Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நட்புக்கு இலக்கணம்


Recommended Posts

நட்புக்கு இலக்கணம்

நான் கண்டு கொண்டேன்...

நங்கை அவளிடம்..

ஆணுக்கும் பெண்ணுக்கும்..

காதலும்.. காமமும்தான்

பாலம் போடுமா..

இல்லை...

நட்புப்பாலத்தில்..

நானும் அவளும்..

அவள் என் வாழ்வுக்கு

ஒளி தந்த

வெண்ணிலவு..

என் தாயைப்போல..

அவள்..என் துயருக்கு

தோள் தந்த

தோழி..

என் மனைவி போல..

அவள் என் சிரிப்புக்கு

சேதி சொன்ன

சினேகிதி

ஆருயிரைப்போல..

அவள் என் துயிலுக்கு

மடி தந்த

நாயகி

நான் மழலை போல...

அவள் என் சோர்வுக்கு

விடை தந்த

தாதி

என் தந்தை போல...

அவள் கண்ணீரால்..

என்னைக்

காயப்படுத்தியிருக்கிறாள்...

என் கண்ணீரால்

நான்

அவளைக்குணப்படுத்தியிருக்கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்புக்கு இலக்கணம்

எங்கள் நட்பை யாராவது..

காதல் எழுத்துக்களால்

களங்கம் செய்துவிடுவார்கள்..

என்ற கலக்கம்

எனக்குமில்லை..அவளுக்குமில்லை

.

ஏனென்றால்..

அம்மா..அப்பா...

அண்ணா..அக்கா..

மனைவி..கணவன்..

எல்லா உறவுகளையும்

பிரதிபலிக்கும்

எங்கள் நட்பை

வெறும் கணவன்..மனைவியாக்கி..

கூறுபோட

இருவருக்குமே..

ஈடுபாடில்லை...

நாங்களும்

பரிஸித்துக்கொள்கிறோம்..

இது..

மழலைக்கரங்கள்..

பட்டுக்கொண்ட பரிசம்..

அம்மா விரலைப்

பற்றிக்கொண்ட பரிசம்..

ஆயுள்வரை..

தொற்றிக்கொண்ட பரிசம்..

ம்..ம்..நல்லாத்தான் சொல்லியிருக்கிறீங்க கவிஞரே. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

எங்கள் நட்பை யாராவது..

காதல் எழுத்துக்களால்

களங்கம் செய்துவிடுவார்கள்..

என்ற கலக்கம்

எனக்குமில்லை..அவளுக்குமில்லை

.

வாவ் அருமையான வரிகள். இப்படியே ஆண் பெண் நட்புகள் நீடித்து நிலைத்திருக்க வாழ்த்துக்கள். கலங்கமில்லாமல் வாழும் நட்பே சிறந்த நட்பு. வாழ்த்துக்கள். :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நட்பை யாராவது..

காதல் எழுத்துக்களால்

களங்கம் செய்துவிடுவார்கள்..

என்ற கலக்கம்

எனக்குமில்லை..அவளுக்குமில்லை

.

உங்கள் கவிதை அழகு விகடகவி சார்

ஆனால் மேலே குறிப்பிட்ட வரிகள் வாழ்வில் சாத்தியமில்லை

Link to comment
Share on other sites

உங்கள் கவிதை அழகு விகடகவி சார்

ஆனால் மேலே குறிப்பிட்ட வரிகள் வாழ்வில் சாத்தியமில்லை

விகடகவிக்கு சொல்ல நிலா பதில் சொல்லுறா என நினைக்காதீங்க. அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன்

ஏன் மேற்குறிப்பிட்ட வரிகள் சாத்தியமில்லை?

ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழகுவதில் என்ன தவறு? அப்படி பழகினால் நம் குருட்டு சமுதாயம் தப்பாக நினைக்கும். அதையும் தாண்டி நட்பாக பழகினால் தப்பா? ஒரு ஆணும் பெண்ணும் எப்படித்தான் அன்போடு களங்கமில்லாமல் பழகினால் சமுதாயம் அவர்கள் மீது வீண்பழிச் சொல்லை சுமத்தி அவ்நட்பை கொச்சைப்படுத்துவார்களே தவிர வேறேதும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற இக்காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மாசற்ற நட்போடு வாழ்வது பெரிய விடயமில்லையே. :arrow:

Link to comment
Share on other sites

விகடகவிக்கு சொல்ல நிலா பதில் சொல்லுறா என நினைக்காதீங்க. அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன்

ஏன் மேற்குறிப்பிட்ட வரிகள் சாத்தியமில்லை?

ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழகுவதில் என்ன தவறு? அப்படி பழகினால் நம் குருட்டு சமுதாயம் தப்பாக நினைக்கும். அதையும் தாண்டி நட்பாக பழகினால் தப்பா? ஒரு ஆணும் பெண்ணும் எப்படித்தான் அன்போடு களங்கமில்லாமல் பழகினால் சமுதாயம் அவர்கள் மீது வீண்பழிச் சொல்லை சுமத்தி அவ்நட்பை கொச்சைப்படுத்துவார்களே தவிர வேறேதும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற இக்காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மாசற்ற நட்போடு வாழ்வது பெரிய விடயமில்லையே. :arrow:

தப்பில்லாத விடயத்தை

தப்பாக புரிந்து கொண்டால்

தப்பில்லாத தப்பு

தாப்பாக போயிடுதே

யாருக்காவது புரிந்துதா :wink:

Link to comment
Share on other sites

வாவ் அருமையான வரிகள். இப்படியே ஆண் பெண் நட்புகள் நீடித்து நிலைத்திருக்க வாழ்த்துக்கள். கலங்கமில்லாமல் வாழும் நட்பே சிறந்த நட்பு. வாழ்த்துக்கள். :P :P :P

நன்றி வெண்ணிலா

Link to comment
Share on other sites

உங்கள் கவிதை அழகு விகடகவி சார்

ஆனால் மேலே குறிப்பிட்ட வரிகள் வாழ்வில் சாத்தியமில்லை

ஏன் சாத்தியமில்லை..

சின்னப்பராயம் முதல்..

ஒன்றாக வளர்ந்தோம்..

எங்கள் நட்பை குறை சொல்லாதீர்கள்... கறுப்பி

:twisted: :twisted: :twisted: :evil:

Link to comment
Share on other sites

விகடகவிக்கு சொல்ல நிலா பதில் சொல்லுறா என நினைக்காதீங்க. அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன்

ஏன் மேற்குறிப்பிட்ட வரிகள் சாத்தியமில்லை?

ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழகுவதில் என்ன தவறு? அப்படி பழகினால் நம் குருட்டு சமுதாயம் தப்பாக நினைக்கும். அதையும் தாண்டி நட்பாக பழகினால் தப்பா? ஒரு ஆணும் பெண்ணும் எப்படித்தான் அன்போடு களங்கமில்லாமல் பழகினால் சமுதாயம் அவர்கள் மீது வீண்பழிச் சொல்லை சுமத்தி அவ்நட்பை கொச்சைப்படுத்துவார்களே தவிர வேறேதும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற இக்காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மாசற்ற நட்போடு வாழ்வது பெரிய விடயமில்லையே. :arrow:

அட்றா..அட்றா...அட்றா...

வெண்ணிலா..எப்படி என் மனதைப் படம்பிடித்தீர்கள்

நன்றி

Link to comment
Share on other sites

ஆண்' date=' பெண் நட்புக்கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் விகடகவி[/color']

நன்றி இலக்கியா

Link to comment
Share on other sites

தப்பில்லாத விடயத்தை

தப்பாக புரிந்து கொண்டால்

தப்பில்லாத தப்பு

தாப்பாக போயிடுதே

யாருக்காவது புரிந்துதா :wink:

போச்சுடா...

என்ன இலக்கியரே..

யாராவது மப்பில சொன்னது

காதில விழுந்திட்டுதோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாத்தியமில்லை..

சின்னப்பராயம் முதல்..

ஒன்றாக வளர்ந்தோம்..

எங்கள் நட்பை குறை சொல்லாதீர்கள்... கறுப்பி

:twisted: :twisted: :twisted: :evil:

உங்கள் நட்பை குறை சொல்லவில்லை விகடகவி சார்.

