Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபோர்முனையில் புலிகளின் வெற்றி அவர்களின் படைவலு சமநிலயை நி

Featured Replies

வடபோர்முனையில் புலிகளின் வெற்றி அவர்களின் படைவலு சமநிலயை நிருபித்துள்ளது -பி பி சி

வடபோர்முனையில் விடுதலைப்புலிகள் ஈட்டிய வெற்றி அவர்களின் படைவலுச்சமநிலையை அவர்களிற்கு சாதகமாக திருப்பியுள்ளதாக உலக பி பி சி செய்தி தேவை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

இரத்தத்தில் தோய்த சிறீலங்கா படையினரின் உடைபட்ட மூக்கு என்ற தலைப்பிலான ஆய்விலேயே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் படைவலுவை சரியான முறையில் எடைபோடத்தவறியதன் காரணமாக வடபோர்முனையில் சிறீலங்கா படைகள் படுதோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டிற்கு பின்பு ஒரேநாளில் சிறீலங்கா படைகள் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.இச் சமரில் 200 படையினர் கொல்லப்பட்டு 600படையினர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

பெரிய கண்டு படிப்பு....இவ்வளவு காலம் என்ன புலகள் பலம் இழந்தார்கள் எண்டே நினைச்சவ....???

ம்..ம்...எங்க போய் சொல்ல....

வன்னி மைந்தன்

அவங்கள் நல்லா எங்களை பராக்காட்டுறாங்கள்.

அவங்கள் பலவீனமா இருக்கிறாங்கள் என்று பரப்புரை செய்தா அதை தூக்கி வைச்சு எங்கட பன்னாடையள் ஆய்வும் செய்யும் பலமா இருக்கிறமோ பலவீனமாக இருக்கிறமோ என்று. அந்த குளம்பின குட்டையில அவங்கள் புகுந்து உங்கட நேரத்தை வீணடிச்சு கவனத்தை திசை திருப்பி வெற்றி பெறுவாங்கள்.

பிறகு அடிவிள அவையே கதை அளப்பினம் மூக்குடைப்பட்டு போச்சு சமநிலை வந்துட்டுது எண்டு. அதையும் தூக்கி வைச்சு கொண்டாடுவினம். சந்தோசமாக பல வருடங்கள் மாதங்களிற்கு பிறகு நித்திரைக்கு போவினம். ஏன் என்றால் ஒரு சமரில் வெற்றி பெறுவதே இன்று ஒரு பெரிய விடையமாகி விட்ட பலவீனமான படு எங்கள பாடு.

இந்த 2 உணர்ச்சிபூர்வமான மனநிலை உச்சங்களிற்கு மாறி மாறி உங்களை கொண்டு சென்று எதரிகளின் திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் பொழுது போக்காட்டி வெற்றி கண்டு கொண்டு இருக்கிறார்கள். இதில் பலியாவது புலம்பெயர்ந்துள்ள தமிழரே.

எவ்வாறு உங்கள் மீதான உளவியல் போரில் எதிரிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சற்று யோசியுங்கள்.

அதுக்கு எங்கை நேரம், அல்லலுற்றவை ஆறுதல்படுகினம். அது தனிமனித உரிமை எல்லோ கொண்டாடுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பன் குறுக்காலபோனவனே

அடிக்கடி இப்படி குறுக்காலபோகதயும்!

இந்த பாராட்டுக்களுக்கும் பதவுகளுக்கும் விலை போற ஆக்கள் எங்கட போராளிகளும் தலைவரும் இல்லை என்டதை நீர் மறந்துவிட்டீர் போல! விலை போறது தமிழீழத்தில 100 வருசத்துக்கு ஒரு முறை நடக்கிற அதிசயம். இந்த நூற்றாண்டில கருணாவோட போய்ட்டுது. பதவிக்கும் பாராட்டுக்கும் மயங்கிற தலைவர்கள் எங்க இருக்கினம் என்டு உம்மை சுத்தி பாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் மற்றும் இராணுவ விமர்சனங்கள் விமர்சனக்காரர்களின் நோக்கங்கள் ஆதாரங்கள் தேவைகள் கருத்தி வேறுபடும் மாறுபடும். விடுதலைப் புலிகள் இவற்றை நோக்கித்தான் முடிவுகள் எடுக்கின்றனர் என்பது தவறு.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மக்களை நோக்கி எடுத்துச் செல்லப்படும் விமர்சனங்கள் அவர்கள் மக்களுக்கான விமர்சனங்களாகத்தான் பார்க்கின்றனர். அவை, மக்கள் போராட்டத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை தேசப்படுத்தாதகாக இருக்க வேண்டும் என்பதில் தான் அங்கு அதிக அக்கறை இருக்கிறது.

