Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

வாசித்துக்கொண்டு தான் இருக்கிறோம். தொடருங்கள். :)

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply

யாயினி உங்கள் திரிக்கான பார்வையாளர் எண்ணிக்கையை பாருங்கள். கிட்டத்தட்ட 7500 பேருக்கு மேலே.

அதனால் நீங்கள் உங்கள் பக்கத்தை யாரும் பார்க்கவில்லை என்று கலக்கம் கொள்ள வேண்டாம். தினமும் எத்தையோ பேர் உங்கள் பக்கத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவராவது உங்கள் பக்கத்தால் ஏதாவது ஒரு நன்மை பெற்றால் கூட, நீங்கள் இந்த பக்கத்தை திறந்ததுக்கான நோக்கம் வெற்றியடைந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

வாழ்த்துக்கள்.

 



"கடமையை செய் பலனை எதிர்பாராதே"
 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் யாயினி நீங்கள் பதியும் வேகத்திற்கு யாழிற்கு வருபவர்களால் ,உங்கள் பக்கத்தையும் தொடர்வது கடினமாக உள்ளது.ஒவ்வொரு நாளும் 2அல்லது 3 செய்திகளை மட்டும் பதியுங்கள்.வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் யாயினி நீங்கள் பதியும் வேகத்திற்கு யாழிற்கு வருபவர்களால் ,உங்கள் பக்கத்தையும் தொடர்வது கடினமாக உள்ளது.ஒவ்வொரு நாளும் 2அல்லது 3 செய்திகளை மட்டும் பதியுங்கள்.வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்

அவ தன் மனதில் உள்ளதை [பேஸ் புக்கில் எழுதுவதை] கொட்டுகிறார்.அளவாய் கொட்டுங்கள் என்டால் எப்படி?...யாயினி நீங்கள் உங்கள் மனதில் பட்டதை எழுதுங்கள் வாசிப்பவர்கள் வாசிப்பார்கள்.யாரும் வாசிக்கிறார்களோ,இல்லையோ என கவலைப் பட வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் காலையில் உங்கள் பக்கத்தை புரட்டிப் பார்த்து வி;ட்டுத்தான் வேலைக்குப் போகிறேன். தொடருங்கள் உங்கள் பதிவுகளை. பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியும் என்றால்

முயற்சி செய்யுங்கள்,

முடியாது என்றால்

பயிற்சி செய்யுங்கள்...

இனிய காலை வணக்கங்கள் உறவுகளே....!!

 

10626783_490645461078473_917997297355866

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1911860_724283000974934_3111413684524873

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவம் !!

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

விளக்கம் :

உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கவனக் குறைவான வார்த்தை

சர்ச்சையில் முடியும்.

 

ஒரு கடுமையான வார்த்தை

வாழ்க்கையை முறிக்கும்.

 

ஒரு கசப்பான வார்த்தை

வெறுப்பை வளர்க்கும்.

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

67208_1486783398266896_40175328775682678

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்துக்கொண்டு தான் இருக்கிறோம். தொடருங்கள். :)

 

நன்றி துளசி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி உங்கள் திரிக்கான பார்வையாளர் எண்ணிக்கையை பாருங்கள். கிட்டத்தட்ட 7500 பேருக்கு மேலே.

அதனால் நீங்கள் உங்கள் பக்கத்தை யாரும் பார்க்கவில்லை என்று கலக்கம் கொள்ள வேண்டாம். தினமும் எத்தையோ பேர் உங்கள் பக்கத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவராவது உங்கள் பக்கத்தால் ஏதாவது ஒரு நன்மை பெற்றால் கூட, நீங்கள் இந்த பக்கத்தை திறந்ததுக்கான நோக்கம் வெற்றியடைந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

வாழ்த்துக்கள்.

