Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!!

Featured Replies

”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!!

 

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். குறிப்பாக சைவ உணவு கிடைக்காமல் போனதால் இஷாந்த் சர்மா ரொம்பவே கொந்தளித்துப் போனாராம். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முன்னர் 5 டெஸ்ட் போட்டிகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!! ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் பட்டு உயிரிழந்தார். இதனால் போட்டிகள் 4 ஆகக் குறைக்கப்பட்டது.

 

இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றது முதலே சாப்பாடு பெரிய பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் ஹியூக்ஸின் இறுதி சடங்கு நேரம் என்பதால் இந்திய வீரர்கள் சமாளித்திருக்கின்றனர். பின்னர் பயிற்சி ஆட்டம் நடைபெற்ற நிலையிலும் சாப்பாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் கேட்ட சைவ உணவு முறையாக வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்தனர். அடிலெய்ட் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வீரர்களுக்காக இந்திய சமையல்காரர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

தற்போது பிரிஸ்பேனில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற போது மீண்டும் சாப்பாடு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளனர் இந்திய வீரர்கள். தமக்கு சைவ உணவு கிடைக்காத காரணத்தால் இஷாந்த் சர்மா ரொம்பவே கோபமாக இருக்கிறாராம். அவருடன் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அணி நிர்வாகத்திடம் கடுமையான கோபத்துடன் புகார் அளித்துள்ளனர். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐசிசியின் பணியாளர்கள், இந்திய அணி இயக்குனர் ரவவிசாஸ்திரி ஆகியோருக்கும் இதே சிக்கல்.. இவர்கள் தற்போது வெளியில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிடுகின்றனராம்... அய்யயோ.. பிள்ளைக சரியா சாப்பிடாததால்தான் தோல்வியோ?

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/indians-unhappy-with-food-australia-ishant-sharma-angry-217433.html

  • தொடங்கியவர்

சைவச் சாப்பாடு இல்லாததால் மைதானத்தை விட்டு உணவு தேடி ஓடிய இஷாந்த் சர்மா, ரெய்னா!

 

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை இந்தியா நழுவ விட்ட சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வந்தது முதல் சரியான சாப்பாடு கிடைக்கவில்ல என்ற பெரும் கவலையில் வீரர்கள் உள்ளனராம். அதிலும் பிரிஸ்பேன் 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளின்போது சைவச் சாப்பாடு கிடைக்காமல் இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, டைரக்டர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் உணவு தேடி மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

ஆஸ்திரேலியாவுக்குப் போய்ச் சேர்ந்த சில நாட்களிலேயே பில் ஹியூக்ஸ் என்ற இளம் வீரர் புவன்சர் பந்து தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் இந்திய வீரர்கள் சோகமடைந்தனர். இதனால் முதல் டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டு தாமதமாக தொடங்கியது.

 

சாப்பாட்டுச் சண்டை இந்த நிலையில் தற்போது இந்திய வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே சாப்பாடு விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது

 

சைவ சாப்பாடு கிடைக்கவில்லை ஆஸ்திரேலியாவுக்கு வந்தது முதலே இந்திய வீரர்கள் சரியான சாப்பாடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனராம். இருப்பினும் ஹியூக்ஸ் மரணத்தால் ஆஸ்திரேலியாவில் நிலவி வந்த சோக மன நிலை காரணமாக சாப்பாடு பிரச்சினையை வெளிப்படையாக கிளப்பாமல் இருந்துள்ளனர். ஆனால் தற்போது தங்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்கவில்லை என்று புலம்ப ஆரம்பித்துள்ளனராம்.

 

வாக் அவுட் செய்த வீரர்கள் குறிப்பாக பிரிஸ்பேன் 2வது டெஸ்ட் போட்டியின்போது சைவச் சாப்பாடு கிடைக்காத காரணத்தால் சாப்பிடாமல் வீரர்கள் எழுந்து சென்றது தெரிய வந்துள்ளது.

 

டென்ஷன் ஆன இஷாந்த், ரெய்னா, ரவி 3வது நாள் ஆட்டத்தின்போது, மதியச் சாப்பாடு சாப்பிட இந்திய வீரர்கள் போனபோது அவர்களுக்கு அசைவச் சாப்பாடு மட்டுமே பரிமாறப்பட்டதாம். இதனால் சைவப் பிரியர்களான இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, அணி இயக்குநர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர். இதனால் மதியச் சாப்பாட்டை சாப்பிடாமல் அங்கிருந்து வெளியேறினர். மைதானத்தை விட்டு வெளியே வந்த அவர்கள் வெளியில் சைவச் சாப்பாடு கிடைக்காமா என்று போய்ப் பார்த்துள்ளனராம்.

