Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன் வைக்கவில்லை அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையே கோருகின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன் வைக்கவில்லை அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையே கோருகின்றனர்:-

 

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்-

Sritharan_CI.jpg

அரசியல் தீர்வுத் திட்டமொன்றையே தமிழ் மக்கள் கோரி நிற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் கூட தனித் தமிழீழமொன்றை கோரி நிற்கவில்லை எனவும், அர்த்தமுள்ள அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்றே கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கோரிக்கையையே தமது கட்சி கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

அர்த்தமுள்ளதும், கௌரவமானதுமான தீர்வினையே கட்சி விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் இப்போது ஈழக் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை எனவும் கடந்த காலங்களில் அவ்வாறான ஓர் நிலைமை காணப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறான சூழ்நிலை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலங்களை அமைப்பதன் மூலமும், வீதிகளை அமைப்பதன் மூலமும் வடக்கு கிழக்கின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இந்திய வீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் மெய்யாகவே வீடுகள் தேவையானவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழ் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/112971/Default.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

அடடா சம்பந்தன் சுமந்திரன் இதை சொல்லி இருந்தா ஏக வசனத்தில் திட்டி இருக்கலாம். இப்ப நம்மாளே இப்படிச் சொல்றாரே?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யலாம்? அடக்கு முறைக்குள் நிண்டு பம்முறார், தும்முறார் எண்டு எதுகை மோனையில் அடிச்சு விட வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

 
இப்போது கூட்டமைப்பு மகிந்தவுடன் கூட்டணியும் அமைக்கத்தயங்க மாட்டார்கள்.

இதுதான் கூ.ட்டமைப்பின் ராச தந்திரமாம்.
அடுத்த தேர்தல் வரும்போது தெரியும் அவர்களின் அல்லது மக்களின் கோரிக்கை என்னவென்று.

மக்கள் வேண்டாம் என்றாலும் கூட்டமைப்பே தனி ஈழத்தைத் தூக்கிப் பிடிக்கும்.
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பது இதற்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரனுக்கு புலம்பெயர் தமிழர்கள் போன்போட்டு இதைச் சொல்லச் சொல்லி சொன்னவர்களாக்கும்...??!

 

என்ன செய்யுறது.. இப்படி பேசியாவது.. மகிந்தவையை மயக்கலாம் என்று நினைக்கினம். இதிலும் கூட்டமைப்பு தோற்கும்..!!! :icon_idea::lol:

நாட்டின் உயர் சபையில் கழுதைக்கு ஒப்பானவர்களை அனுமதிக்கக் கூடாது; பாராளுமன்றில் சிறிதரன் எம்.பி. வேண்டுகோள் 

 

இந்த நாட்டின் கௌரவம் மிக்க உயர் சபையான பாராளுமன்றத்தில் கழுதைகளுக்கு ஒப்பானவர்களை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தாலும் அவை கத்தாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டுமென பிரதி சபாநாயர் சந்திம வீரக்கொடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ். சிறிதரன் கோரினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு   செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெற்றபோது சிறிதரன் எம்.பி.யின் உரைக்கு அரச தரப்பு தேசியப் பட்டியல் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் குறுக்கீடு செய்தபோது சிறிதரன் எம்.பி. இவ்வாறு கோரினார்.

 

http://thinakkural.lk/article.php?local/odcinukfyu3973678004486c13773gyez6119599ed7d199f47da043apwxmp#sthash.LMduwQUd.dpuf

திரு.ஸ்ரீதரன் தனது பாராளுமன்ற கன்னி உரையிலேயே  தற்போது தெரிவித்த கருத்தையே வலியுறுத்தினார். அத்துடன்  தனது கன்னி உரையிலேயே சிங்கள மக்களையும் சிங்கள அரசியல்வாதிகளையும் நோக்கி தமிழ் மக்களுடைய உரிமைகளை அங்கீகரிக்குமாறும் கடந்த காலத்தை மறந்து எல்லோரும் சேர்ந்து இந்த நாட்டை உன்னத நிலைக்கு கொண்டு செல்வோம் என்றும்  மிகவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அது மட்டுமல்ல மேலும் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை பாராளுமன்றத்தில் இதே போல மிகவும் உருக்கமான பாணியில் உரையாற்றினார். அவரின் அந்த உரைகளின் காணோலிகளும் வெளியாகி இருந்தன. எடுத்தேன் கவிழ்தேன் பாணியில் அவர் என்றும் உரையாற்றியதில்லை. ஏதோ சுமந்திரனையும் சம்பந்தரையும் போற்றியும் மற்ற அதே கடசி உறுப்பினரை நக்கல் பண்ணியும் ஒரே கட்சிக்குள்ளேயே கோஷ்சி அரசியலை வளர்க்கும்  சில  பிரசங்கிகள் ஸ்ரீதரனின் பாராளுமன்ற கன்னி உரையையும் அதற்கு பின்பு அவரின் உரைகளையும் கேட்டுவிட்டு கருத்து எழுதவேண்டும்.

Edited by trinco

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடா சம்பந்தன் சுமந்திரன் இதை சொல்லி இருந்தா ஏக வசனத்தில் திட்டி இருக்கலாம். இப்ப நம்மாளே இப்படிச் சொல்றாரே?

 

 

http://www.ceylontoday.lk/51-75865-news-detail-we-have-given-up-eelam-sampanthan-tna-vs-mr.html

  • கருத்துக்கள உறவுகள்

அதைச் சொல்ல சிறிதரனுக்கோ சம்பந்தருக்கோ அதிகாரம் கிடையாது.தமிழீழத் தனியரசுக் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்டு மக்கள் ஆணையைப்பெற்ற 1977 ஆண்டுத் தேர்தலின் பின்னர் அதற்கு மாற்றீடான கோரிக்கையை முன் வைத்து மக்கள் ஆணையைப் பெறவில்லை.ஆக அந்தக் கோரிக்கை அப்படியேதான் இருக்கிறது .இடைப்பட்ட காலத்தில் ஒரு இடைக்காலத் தீர்வை பெற்றுக்
கொள்வதற்கு தமிழினம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.புலிகள் கூட இடைக்காலத்தீர்வை வரவேற்று இருந்தார்கள். இதன் பொருள் தமிழீழத் கோரிக்கை கை விடப்பட்டது என்பது அல்ல.
 

 

 

 

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.