Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

132 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்! சென்னையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அஞ்சலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிச் சிறார்கள் படுகொலை செய்யப்பட்டதை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் நியாயப்படுத்த முடியாது. இந்தக் கொலைகளை நாம் செஞ்சோலைக் கொலைகளுடனும், புதுக்குடியிருப்புக் கொலைகளுடனுன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். எங்கு இறந்தாலும் குழந்தைகள் குழந்தைகளே.

 

பாக்கிஸ்த்தான் சிங்களத்துக்கு ஆதரவு கொடுக்கிறதென்பதை மறுக்கவில்லை. அதற்கும் இங்கே கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும் என்ன தொடர்பு? சிங்களத்துக் கொடுக்கப்படும் ஆதரவிற்கு இந்தக் குழந்தைகள் எந்த விதத்தில் காரணமானார்கள் ? இந்தக் குழந்தைகளில் எந்தக் குழந்தை சிங்களத்துக்கு ஆதரவு கொடுக்கும் தீர்மானத்தை எடுத்தது ? அப்படியிருக்க குழந்தைகள் காட்டுமிராண்டிகளால் பலி எடுக்கப்பட்டதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள் ?

 

இந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு தமிழகத்தில் பள்ளிச் சிறார்கள் இரங்கல் தெரிவிப்பது எப்படித் தவறாகும் ? சரி, சென்னையில் பள்ளிச் சிறார்கள் தாம் செய்வது புரியாமலோ அல்லது பள்ளி நிர்வாகத்தின் அனுசரணையின் பேரிலோதான் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோமே, இதற்குள் எப்படி அரசியல் வந்தது ? இப்படி ஒரு இரங்கலைச் செய்வதன் மூலம் அந்தப் பள்ளியோ அல்லது சிறுவர்களோ அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எந்தவிதமான அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தார்களென்பதை இங்கே கருத்தெழுதும் நண்பர்கள் கூறினால் அறிந்துகொள்ள ஆர்வம்.

 

ஈழத்தில் பள்ளிச் சிறார்களாகட்டும், இளைஞர்களாகட்டும், முதியவர்களாகட்டும், யார் சிங்களத்தால் கொல்லப்பட்டாலும் இடைவிடாது இரங்கலும் ஆர்ப்பாட்டமும் இன்றுவரை நடத்துவது யார் ? அதே தமிழகச் சிறார்களும், மாணவர்களும்தானே?? அப்படியிருக்க "நாங்கள் செத்தால் சும்மாயிருக்கிறீர்கள், பாக்கிஸ்த்தான்காரன் செத்தால் இரங்கல் தெரிவிக்கிறீர்கள்" என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது நியாயமா?? எழுதும்போது, என்ன எழுதுகிறோம், அல்லது யாரை விழிக்கிறோம் என்கிற கவனம் கூட இல்லாமலா சகட்டுமேனிக்கு எழுதுவது ?

 

இன்று இந்தியாவும், பாக்கிஸ்த்தானும் முகம்கொடுக்கும் மிகப்பெரிய பிரச்சினை இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதம் என்றால் அது மிகையாகாது. இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாத மிருகங்களால் வகை தொகையின்றி நாள்தோறும் பாக்கிஸ்த்தானியர்களும், இந்தியர்களும் கொல்லப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆகவே பாதிக்கப்பட்டு வரும் இரு சமூகங்கள் தம்முள் இரங்கலையும், ஆதரவையும், சகோதரத்துவத்தையும் காட்டிக்கொள்வதில் எப்படித் தவறிருக்க முடியும் ?