 

"கடமையை செய் பலனை எதிர்பாராதே"

 

 

 

சிலவேளைகளில் எனக்கே,நான் பதியும் விடையங்களைப் பார்க்கும் போது வோர் அடிக்கிற மாதிரியான ஒரு உணர்வு..இதை எல்லாம் யாரு இந்தக் காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறார்கள் என்று யோசிச்சு,யோசிச்சுத் தான் பதிவது வழமை...யாழுக்குள் நிறைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எல்லாரும் எல்லாருக்கும் ஊக்க சக்தியாக இருப்பது என்று இல்லை.அதனால் ஏற்படும் ஒரு விதக் குளப்ப நிலை தான்..."கடமையை செய் பலனை எதிர்பாராதே"இது தான் உண்மை.உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பகலவன்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் யாயினி நீங்கள் பதியும் வேகத்திற்கு யாழிற்கு வருபவர்களால் ,உங்கள் பக்கத்தையும் தொடர்வது கடினமாக உள்ளது.ஒவ்வொரு நாளும் 2அல்லது 3 செய்திகளை மட்டும் பதியுங்கள்.வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்

 

ச்சாக் மன்னிப்பு எல்லாம் வேண்டாம்..இரண்டாவது தடவையாக சொல்லி விட்டீர்கள் அதற்கு நன்றிகள்..உண்மை தான் ஒரு குழந்தைக்கு சாப்பாட்டைக் கொடுத்து விட்டு கெதியா சாப்பிடும் என்றால் அந்தக் குழந்தை கண்டிப்பாக சாப்பிடாது.அது போலத் தான் மற்றவர்களுக்கும் இருக்கும்..அன்றாடாம் காலை வணக்கத்திலிருந்து சில விடையங்களை 5.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் பதிவுகளை இட்டு விடுவேன்.அந்தச் சமயத்தில் அன்று பதிய வேண்டிய முக்கியமான விடையங்கள் நினைவில் வராது,அல்லது பதிய வேண்டிய பதிவுகள் ஏதோ ஒரு விடையத்தில் விடுபட்டு போய் இருக்கும்..உதாரணத்திற்கு சொல்லப் போனால் நேற்றைய தினம் ஊடகவியளாளர் மயில்வாகனம் நிமராஜன் அவர்களது 14ம் ஆண்டு நினைவு நாள்.பதிய வேண்டிய விடையம் விடுபட்டு விட்டது.இப்படியாக விடுபடும் விடையங்களையும் அவ்வப்போது சேர்க்க நினைக்கும் போது பதிவுகள் கூடிவிடுகிறது...மற்றப்படி ஒன்றும் இல்லை.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நந்தண்ணா.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//விருப்புடனோ இல்லை விருப்பின்றியோ யார்,யார் எல்லாம் இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்த்து செல்கிறீர்களோ அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..!!!இருபத்து ஐந்து பக்கங்கங்களைத் தாண்டி செல்லும் பக்கம் வெறுமனே நானே பதிவுகளை இட்டு,நானே பார்த்துக் கொண்டு இருக்கும் பக்கமாக இருக்கிறதா என்ற கேள்வியும் என்னுள்ளே எழும்பத் தான் செய்கிறது..இதையும் விட்டால் மௌனம் என்ற ஆயுதத்தை தவிர வேறு எதையும் தூக்க முடியாது.//

 

என்ன இப்படி சொல்லி போட்டியல் யாழுக்கு வந்தாலே யாயினி என்ன சொல்லிருக்கு இன்றைக்குன்னு பார்க்கிறதுதான் முதல் வேலை பல விஷயங்கள் முன்பே தெரிந்து இருந்தாலும் என் கண்ணில் படாத சில  விஷயங்கள்  உங்கள் பதிவு மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நன்றி. மேலும் நிறைய விஷயங்கள் நீங்கள் கற்று யாழ்  கள சாகரா, சாந்தி சகோதரங்களை போல நிறைய எழுத வேண்டும், வாசிக்க நாங்கள் காத்து இருக்கிறோம் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவ தன் மனதில் உள்ளதை [பேஸ் புக்கில் எழுதுவதை] கொட்டுகிறார்.அளவாய் கொட்டுங்கள் என்டால் எப்படி?...யாயினி நீங்கள் உங்கள் மனதில் பட்டதை எழுதுங்கள் வாசிப்பவர்கள் வாசிப்பார்கள்.யாரும் வாசிக்கிறார்களோ,இல்லையோ என கவலைப் பட வேண்டாம்

 

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரதி.

