Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் – சிறிலங்காவுக்கு பாஜக எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வர்த்தக நோக்கத்துக்காக கொழும்பு வராது, எனவே இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே.அக்பர்.

 

 

சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள, எம்.ஜே.அக்பர், கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், நேற்று முன்தினம் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவுரையை நிகழ்த்தினார்.

 

 

அந்த உரையிலே அவர்  மேலும் தெரிவித்ததாவது,

 

 

“எமது பிராந்தியத்தில் சமாதானமும் நட்பும் அவசியமாகும்.அயல் நாடுகளுடனான உறவு மிக முக்கியமானதாகும்.

 

 

இந்திய பிரதமர் ஜப்பானுக்கும் சென்றார். சீனாவுக்கும் சென்றார். பிராந்திய நலன் முக்கியமாகும். இதேவேளை பயங்கரவாதத்தை தவிர ஏனைய அனைத்து முரண்பாடுகளையும் பேசித்தீர்க்க முடியும். ஆனால் பயங்கரவாதத்துக்கு இடமளிக்க முடியாது.

 

 

 

எமது பிராந்திய நாடுகள் எவ்வாறு நவீன நாடுகளாக உருவெடுப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். சங்காயில் உற்பத்தி செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருவது தளபாடங்களை ஏற்றிக்கொண்டு அல்ல. சந்தை நோக்கத்துடன் நீர்மூழ்கிக் கப்பல் வராது.

இந்தியாவின் நலனே பிராந்தியத்தின் நலம். இதனை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம்.

http://ttnnews.com/main-news/இந்தியாவின்-பாதுகாப்புட/

  • கருத்துக்கள உறவுகள்

அவளைத் தொடுவானேன்.. கவலைப்படுவானேன்.. :D

குறிப்பு: போர் முடிந்த காலத்தில் சீனா இலங்கை விவகாரத்தில் தலையிடும் என்று எழுதியதுக்கு, இந்தியாவை மீறி ஒரு கொம்பனும் வரமுடியாது என்று எழுதினார்கள். சில ஆய்வாளர்களும் அதே கருத்தைக் கொண்டிருந்தார்கள். இன்று நீர்மூழ்கியை அனுப்பி விளையாடுகிறது சீனா.. :o

போர் உச்சம் பெற்றபோது இந்திய கப்பல் சுகன்யா முல்லைத்தீவு கடலில் நங்கூரம் இட்டது அப்போது சீனா எதாவது சொன்னனா அமைதியா இருந்தான் அப்படி இப்ப சீனா கப்பல் வந்தால் இந்தியா அமைதியா இருக்கனும் அதுதானே உறவுக்கு நல்லம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

போர் உச்சம் பெற்றபோது இந்திய கப்பல் சுகன்யா முல்லைத்தீவு கடலில் நங்கூரம் இட்டது அப்போது சீனா எதாவது சொன்னனா அமைதியா இருந்தான் அப்படி இப்ப சீனா கப்பல் வந்தால் இந்தியா அமைதியா இருக்கனும் அதுதானே உறவுக்கு நல்லம் :D

அதுமட்டுமல்ல.. தென்சீனக்கடலில் வியட்நாமுக்காக எண்ணை ஆராய்ச்சியில் ஈடுபடுகிறோம் என்று கப்பலை அனுப்பினார்கள். இப்ப நீர்மூழ்கி பக்கத்தில வந்திருக்கு. இது தேவையா? :D

அதுமட்டுமல்ல.. தென்சீனக்கடலில் வியட்நாமுக்காக எண்ணை ஆராய்ச்சியில் ஈடுபடுகிறோம் என்று கப்பலை அனுப்பினார்கள். இப்ப நீர்மூழ்கி பக்கத்தில வந்திருக்கு. இது தேவையா? :D

சப்பாத்தியையும் ..சப்படையியும் கொழுவி விட்டா போதும் நாம ஷேப்பா இருக்கலாம் என்னும் வித்தை சிங்களவன் நல்லா புரிந்து வைத்திருக்கிறான் . :)

  • கருத்துக்கள உறவுகள்

இதே... பா.ஜ.க. தான், அநாகரிக தர்மபாலாவுக்கு..... முத்திரை வெளியிட்டு அழகு பார்க்குது.
என்ன... இழவு அரசியலோ......

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் இலங்கைக்கு பாஜக எச்சரிக்கை இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் இலங்கைக்கு பாஜக எச்சரிக்கை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வர்த்தக நோக்கத்துக்காக கொழும்பு வராது, எனவே இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே.அக்பர். சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள, எம்.ஜே.அக்பர், கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், நேற்று முன்தினம் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவுரையை நிகழ்த்தினார். அந்த உரையிலே அவர் மேலும் தெரிவித்ததாவது, “எமது பிராந்தியத்தில் சமாதானமும் நட்பும் அவசியமாகும்.அயல் நாடுகளுடனான உறவு மிக முக்கியமானதாகும். இந்திய பிரதமர் ஜப்பானுக்கும் சென்றார். சீனாவுக்கும் சென்றார். பிராந்திய நலன் முக்கியமாகும். இதேவேளை பயங்கரவாதத்தை தவிர ஏனைய அனைத்து முரண்பாடுகளையும் பேசித்தீர்க்க முடியும். ஆனால் பயங்கரவாதத்துக்கு இடமளிக்க முடியாது. எமது பிராந்திய நாடுகள் எவ்வாறு நவீன நாடுகளாக உருவெடுப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். சங்காயில் உற்பத்தி செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருவது தளபாடங்களை ஏற்றிக்கொண்டு அல்ல. சந்தை நோக்கத்துடன் நீர்மூழ்கிக் கப்பல் வராது. இந்தியாவின் நலனே பிராந்தியத்தின் நலம். இதனை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம். முரண்பாடுகள் இருக்கலாம். புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் கூட முரண்பாடுகள் இருக்கலாம். போரின்போது இந்தியா சிறிலங்காவுக்கு மிகப்பெரிய உதவியை வழங்கியது. அந்த சூழ்நிலையின் தாற்பரியத்தை உணர்ந்து இந்தியா சிறிலங்காவுக்கு உதவி செய்தது. 1970களில் நாம் வாழவில்லை. பாதுகாப்புடன் விளையாடவேண்டாம் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் பெரிய நாடாக இருப்பது இயற்கையாக அமைந்த விடயம். இந்நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறந்த உறவு முக்கியம். இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வருகை தராமை தவறாகும். ஆனால் தற்போதைய இந்தியப் பிரதமர் தனது பதவியேற்புக்கு சிறிலங்கா அதிபரை அழைத்தார். இந்த விடயத்தில் மாநிலத்தின் உணர்வு குறித்து மத்திய அரசாங்கம் கவலை கொள்ளவில்லை. மாற்றத்தை புரிந்து கொள்ளுங்கள்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/35214/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வருகை தராமை தவறாகும். ஆனால் தற்போதைய இந்தியப் பிரதமர் தனது பதவியேற்புக்கு சிறிலங்கா அதிபரை அழைத்தார். இந்த விடயத்தில் மாநிலத்தின் உணர்வு குறித்து மத்திய அரசாங்கம் கவலை கொள்ளவில்லை. மாற்றத்தை புரிந்து கொள்ளுங்கள்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

இந்த மாற்றத்தை சீமான் போன்றவர்கள் புரிந்துகொள்ள ரொம்ப காலம் எடுக்கும். ஒருவேளை புரிந்துகொள்ளாமற்கூடப் போகலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.