 

இங்கே கருத்தாடும் நண்பர்களுக்கு ஒரு விடயத்தை இறுதியாகக் கூறி முடிக்கிறேன்' 131 பள்ளிச் சிறுவர்கள் தற்கொலைத் தாக்குதலிலும், துப்பாகிச் சூட்டிலும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வந்ததும், சமூக வலைத் தளங்களான டுவிட்டரிலும், முகப் புத்தகத்திலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்  தமது அயல் நாட்டில் கொல்லப்பட்ட சிறார்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக்கொண்டிருந்தனர். இது சில மணிநேரத்திலேயே லட்சக்கணக்காக, மில்லியன் கணக்கான இரங்கல்ச் செய்தியாக மாறியது. பதிலுக்கு பாக்கிஸ்த்தான் மக்களும் தமக்கு இந்தியர்கள் நல்கிய ஆறுதலுக்கும், ஆதரவிற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். இங்கே அரசியல் கிடையாது. இலாப நட்டம் கிடையாது. இருப்பதெல்லாம் சக மனிதனுக்கு மனிதன் காட்டும் இரக்கமும், ஆதரவும்தான்.

 

முடிந்தால் அப்பாவிகள் கொல்லப்படுவதைக் கண்டிப்போம். முடியாவிட்டால் கொல்லப்படுவதை நியாயப்படுத்தாமலாவது இருப்போம். அதுவே மனிதத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைம்மாறாக அமையும்.

 

 

ஐயா

நாங்களும் மனிதர்கள் தான்..

அஞ்சலி  என்று எழுதும்போது

நொந்து போன மனதுக்குள் என் இனமும் வந்து போகுதே.....

ஒத்தடம் தர  யாருமற்று

ஆற்றப்படாத காயமாக அது ரணமாக இன்னும் அப்படியே இருக்கே...

அந்த ஆதங்கம் தான்

 

பொறுத்தருள்வீர்

ஆனாலும் அங்கங்கு அது வரத்தான் செய்யும்..

நாங்கள் சாதாரண மனிதர்கள்

தெய்வங்கள் அல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

நாங்களும் மனிதர்கள் தான்..

அஞ்சலி  என்று எழுதும்போது

நொந்து போன மனதுக்குள் என் இனமும் வந்து போகுதே.....

ஒத்தடம் தர  யாருமற்று

ஆற்றப்படாத காயமாக அது ரணமாக இன்னும் அப்படியே இருக்கே...

அந்த ஆதங்கம் தான்

 

பொறுத்தருள்வீர்

ஆனாலும் அங்கங்கு அது வரத்தான் செய்யும்..

நாங்கள் சாதாரண மனிதர்கள்

தெய்வங்கள் அல்ல...

 

குகன்,

 

பிள்ளைகளைப் பறிகொடுத்த எமக்கு இன்னுமல்லவா இந்த படுகொலைபற்றிய கவலையும், இரக்கமும் இருக்க வேண்டும் ? நாங்களே சரியென்று நியாயப்படுத்துவது சரியா?? இந்தப் பிள்ளைகள் கொல்லப்பட்டதை எப்படி நியாயப்படுத்துவீர்கள் ? இந்தப் படுகொலைக்கும் நமது பிள்ளைகள் கொல்லப்பட்டதற்கும் எந்தத் தொடர்புமில்லையே ? இது முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடும் செயல் அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்

குகன்,

 

பிள்ளைகளைப் பறிகொடுத்த எமக்கு இன்னுமல்லவா இந்த படுகொலைபற்றிய கவலையும், இரக்கமும் இருக்க வேண்டும் ? நாங்களே சரியென்று நியாயப்படுத்துவது சரியா?? இந்தப் பிள்ளைகள் கொல்லப்பட்டதை எப்படி நியாயப்படுத்துவீர்கள் ? இந்தப் படுகொலைக்கும் நமது பிள்ளைகள் கொல்லப்பட்டதற்கும் எந்தத் தொடர்புமில்லையே ? இது முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடும் செயல் அல்லவா??

 

ஐயா

கவலை   இரக்கம் வரவில்லை என்று எங்கு சொன்னேன்???

 

எங்கு நியாயப்படுத்தினேன்??

 

எங்கு தொடர்பு படுத்தினேன்??

