களைப் பேணிக்காத்தல் போன்ற விடயங்களில் நான் உறுதியாக இருப்பேன். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு உங்கள் ஆதரவையும் உதவிகளையும் எனக்கு வழங்குங்கள் என உங்களிடம் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன் .

நான் முன்னெடுக்கும் இந்த சமூகச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பை வழங்கி ஊக்குவிப்பீர்கள் என நம்புகின்றேன்.

உங்கள் அனைத்து ஆதரவுக்கும் நன்றி!

Raj Subramaniam P.Eng

http://www.seithy.com/breifNews.php?newsID=114313&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் யார் இன்னாரெண்டு யாரும் தெரிஞ்சாக்கள் சொன்னியளெண்டால் நல்லது.....வாழ்த்துறதுக்கோ இல்லை திட்டுறதுக்கோ வசதியாயிருக்கும்... :D

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நீரோட்டம் அரசியல் நீரோட்டம் என்றாய்ங்களே.. அந்த நீரோட்டம்.. இலங்கையில் இருந்து கனடா வரை ஓடுதே. அப்போ அதுதான்.. உலகிலேயே பெரிய நீரோட்டமா..??! எங்க உற்பத்தியாகுது. இந்தப் பெரிய நீரோட்டத்தை வைச்சிருந்தும்.... தண்ணீர் தாகம் போக்க முடியாமலா உலகம் குடிக்க தண்ணிக்கு அவஸ்தைப் பட்டுக்கிட்டு இருக்குது..???! :):D

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் சில தடவைகள் யாழ்களத்தில் உறுப்பினராக இருந்து பதிலளித்துள்ளார்..பெட்னா நிகழ்வு பற்றிய விடயத்துக்கு வந்து பதிலளித்தார் என நினைக்கின்றேன். தம்பி.... என்ற பெயரில்....

இவர் யார் இன்னாரெண்டு யாரும் தெரிஞ்சாக்கள் சொன்னியளெண்டால் நல்லது.....வாழ்த்துறதுக்கோ இல்லை திட்டுறதுக்கோ வசதியாயிருக்கும்... :D

கனேடிய மக்கள் அவையின் உறுப்பினராக செயற்பட்டவர் .(தற்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் இதில் இருந்தால் அரசியலுக்கு ஆபத்து என்ற நோக்கமோ தெரியாது) TVI ,CTR வானொலி போன்றவற்றின் அரசியல் ஆய்வாளர் .

2010 இலங்கை பாராளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் அணியை ஆதரித்தவர் ,தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தேர்தலுக்கு நன்கொடையும் தந்தவர் .

கணணிப் பொறியியலாளர் ,தமிழ் ஆர்வலர் .

இன்று  கனேடிய அரசியலில் களமிறங்கியிருக்கும்  பலரில்  ராதிகாவை தவிர மற்ற அனைவரும் எனது கணிப்பில் வெறும் சுயநல அரசியல் வாதிகள் மட்டுமல்லாது தேவை வந்தால் எமது இனத்தை ஏலத்திலும் விடக்கூடியவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுக்கு நன்றி.

இவர் ஐ.நா.விற்குச் சென்று படம் எடுத்துப் போட்டுக் கலக்கியவர்.  தலைவருடன் இவர் நின்று எடுத்த படம்கூட சில வருடங்களுக்கு முன்னர் Global & Mail என்ற பத்திரிகையில் வெளிவந்திருந்தது.  அர்ஜுன் சொன்னதுபோல, எல்லாரும் சுயநலவாதிகள்தான்.  தமிழரிடம் இருந்து பறித்த பணம் போதாது என்று கனேடிய அரசியலுக்குள் நுழைந்து பணம் பறிக்கப் போடும் திட்டம்தான்.  இவர்களது கூட்டத்திலிருந்து இப்போது பலர் கனேடிய அரசியலுக்குள் கால் வைக்க முயற்சிக்கிறார்கள்.   மொத்தத்தில் கனேடிய அரசியலைத் தமிழ்நாடுஅரசியல் ரேஞ்சுக்குக் கொண்டுவரப் பலர் முயற்சிக்கிறார்கள் என்று தெரிகிறது. கனடா தப்புமா?  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ராஜ் சுப்பிரமணியம் எப்போது, எங்கே எவ்வளவு பணத்தை தமிழர்களிடம் இருந்து பறித்தார்? சும்மா பிதற்றக் கூடாது. இதற்குப் பெயர் தான் அரைகுறை அறிவு..சும்மா எழுந்தமானத்துக்குப் பிதற்றுவது. 25 வருடமாக இருக்கின்ற எனக்கு எந்தத் தேர்தலிலும் பேட்டியிட முடியவில்லை என்ற வயிற்றெரிச்சல்... ராஜ் சுப்பிரமணியத்துக்கு பேசுவதில் பிரச்சனை.. ஆனால் அந்தளவு மோசமான ஆள் கிடையாது. ஒரு தகுதியான, உயர்பதவியில் இருக்கின்றார்.

