Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன அழுத்தத்தில் தள்ளும் ஃபேஸ்புக்...எச்சரிக்கும் ஆய்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ளவுக்கு அதிகமாக ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

" பேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது,  படிப்பு முடிந்து, வேலைமாறி செல்லும் நண்பர்களின் நட்பு வட்டத்தை பின் தொடர முடிவது, வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, காணாமல் போனவர்களை கண்டறிய உதவுவது, யாரோ ஒருவருக்கு நடந்த மோசடியை எடுத்து போட்டு மற்றவர்களையும் உஷாராக இருக்க எச்சரிப்பது என்பது போன்ற பல பாசிட்டிவான விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழல், பொது இடங்களில் நடக்கும் விதிமீறல், காத்திருக்க வைக்கும் அரசாங்க ஊழியர்களின் நடத்தைகள், போக்குவரத்து விதிமீறல் என சமூக போராளி அவதாரம் எடுக்கும் குரூப் ஒருவகை என்றால், மறுபுறம் வீட்டில் உச்சா போவதில் தொடங்கி, அலுவலகத்தில், பயணத்தில், காபி ஷாப்பில், திரையரங்கில், சுற்றுலா செல்லுமிடத்தில், அவ்வளவு ஏன் கோவிலுக்கு சாமி கும்பிடப்போனால் கூட 'செல்ஃபி' யாகவும், குரூப்பாகவும் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் போட்டு, நட்பு வட்டத்தில் இருப்பவர்களை கவருகிறேன் பேர்வழி என்று கதற அடிப்பது இன்னொரு வகையறாவாக உள்ளது.

இந்த வகையை சேர்ந்தவர்கள்தான் நாளின் பெரும்பாலான நேரத்தில் தங்களது வழக்கமான அலுவல்கள் facebook%20computer%20200%283%29.jpgஅல்லது படிப்புக்கிடையே போட்ட ஸ்டேட்டஸ்க்கு எத்தனை லைக்ஸ், ஷேர், கமெண்டுகள் கிடைத்துள்ளன என அவ்வப்போது பார்த்து, இதில் எது குறைந்தாலும் மூட் அவுட் ஆகி, பிரதான வேலையை கோட்டை விட்டுவிடுகின்றனர்"  என்று எச்சரிக்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

'மனித நடத்தையில் கம்ப்யூட்டர்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டதாகவும், முதல் கட்ட ஆய்வில்  ஜெர்மன் மொழி பேசும் 123 பேர்கள் பங்கேற்றதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக்கில் நீண்ட நேரம் செலவிட்ட பின்னர் தங்களுக்கு வெறுப்பு உணர்வும், மன அழுத்தமும், தனிமை உணர்வும் ஏற்பட்டதாக கூறினர் என்கிறார்கள் ஆய்வை நடத்திய ஆஸ்திரேலிய மனோதத்துவ நிபுணர்களான கிறிஸ்டினா சாகி மற்றும் டோபியாஸ் ஆகியோர்.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் என்பது உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக உதவுகிறது என்றபோதிலும், அளவுக்கு அதிகமான பயன்பாடு வாழ்க்கையில் திருப்தி கொள்வதற்கான அடிப்படை மனோவியல் பண்புகளை குறைத்து, மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மனச்சோர்வுக்கும், அளவுக்கு அதிகமான ஃபேஸ்புக் பயன்பாட்டிற்கும் நிச்சயம் தொடர்பு உள்ளதாக கூறும் அவர்கள், 263 பேர் பங்கெடுத்த இரண்டாம் கட்ட ஆய்விலும் இதே ரிசல்ட்டுதான் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கடைசிக் கட்ட ஆய்வில் பங்கெடுத்த 101 பேரிடம், ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்து உள்ளே போன பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்களா அல்லது மனச்சோர்வாக உணர்கிறீர்களா? என கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் என்ன சொல்லி இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மிக மோசமான உணர்வையும், தனிமையாக இருப்பதாகவும் உணர்ந்ததாக அவர்கள் தெரிவித்ததாக கூறுகிறது அந்த ஆய்வு.

