Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது!: வரதராஜ பெருமாள் சொல்றாரு....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜ பெருமாள் - ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை p31.jpgஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர். புலிகளின் கொலைப் பட்டியலில் அவர் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில்  வரதராஜ பெருமாள் அங்கிருந்து தப்பினார். எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த சூழலில் அவரைச் சென்னையில் சந்தித்தோம்.

 

''இத்தனை ஆண்டுகள் எங்கேதான் இருந்தீர்கள்?''

''11 வருடங்கள் ராஜஸ்தானிலும் பத்து வருடங்கள் டெல்லியிலும் இருந்தேன். இலங்கையில் இருந்திருந்தால் இப்போது நான் இருந்திருக்க மாட்டேன். ராஜீவ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக இருந்ததால், என்னைக் கொல்வதும் இந்தியாவை அடிப்பதும் ஒன்று என புலிகள் கருதினார்கள். தலைமறைவாக இருந்ததில் எந்தத் தவறுமில்லை. அது என்னுடைய விருப்பமும்கூட. இந்தியாவின் பாதுகாப்பில் இருந்ததைப் பெருமையாகதான் கருதுகிறேன்.''

 

 

''நான்கு சுவற்றுக்குள் இத்தனை ஆண்டுகளை எப்படி கடந்தீர்கள்?''

 

''அதுவும் ஐந்தாறு ஆண்டுகளுக்குதான். அப்போது தொழில்கூட செய்ய முடியாத சூழல். அதனால் டெல்லி பல்கலைக்கழத்தில் சட்டம் படித்தேன். நான் படிக்கபோனதுகூட பாதுகாப்புத் துறை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு நாளும் சட்டக் கல்லூரிக்குப் போய் வந்தேன். இந்த காலத்தில் இந்திய மற்றும் உலக பொருளாதாரத்தைப் படித்தேன். அதுபற்றி 'நாடுகளுடைய பொருளாதார கணக்கு’ என்ற புத்தகத்தையும் எழுதினேன். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு சூழல் மாறிவிட்டது.''

 

 

''புலிகள் வீழ்ச்சிக்குக் காரணம்?''

p31a.jpg

''அரசியல் இல்லாத ஆயுதம்தான் அவர்களை அழித்தது. வெறுமனே ஆயுதங்களை மட்டுமே நம்பிவிட்டார்கள். உலக அரசியல் மாற்றங்கள், இந்திய உபகண்டத்தில் நடந்த அரசியல் போக்குகள், உறவுகள் ஆகியவற்றைப் புலிகள் சரியாகக் கணக்கிட்டிருந்தால், அதற்குத்தக்கப்படி தங்களையும் மாற்றியமைத்து  கொண்டிருந்தால் தமிழர்களுக்குப் பெரும் நன்மையை செய்திருக்க முடியும்.''

 

 

''பிரபாகரன் மரணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''யுத்தம் தவிர வேறு ஒன்றுக்கும் புலிகள் தயாராக இல்லை. தமிழர்களுக்குக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் பிரபாகரன் கிடைக்கவிடாமல் செய்து, 'தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தருவேன்’ என்ற நம்பிக்கையை ஊட்டினார். கடைசியில் எதையும் செய்து கொடுக்காமல் போய்விட்டார். தமிழ் மக்கள் நம்பியதற்குப் பிறகும் கடைசியில் அறுவடை ஒன்றுமில்லாமல் போய்விட்டது. நல்ல உழவனுக்கு அழகு எவ்வளவு அறுவடை செய்தான் என்பதுதான். எவ்வளவு திறமையாக உழுதான் என்பது அல்ல. உழுததற்கும் மேலும் உழுது ஒரு நெல் மணியையும் எடுக்க முடியவில்லை என்றால் என்ன பயன்?''

 

''இந்தியா ஆதரவோடுதானே இலங்கை இறுதியுத்தம் நடைபெற்றது?''

''யாரையும் புலிகள் விட்டுவைக்காததால் எல்லோரும் புலிகளை எதிரிகளாகக் கருதினார்கள். புலிகளின் ஊடாக, ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த எல்லா நாடுகளும் முயற்சித்தன. அது பலன் அளிக்காததால் அத்தனை நாடுகளும், 'புலிகள் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது’ என நினைத்து ஒன்றுபட்டுவிட்டன. இலங்கையில் பிரச்னை என்றால் அது இந்தியாவைத்தானே பாதிக்கும்? 'நாங்கள் பிரிவினைக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்’ என இந்திராவும் ராஜீவும் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். நாங்கள்தான் தவறாகக் கற்பனை செய்துகொண்டோம். இந்தியா கண்ணைக்கட்டி கையைப்பிடித்து தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என்பது எங்களின் கற்பனை. இறுதிப்போரின்போது 'எதிர்தாக்குதல் ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை. தற்காப்பு ஆயுதங்கள்தான் கொடுத்தோம்’ என்று இந்தியா சொன்னது. ஒன்றுமே கொடுக்காவிட்டால் இலங்கை அரசு, பாகிஸ்தானோடு அல்லது சீனாவோடு சேர்ந்திருக்கும்.''

