Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படித்ததில் பிடித்தது(முகநூல் பதிவுகளில் இருந்து)

Featured Replies

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை..

 

அருமை. தாயினன்பிட்கு ஈடாக இந்த உலகில் எதுவுமே இல்லை. ஏனையவர்களின் அன்பில் சுயநலமே மேலாக இருக்கும்.
  • Replies 125
  • Views 30k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கதம்பம்

.

ஆறு தலையுடன் தூங்க முடியுமா?

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.

இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”

அவர்கள் இருவரும் "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.

  • தொடங்கியவர்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ் added a new photo to the album: குசும்பு... 4.

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டது விபத்துக்கு முக்கிய காரணமாக ஏதேதோ சொல்லப்பட்டன ஆனால் மிக மிக முக்கிய காரணத்தை சமீபத்தில் தான் இங்கிலாந்தை சேர்ந்த பீட்டர் மற்றும் டேவிட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதை லண்டனை சேர்ந்த முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் கப்பல் விபத்து நடந்த 25 கி.மீ.சுற்றளவுக்கு மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். ஆனால் பீட்டரும், டேவிட்டும் 100 கி.மீ. சுற்றளவுக்கு தேடுதல் வேட்டை நடத்தி கண்ட மிகப் பெரிய அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் அவர்கள் சரியாக விபத்து நடந்த 98 கி.மீ. தொலைவில் கப்பலின் முக்கிய பாகம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்

அது மட்டும் கப்பலில் இருந்து கழண்டு விழாமல் இருந்து இருந்தால் கப்பல் விபத்தே நடந்து இருக்காது என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்து உள்ளனர்.

இதில் இதயமே நின்று போகும் உண்மை என்னவென்றால் அந்த பாகம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அதை சரியாக பொருத்தப்படாதது கப்பல் மெக்கானிக்களின் கவனிப்பின்மையை வெளிப்படுத்தி உள்ளது..

இதை உலக நாடுகள் புரிந்து கொண்டு சரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் அது மட்டுமில்லாமல் எந்தவொரு பாகத்தையும் இனி கவனக்குறைவாக பொருத்தக்கூடாது எனவும் கடும் சட்டம் பிறப்பிக்க வேண்டும் கண்டெடுக்கப்பட்ட பாகம் இங்கிலாந்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது..

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு டைட்டானிக் கப்பலின் பொருத்தப்பட்ட அந்த முக்கிய பாகம்

,

,

,

,

,

,

,

,

,

.

.

.

.

.

.

.

.

.

.

.

,

'

'

'

'

'

'

கறுப்பு கலர் திருஷ்டி கயிறும்,எலுமிச்சம் பழமும்தான் ..பாஸ்.. tongue emoticon tongue emoticon

மெக்கானிக் திருஷ்டிகயிறை ஒழுங்கா கட்டியிருந்தா விபத்தே நடந்திருக்காது இனிமேலாச்சும் கப்பல் கிளம்பறப்ப திருஷ்டி கயிறு, எலுமிச்சம் பழம் எல்லாம் கரெக்டா கட்டணுமுன்னு உலக நாடுகள் உத்தரவிடவேண்டும்

‪#‎அடப்பாவி‬ உள்ளுக்குள்ள 750 Spare Parts இருக்குடா அதில ஓடாததாடா இதுல ஓடப்போகுது wink emoticon wink emoticon

  • தொடங்கியவர்

------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

ஒரு நாள் காலையில Husband அவசரமா

Office கிளம்பிட்டு இருக்கும் போது Wife

கேக்குறா..

" டார்லிங்.., இன்னிக்கு என்ன நாள்னு

ஞாபகம் இருக்கா..?!! "

( ஒரு Sec டக்னு யோசிக்கிறான்...

" இது நவம்பர் மாசம்..!! ஓ.. என் Anniversary..!!

எப்படி மறந்தேன்..?!! சரி., சரி., சமாளிப்போம்.." )

" என்ன டார்லிங்.. நான் மறப்பேனா..?!!