என் வாழ்வின் நிதர்சனத்தை சொன்னன்

Link to comment
Share on other sites

அட்றா..அட்றா...அட்றா...

வெண்ணிலா..எப்படி என் மனதைப் படம்பிடித்தீர்கள்

நன்றி

நான் படம்பிடிக்கவில்லை. அதுசரி மனதை படம்பிடிக்கலாமா? :wink: அப்படி எதுவும் இல்லை விகடகவி நட்பை நேசிப்பவர்கள், காதலையும் நட்பையும் பிரித்தறிபவர்கள், எவராக இருந்தாலும் நான் சொன்னதை தான் சொல்லியிருப்பார்கள். :P நன்றி

Link to comment
Share on other sites

நான் படம்பிடிக்கவில்லை. அதுசரி மனதை படம்பிடிக்கலாமா? :wink: அப்படி எதுவும் இல்லை விகடகவி நட்பை நேசிப்பவர்கள், காதலையும் நட்பையும் பிரித்தறிபவர்கள், எவராக இருந்தாலும் நான் சொன்னதை தான் சொல்லியிருப்பார்கள். :P நன்றி

உண்மைதான்...

புரிந்துணர்விருந்தால் யார் வேணுமானாலும் சொல்லலாம்..

Link to comment
Share on other sites

வாவ் நல்லதொரு கவி நட்புக்கு நல்லதொரு இலக்கணம் உண்மையிலே இப்படியான உண்மையான நட்பை தற்காலிக உலகில் கேட்பதே அரிது வாழ்த்துக்கள் தங்கள் நட்பு தொடர.

Link to comment
Share on other sites

வாவ் நல்லதொரு கவி நட்புக்கு நல்லதொரு இலக்கணம் உண்மையிலே இப்படியான உண்மையான நட்பை தற்காலிக உலகில் கேட்பதே அரிது வாழ்த்துக்கள் தங்கள் நட்பு தொடர.

நன்றி சந்தியா

Link to comment
Share on other sites

உண்மையான நட்பில் சந்தேகபடுவதற்கு எதுவுமில்லை.

வாழ்துக்கள் விகடகவி.

ம்..ஆனால்...

சமுதாயக்கண்ணோட்டமும்..

பேச்சுக்களும் அப்படியில்லையே என்ன செய்வது...

நன்றி வாசகன்..

Link to comment
Share on other sites

ம்..ஆனால்...

சமுதாயக்கண்ணோட்டமும்..

பேச்சுக்களும் அப்படியில்லையே என்ன செய்வது...

நன்றி வாசகன்..

சமுதாயத்தை பார்த்து பயந்தால் எதுவுமே செய்ய முடியாது. சமுதாயத்துக்கு எல்லாமே கெட்டதாக தான் புலப்படும் :twisted: எது நல்லதென மனதில் படுதோ அதன்படி செய்வது உத்தமம் :P :arrow:

Link to comment
Share on other sites

நட்புக்கு இலக்கணம்

நான் கண்டு கொண்டேன்...

நங்கை அவளிடம்..

ஆணுக்கும் பெண்ணுக்கும்..

காதலும்.. காமமும்தான்

பாலம் போடுமா..

இல்லை...

நட்புப்பாலத்தில்..

நானும் அவளும்..

