Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

PLOTல் இருந்தபோது, கடத்தப்பட்ட என் கணவர் இருந்தாக புளொட் சிவா தெரிவித்தார் பெண் சாட்சியம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தான் புளொட் இயக்கத்தில் இருந்தபோது கடத்தப்பட்ட எனது கணவர் சிவாவும் இருந்தாக பெண்ணொருவர் இன்று சாட்சியமளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இன்று (17.12) சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்தும் அங்கு சாட்சியமளித்த அவர்,

மகாறம்பைக்குளத்தில் இருந்து 2008.5.19 அன்று 30 வயதுடைய சிவலிங்கம் சிவானந்தன் என்ற எனது கணவர் வவுனியா நகருக்கு வந்தபோது ஆட்டோ ஒன்றில் கடத்தப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

கடத்தப்பட்டு மூன்றாம் நாள் வவுனியாவின் இரு நிலையான தொலைபேசிகளில் இருந்து கணவர் காணாமல் போன விடயம் தொடர்பில் ஒருவருக்கும் தெரியப்படுத்தக்கூடாது எனவும் யாராவது கேட்டால் அவர் கொழும்புக்கு வேலைக்கு போய் விட்டதாக கூறுமாறு தெரிவித்தார்கள்.

அதன் பின்னர் கணவனை விடுவிப்பதற்கு 50 இலட்சம் தருமாறு கோரினார்கள். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தபோது 10 இலட்சம் கேட்டார்கள்.

அதுவும் இல்லை என்று கூறி 5 இலட்சத்து ஜம்பதனாயிரம் ரூபா பணத்தை வவுனியா அப்சரா கூல்பாருக்கு முன்பாக வைத்திருந்தபோது ஒருவர் வந்து வாங்கி சென்றார். ஆனால் இன்று பணமும் இல்லாமல் கணவரும் இல்லாமல் இரு பிள்ளைகளுடன் கஸ்டத்துடன் வாழ்ந்து வருகின்றேன்.

என்னிடம் பணம் பறித்தவர்கள் தம்மை கருணா குழு என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் எனக்கு அழைப்பு வந்த தொலைபேசி இலக்கத்தை விசாரித்து பார்த்தபோது அது புளொட் இயக்கத்தின் இறம்பைக்குளம் அலுவலக இலக்கங்கள் என அறிந்தேன்.

அதன் பின்னர் புளொட் இராணுவ பொறுப்பாளராக இருந்த சிவாவிடம் கேட்டபோது கணவர் தொடர்பாக யாரிடமும் முறைப்பாடு செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் பெண் என்றும் பார்க்காமல் கடத்துவன் என தெரிவித்தார்.

இதன் பின்னர் சிவா 28 இலட்சம் பணம் தந்தால் உனது கணவரை வெளிநாட்டிற்கு டிக்கட் போட்டு அனுப்பி விடுகின்றேன் என தெரிவித்தார். ஆனால் கணவரை காட்டவில்லை.

சில காலம் கழித்து சிவாவை நோரில் கண்டு கேட்டபோது தான் சிறை சென்று வந்துள்ளதாகவும் தான் இயக்கத்தில் இருந்தபோது கணவர் இருந்ததாகவும் தற்போது என்ன நடந்தது என தெரியாது எனவும் கூறினார். நானும் அவர்களிடம் பயத்தால் தற்போது செல்வதில்லை என தெரிவித்தார்.

  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114554/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் புளட் மீது முன்பு தாக்குதல் நடத்தியதால் வேறு வழி இல்லாமல் புளட் ஆள்கடத்தலில் ஈடுபடுகிறது..

தடை செய்ததால் விளைந்த அறுவடை . 

Edited by arjun

தடை செய்ததால் விளைந்த அறுவடை . 

இரண்டிக்கும் என்ன சம்பந்தம் என்று கொஞ்சம் விளக்க முடியுமா அர்ஜுன் . பொய்யை எத்தனை முறை நீங்கள் இங்கே சொல்வீர்கள் . தாங்கமுடியலைப்பா .புளொட் எல்லாம் ஒரு போராட்ட இயக்கம் என்று .... அதுக்கு வக்காலத்து வங்க கொஞ்ச பேர் ...., அந்த பெண்ணின் கணவரை திரும்ப கொடுகின்ற வழிய சொல்லுங்கோ ....

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்ததால் விளைந்த அறுவடை . 

இது மிஞ்சினதுகளின் அடாவடித்தனம் ...........
                    முழுமையும் இருந்திருந்தால் ??
 
தீர்கதரிசிகள் புலிகள்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.