ஆய்வை நம்புகிறோமோ இல்லையோ...அது விடுக்கும் எச்சரிக்கையை உணர்ந்தவர்கள் அலர்ட்டாகிவிடுவது நல்லது! 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=32168

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

 

சிலதுகளுக்கு முற்றாகவுமே களண்டு போய் விட்டது.... :(

  • கருத்துக்கள உறவுகள்

"பேஸ்புக்கை நீயாண்டா உனக்கு நிம்மதி.. பேஸ்புக் உனையாண்டா.. மார்க்குக்கு நிம்மதி.. உனக்கு அவதி..!!" :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு விடையத்திலும் சுய நலமற்று மற்றவர் நலனையும் கருத்தில் கொண்டு செயல் பட்டால் யாருக்குமே அவதியாக அமையாது...சற்றேனும் புரிந்து நடந்தால் மன அழுத்தம் வரை யாரும் செல்லத் தேவை இல்லை...நானாக இருக்கலாம்,நீங்களாக இருக்கலாம் ஏதோ ஒன்றின் மீது அதிக கவனத்தை செலுத்தும் போது நாம் கவனம் செலுத்திய பக்கம் மிகவும் சுய நலமாக நடந்து கொண்டால் மன அழுத்தம் வராமல் என்ன தான் வரும்...நல்ல நிலையில் இருக்கும் போது தாங்கள் சொன்னதையே சற்றுக் குளப்பங்கள் வரும் போது இல்லை வரப் போகிறது என்று அறிந்தால் மறுத்துடுவர்கள்.இன்றைக்கு இது தான் நடக்கிறது...எல்லாம் தங்களுக்கு தங்களுக்கு வந்தால் மட்டுமே புரியும். ஒரு வித நம்பிக்கையில் நடப்பது தானே..நான் நிறைய,நிறைய கஸ்ரப்பட்டாச்சு அந்த வலியை தந்தவர்களுக்கு நன்றி.

Edited by யாயினி

முழுநேரமாக வேலை செய்தால், இந்தப் பிரச்சனைகள் அவ்வளவாக  இருக்காது.  அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.  

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் முகநூலுக்குள்ளயே  இருப்பவர்கள் என்று எடுக்க ஏலாது..அடிக்கடி போய் வாற இடமாக இருக்கலாம்..சொல்லப் போனால் எதை,எதை எல்லாம் முகப் புத்தகத்தில் போடக் கூடாது என்ற வரையறையே இல்லாது போய் விட்டது..மேலே சொல்லப் பட்டு இருக்கிறது தானே உச்சா போறதில இருந்து அனைத்துமே முகநூலில் போட்டு விட்டுத் தான் மற்ற வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்....

நான் முன்னர் எல்லாம் இவை பற்றி அக்கறை பட்டுக் கொள்வதில்லை..முக புத்தகத்தில் பெரிதாக யாருடனும் அதிகம் பேசக் கூட மாட்டன்..ஒன்று,இரண்டு உறவுகளாலயே அண்மைய காலங்களில் முகப் புத்தகத்தினூடாக சில சிக்கல்களை எதிர் கொண்டவள்..ஒரு நட்பைக் கூட ஏன் இப்படி நடந்து கொண்டீர் என்று கூட கேக்க முடியாத கால கட்டம்...அந்த கேள்விக்குள்  எழுதப்பட்டுள்ள தன்மை தெரியாது,..நாங்களும் எங்களுக்குள் இருக்க கூடிய சில பல கடினமான தருணங்களை நல்ல நட்புக்கள் என்று நம்பித் தானே பகிர்ந்து கொள்வோம்.எல்லாம்  ஒரு நம்பிக்கை தானே..பின்னர் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நட்பு என்று கூட விளங்கிக் கொள்ளாது.. உடன் மிரட்டல் பாணியில் தான் இனிமேல் என்னை கேள்வி கேட்டால் மெயில் போட்டால் வீட்டில் இன்ரர்நெற்றே வைச்சு இருக்க மாட்டாய் என்று மிரட்டுற காலம் இது..இப்படி நிறைய,நிறைய ..கெட்ட வார்த்தைகளால் திட்டுவது..உடல் நலம் சார்ந்த விடையங்களை இழுத்துப் பேசுவது...இவ்வாறன தாக்கங்களினால் தான் சிலர் தங்களுக்கு தாங்ளே பணிஸ்மன்ற் குடுத்துக் கொண்டு போறவர்கள்...மற்றவர்கள் எப்படிப் போனாலும் பறவா இல்ல,தான் தன் குடும்பம்,தன் சுற்றத்தார் இப்படித் தான் சிலர் வாழ முயற்சிக்கிறார்கள்..இவ்வாறன விடையங்களை எதிர் கொள்ளும்  போது தான் மன அழுத்தம் என்பது எட்டிப் பார்க்க  தோணுது..என்ன தான் இருந்தாலும் நட்பு அன்பாக,பண்பாக பழகியவர் அல்லவா என்பதைக் கூட சிலர் நினைக்க மறுக்கிறார்கள்..மனோ ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுத்துவதற்கு நிறைய விடையங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்..பின்  முற்று முழுதாக மனநலம் குன்றாமலே  என்னை நல்ல வைத்தியராக பார்த்துப் போக சொல்லி விடுவார்கள்..இது தான் உலகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.