Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூரை வீட்டில் வசித்த பெண்ணை மருமகளாக்கிய நடிகர் வடிவேலு

Featured Replies

Tamil_News_large_1135010.jpg

 

மதுரை: தன் கடந்த கால ஏழ்மையை மனதில் வைத்து, கூரை வீட்டில் வசித்த பெண்ணை, தன் மகனுக்கு மணம் முடித்தார், நடிகர் வடிவேலு.தமிழ் சினிமாவில், சிரிப்பு நடிகராக, கொடி கட்டிப் பறப்பவர், வடிவேலு. கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,விற்காக பிரசாரம் செய்து, எடுபடாமலும், சினிமாவில் ஓரங்கட்டப்பட்டாலும், இன்றும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார்.

 

சினிமா வாய்ப்பிற்கு முன், மதுரை விரகனூரில் வசித்த வடிவேலு, ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர். சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. சில மாதங்களுக்கு முன், வடிவேலு மகள் திருமணம், அவரது சொந்த ஊரில் ஆடம்பரம் இன்றி நடந்தது.

 

நேற்று, அவரது மகன் சுப்ரமணி திருமணம், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. நண்பர்களுக்கு அழைப்பு இல்லை; சினிமாக்காரர்கள் ஒருவர் கூட தென்படவில்லை; உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பஜார் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரி, மணப்பெண். அவரது தந்தை வேல்முருகன், பந்தல் வேலை பார்க்கும் சாதாரண கூலித்தொழிலாளி. திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில், கூரை வீட்டில் வசிக்கும் குடும்பம். தன் கடந்த கால வாழ்க்கையை மறக்காத வடிவேலு, தன் மகனுக்கு ஏழ்மையான பெண்ணை தேடியுள்ளார். பெண் கூரை வீட்டில் வசிக்க வேண்டும் என்பது. வடிவேலுவின் கட்டாய நிபந்தனை. திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் தான் ஏற்பதாகவும், பெண்ணை மட்டும் அனுப்பி வைக்குமாறும் கூறிய வடிவேலு, மகன் மற்றும் மருமகள் திருப்புவனம் வந்தால், வசிப்பதற்கு, பாக்கியா நகரில், வீடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். வசதி வந்தபின், கடந்த காலத்தை மறப்பவர்களுக்கு, வடிவேலுவின் உயர்ந்த செயல், சிறந்த பாடம்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1135010

 

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டப்படவேண்டியவர் வடிவேலு

உண்மைதான் , வடிவேலு ஒரு சிறந்த மனிதர் என்பதை வெளிக்காட்டியுள்ளார் . அவர் இல்லாதது இப்ப சினிமாவில் காமெடி க்கு பதிலாக அரைகுறை வசனங்களை கேட்கவேண்டியுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனிதன். என்ன அரசியலால் சினிமாவில் சில காலம் இல்லாமல் போய்விட்டார், மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செயலால், வடிவேலு மேலும் உயர்ந்து விட்டார்.
வடிவேலுவுக்கும், புதுமண தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
vadivel_2240114f.jpg
வடிவேலு மகன் சுப்பிரமணி, மணமகள் புவனேஸ்வரி.

எளியவர் வீட்டு காது குத்துக்கே களை கட்டும் மதுரையில், நடிகர் வடிவேலுவின் ஒரே மகனின் திருமணம் விளம்பரமின்றி மிக எளிமையாக நடந்தது. அழைப்பில்லாததால் சினிமா நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும், வி.சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். மகன் வி.சுப்பிரமணி, திருப்புவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வி. புவனேஸ்வரி ஆகியோரின் திருமணம், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று காலையில் நடந்தது.

 

திருமணத்தில் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள், இரண்டு அக்காள்கள், 3 தம்பிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரும் அழைக்கப்படாததாலும், திருமணம் ரகசியமாக நடைபெற்றதாலும் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களையோ, ரசிகர்களையோ விழாவில் பார்க்க முடியவில்லை. 1000 இருக்கைகள் கொண்ட அந்த மண்டபத்தில் பல இருக்கைகள் காலியாகக் கிடந்தன.

போஸ்டர், பிளக்ஸ் எதுவுமே இல்லாததால், மதுரை நகரின் மையத்தில் நடந்த இந்தத் திருமணம் பற்றிய தகவல் மக்களையும் எட்டவில்லை. சினிமா துறையில் இருந்து வடிவேலுவின் அடுத்த பட இயக்குநரான யுவராஜ் மட்டும் வந்திருந்தார்.