 

வெளியில் வைத்து சாப்பிட்ட கொடுமை சைவச் சாப்பாடு கிடைத்து அதை வாங்கிக் கொண்டு வந்தபோது வெளியிலிருந்து வரவழைக்கப்படும் சாப்பாட்டை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனராம் ஆஸ்திரேலிய அதிகாரிகள். இதனால் வேறு வழியில்லாமல் சர்மாவும், ரெய்னாவும் வெளியில் வைத்தே சாப்பிட்டுள்ளனர்.

 

ஏன் இப்படி...! முதல் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர்களுக்குத் தேவையான சாப்பாட்டைத் தர போதிய ஏற்பாட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்திருந்ததாம். அதாவது இந்திய சமையல்காரரையே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர். ஆனால் பிரிஸ்பேனில் அதைச் செய்யவில்லையாம். இதனால் சைவச் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

 

http://tamil.oneindia.com/news/sports/india-australia-angry-ishant-sharma-leaves-gabba-because-no-217481.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

limepickle.jpg

இதுக்குத்தான்... ஊரிலிருந்து புறப்படும் போது...
ஒரு ஊறுகாய் போத்திலையும் கொண்டு போக வேணும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தடவை தோற்கும் போதும் ஏதாவது ஒரு காரணம் வைத்திருப்பார்கள்...கடைசி வரை தோல்வியை ஒத்துக் ஏற்கும் மனநிலை இவர்களுக்கு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் இது நல்ல காரணம்...  பசி தீர்ந்தால்தான் பவுன்ட்ரி ,சிக்சர் பறக்கும். வயிறு புல்லானால்தான் , போலிங் பிட்சில் எகிறும்...!  :)

  • தொடங்கியவர்

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த விடயத்தில் சரியாக செயல்படவில்லை.

 

கடந்த ashes டூர் போக முதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களுக்கு என்ன காலை, மாலை உணவு, தேநீர் இடைவேளையில் என்ன உணவு தரப்பட வேண்டும் என 82 பக்கத்தில்

 

ஒரு அறிக்கையை அனுப்பி இருந்தார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுபாட்டு சபைக்கு. :D

 

http://www.telegraph.co.uk/sport/cricket/international/theashes/10433915/The-Ashes-2013-14-England-ridiculed-for-sending-82-page-list-of-goji-berry-and-quinoa-catering-demands.h

 

http://www.smh.com.au/sport/cricket/englands-cricket-team-demands-silver-service-on-dietary-needs-20131107-2x4fq.html

 

 இவர்கள் கேட்ட உணவு எல்லாம் கொடுத்ததும் டெஸ்ட் போட்டியில் 5-0 தோல்விதான் அடைந்தார்கள் :o:lol:  வழமை போல

  • தொடங்கியவர்

இஷாந்த், ரெய்னா அடுத்தவாட்டி இந்த ஹோட்டல்களுக்கு போங்க பாஸ்

 

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் சைவ உணவைத் தேடி மைதானத்தில் இருந்து வெளியேறிய கிரிக்கெட் வீரர்கள் இஷாந்த் சர்மாவும், ரெய்னாவும் மெல்போர்ன் நகரில் இருக்கும் சில சைவ உணவகங்களுக்கு செல்லலாம். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியிலும், பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது. பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது சைவ உணவு கொடுக்கப்படவில்லை என கிரிக்கெட் வீரர்கள் இஷாந்த் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா மதிய வேளையில் மைதானத்தில் இருந்து வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தனர்.

 

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இஷாந்த், ரெய்னா அடுத்தவாட்டி இந்த ஹோட்டல்களுக்கு போங்க பாஸ் இந்நிலையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 3வது டெஸ்ட் போட்டிக்காக மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளன. வரும் 26ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்குகிறது.

 

மெல்போர்ன் மைதானத்திலும் சைவ உணவு கிடைக்காவிட்டால் இஷாந்தும், ரெய்னாவும் சுவையான சைவ உணவு சாப்பிட நகரில் உள்ள சில உணவகங்களின் பெயர் வருமாறு,

1. ஆங்கன்

 

2. ரெட் பெப்பர்

 

3. தந்தூரி டென்

 

4. ஹார்ன் ப்ளீஸ்

 

5. டோன்கா

 

6. ப்ளோரா

 

7. டூ ஃபேட் இன்டியன்ஸ்

 

 

:D :D

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ishant-raina-can-try-these-restaurants-melbourne-217632.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.