Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகலகலாவல்லி மாலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவராத்திரி பூசையின் போது, சகலகலாவல்லி மாலை

பாடப்படும் என்பதை அறியாத சிலருக்கும், அது கிடைக்காமல் இருப்பவர்களுக்குமான தேடலில் கிடைத்தது. இதுகளைக் கொஞ்சம் பாடி புண்ணியத்தைச் சேருங்கள்

பாடல் 1

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்

தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து

உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!

பாடல் 2

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே

பாடல் 3

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்

குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு

களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!

பாடல் 4

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

பாடல் 5

பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்

நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து

அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்

கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே

பாடல் 6

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே

பாடல் 7

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே!

பாடல் 8

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல

நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்

செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே

பாடல் 9

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை

நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை

கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே

பாடல் 10

மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

பதிவுகள், மற்றும் விளக்க உரைகள்

http://sakalakalavalli.blogspot.com/

நானும் வீட்ட இந்த பாட்டு பாடினான் நீங்களும் பாடினீங்களா அண்ணா அது சரி என்ன பிரசாதம் வீட்ட

:wink: :wink: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன யமுனா!

மேற்கோள் சம்பந்தமே இல்லாமல் இருக்குதே!

சொல்லப் போனால், உப்படி பக்தி எல்லாம் இல்லை. ஆனால் மற்றவர்களை ஊக்கப்படுத்துவது மட்டும் தான். தூயாவிற்குத் தெரியும். எந்த நாளும் மச்சம் இல்லாட்டால் தொண்டை ஒன்றையும் உள்ளே வடாது!

என்ன யமுனா!

மேற்கோள் சம்பந்தமே இல்லாமல் இருக்குதே!

சொல்லப் போனால், உப்படி பக்தி எல்லாம் இல்லை. ஆனால் மற்றவர்களை ஊக்கப்படுத்துவது மட்டும் தான். தூயாவிற்குத் தெரியும். எந்த நாளும் மச்சம் இல்லாட்டால் தொண்டை ஒன்றையும் உள்ளே வடாது!

ஓ பிழையா போட்டு விட்டேன் மன்னிக்கவும் அப்படி தான் நானும் அம்மா சமைக்க மாட்டா நான் வெளியால சாப்பிட்டு விட்டு தான் வருவேன் வெள்ளிகிழமை உட்பட

:wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ பிழையா போட்டு விட்டேன் மன்னிக்கவும் அப்படி தான் நானும் அம்மா சமைக்க மாட்டா நான் வெளியால சாப்பிட்டு விட்டு தான் வருவேன் வெள்ளிகிழமை உட்பட

:wink: :wink:

அதான் mc donalds பக்கம் அடிக்கடி காணுறனான்... :oops: :oops:

அதான் mc donalds பக்கம் அடிக்கடி காணுறனான்... :oops: :oops:

நான் மக் போறது சரி ஆனால் நான் யாரு என்று உமக்கு தெறியாம யாரையோ பார்த்து போட்டீர்

:wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

அஸக்கு புஸ்க்கு புத்தனேயே தெரியுமாம் உங்கள தெரின்சு கிறது பெரிய வேலையா..

அவரை எப்படி உங்களுக்கு தெறியும் அந்த மனிசன் இதை பற்றி சொல்லவே இல்லை ஆனால் என்னை கண்டிருக்க மாட்டீர்

:evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

என்னது மனிசனா..அட பாவிங்களா...

  • கருத்துக்கள உறவுகள்

i mean அவர் மனுஷனே இல்ல அதையும் தான்டி.........

என்னது மனிசனா..அட பாவிங்களா...

ஒரு பேச்சுக்கு சொன்னா அவர் இல்லாத நேரம் தானே அவரை பற்றி இப்படி எழுதலாம் அதையும் விட மாட்டீங்கள் போல

:evil: :evil:

என்ன யமுனா!

மேற்கோள் சம்பந்தமே இல்லாமல் இருக்குதே!

சொல்லப் போனால், உப்படி பக்தி எல்லாம் இல்லை. ஆனால் மற்றவர்களை ஊக்கப்படுத்துவது மட்டும் தான். தூயாவிற்குத் தெரியும். எந்த நாளும் மச்சம் இல்லாட்டால் தொண்டை ஒன்றையும் உள்ளே வடாது!

அதுவும் தெரியும்.

