Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்குறளும் திருக்குர்ஆனும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறளும் திருக்குர்ஆனும்

 

திருக்குறளுக்கும் திருக்குர்ஆனுக்கும் அப்படியொரு பெயரொற்றுமை வரக் காரணமென்னவென்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.  இது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது திருக்குர்ஆனுக்குப் போட்டியாக எழுதப்பட்டதனாலா? என்ற சந்தேகம் எழுகிறது.  

திருக்குறள் எழுதப்பட்ட காலப்பகுதிபற்றிச் சரியான தெளிவில்லை.  அக்காலம் இந்தியாவிற்குள் இஸ்லாம் நுழைவதற்கு முன்னரா அதன் பின்னரா என்பது புரியவில்லை.

 

திருக்குறள் பழைய ஏற்பாட்டிற்கு முற்பட்டது அல்லது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்றெல்லாம் கூறி நாம் தமிழருக்கெனத் திருக்குறளைப் பின்பற்றி ஆண்டுக்கணக்கொன்றை வேறு வைத்திருக்கிறோம்.  இது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது?

 

திருக்குறளிலிருந்து காமத்துப்பாலை நீக்கிவிட்டாலும் அது உலகத்தரம் வாய்ந்த நூலாகவே இருக்கும். அப்படியிருக்க, சினிமாவில் காதற்காட்சிகளைச் சேர்ப்பது போல சம்பந்தமில்லாமல் காமத்துப்பாலைச் குறளில் சேர்த்தது ஜனரஞ்சகத் தன்மையை அதிகரித்து மக்களைக் கவரும் நோக்கிலா?  அல்லது தமிழிலக்கியங்களின் திணையொழுக்க மரபைக் குறளிலும் புகுத்தும் நோக்கிலா?

 

இஸ்லாம் இல்லறத்தை வலியுறுத்துவது போலத் திருக்குறளும் வலியுறுத்துகிறது.  இந்தியாவின் சமயங்கள் துறவறத்தினாலேயே இறைவனையடைய முடியுமென்று வலியுறுத்த, இஸ்லாம் வந்து இல்லறத்தை அதுவும் பலதார மணத்தை ஆதரித்த போது ஒன்றும் செய்யமுடியாமல் சுதாரித்துக் கொண்டு இல்லறத்தை ஆதரித்து அதோடு பரத்தமையையும் நியாயப்படுத்தித் திருக்குறள் மக்களைக் கவர முற்பட்டதோ?  மதமாற்றத்தைத் தடுக்க ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்பதற்காக எழுதப்பட்டதோ?  தெரியவில்லை.

இத்தகைய பல சந்தேகங்கள் எழுகின்றன.  கல்வியாளர்கள் இத்திசையில் தங்கள் பார்வையைச் செலுத்தித் நடு நிலைத் தன்மையோடு ஆய்வுசெய்து திருக்குறள் மீது ஏற்படுகின்ற சந்தேகங்களை நீக்குவார்களானால் நலமாக இருக்கும்.
 

Edited by karu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இதையும் ஒருதடவை கேட்டுப்பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் உட்பட பலர் திருக்குறளில் சில அத்தியாயங்கள் திருவள்ளுவரால் எழுதபட்டவையல்ல என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அவற்றுள் கடவுள் வாழ்த்தும் ஒன்று.  கடவளுக்கு சமயங்கள் குறிக்கும்; பௌதிக குணாம்சங்களை மிகச்சாதுரியமாகத் தவிர்த்துத் தனது உயர்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்திய வள்ளுவர் இறைவனை 'மலர்மிசையேகினான்' என்றோ 'மலைமிசையேகினான்' என்றோ குறித்திருக்க நியாயமில்லை.  அத்துடன் சுவடிகளில் உச்சிக்குற்று வைத்து எழுதுவதுமில்லை.  அதனால் 'மலாமிசை..' அல்லது 'மலமிசை..' என்றே எழுதப்பட்டிருத்தல் வேண்டும். திருக்குறளை படியெடுத்தவர்கள் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ 'மலர்மிசை...' என்ற பொருளைக் கொடுத்திருக்கலாம். கடவுள் வாழ்த்தின் ஏனைய குறள்கள் சைவசித்தாந்தம் அல்லது பரிமேலழகர் வார்த்தையிற் கூறுவதாயின் சைவாகமங்கள் கூறும் இறைவனின் பௌதிக குணமல்லாத இயல்புகளையும் சொற்களையும் உள்ளடக்குவதால் (உதாரணம்: பொறிவாயிலைந்தவித்தான், எண்குணத்தான், இருவினை, தனக்குவமையில்லாதான், வேண்டுதல் வேண்டாமையிலான்), 'மலர்மிசை...' என்ற சொற்றொடரும் அவ்விடத்திற பொருந்தாது. அது சைவ சித்தாந்தம் சொல்லும்;  ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களையும் அடக்கி அதில் சவாரிசெய்யும்  நிர்மலனாகிய இறைவனின் இயல்பைக் குறிக்க 'மலமிசை..' யென்றே எழுதப்பட்டிருக்க வேண்டும்.  அப்போதுதான் அக்குறளில் நிலமிசையென்ற சொல்லோடு  ஒத்திசைவும் கிடைக்கின்றது என்றும் வாதிக்க இடமுண்டு.  ஆயினும்; 'மலமிசை...' என்னும் சொற்றொடரை  தற்காலத் தமிழ்கூறும் நல்லுலகு ஏற்காது.  ஆண்டாள் நறுமணத்தை நாற்றமென்றாள், வள்ளுவரோ மும்மலங்களையும் மலமென்றார். ஆனால் இரு சொற்களும் இப்போது ஏற்புடையனவாயில்லை.  ஆகவே 'மலர்மிசை..' என்னும் சொற்றொடரையே, அதை வள்ளுவரே எழுதியதாகக் கருதி ஏற்றுக்;கொள்ளலாம். இருப்பினும் இச்சொல் திருக்குறளின் பொதுமைத் தன்மைக்குப்பங்கம் விளைவிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் பதிலைச் சொல்லுங்கவன். திருக்குரானுக்கு போட்டியாக எங்களிண்ட திருக்குறள் எழுதப்பட்டதாம். இந்த அநியாயப்படுவாருக்கு ஒரு முடிவேஇல்லியா? :o