 

முழுங்காலுக்கும் மொட்டந்தலைக்குமானது அல்ல.....

 

இங்கும் பாடசாலை

அங்கும் பாடசாலை

 

அங்கும் பாடசாலைச்சிறுவர்கள்

இங்கும்பாடசாலைச்சிறுவர்கள்

 

அங்கும் உயிர்

இங்கும் உயிர்....

 

வேறு இடங்களில் விடுங்கள்

சென்னையில் இப்படி ஒன்று எமக்காக........???

ஏன்........??

ரத்த உறவுகளிடமில்லாது வேற யாரிடம் கேட்கமுடியும்??

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

கவலை   இரக்கம் வரவில்லை என்று எங்கு சொன்னேன்???

 

எங்கு நியாயப்படுத்தினேன்??

 

எங்கு தொடர்பு படுத்தினேன்??

 

முழுங்காலுக்கும் மொட்டந்தலைக்குமானது அல்ல.....

 

இங்கும் பாடசாலை

அங்கும் பாடசாலை

 

அங்கும் பாடசாலைச்சிறுவர்கள்

இங்கும்பாடசாலைச்சிறுவர்கள்

 

அங்கும் உயிர்

இங்கும் உயிர்....

 

வேறு இடங்களில் விடுங்கள்

சென்னையில் இப்படி ஒன்று எமக்காக........???

ஏன்........??

ரத்த உறவுகளிடமில்லாது வேற யாரிடம் கேட்கமுடியும்??

 

 

உங்களைச் சொல்லவில்லை குகன்,

 

சிறி எழுதியதற்குத்தான் அப்படிச் சொன்னேன்.

 

தமிழகத்தில் எங்களுக்காக எத்தனைபேர் தங்களைத்தானே எரித்துத் தற்கொடை செய்திருக்கிறார்கள்? அப்படியிருக்க எங்களுக்காக என்ன செய்தார்கள் என்பது நியாயமில்லை. ஒருவனுக்காக தனது உயிரையே கொடுப்பதைக் காட்டிலும் வேறு தானம் இருக்கிறதா ?? நன்றி மறப்பது நன்றல்லவே ?!

 

ஈழத்தமிழனுக்கு விடுதலை, தனி ஈழமே தீர்வென்று சொல்லிக்கொண்டே எரிந்து ஆகுதியாகிய செங்கொடியை எப்படி மறந்தீர்கள் ? செங்கொடி போன்றே உயிர்த்தியாகம் செய்த உசேன், இன்னும் பலர். இவர்களை எப்படி மறந்தோம் ?

 

தமிழகத் தமிழர் எங்களுக்குச் செய்த தியாகங்கள் போல வேறு எவருக்காவது இதுவரையில் செய்திருக்கிறார்களா? இப்போதுதான் முதற்தடவையாக பாக்கிஸ்த்தானியர்களுக்காக இரங்குகிறார்கள். விட்டு விடுவோமே ?!

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்காந்தி ஒருமுறை தமிழகம் வந்தபோது அவரை வரவேற்குமாறு பள்ளிக்கூடங்களுக்கு ஆணை வந்தது. எங்களையெல்லாம் சாலையின் இரு மருங்கிலும் வெயிலில் நிப்பாட்டிவிட்டார்கள். எங்களுக்கு முதலில் ஏன் போகிறோம் என்றே தெரியவில்லை.. ஆனாலும் வகுப்புகளுக்கு கட் என்பதால் ஒரே மகிழ்ச்சி.. :wub:

