Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் அறிவிப்பு ஜனவரி 5ம் திகதி நள்ளிரவு வெளியாகும்?

Featured Replies

இதை நான் சனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்த போது எழுதிய போது கோசன் சே என்னும் ஆய்வாளார் சம்பந்தரின் விசுவாசி துள்ளீக் குதித்தார், சம்பந்த்தரும் இதனையே அறீவித்தால் கோசன் சே கோவித்துக் கொண்டுவிடுவார். 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மட்டுமல்ல, முஸ்லிம் காங்கிரஸ் கூட இறுதி நேரத்தில் தான் யாருக்கு தமது ஆதரவு என அறிவிப்பார்கள்.

காரணம் இந்தியா?

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் சனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்த போது எழுதிய போது கோசன் சே என்னும் ஆய்வாளார் சம்பந்தரின் விசுவாசி துள்ளீக் குதித்தார், சம்பந்த்தரும் இதனையே அறீவித்தால் கோசன் சே கோவித்துக் கொண்டுவிடுவார். 

 

 

அவர்

5ந்திகதி நள்ளிரவுவரை ஒழித்திருப்பார் போலுள்ளது

முடிவைப்பொறுத்து

தலை காட்டலாம்

காட்டாமலும் விடலாம்.. :(

மைத்திரியிடமிருந்து பெருந்தொகைப்பணம் கூட்டணிக்கு கிடைத்ததாகவும்.அதை வைத்து கூட்டணியைக்கழற்றிவிட்டு தமிழரசுக்கட்சியை எதிர்காலத்தில் பலப்படுத்தவிருப்பதாகவும் தகவல்.அதே போல சந்திரிகா அம்மையாரின் கூற்றுப்படி இறுதி நேரத்தில் தமிழ் மக்களுக்கு (அவர்கள் பாசையில் தமிழ் மந்தைகளுக்கு) தெரிவித்தால் போதுமானதாம்.இதில் விட பிச்சையெடுக்கலாம்.போகிற கூட்டமெல்லாம் தூங்கி வழியும் தலைவருக்கு காது கேட்டால்தான் என்ன? கேட்காவிட்டால் தான் என்ன?இவர்களிலும் பார்க்க மனோ கணேசன் நூறுபடி மேல்.தகப்பனின் சொத்துக்களை அழித்து அரசியல் நடத்தும் தலைவர்.அவரையும் விலை பேசினார்கள் முடியவில்லை.இன்று உலக நாடுகளில் இலங்கையில் நன்மதிப்புள்ள ஒரு அரசியல்வாதியும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமாகத்திகழ்பவர் மனோ கணேசன் ஒருவரே.

 


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்வந்துள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஐவர் இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலரும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் ஜனாதிபதிக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

ஜனநாயக கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ராஜித ஹப்புவாராச்சி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இணைந்து கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.

மைத்திரிக்கு ஆதரவளிப்பது குறித்து கூட்டமைப்பினர் முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிலர் இன்று முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.

வவுனியாவில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  வினோ நோதராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் சந்திரகுலசிங்கம், சுத்தானாந்தா இந்து இளைஞர் சங்க தலைவரும் தமிழரசுக் கட்சி மத்தியகுழு உறுப்பினருமான ந.சேனாதிராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உபதலைவர் து.ரவி உள்ளிட்ட பலர் ஒன்றுகூடி ஆராய்ந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில், வன்னி தேர்தல் தொகுதிக்கென நியமிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ந.சேனாதிராஜா தலைமையில் இடம்பெறவுள்ள பிரசார நடவடிக்கைகளை கூட்டமைப்பு தீவிரமாக மேற்கொள்ளும் என்று தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகிறது

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என தெளிவாக அறிவிக்காத நிலையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.