Evening 5 மணிக்கு ரெடியா இரு..,

வெளியே Dinner-க்கு போலாம்.. "

Husband Office கிளம்பி போயாச்சு..

11.AM : Door Bell அடிக்குது..

கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில ஒரு பொக்கே

வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக

அனுப்பினார்.. !! "

அவளுக்கு அதை பார்த்ததும் சந்தோஷம்..

1PM : மறுபடியும் Door Bell அடிக்குது..

கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box

வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக

அனுப்பினார்.. !! "

அதை Open பண்ணினா..,

எல்லாமே அவளுக்கு பிடிச்ச Choclates..

இப்ப அவ ரொம்ப சந்தோஷமாயிடுறா..

3.PM : மறுபடியும் Door Bell அடிக்குது..

கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box

வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக

அனுப்பினார்.. !! "

அதை Open பண்ணினா

ஒரு அழகான Diamond Necklace..

இப்ப அவ இன்னும் ரொம்ப சந்தோஷமாயிடுறா..

Husband எப்ப வருவார்னு ரொம்ப

ஆவலா Wait பண்ணிட்டு இருக்கா..

5PM.. அவர் Car வர்ற சத்தம் கேக்குது..

அப்படியே ஓடி போயி அவரை கட்டி பிடிச்சிக்கிறா..

" என்ன டார்லிங்.. நான் அனுப்பின Gifts எல்லாம்

பிடிச்சிருக்கா..? "

" ரொம்ப பிடிச்சிருக்குங்க.. "

" காலையில என்னமோ.. நான்

மறந்துட்டேன்னு சொன்னியே..

எப்படி நம்ம Surprise..?!! "

" சூப்பர்ங்க.., World Men's Day-கே இப்படி

கலக்கிட்டீங்களே.. அப்ப அடுத்த வாரம்

நம்ம Anniversary-க்கு எப்படியெல்லாம்

அசத்த போறீங்களோ..!!! "

" ??!!!!! " gasp emoticon gasp emoticon

  • கருத்துக்கள உறவுகள்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டது

----

அது மட்டும் கப்பலில் இருந்து கழண்டு விழாமல் இருந்து இருந்தால் கப்பல் விபத்தே நடந்து இருக்காது என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்து உள்ளனர்.

இதில் இதயமே நின்று போகும் உண்மை என்னவென்றால் அந்த பாகம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அதை சரியாக பொருத்தப்படாதது கப்பல் மெக்கானிக்களின் கவனிப்பின்மையை வெளிப்படுத்தி உள்ளது..

இதை உலக நாடுகள் புரிந்து கொண்டு சரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் அது மட்டுமில்லாமல் எந்தவொரு பாகத்தையும் இனி கவனக்குறைவாக பொருத்தக்கூடாது எனவும் கடும் சட்டம் பிறப்பிக்க வேண்டும் கண்டெடுக்கப்பட்ட பாகம் இங்கிலாந்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது..

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு டைட்டானிக் கப்பலின் பொருத்தப்பட்ட அந்த முக்கிய பாகம்

,

,

,

,

,

,

,

,

,

.

.

.

.

.

.

.

.

.

.

.

,

'

'

'

'

'

'

கறுப்பு கலர் திருஷ்டி கயிறும்,எலுமிச்சம் பழமும்தான் ..பாஸ்..

 

ஹி... ஹீ... ஹி.... சில வேளை அப்பிடியும், இருக்குமோ.... :D

  • கருத்துக்கள உறவுகள்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ் added a new photo to the album: குசும்பு... 4.

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டது விபத்துக்கு முக்கிய காரணமாக ஏதேதோ சொல்லப்பட்டன ஆனால் மிக மிக முக்கிய காரணத்தை சமீபத்தில் தான் இங்கிலாந்தை சேர்ந்த பீட்டர் மற்றும் டேவிட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதை லண்டனை சேர்ந்த முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் கப்பல் விபத்து நடந்த 25 கி.மீ.சுற்றளவுக்கு மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். ஆனால் பீட்டரும், டேவிட்டும் 100 கி.மீ. சுற்றளவுக்கு தேடுதல் வேட்டை நடத்தி கண்ட மிகப் பெரிய அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் அவர்கள் சரியாக விபத்து நடந்த 98 கி.மீ. தொலைவில் கப்பலின் முக்கிய பாகம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்

அது மட்டும் கப்பலில் இருந்து கழண்டு விழாமல் இருந்து இருந்தால் கப்பல் விபத்தே நடந்து இருக்காது என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்து உள்ளனர்.