தினமும் காலையில் உங்கள் பக்கத்தை புரட்டிப் பார்த்து வி;ட்டுத்தான் வேலைக்குப் போகிறேன். தொடருங்கள் உங்கள் பதிவுகளை. பாராட்டுக்கள்.

 

 

நன்றி கண்மணியக்கா..பிரியோசனமாக இடுகிறனோ இல்லயோ எனக்கு புரியவில்லை.ஆனால் பலவற்றை செய்ய வேண்டும் என்ற ஆவல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//விருப்புடனோ இல்லை விருப்பின்றியோ யார்,யார் எல்லாம் இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்த்து செல்கிறீர்களோ அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..!!!இருபத்து ஐந்து பக்கங்கங்களைத் தாண்டி செல்லும் பக்கம் வெறுமனே நானே பதிவுகளை இட்டு,நானே பார்த்துக் கொண்டு இருக்கும் பக்கமாக இருக்கிறதா என்ற கேள்வியும் என்னுள்ளே எழும்பத் தான் செய்கிறது..இதையும் விட்டால் மௌனம் என்ற ஆயுதத்தை தவிர வேறு எதையும் தூக்க முடியாது.//

 

என்ன இப்படி சொல்லி போட்டியல் யாழுக்கு வந்தாலே யாயினி என்ன சொல்லிருக்கு இன்றைக்குன்னு பார்க்கிறதுதான் முதல் வேலை பல விஷயங்கள் முன்பே தெரிந்து இருந்தாலும் என் கண்ணில் படாத சில  விஷயங்கள்  உங்கள் பதிவு மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நன்றி. மேலும் நிறைய விஷயங்கள் நீங்கள் கற்று யாழ்  கள சாகரா, சாந்தி சகோதரங்களை போல நிறைய எழுத வேண்டும், வாசிக்க நாங்கள் காத்து இருக்கிறோம் வாழ்த்துக்கள்.

 

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி கண்ணீர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!

 

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.

சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.

அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.முதல் விருப்பமாக,

"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."இரண்டாவது,'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."மூன்றாவதாக,"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறுவைக்க வேண்டும்."வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,"அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.ஆனால்,இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

 

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.

மருத்துவர்களால்எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.

மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

 

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.

அது சவக்குழி வரை மட்டும்தான்..!மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

 

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,

சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..ஆம்.நண்பர்களே,

நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம்.நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Song, Unmai Arindavar, Anuradha Sriram and Sriram Parasuram, Raga Sumanesa Ranjini 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10606026_738302779590571_492810819923524

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதம் ..தாமதம்....

காலை வணக்கம்....!!!

10653279_740676742673876_504775219936667

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைத் தொழிளார்களினால், ஏழை மக்களினால் நான் வெறுக்கும் விடையம் பண்டிகளைளும் பட்டாசும்.

 

10513250_10205397945211318_3471430180567

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியம் அற்புதமானது என்பதை நோயுற்றுக் கிடக்கும் போதுதான் உணருகிறோம்....ஆரோக்கியமற்று ஆயுள் நீடிக்கப்படக் கூடாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10645219_576285842517905_425927693408146

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்கு போனாலும் சரி போகா விட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள் புரியும்.-பாரதியார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிஜமில்லாதவரையும்,நிதானமில்லாதவரையும் அதிகம் நேசிக்காதீர்கள் அவஸ்த்தைகள் தான் வாழ்வில் மிகுதியாகும்..!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.