Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு மாகாணத்தின் முதலாவது நவீன மீன் சந்தை அரியாலையில் திறந்துவைப்பு!

Featured Replies

fish%20market%2098455454.jpg

 

மீன்பிடி அமைச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்சந்தை ஒன்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று முற்பகல் 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அரியாலை தபாற்கட்டை சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வு கடற்றொழில் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் பொது முகாமையாளர் ருவான் லங்ககோன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் உட்பட மீன்பிடித் திணைக்கள உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
 
fish%20market%2098455456.jpg
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நாசமறுந்தவங்கள்.....

நவராத்திரி பூசை நேரம், நவீன மீன் சந்தையை திறந்திருக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்...!

 

மாம்பழம் சந்தியின் 'நறுமணம்' போவதில் கொஞ்சம் வருத்தம் தான்! :D

 

எல்லாவற்றையும் ஏற்றுமதிக்கு அனுப்பாமல் உள்ளூர் மக்களுக்கும் தரமான மீன் / கடலுணவு இதன் மூலம் கிடைத்தால் சந்தோசம்.

 

இவர்கள் ஏன் அரியாலையை தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியவில்லை. பாசையூர், கொழும்புத்துறை, நாவாந்துறை, குருநகர் போன்ற இடங்களில் என்றால் கடலுக்கு அருகாமையிலும் மீனவர்களிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கொண்டு வந்து விற்கவும் இலகுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் ஏற்றுமதிக்கு அனுப்பாமல் உள்ளூர் மக்களுக்கும் தரமான மீன் / கடலுணவு இதன் மூலம் கிடைத்தால் சந்தோசம்.

 

இவர்கள் ஏன் அரியாலையை தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியவில்லை. பாசையூர், கொழும்புத்துறை, நாவாந்துறை, குருநகர் போன்ற இடங்களில் என்றால் கடலுக்கு அருகாமையிலும் மீனவர்களிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கொண்டு வந்து விற்கவும் இலகுவாக இருக்கும்.

 

அரியாலையில், புதிய சிங்கள குடியேற்றப் பகுதிகள் இருப்பதனாலும்,

வடபகுதி கடலில், பெருமளவான சிங்கள மீனவர் மீன் பிடிப்பதாலும்...

தனக்கு பொருத்தமான இடத்தை.... சிங்கள அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

இதற்கு... ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், சரியான தெரிவு என்று... தலையை ஆட்டியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களின் மனங்களை வெல்ல முடியாது: ராஜித

 
rr(8).jpg- பொ.சோபிகா

வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் முன்னேற்றங்களையும் மேற்கொண்டாலும் வடமாகாண மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்பது எமக்கு தெரியும் என இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்று(01) தெரிவித்தார்.

யாழ். அரியாலையில் அமைக்கப்பட்ட நவீன மீன் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 

ஜனாதிபதி, வடமாகாணத்துக்;கு பெருமளவு நிதியை ஒதுக்கி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றார். அதிலும் கடற்றொழில் நீரியல் வளத்துறைக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளார்.

இருந்தும் அபிவிருத்தி பணிகளை எவ்வளவு முன்னெடுத்தாலும் வடக்கு மக்களின் மனங்களை வெல்ல முடியாது.  ஐனநாயக வழியில் இணைந்து செயற்படாமல் தொடர்ந்தும் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொண்டமையாலேயே விடுதலைப்புலிகள் நிர்மூலமாக்கப்பட்டனர். 

நேபாளத்திலிருந்த மாவோயிட்ஸ் தீவரவாதிகள் ஆயுதங்களை கீழே வைத்து ஐனநாயக வழியை பின்பற்றியதால் அவர்களின் தலைவர் பிரதமராக இருக்கின்றார். 

ஆனால், அந்த நடைமுறையை விடுதலை புலிகளோ அல்லது ஜே.வி.பி.யின் றோகண விஜயவீரவோ பின்பற்றவில்லை. இதனால் அவர்கள் இல்லாமல் போனார்கள். 

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை 1980 ஆம் ஆண்டிலிருந்து நான் குரல்கொடுத்து வருகின்றேன். 

வடமாகாண சபை எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. இருந்தும் அது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கைகளில் சென்றது. இருந்தும் எவ்வித கட்சிகள் பேதமின்றி இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் முன்னேற்ற பணிகளை முன்னெடுக்க வேண்டும். 

அவ்வாறு நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். கடற்றொழில் நீரியல் வளத்துறை தொடர்பில் அரசியல் வேறுபாடுகள் இருக்கின்ற போதும், எம்முடன் இணைந்து வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் செயற்படுகின்றார்.

வடமாகாணத்தில் இருக்கும் மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணுமாறு வடமாகாண மீன்பிடி அமைச்சர் கோரியிருந்தார்.

அதன்போது, கொழும்பிலுள்ள அதிகாரிகள் பயந்த நிலையில் இருந்தார்கள். எனினும் பயப்படாது சென்று பிரச்சினைகளை ஆராய்ந்து வாருங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்தேன். 

வடமாகாணத்தையும், இலங்கையையும் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.  வடமாகாண மீன்பிடிக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு டெனீஸ்வரனுக்கு நான் உறுதியளித்துள்ளேன் என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்

 

நல்ல விடயம்...!

 

மாம்பழம் சந்தியின் 'நறுமணம்' போவதில் கொஞ்சம் வருத்தம் தான்! :D

 

இது.... என்ன, நல்ல விடயம்? :)

நவீன மீன் சந்தையில்... ஒரு கிலோ மீன், ஐம்பது ரூபாய் என்றால்....

அதை கொடுத்து விட்டு... பில்லையும், மீனையும் வாங்கிக் கொண்டு... சத்தம் போடாமல் போக வேணும்.

 

அதுவே.... பண்ணை, பாசையூர், கொழும்புத்துறை, நாவாந்துறை, குருநகர், சின்னக்கடை...போன்ற மீன் சந்தைகளில்,

50 ரூபாய் மீனை... 20 ரூபாய்க்கு, பேரம் பேச வெளிக்கிட...

அவர்களிடம் இருந்து, வருகின்ற தூசன வார்த்தைகளையும் கேட்டு,

35 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு போகும்.... சந்தோசமும் ஒரு சந்தோசம் தான்.

அந்தப் பேச்சு, சுவராசியத்தை...ரசிப்பதற்காக தன்னும்,

அங்கு பல முறை மீன் விலையை, அறா விலைக்கு கேட்டிருந்தாலும்,

அதுகும்... ஒரு இனிமையான காலங்கள். :wub:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.