அம்மாட்ட ஒருதர் அர்ச்சனை வாங்குவதும் தெரியும் :lol:

தூய்ஸ், சகலகலாவல்லி மாலைக்கு நன்றி.

மனப்பாடம், இருப்பினும் மறுபடி வாசித்ததில் மனதில் அதிகம் பதிக்க முடிந்தது. :lol:

இணைப்புக்கு நன்றிகள் தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகலகலாவல்லி மாலை பாடல்களை மீண்டுமொரு தடவை மனனம் செய்ய வைத்த தூயவனுக்கு மிக நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் போன்ற பாடல்களை எதிர்பார்க்கின்றேன்.

சகலகலாவல்லி மாலை பாடல்களுக்குரிய விளக்கத்தை இந்த வலைப்பதிவில் படித்தேன்.

http://sakalakalavalli.blogspot.com/

கலோ மதன் என்னப்பா இன்னும் சாமி கும்பிட்டு முடியேல்லையே, எங்க ஆளைக் கன நாளாக் காணன், இல்லை வேற முகமூடியோடையோ? அதுதான் இப்ப இங்க பசன்.

ஹி ஹி இன்னும் சாமி கும்பிட்டு முடிக்கேல்லை.

வேலைபளு காரணமாக தான் வரேல்லை. இனி சமரும் முடிஞ்சுது அடிக்கடி வரலாம் நாரதர். இவ்வளவு காலமும் வரவே நேரம் கிடைக்கேல்லை அதுக்குள்ள இன்னொரு முகமூடி பசனுக்கு எங்க நேரம்?

  • கருத்துக்கள உறவுகள்

"ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்" இப்படி சிவபுராணத்தில் பாடியுள்ளார்கள் சிவனை நினைத்து.முத்தொழிலும் சிவன் செய்வதாக சைவர்கள் பாடியுள்ளார்கள்.இப்ப சிவனுக்கு ஏன் அழித்தல் தொழிழை கொடுத்தவர்கள்.இராவணன் சிவப் பக்தன் என்றபடியால் அவனை இழிவாக காட்டினார்கள்,தொடர்ந்தும் சிவ பக்தர்களை இழிவாக தான் காட்டுகிறார்களோ?பக்த கோடிகளே உங்களுக்கு விளக்கம் தெறிந்தா தாங்கோ அடியேன் பக்த கேடிக்கு ஒரு சந்தேகம்.

ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

நன்றி தூயவன். எங்கள் பாடசாலையில் (யாழ் மத்திய கல்லூரி) ஒரு கிருஸ்தவர்தான் சங்கீத ஆசிரியராக இருந்தவர். அவர்தான் நவராத்திரி விழாவில் இந்த சகலகலாவல்லி மாலை பாடலை பாடுவார். அவர் இதை உருகி பாடும் முறையை பார்தீர்களானால் சொக்கி போவீர்கள். அவ்வளவு நன்றாக பாடுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்" இப்படி சிவபுராணத்தில் பாடியுள்ளார்கள் சிவனை நினைத்து.முத்தொழிலும் சிவன் செய்வதாக சைவர்கள் பாடியுள்ளார்கள்.இப்ப சிவனுக்கு ஏன் அழித்தல் தொழிழை கொடுத்தவர்கள்.இராவணன் சிவப் பக்தன் என்றபடியால் அவனை இழிவாக காட்டினார்கள்,தொடர்ந்தும் சிவ பக்தர்களை இழிவாக தான் காட்டுகிறார்களோ?பக்த கோடிகளே உங்களுக்கு விளக்கம் தெறிந்தா தாங்கோ அடியேன் பக்த கேடிக்கு ஒரு சந்தேகம்.

ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

விளககமாகச் சொலலுங்கள் புத்தன். யார் இப்போது சிவனை அழித்தல் தொழிலாக மட்டும் காடடுகின்றார்கள்!

  • 1 year later...

மீண்டும் வரட்டுமே இப்பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வரட்டுமே இப்பதிவு

:) சரியாக இரு வருடங்களின் பின்பு :D:unsure:

:) சரியாக இரு வருடங்களின் பின்பு :D:unsure:

:) சகலகலாவல்லி மாலை தேடும் போது கிடைத்தது :)

  • கருத்துக்கள உறவுகள்

பம்பலப்பிட்டி இந்துவில் வரிசைகட்டி நிண்டு பாடின ஞாபகம்..! :) பத்துப் பாடல்களையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். ஞாப‌க‌ப் ப‌டுத்திய‌த‌ற்கு ந‌ன்றிக‌ள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.