இதில் இதயமே நின்று போகும் உண்மை என்னவென்றால் அந்த பாகம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அதை சரியாக பொருத்தப்படாதது கப்பல் மெக்கானிக்களின் கவனிப்பின்மையை வெளிப்படுத்தி உள்ளது..

இதை உலக நாடுகள் புரிந்து கொண்டு சரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் அது மட்டுமில்லாமல் எந்தவொரு பாகத்தையும் இனி கவனக்குறைவாக பொருத்தக்கூடாது எனவும் கடும் சட்டம் பிறப்பிக்க வேண்டும் கண்டெடுக்கப்பட்ட பாகம் இங்கிலாந்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது..

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு டைட்டானிக் கப்பலின் பொருத்தப்பட்ட அந்த முக்கிய பாகம்

,

,

,

,

,

,

,

,

,

.

.

.

.

.

.

.

.

.

.

.

,

'

'

'

'

'

'

கறுப்பு கலர் திருஷ்டி கயிறும்,எலுமிச்சம் பழமும்தான் ..பாஸ்.. tongue emoticon tongue emoticon

மெக்கானிக் திருஷ்டிகயிறை ஒழுங்கா கட்டியிருந்தா விபத்தே நடந்திருக்காது இனிமேலாச்சும் கப்பல் கிளம்பறப்ப திருஷ்டி கயிறு, எலுமிச்சம் பழம் எல்லாம் கரெக்டா கட்டணுமுன்னு உலக நாடுகள் உத்தரவிடவேண்டும்

‪#‎அடப்பாவி‬ உள்ளுக்குள்ள 750 Spare Parts இருக்குடா அதில ஓடாததாடா இதுல ஓடப்போகுது wink emoticon wink emoticon

 

அவர் திருஷ்டிக் கயிற்றையும் காயையும் தொங்குற நங்கூரத்தில் கட்டாமல், சுத்திற காத்தாடியில் கட்டிட்டார் போலும்...! :lol::D

  • தொடங்கியவர்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார், அவர் ஆசையாக ஒரு ரோஜா செடியை அவர் வீட்டு வாசலில் வைத்து வளர்த்து வந்தார்.. அந்த செடி அழகாக பூத்து குலுங்கியது..

அந்த செடி வளர்ந்து வரும் வேளையில் அந்த பக்கமாக வரும் ஆடு, மாடு கோழி போன்றவை அந்த செடியை மிதிப்பதும், கடிப்பதுமாக நாசம் செய்து கொன்டிருந்தன.. இதை கண்ட அந்த பெரியவர் அந்த செடியை பாதுகாக்க என்னி அந்த ரோஜா செடியை சுற்றிலும் சில முள் வேலிகளை போட்டு வைத்தார்..

ரோஜா செடியை சுற்றிலும் முள் வேலிகள் இருந்ததால் அந்த செடி பாதுகாப்பாக வளர்ந்து வந்தது.. இப்போது ஆடு, மாடு, கோழிகளால அந்த செடிக்கு ஆபத்து இல்லை.. சிறிது காலம் சென்றது அந்த பெரியவர் இறந்து விட்டார்..

