Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தில் பஞ்சாயத்து ஆட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமயம் மீண்டும் எங்கள் ஈழப்பிரச்னைக்கான பேச்சுவார்தை மேசைக்கு சர்வதேசம் பிரச்சனைக்குரிய இரு தரப்பையும் கொண்டு வந்து இருத்தியுள்வேளை இந்தியாவும் தனது பங்கிற்கு தங்கள் ஆட்சிமுறையிலுள்ள பஞ்சாயத்து மற்றும் யூனியன் பிரதேச ஆட்சி முறையை பரிசீலிக்கசொல்லி ஈழதமிழருக்கு அதனடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கசொல்லி சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

அந்த சட்டவரைபுகள் என்பது வேறு ஆனால் தென்னிந்திய சினிமாக்களை பார்த்து பழகிவிட்ட எமக்கு பஞ்சாயத்து என்றதும் நினைவிற்கு வருவது ஊரின் எல்லையில் ஒரு ஆலமரம் அதனடியில் ஒரு பெரிசு மேல்சட்டையில்லாமல் விறைப்பாய் அமர்ந்திருக்க அவரைச்சுற்றி ஊர்மக்கள் அமர்ந்திருக்க . அந்த பெரிசு அவர்கள் பிரச்சனையை கேட்டு அவரே தனது அறிவுக்கெட்டினபடி ஏதாவது தீர்ப்பை கூறுவார்

இதுதான் எமக்கு உடனே ஞபகத்திற்கு வருகின்ற பஞசாயத்து முறை.எனவே இந்த பஞசாயத்து முறையை ஈழத்தமிழர் ஏற்றுக்கொண்டு எங்கள் பிரச்சனை முடிவிற்கு வந்து விட்டது என்றும் வைத்துக்கொண்டு(ஒரு கற்பனைதான்)இந்த பஞ்சாயத்து முறையை நடைமுறைப்படுத்த தொடங்குவோம் முதலில் பஞ்சாயத்தை கூட்டுவதற்கு முக்கியமாக ஊருக்கு ஊர் இடவசதியுள்ள இடங்களில் ஒரு அரச மரமோ அல்லது ஆலமரமோ நடவேண்டும்.

இந்த மரங்கள் வளர அதிக காலங்கள் எடுக்கும் என்பதால் அவை வளரும்வரை தற்காலிகமாக அந்த மரங்களை போல் பெரிய கட்டவுட்டுகளை (கீறிய படங்களை) செய்து பயன்படுத்தலாம்.இப்போ இடம் தயார் அடுத்ததாக் தீர்ப்பு சொல்ல தலைவர் தேவை அவரை தேர்ந்தெடுக்க சில அடிப்படை தகுதிகள் என்னவென்றால் கொஞ்சம் சொத்துகள் உள்ள வயதான ஆனால் நல்ல உடற்கட்டுள்ளவராக இருக்கவேண்டும்.

சேட்டு போடக்கூடாது. வேட்டி கட்டத்தெரிந்திருக்கவேண்டும

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் எனக்கு இதுவரை தேன்றிய ஆட்சி முறை கட்டமைப்பு இனிமேலும் ஏதாவது தோன்றினால் எழுதுகிறேன் எனவே இதனை யாராவது கொப்பி எடுத்து ஒன்றை நோர்வேக்கும் மற்றதை இலங்கை அரசிற்கும் பரிசீலனைக்காக காகத்தின்ரையே அல்லது கழுகின்ரையோ காலிலை கட்டி அனுப்பி விடவும் நன்றி.