அதுபோல இந்த விடயத்திலும் எங்கிருந்தாவது ஆணை வந்திருக்கும்.. பள்ளிக்கூட அதிபர் ஒருவர் இவ்வாறான முடிவை தனித்து எடுத்திருக்க மாட்டார். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
இந்த அழுகைகளின் பின்னால் வெறுமனே பயங்கரவாதிகளை நோக்கி மட்டுமே சுட்டுவிரலை நீட்டுகின்றோம். ஆனால் இதற்கான அடிப்படைகள் மிகப்பெரியவை. ஆக்கிரமிப்பு மனோபாவம் அல்லது சுரண்டலாதிக்க நவகாலனித்துவத் திட்டம் தனது சொந்த மண்ணிலே தனது இயல்புகளோடு(அதற்காக இஸ்லாமியரின் பிற்போக்குத்தனம் சரியென்பதல்ல) வாழமுடியாத சூழல் என்பனவும் பயங்கரவாதம் வன்முறை என்பவற்றை வளர்கின்றது. அதேவேளை மேற்கினது சுயநலம் சார்ந்த மனிதஉரிமைக் கொள்கைளும் கரணியமாகும். மலாலாவுக்கு நாளொதுக்கிய ஐநா பூஸ்விக்காக்களைக் கைவிட்டதன் விளைவுகளே இவை. அதேவேளை ஆயுத உற்பத்தி நாடுகளுக்கு தமது ஆயுதங்கள் எப்படியாவது விற்பனை செய்தால்போதுமென்ற போக்கு என்ற நிலைகூட இவற்றுக்கு துணைபோகின்றன. 
நாகர்கோவில் செஞ்சோலை என நீண்ட பட்டியல். இன்று மௌனக்கொலைகள் கடத்தல்கள் என நிகழப் பாராமுகமாக இருக்கும் உலகு எங்காவது இஸ்லாம் இஸ்லாமிய தேசம் இஸ்லாமிய பயங்கரவாதம் என்றவுடன் மட்டுமே விழிக்கும் சூழல் அனைத்துமே கரணியம். அனைவருமே பொறுப்பேற்க வேண்டிய துயரமான உயிரிழப்பாகும்......................

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த அழுகைகளின் பின்னால் வெறுமனே பயங்கரவாதிகளை நோக்கி மட்டுமே சுட்டுவிரலை நீட்டுகின்றோம். ஆனால் இதற்கான அடிப்படைகள் மிகப்பெரியவை. ஆக்கிரமிப்பு மனோபாவம் அல்லது சுரண்டலாதிக்க நவகாலனித்துவத் திட்டம் தனது சொந்த மண்ணிலே தனது இயல்புகளோடு(அதற்காக இஸ்லாமியரின் பிற்போக்குத்தனம் சரியென்பதல்ல) வாழமுடியாத சூழல் என்பனவும் பயங்கரவாதம் வன்முறை என்பவற்றை வளர்கின்றது. அதேவேளை மேற்கினது சுயநலம் சார்ந்த மனிதஉரிமைக் கொள்கைளும் கரணியமாகும். மலாலாவுக்கு நாளொதுக்கிய ஐநா பூஸ்விக்காக்களைக் கைவிட்டதன் விளைவுகளே இவை. அதேவேளை ஆயுத உற்பத்தி நாடுகளுக்கு தமது ஆயுதங்கள் எப்படியாவது விற்பனை செய்தால்போதுமென்ற போக்கு என்ற நிலைகூட இவற்றுக்கு துணைபோகின்றன. 
நாகர்கோவில் செஞ்சோலை என நீண்ட பட்டியல். இன்று மௌனக்கொலைகள் கடத்தல்கள் என நிகழப் பாராமுகமாக இருக்கும் உலகு எங்காவது இஸ்லாம் இஸ்லாமிய தேசம் இஸ்லாமிய பயங்கரவாதம் என்றவுடன் மட்டுமே விழிக்கும் சூழல் அனைத்துமே கரணியம். அனைவருமே பொறுப்பேற்க வேண்டிய துயரமான உயிரிழப்பாகும்......................

 

 

சிந்திக்கத் தூண்டிய, இன்னும் இந்த திரியை நீட்டிக்கக் கூடிய ஒரு கருத்து, நாளை தொடர்ந்தும் எழுதுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.