பிறகு அவருடைய மகன் வந்தான், அந்த செடியை பார்த்தான் தன் தந்தை ஆசையாக வளர்த்த செடி ஆயிற்றே என்று அவனும் ஆசையாக தன்னீர் ஊற்றி வளர்த்து வந்தான்.. சிறிது காலத்தில் அவனும் இறந்து விட்டான் பிறகு அவனுடைய மகன் வந்து இது, என் தாத்தாவும் தந்தையும் வளர்த்த செடி நானும் வளர்க்க வேண்டும் என்று அவனும் தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தான்.. இப்படியே ஒவ்வொரு தலைமுறையும் அந்த செடியை வளர்த்து வருகிறோம்.. ஆனால் உண்மையில் நடந்தது அந்த ரோஜா செடி பெரியவர் காலத்திலேயே பட்டுப்போய் விட்டது, இப்போது அவர்கள் செடி என்று வளர்ப்பதெல்லாம் அதை சுற்றி இருந்த முள் வேலிகளையே..

இதே போலத்தான் பெரியவர்கள் மதம் என்று ஒன்று உருவாக்கியது மனிதனை செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, அந்த மதம் அழியாமல் இருக்க முள் வேலி போன்று மதத்திற்க்கு சில சம்பிரதாய சடங்குகளை விதித்தனர்.. ஆதியில் மதத்தை கடைபிடித்த மனிதன் இப்போது ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் சம்பிரதாய சடங்குகளையே மதம் என்று என்னி கடைபிடிக்க ஆரம்பித்து விட்டான்.. இன்று ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் உண்மையை பின்பற்றுவோர் வெகுசிலரே..

- Yokesh AK.

  • தொடங்கியவர்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

ஒரு ஊரில் செல்வந்தர் வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.

அப்பா சொன்னார், நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்? என்று யோசித்துக் கொண்டு தன் மனைவியிடம் கேட்டார்

நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது அவரும் கூறிவிட்டு தன மகனிடம் கேட்குமாறு கூறினார்

மகனும், நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா! என்றான்

நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க எல்லோரும். வாடிக்கையாளர் சந்தேகம் தீர்க்கும் உதவி தொலைபேசிக்கு அழைத்து காரணம் கேட்டார்கள். அதில் எந்த மாற்றம் இல்லை என கூறிவிட்டனர்

அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான், உங்களை மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். அய்யா என்றான்

என்ன தப்பு இருக்கிறது என்ற மனகுமுரளோடு சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை...!

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

டாடி எனக்கு ஒரு டவுட்டு

கிரிக்கெட்ல நம்மள

நல்லா ஏமாத்தறாங்கப்பா ...

எப்படி தெரியுமா..!!

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே

No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு

சொல்வாங்க., ஆனா ஒரு Ball

தான்

இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க..,

ஆனா 10 பேர் தான் Out ஆகி

இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா

ஒரு Batsman அவுட்..,

ரெண்டு கையயும் தூக்கினா Six..

( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம

தடுக்கணும்.. அப்ப.., Wicket

Keeper

விக்கெட் விழாம தடுக்கணும்

தானே…!

ஆனா அவரே ஏன் Out

பண்ணுறாரு..?

6. சில ஒவர் மட்டும் Powerplay-

னு சொல்றாங்களே..

அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர்

இல்லாம

இருட்டிலயா விளையாடுறாங்க??

7. ஒருத்தரை மட்டும் Night

Watchman-னு

சொல்வாங்க.. ஆனா அவரும்

மேட்ச் முடிஞ்ச

Ground-ஐ காவல் காக்காம

ரூம்க்கு தூங்க

போயிடுவாரு..

8. Tea Break-னு சொல்வாங்க..

ஆனா

கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9. என்னதான் எல்லா பக்கமும்

Light எரிஞ்சாலும்.,

ஒரு பக்கத்தை மட்டும்

“OFF ” Sideனு தான் சொல்வாங்க..

10.ஆட்டம் முடிஞ்ச

உடனே ஒருத்தரை

மட்டும் தான் ” Man of the Match “-

ன்னு

சொல்லுறாங்க.. அப்ப

மீதி பேரெல்லாம்

Women-ஆ..?

சொல்லுங்கள்

டாடி சொல்லுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

காரணிகன் என்டு சொல்லுறாங்க , கையில " கன்"  இருக்காது...!! :D

  • தொடங்கியவர்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

·

.