அந்த வகையில் சிவராம் போன்றவர்கள் தரமான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கின்ற போதிலும் இன்னும் சில விமர்சனக்காரர்கள் விடயங்களை மேலோட்டமாக நோக்கி மக்களைத் திருப்திப்படுத்தும் வகையிலும் எழுதி வருகின்றனர். பரபரப்பு ரிசி போன்ற சிலர் தங்கள் கற்பனைகளுக்கும் வேலை கொடுத்து ஈழத்து ஜேம்ஸ் பாண்ட் பாணியில் பரபரப்பு கதைகளையும் புனைந்து வருகினன்றர். அவை சில சந்தர்ப்பங்களில் மக்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்புக்களை வழங்கிவிடுவதனால் எதிர்முக நிகழ்வுகளை மக்கள் சந்திக்கின்ற போது சில சந்தர்ப்பங்களில் அவை மக்களை அதிகம் பாதிப்பனவாகவும் அமைந்து விடுகின்றன. இது எதிரியின் பிரச்சாசத்தை விட அதிகம் மக்களைச் சோர்வுக்குள்ளாக்கி விடுகிறது.

எனவே விமர்சனக்காரர்கள் கொஞ்சம் பக்குவமாக நிதானமாக சிந்தித்து ஆதாரங்களின் அடிப்படையில் தங்கள் எதிர்வு கூறல்களை வளமானதாகவும் மக்களின் நிகழ்கால எதிர்கால எதிர்பார்ப்புக்களைப் பாதிக்காத வகையிலும் வைப்பதே சிறந்தது. அதுவே எதிரியின் பிரச்சார யுத்தத்தை மக்கள் சரிவர எதிர்கொள்ள வாய்ப்பும் உண்டு பண்ணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் கதையை என்னத்துக்குத் தூக்கிப்பிடிக்க வேணும்?

இப்போ பிபிசி நடுநிலைமையானது எண்டு சொல்ல வாறியளோ? அப்பிடியெண்டால் அவங்கள் வெண்டிட்டாங்கள். அவங்கள் எதிர்பாக்கிறதும் அதைத்தான்.

அவர்கள் எங்களுக்கு எதிர்மாறாகச் சொன்னபோது எப்படிப் புறக்கணித்தோமோ அப்படித்தான் எங்களுக்கு ஜால்றா அடிக்கும்போதும் செய்யவேண்டும். இல்லையென்றால் முன்பு அவர்கள் சொன்னவற்றை நாம் ஏற்றுக்கொண்டதாக அல்லவா அர்த்தம்?

பிபிசிக்கு தெளிவான அரசியல் இருக்கிறது. அது அந்த வழியில் தடம்புரளாமல் போய்க்கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அவன் எதிராக எழுதினால் கோபத்தில் துள்ளிக்குதிப்பதும், ஆதரவாக எழுதினால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதுமாக ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறோம

இவர்களின் கதையை என்னத்துக்குத் தூக்கிப்பிடிக்க வேணும்?

இப்போ பிபிசி நடுநிலைமையானது எண்டு சொல்ல வாறியளோ? அப்பிடியெண்டால் அவங்கள் வெண்டிட்டாங்கள். அவங்கள் எதிர்பாக்கிறதும் அதைத்தான்.

அவர்கள் எங்களுக்கு எதிர்மாறாகச் சொன்னபோது எப்படிப் புறக்கணித்தோமோ அப்படித்தான் எங்களுக்கு ஜால்றா அடிக்கும்போதும் செய்யவேண்டும். இல்லையென்றால் முன்பு அவர்கள் சொன்னவற்றை நாம் ஏற்றுக்கொண்டதாக அல்லவா அர்த்தம்?

பிபிசிக்கு தெளிவான அரசியல் இருக்கிறது. அது அந்த வழியில் தடம்புரளாமல் போய்க்கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அவன் எதிராக எழுதினால் கோபத்தில் துள்ளிக்குதிப்பதும், ஆதரவாக எழுதினால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதுமாக ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறோம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.