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாய்.... ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு, மனிசரையும் கடிச்சு.....
திருக்குறளுக்கும் தொடர்பு ஏற்படுத்த வந்திட்டாங்கள்.JC_doubledown.gif
 

  • கருத்துக்கள உறவுகள்

குர் ஆனுக்கு எதற்காக 'திரு' போட்டுள்ளார்கள் என்று தெளிவில்லை!

 

'கரு' ஆரம்பித்து வைத்த திரி ஒரு நல்ல விவாதத்துக்கு அடிகோலும் என்று நம்புகிறேன்!

 

திருக்குறளுக்கும், குர் ஆனுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை!

 

இரண்டுமே, வாழ்க்கை நெறியை எடுத்தியம்பும் நூல்கள்!

 

குர்-ஆன் எழுதப் பட்ட கால கட்டத்தில், அரேபியர்கள் பல பெண்களை மனைவிகளாகவும், பல சொரூபங்களை வழிபடுபவர்களாகவும், மிகவும் சுத்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்ததாக, முகமது நபி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அத்துடன் 'குர்-ஆன் மட்டுமே, அதன் மூலம் மாறாது இன்றும் உள்ளது என்று கூறப்படுகின்றது! 'கபிரியேல்' என்னும் தேவதையால், எழுதப்படிக்கத் தெரியாத முகமது நபிக்கு, இந்த வாழ்க்கை நெறி உபதேசிக்கப் பட... அதை அவர் குகையினுள் கிடந்த 'ஆட்டுக்குட்டிகளின் தோள் பட்டை எலும்புகளில்' எழுதினர் என்பது ஐதீகம்!

 

மெக்காவின் உள்ள மசூதியின் உள்ளே, நாற்பதுக்கும் மேற்பட்ட 'சொரூபங்கள்' முகமது நபியால் உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது!

 

குர்- ஆன் எழுதப்பட்ட காலம், கி.பி ஆறாம் நூற்றாண்டு என்று கூறப்படுகின்றது!

 

ஆனால் , திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது! பெரும்பாலும், சமண மதக் கருத்துக்களையும், பவுத்த மதக் கருத்துக்களையுமே 'திருக்குறள்' வலியுறுத்துகின்றது!

 

அதில் வரும் 'இந்து மதம்' பற்றிய கருத்துக்கள், பிராமணர்களால் பிற்காலத்தில் திணிக்கப்பட்டிருக்கலாம்!

 

திருக்குறளில் வரும் வாழ்க்கை நெறிமுறைகள், ஒரு பிராமணரல்லாத ஒருவரால் எழுதப்பட்டதை, அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை!

 

அதனால், திருவள்ளுவரைப் பறையர் எனவும், புலையர் எனவும் பல இடங்களில் வர்ணித்துள்ளார்கள்!

 

திருக்குறளில் வரும் 'காமத்துப் பாலில்' காமம் என்பது துளியளவும் இல்லை! அது ஒரு வாழ்க்கை நெறியாக மட்டுமே சொல்லப்படுகின்றது!

 

அதே போலவே குர் ஆனிலும், காமம் என்பது விரசமில்லாமல் வர்ணிக்கப்படுகின்றது!

 

திருக்குறள் பல புலவர்களால் தொகுக்கப் பட்டிருக்கவும் சாத்தியங்கள் உண்டு!

 

மேலே கட்டுரையாளர் கூறுவது போல, திருக்குறளோ அல்லது குர் ஆனோ, வியாபார நோக்கில் எழுதப்படவில்லை!

 

மனித வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டன!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறளில் உள்ள தனித்துவமான எழுசீர் கட்டு மற்றும் அச்சீர்கள் அமைக்கப்பட்ட அலகு முறைகளின் நேர்த்தியான தன்மை முதலியன திருக்குறளை ஒரு தனித்த இலக்கியவாதியின் கைவண்ணம் என நம்ப வைக்கின்றன. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.