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான். அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த ஒரு கடையின் cash கவுன்ட்டர் பக்கத்தில் இருந்தது. அந்த கடை முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தார்.

பையன் : "மேடம்,உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை கொடுக்க முடியுமா?

பெண்மணி (எதிர் பக்கத்தில் பேசுபவர் ):எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து வருகிறார்.

பையன்:"மேடம் அவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி சம்பளம் கொடுத்தல் போதும், நான் உங்கள் தோட்டத்தை பராமரித்து தருகிறேன் "

பெண்மணி : இல்லை. இப்பொழுது பராமறிப்பவரின் பராமரிப்பில் தோட்டம் நன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில் மிகவும் திருப்தி அடைகிறேன்"

பையன் :(இன்னும் பணிவோடு) ,மேடம் நான் உங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட தருவேன்.அதற்க்கு தனியாக எனக்கு சம்பளம் வேண்டாம் .

பெண்மணி : "வேண்டாம் நன்றி "

அந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன் ரீசிவரை வைத்துவிட்டு திரும்பினான்.

அந்த கடை முதலாளி அவனிடம் எனக்கு உன்னுடைய அணுகுமுறை,தோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர் கொள்ளும் விதம் பிடித்து இருக்கிறது. நான் உனக்கு வேலை தருகிறேன் ,வருகிறாயா என்றார்

பையன் : நன்றி, எனக்கு வேலை வேண்டாம் !!!!!!!

கடை முதலாளி : இவ்வளவு நேரம் வேலைக்காக மன்றாடி கொண்டு இருந்தாய் !

பையன் :"இல்லை சார்,நான் நன்றாக வேலை செய்கிறேனா என்று

தெரிந்து கொள்ளத்தான் இப்படி செய்தேன். அவர்களிடம் வேலை செய்யும் தோட்டக்காரன் வேறு யாருமல்ல ,

நான்தான்..!

இதற்கு பெயர்தான்" சுய மதிப்பீடு "(SELF-APPRAISAL)

  • தொடங்கியவர்

EYES - நேத்திரம் added a new photo to the album: நேத்திரம் - மீள் இடுகைகள்.

.

குட்டிக் கதை

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்..

சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால்விடுவார்...

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல

இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல

குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள்

சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..

அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்

செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில் இருக்க..

இவள் ஆபீஸ் போனாள்..

ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்

கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்

வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட

நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண

வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,

பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண

மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம்

ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின்

கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..

பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்

வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்

என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..

முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்

கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..

அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும்

கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,

கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..?

அத்தனையும் குரங்குகள்.. சொல்றதை கேட்க மாட்டேங்குது..

படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல

படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள

கெடுத்து வச்சிருக்கே என்று பாய..

அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...

என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்

பிள்ளைகள்.. விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,

‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?

இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..

ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான

வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்

அளப்பரியது.. ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்

இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல்

அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால்தான்

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்...

மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்..

  • தொடங்கியவர்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

இந்தியண்டா ..

இந்தியரும் அமெரிக்கரும் ஒரு சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.

அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து இந்தியரிடம் காட்டி,

'நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! பார்த்தியா யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?.. என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல் உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா? என்று சவால் வேறு விட்டார் இந்தியரிடம்.

விடுவாரா இந்தியர். '. உள்ள வா. உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்த பையனிடம் சென்ற இந்தியர், அவனிடம் கேட்டார், வித்தை காட்டுறேன் பார்க்கிறியா?..

பையனும் சரியென்று தலையாட்ட கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து,

அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த பையனை ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்த பையன் கேட்டான், ' எல்லாம் சரி. இதில் வித்தை எங்கே இருக்கிறது?.'

இந்தியர் அமைதியாக பதில் அளித்தார்,

' என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு. நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்.'

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Maalaimalar தமிழ்

.

ஆண்கள் ரெம்ப நல்லவங்க

1. சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்...

2. ஆயாவா, ஆண்ட்டியா என்று பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்...

3. பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்...

4. மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல...

5. லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கெடையாது...

6. எந்த‌ அப்ப‌னும் ம‌க‌னைத் த‌னியாக‌ அழைத்து ''ம‌ரும‌க‌ள் உன்னை ந‌ல்ல‌ப‌டியா பாத்துக்கிறாளாப்பா..? என்று கேட்ப‌தில்லை...

7. சாப்பிட்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு சீரியல்க்கு இடையே காத்திருப்போம்...

8. பஸ்ல எங்க பக்கத்துல வந்து உட்காந்தா முறைக்க மாட்டோம்...

9. எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திக்காக நிப்பாட்டறது...

10. ப்ஸ்சில் கர்ப்பிணிகள் வந்த எழுந்து இடம் கொடுப்போம்

- அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!

  • 1 month later...
  • தொடங்கியவர்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

என்னை கவர்ந்த பதிவு.....

ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி....

விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்க சொல்லுறாரு...

அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்க சொல்லுறாரு..

கார்த்தி ப்ரு காபி குடிக்க சொல்லுறாரு...

திரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயில்மேண்ட வாங்க சொல்லுது..

சூர்யா சிம்கார்டு வாங்க சொல்லுறாரு...

அசின் தாயி மிரண்டா குடிக்க சொல்லுது...

பிரபு அண்ணன் கல்யான் போய் நகை வாங்க சொல்லுறாரு...

விக்ரம் அண்ணன் மனபுரம் போய் நகை அடகு வைக்க சொல்லுறாரு...

ஏங்க நான் தெரியாமத்தான் கேக்குறேன் ....

எல்லாரும் செலவு செய்யத்தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய யாராவது ஒரு ஆள் இப்படிதாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?

முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க ...அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்...

  • தொடங்கியவர்

------------------------------------------------------------------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்

அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.

அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது.

“நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா.

அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள்,

“அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”.

அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,

கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.

ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை”.

அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது.

குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.

heart emoticon heart emoticon

Relaxplzz

-----------------------------------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

நம்ம ஆசாமி ஒருத்தன் செத்து போய்ட்டான் வாழ்ந்த போது வசதியா வாழ்ந்தவன் அவன் உசுரு கூட நச்சத்திர அந்தஸ்து பெற்ற ஆஸ்பத்திரியில் வைத்து தான் போச்சி சொகமா வாழ்ந்து பழக்கப்பட்டவன் மேலோகத்திலும் அதே சுகம் கிடைக்குமுன்னு எதிர்பார்த்து காத்திருந்தான்

நம்ம ஊரு அரசாங்க ஆபிசா இருந்தா தள்ள வேண்டியத தள்ளி வாங்க வேண்டியத வாங்கிடலாம் எமலோகத்தில் அது நடக்குமா ஆசாமி கிங்கிதர்களிடம் தங்குறதுக்கு சின்ன ரூமா இருந்தா போதும் கண்டிப்பா ஏசி மாட்டுங்க ஒரு டிவி இருந்தா பொழுது போக்கா இருக்கும் சாப்பிட வேளைக்கு ஒன்னா விதவிதமா தாருங்க எல்லாத்துக்கும் பணத்த செட்டில்மென்ட் செய்யிறேன் என்று சொல்லி பார்த்தான் அவன் பேச்ச காதில் வாங்க அங்கு யாருமில்ல

வரவே மாட்டேன் என்று அடம்பிடிச்சவனை இழுத்துக்கொண்டு எமதர்மன் முன்பு விட்டாங்க ஆசாமிக்கு எமனை பார்த்தவுடன் நடுக்கம் வந்திருச்சு ஐயா எசமானரே நான் தெரியா தனமா தப்புதண்டா பண்ணியிருக்கலாம் ஆனா கொடுமையான தப்பு ஏதும் நான் பண்ணவே இல்ல ஏன்னா நான் அமைச்சரோ அதிகாரியோ இல்ல ஒரு ரூபா பொருள இரண்டு ரூபாவுக்கு வித்த சாதரண வியாபாரி என்று சொல்லி அழுதே விட்டான்