ஆண் பெண் நட்பு குறித்த நல்ல கருத்துக்களை கொண்ட கவி எழுதிய விகடகவிக்குப் பாராட்டுக்க: நண்பனோ நண்பியோ எதுவாக இருந்தாலும் வாழ்க்கையில் நல்ல நட்பு கிடைத்தால் நம்து சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் வாழ்கையை எதிர்கொண்டு வாழவும் மிக மிக உதவியாக இருக்கும். ஆனால் அது அனைவருக்கும் கிடைப்பதில்லை. உங்களுக்கு கிடைத்து இருக்கு எனும் போது மகிழ்வாக இருக்கிறது. உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பையா இப்போ உள்ள புள்ளி பட்டியலை படம் எடுத்து வீட்டில தொங்க விடுங்கள்.
    • சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது – சுரேஷ் May 19, 2024     சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றார் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவரது அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- ‘கடந்த சில மாதங்களாக தமிழ்ப் பொது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தமது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பெருமளவிலான தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரின் தேவையை உணர்ந்திருக்கின்றனர். இது தொடர்பாக பல்வேறுபட்ட கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளை இணைத்து இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு செயற்பாட்டுக்குழுவை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழரசுக் கட்சி ஒரு கட்சியாக முழுமையாக இணைந்து பணியாற்றுவதற்கு 19ஆம்திகதிவரை கால அவகாசம் கோரியிருந்தார்கள். வடக்கிலும் கிழக்கிலும் இருக்கக்கூடிய தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதற்கான தமது சாதகமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழரசுக் கட்சியின் போஷகராக இருக்கக்கூடிய – மூத்த தலைவராக பேசப்படுகின்ற – சம்பந்தன் அவர்கள் பொது வேட்பாளர் ஒருவர் இப்பொழுது தேவையில்லை என்றும் உள்ளக சுயநிர்ணய உரிமை மூலம் சமஷ்டி ஆட்சிமுறையை உருவாக்குகின்ற ஒஸ்லோ பிரகடனத்தைக் கைவிட்டுவிடக்கூடாது என்றும் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் பொதுவேட்பாளர் தெரிவை அங்கீகரிக்கக்கூடாது என்றும் கூறினார் என சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஒரு பொது வேட்பாளர் தொடர்பாக தவறான – பிழையான – அதற்கு எதிரான – கருத்துகளைக் கொண்டிருக்கக்கூடிய சுமந்திரன் சம்பந்தன் இவ்வாறான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்று சொல்வது வலுவான சந்தேகங்களை உருவாக்குகின்றது. சம்பந்தன் வயதில் முதிர்ந்த ஒரு அரசியல் தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவரது வயது முதிர்ச்சி என்பது அந்த முதிர்ச்சிக்கே உரிய பல்வேறுபட்ட உளவியல், உடலியல் மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பதுடன் அவர் பேசுவதை யாருமே புரிந்துகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், சம்பந்தன் பொது வேட்பாளர் தொடர்பில் பல கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்பது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சம்பந்தன் நடமாட முடியாத சூழ்நிலையிலும், செயற்படும் திறனற்றவராகவும் இருக்கிறார் என்றும், அவர் நாடாளுமன்ற பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் சம்பந்தன் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தவர் சுமந்திரன் ஆவார். செயற்பட முடியாத – பேச்சாற்றல் குறைந்திருக்கக்கூடிய – ஒருவரின் கூற்றாக தனது தேவை கருதி அவற்றை முதன்மைப்படுத்தும் நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார். தமிழ்ப் பொது வேட்பாளரின் தேவையையும் அவசியத்தையும் முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் எழுந்தமானமாக அது ஓஸ்லோ உடன்படிக்கையை கைவிட்டு விடுவதாக அமைந்துவிடும் என்று கற்பனை அடிப்படையில் கூறுவது தவறானதும் மக்களைத் தவறாக வழிநடத்துவதுமாகும். யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினேழு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியது. இதில் ஓஸ்லோ உடன்படிக்கை குறித்து எதுவும் பேசப்படவில்லை. பின்னர் மைத்திரிபால சிறிசேன அவர்களது அரசாங்கத்தில் நான்கு வருடங்களாக ஒரு புதிய அரசியல் சாசனம் பற்றிப் பேசப்பட்டது. அப்போதும் ஓஸ்லோ உடன்படிக்கை குறித்து பேசப்படவில்லை. ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசம் எதிர்பார்க்கும் ஜனநாயக வழியில் நின்று வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் களத்தை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாகக் கையாள வேண்டும் என்ற நோக்கில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதானது ஓஸ்லோ உடன்படிக்கைகளுக்கு விரோதமானது என்ற கருத்தை பொதுவெளியில் குறிப்பிடுவதும் அதற்கு எதிராகச் செயற்படுமாறு தமிழரசுக் கட்சியினரைக் கோருவதும் தமிழரசுக் கட்சி இது தொடர்பாக ஒரு சாதகமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது. சுமந்திரன் அவர்கள் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் தவறானதும் பிழையானதுமான கருத்துகளை சரியான கருத்துகள்போல் பேசிவந்துள்ளார். உதாரணமாக ஐ.