Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை " Pet Peeves "

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை " Pet Peev " இதன் அர்த்தம் நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு விடயங்களால் நமக்கு ஏற்படும் "எரிச்சல் ஊட்டும் / கடுப்பு ஏத்தும் "  விடயங்களை குறிக்கும். இது ஒரு பிற  மனிதனால் தான் ஏற்படும் என்றும் இல்லை. உதாரணமாக எனக்கு என்னுடைய "ஹெட் போன்" வயர் அடிக்கடி சுயமாக சிக்குப்பட்டு அவிழ்ப்பதற்கு கஷ்டமானதாக இருக்கும் ... எனக்கு செம கடுப்பு வரும் நிகழ்வு இது ... இப்படி எத்தனையோ பட்டியல் போடலாம். சரி போட்டுதான் பார்ப்போமே.
 
-  இலங்கையில் தமிழருக்கு அநீதியே நடக்கவில்லை என்று வாதிப்போர் ~  செம கடுப்பு (முகறையில  ஓங்கி பளீர்னு வைக்கணும் போல இருக்கும் ..ஆனா முடியாது )
 

-  டொரோண்டோ (Take Out ) தமிழ் சாப்பாட்டுக் கடைகளில்  தமிழ் சினிமா (இதில் பெண்களை அடிக்கும், கற்பழிக்கும் காட்சிகளும் அடக்கம்) கடைக்கு வரும் வேற்று நாட்டவர் அதிர்ந்து போய் நிற்பார்கள்!!!
 

- இங்கு வரும் பத்திரிகைகளில், வானொலிகளில் பயன்படுத்தப்படும் " பக்த கோடிகள், சிறப்பு மிக்க, வரலாறு படைத்த, தளபாட சந்தை, அனுபவம் மிக்க, போன்ற மிகைப் படுத்தப்பட்ட வார்த்தை பிரயோகங்கள்.
 

- வானொலி விளம்பரங்களில் நகைச்சுவை உணர்வு அறவே இல்லாமல் நகைச்சுவை (அறுவை) பேசுவோர்
 

- வேண்டாதவன் பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாமே புலிகளின் குற்றம் எனும் தொனியில் கதைப்போர்.
 

- மேடை இசை நிகழ்சிகளில் பாடகர், பாடகியர் பாடி முடிந்ததும் கையை தட்டி உற்சாகம் கொடுக்காமல் கவலையாய் உக்கார்ந்து இருப்போர்.
 

-  விழாக்களில் / பார்டிகளில் ஒருவர் பாடிக்கொண்டு இருக்கும் போது சொரனையே இல்லாமல் கதைத்துக் கொண்டு இருப்பவர்கள்.
 

- தெருவுக்கு தெருவு (டொராண்டோவில்) கோவில் கட்டி சைவமும், தமிழும் தழைத்து ஓங்க அறப்பணி செய்வோர்.
 

- கார் ஓட்டும் போது சற்றும் பொறுமை இல்லாமல் ஹார்ன் அடிப்போர்.
 

 

- தான் நினைப்பதும், கூறுவதும் மட்டுமே சரி என்று நினைப்போர்.
 

- ஒரு பிரச்சினையை கதைக்கும் போது அதற்கு எதுவித சம்பந்தமும் இல்லாத இன்னும் ஒரு பிரச்சினையை கதைப்பவர்.

 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழச் சாப்பாட்டுக்கடைகளில் நாம லைன்னில் நிக்க அண்ண போன் ஓா்டா் நான் தான்று இடையில வாறது

நீங்கள் சொன்னது போல வராத நகைச்சுவையை வரவைத்து தாமே சிாிப்பது

கோயிலுக்கு போகும் போது அள்ளி நகை போட்டிட்டு போறது (சிலநேரம் பசங்க பாக்கவோ?)

