Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதாக ரணிலுடன் மைத்திரி இரகசியஒப்பந்தம்– குளோபல் தமிழ்செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை 50 வீதத்தினால் குறைக்கப்படும், உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும்"

Ranil%20Ms%20Cbk_CI.jpg

தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரகசிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுவாக சில ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ள மைத்திரிபால சில தரப்பினருடன் தனித் தனியாக இரகசிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொள்ளப்பட்ட ஆவணமொன்று தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 1ம் திகதி இவ்வாறான ஒப்பந்தமொன்று ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை 50 வீதத்தினால் குறைக்கப்படும் எனவும், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதாகவும், இராணுவத்தினர் பயன்படுத்தி வரும் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதாகவும் மைத்திரிபால உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலா தீர்வுத்திட்டத்தை வழங்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செலவுகளை 40 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த அனுமதியளிப்பதாக மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகமொன்றுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னதாக தமக்கு எவ்வித உடன்படிக்கை பற்றியும் தெரியாது என திஸஸ அத்தநாயக்க தெரவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114706/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழர்களை கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடப்போகிறார்கள் என்றால் அவர்களுக்கு சிங்கள வாக்குகள் கிடைப்பது குறையும். இதுதான் கணக்கு. இதுக்குள்ளைதான் இணக்க அரசியலும் இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழர்களை கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடப்போகிறார்கள் என்றால் அவர்களுக்கு சிங்கள வாக்குகள் கிடைப்பது குறையும். இதுதான் கணக்கு. இதுக்குள்ளைதான் இணக்க அரசியலும் இருக்கு.. :D

கணக்குக்கு இன்னுமொரு பக்கமும் இருக்குது.

மிச்சம் மீதி தமிழ் வாக்குகளையும் மகிந்தருக்கு போடவிடாமல் செய்யும், Same side goal.

காசை வாங்கி வந்தார். தேர்தல் முடிஞ்சோன்ன, அங்கால போய் நிக்கப் போறார் போல கிடக்குது.

Edited by Nathamuni

இணக்க அரசியல் , யார் எங்கட டக்லஸ் இன் அரசியலோ , அது இணக்க அரசியல் இல்லை , சொரணை கெட்ட பிச்சை எடுக்கும் அரசியல் . 

அரசியல்வாதிகள் தொழிலே அதுதான் ஆனால் அவர்கள் சொல்வதை நம்ப ஆட்கள் இருக்கும் வரை அவர்கள் மாறப்போவதில்லை .

அதுதான் தமிழ்நாட்டில் ஆளுக்கொரு தொலைகாட்சி வைத்திருக்கின்றார்கள் .

தமிழர்கூட்டமைப்பு ,முஸ்லிம் காங்கிரஸ் இரண்டும் மைத்திரிக்கு வாக்கை போடுங்கள் என்று சொன்னால் சிங்களவன் மகிந்தாவிற்கு வாக்கை போட்டுவிடுவான் என்று நம்பும் ஒரு கூட்டமும் 

மகிந்தாவை மீண்டும் பதவியில் அமர்த்தினால் அவன் இன்னமும் தனது சர்வாதிகாரத்தை அதிகரிக்க சர்வதேசம் எமக்கு ஒரு தீர்வை தரும் என்று நம்பும் கூட்டமும்

தேர்தலை பகஸ்கரியுங்கள் என்று ஒரு கூட்டமும் இருக்கும் போது

இதற்குள் கூட்டமைப்பு தனது பருப்பை வடிவாக அவிக்கும் .

பருப்பு -கிலாரியுடன் இப்பதான் போனில் கதைத்தோம்  ,மோடி அடுத்தமாதம் வர சொன்னவர் ,ஐ .நா தான் அமைதி காக்க சொன்னது என்று அவர்கள் சொல்ல மக்கள் ஆஆஆ என்று வாயை பிழக்க சரி .

நூறு நாட்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்குவதானால் பின்னர் எதுக்கு ரணிலுக்கும் மைத்திரிக்கும் ஒப்பந்தம்.எல்லோரும் படித்தவர்கள் தானே பதில் இருக்கா/புரிகிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.