நா.சபையால் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு ஓர் அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளரிடம் கையளித்திருந்தது. பின்பு அந்த அறிக்கை ஐ.நா. பொதுச் செயலாளரினால் மேல் நடவடிக்கைக்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் கையளிக்கப்பட்டது. இதனையே சுமந்திரன் அவர்கள் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும், இனி உள்ளக விசாரணைகள் மூலம் தண்டனை வழங்வது மட்டுமே மீதமுள்ள நடவடிக்கை என்றும் கூறிவந்திருக்கின்றார். ஆனால் இன்றுவரை யுத்தக்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக தமிழர் தரப்பு தொடர்ந்தும் போராடி வருகின்றது. இதனைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற ஒரு பொய்யான விடயத்தையும் அவர் கூறி வந்திருக்கின்றார். ஆகவே தமிழ் மக்களைப் பிழையான பாதையில் வழிநடத்தும் கைங்கரியத்தை அவர் தொடர்ச்சியாக செய்து வருகின்றார். அதன் இன்னொரு வெளிப்பாடாகவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அவரது கருத்துகள் அமைகின்றன. தற்போது களத்திலிருக்கக்கூடிய சிங்களத் தரப்பு வேட்பாளர்கள் யாரும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் காணி அபகரிப்புகள், சிங்கள குடியேற்றங்கள், பௌத்த சின்னங்களை நிறுவுதல், சைவஆலயங்களை இடித்து அழித்தல், மேய்ச்சல் நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுதல், தமிழ் மக்களின் பாரம்பரிய சின்னங்களை அரசுடைமை ஆக்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவிதமான கருத்துகளையும் கூறாமல் அதனை ஏற்றுக்கொண்ட பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்றும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையில் நாங்கள் எத்தகைய நகர்வுகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கருதுவது அபத்தமான செயற்பாடாகும். ஜனாதிபதி தேர்தல்களத்தில் ஒருவர் வெல்வதென்பது தமிழ் மக்களின் வாக்குகளிலும் தங்கியிருக்கின்றது. வடக்கு-கிழக்கில் இருக்கின்ற ஏறத்தாழ பன்னிரண்டு இலட்சம் வாக்குகள் என்பது ஒருவரின் வெற்றிக்கு மிகக் காத்திரமான பங்களிப்பைச் செலுத்தக்கூடியவை. இந்த நிலையில் யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தலைக்கூட நடத்தாமல் கடந்த ஐந்து வருடத்திற்கும் மேலாக மாகாணசபையின் நிர்வாகமற்ற சூழலில் இந்த நாட்டில் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்றும் வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமே இருக்கின்ற தென்றும் பேசிவரும் சூழ்நிலையில் இவை எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதை முழுமையாக வெளிக்காட்டவும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு தேவை என்பதை சிங்கள அரசியல் சமூகத்திற்கும் இராஜதந்திர சமூகத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாகவும் தமிழ் வாக்குகளை தமிழர் ஒருவர் பெற்றுக்கொள்வதன் ஊடாக இதனை வெளிப்படுத்த முடியும் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு விளங்கும். இந்த நிலையில், தமிழ் தரப்புகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அனாவசியமான கருத்துகளை முன்வைத்து இந்த கோரிக்கைகளை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதானது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை முறியடிப்பதாகவே அமையும். தமிழரசுக் கட்சி இந்த யதார்த்தங்களை உணர்ந்துகொண்டு இப்பொழுதாவது சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் என்று நம்புகின்றோம்” என்று உள்ளது.   https://www.ilakku.org/சம்பந்தனின்-பெயரில்-சுமந/
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • Viyaskanth gets a wicket!   It's not a glamour bowled or stumped dismissal, but Viyaskanth, the 22yo legspinner from Jaffna has a wicket in the biggest franchise tournament in the world. What's more, its' the prized wicket of Prabhsimran. This will be wildly celebrated in his home town, and for good reason.   It was a googly, following Prabhsimran down leg as he backed away, and having caught his pad it flicked glove on the way up, and Klaasen took a good catch. The batter reviewed, but that definitely looked like it brushed glove on review.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.