எமனுக்கு அவனை பார்த்ததும் பாவமா இருந்திச்சி ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடேசியில் மனுசனையே கடிச்ச எத்தனையோ பயல்கள் நான் செஞ்சது தப்பே இல்ல அத்தனையும் தர்மம்னு வாதாடுறான் இவன் பாவம் செய்த தப்ப ஒத்துகிட்டான் அதுக்காக இவனுக்கு எதாவது ஒரு சலுகை காட்டலாம் என்று சிந்திச்சான்

சிந்தனை செஞ்சி கடேசியா ஒரு முடிவுக்கு வந்த எமன் எண்டா மனுஷ பயலே எதோ தெரியாத்தனமா உண்மைய பேசிபுட்டே அதனால தண்டனையா குறைக்க ஒரு வாய்ப்பு தாரேன் என்று சொன்னான் நம்மாளுக்கு ரொம்ப சந்தோசமா போச்சு அப்பாடா இந்த எமன் பாக்கத்தான் கொஞ்சம் கரடு முரடா தெரிறான் உண்மையிலே இவனுக்கு நிறைய இறக்க சுபாவம் இருக்கு அப்படின்னு மனசுல ஒரு கணக்கு போட்டு இன்னும் கொஞ்சம் செண்டிமெண்டா பேசி எமனோட மனசுல இடம்பிடிச்சிடலாம் என்று ஆசைப்பட்டு நீங்க நல்லா இருக்கணும் எசமானே என்றான்

எமதர்மனும் தொண்டையை செருமி சரிபடுத்திக்கிட்டு நீ பூமில கொஞ்சமேனும் நிறைவா வாழ்ந்திருந்தால் நான் உனக்கு சலுகை காட்டுவேன் அப்படி நீ வாழ்ந்திய இல்லையா என்பததை தெரிஞ்சுக்க சில கேள்வி கேட்ப்பேன் என்றான் நம்மாளுக்கு பயம் ஜாஸ்தியா ஆயிடிச்சு பள்ளிக்கூடத்துல வாத்தியாருங்க கேள்வி கேட்கிறாங்க என்று அந்த பக்கமே போகாம இருந்த நாம இப்போ வகையா மாட்டிகிட்டோம் என்று திருதிருவென்று விழித்தான் எமனும் கேள்வி கேட்க ஆரம்பித்தான் நீ பூமில யார் மேலையாவது உண்மையான அன்பு வச்சிருந்தியா என்று கேட்டான் நம்ம ஊரு நீதிபதிங்க கேள்வி கேட்டா பொய்சொல்லி தப்பிக்கலாம் எமனிடம் அது நடக்குமா அதனால இவன் இல்லை சாமி அப்படின்னு உண்மைய சொன்னான்

சரி போனா போகுது உனக்கு நெருங்கிய நட்புன்னு யாரிடமாவது சந்தேகமே படாமல் பழகி இருக்கியா

மன்னிக்கவும் சுவாமி எங்க ஊருல சந்தேகப்படாம யார்கிட்டேயும் பழக முடியாது மீறி பழகினா தூங்கும் போது தலையில கல்லை தூக்கி போட்டுடுவாங்க

சரி மனுசங்ககிட்டதான் அன்பு வைக்கல தோழமையா பழகல எதாவது மிறுகங்கள் கிட்டையாவது அன்பு வச்சிருந்தியா

நாய் பூனகிட்ட பழகினா அலர்ஜி வந்திடும் எசமான்

ஓ! அப்படியா சங்கதி இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போயிடிச்சே நாளைக்கு முதல் வேலையா எறும மாட்டை வித்துவிடுகிறேன் என்று சொன்ன எமதர்மன் அடுத்த கேள்விக்கு போனான் எதாவது அழகான ஓவியம் இனிமையான பாடல் இப்படி எதாவது ஒன்றையாவது ரசிச்சி இருக்கியா என்று கேட்டான்