 

''ஸ்ரீபெரும்புதூருக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் தொடர்பு உண்டுதானே?''

''முடிச்சு போடுவது தவறு. காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதை இது. ராஜீவ் கொலைக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் சம்பந்தம் இல்லை. ராஜீவ் கொலைக்குப் பிறகும்கூட இந்தியா உட்பட முக்கிய நாடுகள் எல்லாம் இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க முயன்றன. நார்வே எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்தது. புலிகள் எதற்கும் இடமளிக்கவில்லை. புலிகள் இருக்கும்வரையில் எந்த அரசியல் தீர்வையும் தொடங்கக்கூட முடியாது என்பதால் புலிகளை முடித்துவிட வேண்டும் என உலகம் முழுவதும் தீர்மானித்தன. உலக நாடுகளின் ஆதரவு இல்லாமல் குறிப்பாக இந்தியாவின் ஆதரவு இல்லாமல் புலிகள், தாக்கு பிடிக்கவே முடியாது. புலிகள் வேறு இயக்கங்களை அழித்தார்கள். கொன்றார்கள். அதனால் ஏனைய இயக்கங்களும் புலிகளை அழிக்க ஒன்றாக இருந்தன. இப்படி பல காரணங்கள்தான் புலிகளை அழித்தது. ராஜீவ் கொலையோடு முடிச்சு போடுவது சரியில்லை.''

- எம்.பரக்கத் அலி

படம்: ஆ.முத்துக்குமார்

 

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98561

  • கருத்துக்கள உறவுகள்

, 'புலிகள் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது’ என நினைத்து ஒன்றுபட்டுவிட்டன. 

 

ஏதோ

உலகம் தீர்வை  தயாராக  வைத்திருந்தது

புலிகளை  ஒழித்துவிட்டு

கொடுத்துவிட்டது...

 

 

கடிதாசியலாவது இருக்கா?

எடுத்து நாக்கு வழிக்க......

:(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

 

, 'புலிகள் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது’ என நினைத்து ஒன்றுபட்டுவிட்டன. 

 

ஏதோ

உலகம், தீர்வை  தயாராக  வைத்திருந்தது

புலிகளை  ஒழித்துவிட்டு

கொடுத்துவிட்டது...

அதான் 'யாழ்தேவி' வரப்போகுதே? வசந்தம், சூறா'வலி'யாய் வீசாதா? :(

வரதர் எஜமான் விசுவாசம் நன்கு காட்டுகின்றார். 

 

இந்தியா பிரிவினையை ஆதரிக்காது என்று சொல்பவர் தான்  இந்திய கொலைப்படை இலங்கையில் இருந்து வெளியேறுகையில் வடக்கு மாகண சபையை விட்டு  விட்டு ஓடும் போது தமிழீழ பிரகடனத்தினை  செய்து போட்டு ஓடினத் தப்பினார்.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வரதர் எஜமான் விசுவாசம் நன்கு காட்டுகின்றார். 

 

இந்தியா பிரிவினையை ஆதரிக்காது என்று சொல்பவர் தான்  இந்திய கொலைப்படை இலங்கையில் இருந்து வெளியேறுகையில் வடக்கு மாகண சபையை விட்டு  விட்டு ஓடும் போது தமிழீழ பிரகடனத்தினை  செய்து போட்டு ஓடினத் தப்பினார்.

 

 

அது உப்பு  தின்ன முன்னால்

இது பின்னால்.. :(

வரதர் சொல்வது நூற்று நூறு உண்மை ,

 

அவர் செய்த அரசியல் வேறு விடயம் 

  • கருத்துக்கள உறவுகள்

வரதர் சொல்வது நூற்று நூறு உண்மை ,

 

அவர் செய்த அரசியல் வேறு விடயம் 

 

 

நூறு வீதம் உண்மை  என்றால்

தமிழருக்கான தீர்வு எங்கே...??