-----------

 

 

நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

முதலாவது ராஜ் சுப்பிரமணியம் எப்போது, எங்கே எவ்வளவு பணத்தை தமிழர்களிடம் இருந்து பறித்தார்? சும்மா பிதற்றக் கூடாது. இதற்குப் பெயர் தான் அரைகுறை அறிவு..சும்மா எழுந்தமானத்துக்குப் பிதற்றுவது. 25 வருடமாக இருக்கின்ற எனக்கு எந்தத் தேர்தலிலும் பேட்டியிட முடியவில்லை என்ற வயிற்றெரிச்சல்... ராஜ் சுப்பிரமணியத்துக்கு பேசுவதில் பிரச்சனை.. ஆனால் அந்தளவு மோசமான ஆள் கிடையாது. ஒரு தகுதியான, உயர்பதவியில் இருக்கின்றார்.

-----------

 

 

நியானி: ஒரு வரி தணிக்கை

 

 

ஐயா சாமி, தேர்தலில் போட்டியிடுவது ஒன்றும் பெரிய விடயமல்ல.  எங்களுக்கும் அரசியலும் தெரியும்.  அரசியல்வாதிகளையும் தெரியும்.  உங்களைப் போல நாங்கள் தம்பட்டம் அடிப்பதில்லை.  நாங்களும் பல ஆண்டுகளாகப் பொதுவெளியில் இருந்தவர்கள்தான்.   ஆரம்பகாலம் தொட்டே என்னுடைய நோக்கம் தமிழ் மக்களின் விடிவுதானேயன்றி சுயநலமல்ல.  சாகும்வரையும் அந்தநோக்கம்தான் இருக்கும்.  

 

காசடிக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த அமைப்பிலிருந்து வேலை செய்தது மட்டுமின்றி இவரும் மக்களிடமிருந்து காசு பெற்றுக் கொடுத்த ஒருவர்தான்.  இது கடந்த வருடம்வரை கூடத் தொடர்ந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  குற்றம் செய்பவனுக்கு உதவுபவனும் குற்றவாளிதான்.  இவர் தேர்தலில் நிற்பதுகூட அந்த அமைப்பின் ஆதரவோடுதான்.  இந்த வருடம் அந்த அமைப்பிலிருந்து பலர் தேர்தலில் குதித்திருக்கிறார்கள்.  அவர்களின் தகைமைகள், தகுதிகள் சொல்லி வேலையில்லை.  எல்லாம் நன்றாகத் திட்டம் போட்டுத்தான் செயற்படுகிறார்கள்.  ஒன்று மட்டும் உறுதியாகி விட்டது.  இனி, கனேடிய அரசியல்வாதிகளைக் கனேடியத் தமிழ் கொங்கிரஸ் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது.   அந்தவகையில் மகிழ்ச்சிதான்.  

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா... உங்களைப் பற்றி நீங்களே பெருமையடிக்கின்றதில் ஒரு குறைச்சலும் வைக்கமாட்டீர்கள்... சரி.. எனக்கு யாரைத் தெரியும் என்று எப்போது தம்பட்டம் அடித்தேன்.. நீங்கள் தான் இந்த பந்தியில் கூடப் பெருமை பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்... உங்களின் குடும்ப உறுப்பனர்களின் பெயரில் உள்ள சொத்துக்கள் எல்லாம் இப்படி நீங்கள் மக்களிடம் கொள்ளையடித்தது என்று நான் சொன்னால் உங்களால் ஏற்க முடியுமா? அப்படித் தான் இங்கேயும் ஆதாரம் அற்றுப் புலம்புவது... ஹரியின் தந்தை பற்றி எப்படிக் குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றதோ, அவ்வாறே ராஜ் சுப்பிரமணியத்தின் சகோதரனும் சிறிலங்கா அரசோடு சேர்ந்து இயங்குபவர் என்று குற்றசாட்டு சிலரால் வைக்கப்படுவதுண்டு. தந்தை, சகோதரன் செய்கின்ற தப்புக்கு எல்லாம் குறித்தவர்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்.. அதனால் தான் பலர் இங்கே முகமூடி போட்டு மற்றவர்கள் மீது வசைபாடுவார்கள்...

ஏன் கனேடியன் காங்கிரஸ்சைத் திட்டினால் எனக்கு வலிக்கும் என்றா எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தமிழன் வெற்றி பெற்றால் சந்தோசப்படுவார்களே தவிர, அங்கேயும் கோத்திரம், குலம் பார்த்துக் கொண்டிருப்பார்களா என்றால் அது எவ்வளவு மூட்டாள்தனத்தின் உச்சமாக இருக்க முடியும். என்னுமொரு தமிழன் வெற்றி பெற்றுவிட்டானே என்று தமிழன் மீதான பொறாமை வெறி அன்றி வேறு ஒரு காரணமும் இதில் இருக்க முடியாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.