60 ரோட்டில 40ல ஓடுறது.. (கோா்ன் என்ன பின்னாலையே போய் இடிக்கனும் போல தோனும்)

தப்புச் செய்யாமலே காவல்த்துறையை கண்டா வேகத்தை குறைக்கிறது... பயந்து சாகிறது

பேட்ரோல் (Gas Station) கடையில போய் ஏன் பெட்ரோல் (Gas) இந்த விலை என்று கேக்கிறது

வெள்ளிக்கிழமை பின்னேரம் 401 ல வாகன நொிசல்ல மாட்டீட்டன் என்கிறது

 

பல்கலைகழகத்துக்கு போற பசங்களை பாா்த்து எப்ப கண்டாலும் படிப்பு எப்பிடி போகுது என்று கேக்கிறது


இப்பிடி நிறையச் சந்தா்ப்பத்தில் நமக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டு கை கழுவுவம் என்று... ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்க...
ஒரு அகப்பை, சோத்தை.... போட்டு இதையும் சாப்பிடுங்கோ என்று சொல்லவதையும்.....
" Pet Peeves "ல் சொல்லலாமா சசி. :D

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைத் தமிழ்ல்ல.. இதை தான் கடுப்பேத்திறது என்றாய்களோ..!! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சசியண்ணா இந்த விடையத்தை பதிந்துட்டு போனதிலிருந்து இதுவரைக்கும், எத்தனை தரம் இந்த பக்கத்தை ஓடி வந்து பார்த்துட்டு எழுதுவமா,விடுமா என்று நினைச்சுட்டு போய்க் கொண்டு இருந்தன் என்று எனக்கே தெரியாது..காரணம் நேரம் எடுத்து எழுதுவதைத் தவிர வேறு எதையும் காணப் போறது அல்ல,எழுதியும் பிரியோசனம் இல்ல என்பதும் எனக்கு புரியும்.மற்றவர்களால் செய்யும் எரிச்சல் ஊட்டும் விடையங்களால் நிறைய மனம் நொந்த நேரங்ளும் இருக்கிறது.அவ்வாறன விடையங்களால் சந்தோசப்பட ஏலாது என்பதும் அனைவரும் அறிவீர்கள்...இந்த தலைப்பை பதிந்ததினால் இவற்றை எழுதிறன் இல்லாது விட்டால் அனைத்துமே மனதோடு இருந்துட்டுப் போய் விடும்.

 

 

காலையில் வெளியில் போக எத்தணிக்கும் போது அக்கம்,பக்கத்தில் இருப்பவர்கள் கதவைத் திறந்து கொண்டு வந்துட்டு மீண்டும் கதவை அடிச்சு சாத்திட்டு போவது.அங்கே முளுவியளம் பாக்கப் படுகிறது.

 

நண்பர்கள்,பிரியமாய் பழகியவர்கள் என்று ஏதாச்சும் சொல்லப் போனால் எல்லாவற்றையுமே தப்புத் தப்பாய் எடுத்து கடசியில் தண்டனைக்கு உரியவர்களாக மாத்தி விடுவது.

 

ஒரு விடையத்தை வாயால் சொல்ல முடியாத விடத்து எழுதியாவது புரிய வைப்பம் என்று மெயிலிட்டால் அதற்கு இல்லாத வரைவிலக்கணம் எல்லாம் கொடுத்து ஏளனப்படுத்துவது.

 

தாங்கள் சொல்கிறபடி மட்டும் மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது..யாராக இருந்தாலும் மற்றவர்களுக்கும் விருப்பு,வெறுப்புக்கள் இருக்கு என்பதை புரிந்து கொள்வதே இல்ல..

 

தாங்கள் சொன்வற்றையே திரும்ப கேட்கும் போது தாங்கள் சொல்லவே இல்ல மறுத்துடுவார்கள்..

 

இப்படி நிறைய விடையங்கள் மற்றவர்களை இன்சல்ட் பண்ணும் விதமாக உலகத்தில் நடந்த வண்ணமே உள்ளது...

 

 

 

 

 

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.