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுண், நீங்கள் சொல்றத வைச்சுப்பார்த்தால் வரதராசப்பெருமாள் மிகப்பெரிய அரசியல் அறிவுமேதை இந்தியக்கொலைப்படை எமதுமண்ணில் நிலைகொண்டகாலத்தில் பெருமாளுக்குத்தான் பட்டம் சாத்தினயவயள் அதோடு ஒரு லட்சத்துக்கு மேலான படையினர் அவரை காத்து நின்றார்கள்

 

போதாக்குறைக்கு மண்டையன் குழு எனும்பெயரில் தற்போதைய கூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு ஆயுதப்படையை நடத்தினவர்

 

ஆக நீங்கள் சொல்லுற  அரசியல் ஆயுதம் எல்லாம் இருந்தும் எதுவுமே பெருமாளால புடுங்க முடியேல்லை. ஒரே ஒரு விடையம் மட்டுமே நடந்தது மண்டையன் குழுவினால் அப்பாவி இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டார்கள்

 

அரசியலுடன்கூடிய  அதி அற்புத ஆயுதபலம் இருந்தும் இந்தியாவில வடக்கு மாநிலத்தில மாட்டுப்பண்ணை  பராமரிக்க மட்டுமே முடிந்தது இந்த அதிகப்பிரசங்கிக்கு

 

இந்திய கொலை வெறி இராணுவம் நாட்டைவிட்டுப் போகும்போது ஐயா செய்தவேலை தமிழீழப் பிரகடனம் இது எந்த வகை அரசியலில வந்தது.

 

புலிகளை வசைபாடுகிறவர்கள் எல்லாரும் பெரும் அரசியல் தத்துவார்த்தவாதிகள் என எண்ணம்கொள்ள இங்கு யாரும் மட்டி மடையன் இல்லை.

 

எங்கட ஊரிலையும் ஒருவர் இருக்கிறார், சாதாரண ஆங்கில ரெயினிங் ஆசிரியர். இங்க வந்து கொஞ்சம் பாசையைப் பழிகிவிட்டார் அவரது கண்களுக்குத் தெரிவதெல்லாம் கழுவப்போறதுகள் உணவு விடுதியில் வேலை செய்பவர்கள் இவர்களே. வீட்டுப்பிரச்சனை, தங்களை நிலைநிறுத்தவேண்டும் என்பதால் அவர்களது சீவியம் அப்படிப்போகுது

 

அவர்களில் சிலர் தாயகம்நோக்கிய பயணத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள்  அதனால் அவர்கள் பல சிரமங்களையும் எதிர்கொண்டார்கள் இப்போதும் எதிர்கொள்கிறார்கள்

 

அவர்கள் உந்தவேலை செய்தபடியாலதான்  அவர்களை தலைவர் இதுகளுக்குப் பொறுப்பாகக் கொடுத்ததாலதான் இயக்கம் இந்த நிலைக்கு வந்தது என்பார்

 

இயக்கம் இதுகளெல்லாம் பாத்து போராட்டத்துக்கு ஆள் பிடிக்கவேண்டுமெனில் பலாலி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு முன்புதான் போய் நிக்கவேண்டும்.

 

தவிர இவர்களெல்லாம் ஓரளவு படித்தகூட்டம் என்றே வைத்துக்கொள்வோம் "சிலவேளை பொலீசுப்பிரச்சனை வந்தால் என்ன செய்கிறது" எண்டு பதாதைகள் எல்லாத்தையும் குப்பைக்க எறிஞ்சுபோட்டு காணாமல் போயிடுங்கள் அல்லது பார்பிக்கூ பார்ட்டிக்குத் தண்ணிப்போத்தலோட போயிடுங்கள்.

 

இன்னுமொரு திணுசான கூட்டம் இருக்கு ஊரில நாங்கள் அந்தமாதிரி எண்டு சொல்லி தண்ணியப் போட்டுட்டு புட்டுப்பானயில சின்னமாமியின் சின்ன மகளைத் தாளம்தட்டித் தேடுங்கள்.

 

அல்லது எப்போதோ மழைக்கு ஒதுங்கும் போது கொஞ்சம் படிக்கவும் ஒதுங்கின பள்ளிக்கூடத்தின் பெயரில் காக்ரைல் பாட்டிபோட்டு பிறவிப்பயனடைவினம்.

 

அனால் இவர்கள் எல்லோரும் வரதராசம்பெருமாள் போன்ற அனாமத்துகள் யாராவது வந்து திண்டது செமிக்காது சத்தியெடுத்தால் மார்பில அணைச்சுத் தாங்கிப்பிடிப்பினம்

 

அவர்கள் எடுக்கிற வாந்தி உங்கட பேரன் பேத்தியிண்ட தலையில விடியப்போகுது என்பதே அறியாத சுரணை கெட்ட சனங்கள்.

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.