 

திருமணம் எளிமையாக நடைபெற்றது குறித்து வடிவேலுவின் உறவினர் ஒருவரிடம் கேட்டபோது, “அவருக்கு எல்லாருமே வேண்டியவர்கள் தான். சினிமாக்காரர்களை அழைத்தால், அரசியல் புள்ளிகளையும் அழைக்க வேண்டியது இருக்கும் என்பதால், நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்துள்ளார். வெறுமனே 500 பத்திரிகைகள் மட்டுமே அடித்து கொடுத்தார். வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் உங்களை மட்டும் தான் அழைத்திருக்கிறோம் என்று வடிவேலு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால் நாங்களும் போஸ்டர், பிளக்ஸ் என்று விளம்பரப்படுத்தவில்லை என்றார்.

 

கடந்த 7.4.13 அன்று வடிவேலுவின் மூத்த மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணம் மதுரை புறநகர் பகுதியில் நடந்தது. பிரபலங்களை அழைக்காதது பற்றி அவரிடம் கேட்டபோது, ‘மகன் கல்யாணத்தை தடபுடலா நடத்திடுவோம்’ என்றார். ஆனால், மகள் திருமண செலவில் நான்கில் ஒரு பங்கு செலவில் மிக மிக எளிமையாக மகன் திருமணத்தை நடத்திவிட்டார் வடிவேலு என்றார்.

 

வடிவேலுவை நெருங்கி ‘அண்ணே பேட்டி?’ என்றோம். “வேட்டி கிழியிற அளவுக்கு வேலை இருக்கு. பேட்டியா? என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டு நகர்ந்தார் வடிவேலு.

 

மண்டபத்தில் புகுந்த போலீஸ்!

வடிவேலுவின் மகன் திருமணம் நடந்த மண்டபத்துக்குள் மதியம் 1 மணி அளவில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களும், மகளிர் போலீஸாரும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் ஆனந்தவள்ளி, தல்லாகுளம் மகளிர் காவல் ஆய்வாளர் கௌசல்யா ஆகியோர் வடிவேலு மற்றும் மணமக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

 

விசாரணையை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகே, வடிவேலுவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

இதுபற்றி சமூக நல அலுவலர் ஆனந்தவள்ளியிடம் கேட்டபோது, “மணமகள் புவனேஸ்வரி மைனர் பெண் என்றும், பணத்துக்காக அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்றும் சைல்ட் ஹெல்ப் லைனுக்கு புகார் வந்திருந்தது. அதனால்தான் திருமண மண்டபத்துக்கு வந்து விசாரணை நடத்தினோம்.

சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு, திருப்புவனம் பள்ளியில் புவனேஸ்வரியின் சான்றிதழை ஆய்வு செய்தோம். அவருக்கு 18 வயது பூர்த்தியாகி 7 மாதங்களாகிவிட்டன என்பதும், யாரோ உள்நோக்கத்துடன் புகார் செய்திருக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது என்றார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6682166.ece?widget-art=four-all

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் கூட எவளவோ மாறிவிட்டோம்.
சுயநலத்தில் இருந்து விடுபட நாளும் போராட வேண்டி இருக்கிறது.
 
இப்படி எவளவோ உயர்வான இடத்தில் இருந்துகொண்டு இவர் செய்யும் காரியம்.
மெய் சிலிர்க்க வைக்கிறது.
 
"மனிதன்" 
  • கருத்துக்கள உறவுகள்

சில பணக்கார ஆட்கள்.. ஏழை வீட்டு பெண்ணை மருமகளாக்கிக் கொள்வார்கள். தங்களுக்கு அடிபணிந்து இருப்பதற்காக. எம்மவர் மத்தியில் இது சாதாரணமாக இருக்கிறது. வெளிநாட்டு விசா உள்ள மாப்பிள்ளைகள் ஊரில் இருந்து பெண்ணெடுப்பதிலும் இந்த உள்நோக்கம் உள்ளது. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சில பணக்கார ஆட்கள்.. ஏழை வீட்டு பெண்ணை மருமகளாக்கிக் கொள்வார்கள். தங்களுக்கு அடிபணிந்து இருப்பதற்காக. எம்மவர் மத்தியில் இது சாதாரணமாக இருக்கிறது. வெளிநாட்டு விசா உள்ள மாப்பிள்ளைகள் ஊரில் இருந்து பெண்ணெடுப்பதிலும் இந்த உள்நோக்கம் உள்ளது. :):icon_idea:

 

 

நீங்கள் சொல்வது உண்மைதான்..

 

எனது மகன் தனக்கு

தனது அப்பாவை தனது அம்மா கவனிப்பது போல்

தன்னைக்கவனிக்கும் பெண் வேண்டும் என்கின்றான்.

அப்படி வேண்டும் என்றால் சிலவேளை  நாட்டில் கிடைக்கலாம் என்பேன் நான்...

இதன் அர்த்தம் என்ன??

தியாகமா???

 

அதேநேரம்  வடிவேலு பணத்தை குறி  வைக்காததை வேண்டுமானால் பாராட்டலாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.