Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபாவளியை முன்னிட்டு ஊழியர்கள் 500 பேருக்கு புது கார், 207 பேருக்கு பிளாட்,தங்க நகைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளியை முன்னிட்டு சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. 

அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து, அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 

ஊழியர்களின் விசுவாசமான பணிக்கு ஏற்ப அவர்களுக்கு மேற்கண்ட வாய்ப்பு வழங்கப்பட்டதில் 500 பேர் புதிய பியட் புன்டோ கார்களையும், 570 பேர் நகைகளையும், 207 பேர் அடுக்குமாடி குடியிருப்புகளையும் தேர்வு செய்தனர். 

அப்போது பேசிய தொலாக்கியா, தனது கனவுகள் அனைத்தையும் ஊழியர்களே நனவாக்கியதாகவும், கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை அவர்கள் எட்டியதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இந்த வருடம் மட்டும் அக்கம்பெனி ஊழியர்களுக்கு 50 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Work-in.jpghttp://www.lankaroad.net/

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களால் தான் இன்னும் இந்த பூமி  வாழ்கிறது

வாழ்க  வளமுடன்.......

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களால் தான் இன்னும் இந்த பூமி  வாழ்கிறது

வாழ்க  வளமுடன்.......

 

 

எவர்களால் விசுகர்?
 
முதலாளிகளால் 
 
அல்லது 
 
திறமை மிக்க தொழிலாளிகளால் ?    :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனம் வாழ்க.
அடுத்த வருடம் அந்த ஊழியர்கள், தமது நிறுவனத்துக்காக....

இன்னும் உற்சாகமாக வேலை செய்து, மேலும் லாபம் ஈட்டி கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

எவர்களால் விசுகர்?
 
முதலாளிகளால் 
 
அல்லது 
 
திறமை மிக்க தொழிலாளிகளால் ?    :icon_idea:

 

 

 

இவ்வாறு குறுக்குக்கேள்விகளை மட்டும்  கேட்பவர்கள்  அதிகரித்திருப்பதனால்  தான்

கோடை மாரி  இடம் மாறிவிட்டதோ..?? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு குறுக்குக்கேள்விகளை மட்டும்  கேட்பவர்கள்  அதிகரித்திருப்பதனால்  தான்

கோடை மாரி  இடம் மாறிவிட்டதோ..?? :lol:  :D

 

இல்லை விசுகர்.
 
அது ஒரு சீரியஸ் ஆன கேள்வி தான். கோழியா, முட்டையா முதலில் வந்தது என்பது போல...  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

 

இல்லை விசுகர்.
 
அது ஒரு சீரியஸ் ஆன கேள்வி தான். கோழியா, முட்டையா முதலில் வந்தது என்பது போல...  :icon_idea:

 

 

 

தொழிலாளர்களை  அவ்வாறு சொல்லமுடியாது

அவர் வேலை செய்வதற்கு சம்பளம் கொடுக்கிறார்

அத்துடன் தொழிலாளரது பங்கு முடிகிறது..

 

ஊக்குவிக்கவும் வருவதை பகிரவும் மனம் வேண்டும்

அந்த மனம் அந்த முதலாளியிடம் உள்ளது :icon_idea:

ஒரு வாழ்த்து சொன்னால் குறைந்தா போயிடும் ராசா... :D  

இவரின் நிறுவனத்தின் பெயர் விலாசம் எல்லாவற்றையும் உடனடியாக அனுப்பவும்...

  • கருத்துக்கள உறவுகள்

தொழிலாளர்களை  அவ்வாறு சொல்லமுடியாது

அவர் வேலை செய்வதற்கு சம்பளம் கொடுக்கிறார்

அத்துடன் தொழிலாளரது பங்கு முடிகிறது..

 

ஊக்குவிக்கவும் வருவதை பகிரவும் மனம் வேண்டும்

அந்த மனம் அந்த முதலாளியிடம் உள்ளது :icon_idea:

ஒரு வாழ்த்து சொன்னால் குறைந்தா போயிடும் ராசா... :D  

 

திறமை மிக்க தொழிலாளிகளால் தான் முதலாளிக்கு அந்தளவு லாபம் வந்தது. சந்தோசத்தில் லாபத்தினை பங்கு போட்டு கொடுத்தார்.
 
வேலை செய்வதற்கு சம்பளம் கொடுப்பதுடன் 
தொழிலாளரது பங்கு முடிகிறது என்றால், அது தானே, லாபம் இல்லாத சகல தொழில்களிலும் நடக்கிறது. 
 
எனவே அப்படி திறமையான தொழிலாளிகளைக் கொண்ட அதிஷ்ட சாலி தான் அந்த முதலாளி.

இவரின் நிறுவனத்தின் பெயர் விலாசம் எல்லாவற்றையும் உடனடியாக அனுப்பவும்...

 

 

எதுக்கு ?
 
வேலை  காலி இல்லையாம். :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

போனஸை அள்ளிக் கொடுத்தது ஏன்?- சூரத் வைர வியாபாரி சிவ்ஜிபாய் தொலாகியா விளக்கம்!

குஜராத் மாநிலம் சூரத்தில் பிரபல வைர ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தீபாவளி பரிசாக பிளாட், கார், நகைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை இது ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவ்ஜிபாய் தொலாகியா காரணத்தைக் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் சிவ்ஜிபாய் தொலாகியா. பிரபல வைர வியாபாரியான இவர் தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக, கார், பிளாட் மற்றும் நகைகளை வழங்கினார்.

 

23-why-i-gifted-cars-flats-indias-most-g

சிவ்ஜிபாய் தொலாகியா தனது செயலால் இந்தியாவையே தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர்.

 

தித்திப்பான தீபாவளி போனஸ்:

 

தொழிலாளர்களுக்கு தனது தீபாவளி போனஸ் குறித்து அவர் கூறுகையில், "எனது ஊழியர்களில் 207 பேருக்கு அபார்ட்மெண்ட்டும், 491 பேருக்கு காரும், 500 பேருக்கு நகைகளும் போனசாக கொடுத்துள்ளேன்.

 

நடுத்தரமான போனஸ்!:

 

என்னைப் பொறுத்த வரையில் இது மிகப்பெரிய போனஸ் என்று கூற மாட்டேன். வேண்டுமானால் நடுத்தரமானது என்று கூறலாம். விசுவாசத்திற்கு பரிசு: எனது ஊழியர்கள் அவர்களது விசுவாசம் மற்றும் கடுமையான உழைப்பிற்காக இந்த போனசை பெற்றுள்ளனர்.

 

பகிர்ந்து கொடுப்பதே வாழ்க்கை:

 

பகிர்ந்து கொடுப்பதால், நமது சொத்து குறைந்து விடாது. எனது வாழ்வில் நான் கற்ற பாடம் இது. கொடுத்துப் பெறுகின்றேன்: ஒவ்வொரு முறையில் நான் சிலவற்றை எனது ஊழியர்களுக்கு கொடுக்கிறேன். அவர்களிடமிருந்து அதை விட அதிகமாக பெறுகிறேன் என்று தொலாகியா தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.