காகமும் கறுப்பு தானே. எண்ட காலில கட்டி அந்த பணியை செய்யுறன் சாத்திரி சார்

யோவ் சாத்திரி

உப்படியெல்லாம் எழுதிய உம்மை பேசாமல் கழு மரம் ஏற்றினால் என்ன என்று இந்த நாட்டாமை யோசிக்கிறேனுங்க. :P :lol: :P :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒய் கறுப்பி நான் சொன்னது கறுப்பை மட்டும் அடையாளமாய் வைத்து அல்ல பறக்க தெரிய வேணும் பறக்க தெரியுமா அப்ப தான் உம்மடை வாலிலை சே காலிலை கட்டி விடுவன் இதோடா வசம்பு நான் பஞ்சாயத்து ஆட்சி முறை தொடங்க முதல் இவர் மன்னராட்சி தொடங்கிட்டார் நீங்கள் கழுமரம் ஏத்த முதல் நான் பனை மரம் ஏறிடுவனே

இன்னாப்பா சாத்திரி..

ஆலமரத்தில் கிளைகள் எல்லாம் தூங்கம்தானே....

ஒண்டுமில்லை நம்ம குடும்பத்துகாரங்கள் பொழுது போகவில்லையாம் தொங்கிக் குதிச்சு விளையாடத்தான்.....

ஆ.. சொல்ல மறந்திட்டன் முதல் வழக்கே நம்ம சின்னா மேல போட சின்னாச்சி இழுத்துச் செருகின சீலையோட கண்ணபின்னாவென்று கத்திக்கொண்டு வாறதைக் கண்டனான் இன்னும் வரேல்லையோ?

பஞ்சாயத்து ராஜ்ஜில் ஆட்டம்போடுபவர் வால்கள் ஒட்ட நறுக்கப்படுமாம் வசதி எப்படி ஆதிவாசி. :P :P :P

பஞ்சாயத்துத் தலைவரும் பஞ்ச ஆலோசகர்களும் நம்பாளுங்களா இருக்கையில ஆதிக்கு ஏம்பா கவலை?

ஆதியின் வாலுக்கு வாரவாரம் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி வளவளப்பாக வளர்ப்பாங்கப்பா.

யோவ் சாத்திரி

உப்படியெல்லாம் எழுதிய உம்மை பேசாமல் கழு மரம் ஏற்றினால் என்ன என்று இந்த நாட்டாமை யோசிக்கிறேனுங்க. :P :lol: :P :lol:

நான் என்ன யோசிக்கிறன் என்று சொல்லவா வம்பண்ணா? :wink: :lol: :evil:

நான் என்ன யோசிக்கிறன் என்று சொல்லவா வம்பண்ணா? :wink: :lol: :evil:

ஐயோ வேண்டாமுங்க நான் கப்சிப்பாக எஸ்கேப். :(:(

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் சாத்ஸ் உங்க பன்சாயத்தில..காதலிக்கிறவங்கள

சுண்டல் உங்களை நினைத்தால் தான் பாவமா இருக்கு!!

ஒய் சாத்ஸ் உங்க பன்சாயத்தில..காதலிக்கிறவங்கள

சாத்திரி பக்கத்தில் செம்பு வைத்துக் கொண்டு ஒருவர் நிற்பாரே அவரை மறந்திட்டிங்கள் போல, அல்லது அந்த வேலை உங்களுக்கு உரியதோ? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒய் சுண்டல் தண்டனைகளை படிச்சனீர்தானே பெண்ணின் கையை பிடிச்சா இரண்டு ஆட்டுக்குட்டி அபராதம் நீரும் சின்னாவும் ஊருக்கு போனதும் முதல் வேலையா ஒரு ஆட்டுப்பண்ணை தொடங்குங்கோ அப்பதான் சமாளிக்கலாம் :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒய் சுண்டல் தண்டனைகளை படிச்சனீர்தானே பெண்ணின் கையை பிடிச்சா இரண்டு ஆட்டுக்குட்டி அபராதம்

ஆட்டுக்குட்டி இரண்டும் எப்படியிருக்கவேணும் (ஆண், பெண் அல்லது ஒன்று ஆண் மற்றயது பெண்) :P :P ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி பஞ்சாயத்துத் தலைவர் யார்? நெடுக்ஸ் தான் இதற்குச்சரியான ஆளெண்டு நான் நினைகிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.