சும்மா பேப்பருல கிருக்குறதும் காட்டு கத்தலா கத்துறதும் எனக்கு சுத்தமா பிடிக்காது என்று இவன் பதில் சொன்னான்

உங்க பூமியில ஆறு குளம் அறுவி மலை பறவை என்று ஏராளமான அழகுகள் உண்டே அதையாவது பார்த்து ரசிக்கும் பழக்கம் உண்டா

டிவில காட்டினா பார்ப்பேன்

அடப்பாவி நீ செத்து எத்தனையோ நாளாகி விட்டதே இப்போதுதான் இங்கு வந்தாயா உனக்கு சலுகை காட்டினால் எமதர்மன் என்ற பெயருக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று கோபமாக எழுந்து போய்விட்டானாம் எமன்

நாமும் அந்த மனிதனை போலத்தான் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறோம் கண்ணுக்கு எதிரே அழகான ரோஜா தோட்டம் இருந்தாலும் அதை ரசிக்காமல் ரசிக்க புத்தி இல்லாமல் வானத்தில் இருந்து ஒரு கந்தர்வ தோட்டம் குதிக்க போவதாக கற்பனையில் ஆழ்ந்து எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்

வாழ்க்கை அன்பில் இருக்கிறது

வாழ்க்கை தோழமையில் இருக்கிறது

வாழ்க்கை இறக்கத்தில் இருக்கிறது

வாழ்க்கை ரசிப்பில் இருக்கிறது

வாழ்க்கை நம்பிக்கையில் இருக்கிறது

ஆனால் இது நம்மில் எத்தனை பேருக்கு தெரிகிறது.

Relaxplzz

  • தொடங்கியவர்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே.......

.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."

ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?

இவ்வளவு சீக்கிரமாகவா?

என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

"மன்னித்துவிடு மகனே........

உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."

"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

"உன்னுடைய உடைமைகள்........."

"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"

"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."

"என்னுடைய நினைவுகளா?............."

"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"

"என்னுடைய திறமைகளா?..........."

"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........

அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."

"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"

"மன்னிக்கவும்...........

குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"

"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"

"என் உடல்?..........."

"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."

"என் ஆன்மா?"

"இல்லை........அது என்னுடையது.........."

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........

கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை.

நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.

வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.

எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......

.அது மட்டுமே நிரந்தரம்.......

-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

Relaxplzz

---------------------------------------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

படித்ததில் ரசித்தது wink emoticon wink emoticon

"ரவி இருக்காங்களா....?"

"இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு....."

"ஓ...மை காட்....!"

"ஆமா...நீங்க யாருங்க...?"

"ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."

"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...."

"என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!! gasp emoticon gasp emoticon

‪#‎இணைய_அலப்பரைஸ்‬

tongue emoticon tongue emoticon

Relaxplzz

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

{ஒரு தடவை படித்து பாருங்கள் . பல தடவை யோசிப்பீர்கள் இந்த கதையை }

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது....

காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’என்று அணைந்துவிட்டது.

அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்

காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய

சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.

அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்றமூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது.

சிறுவன் உடனே..‘

நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து ” உன்பெயர் என்ன ?”என்று கேட்டான் .

'நம்பிக்கை' என்றது மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்இழக்கக் கூடாது.

  • தொடங்கியவர்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

# படித்ததில் பிடித்தது #

சனிக்கிழமை மாலையே

துவங்கிவிடுகிறது

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் குதூகலம்

பள்ளி செல்கிற குழந்தைகளுக்கு

ஞாயிறு காலை செய்தித்தாள் இணைப்புகளுடன்

ஒன்றிவிடுகின்றார்

ஓய்வு பெற்ற தாத்தா

தொலைக்காட்சியின்

ஆட்டம் பாட்டங்களில்

ஆரவாரிக்கின்றனர்

அக்காவும் தங்கையும்

சூரியன் சுட்டெரிக்கத் துவங்கும் வரை

தூக்கத்தில் கிடக்கின்றனர்

அண்ணன்கள்

அசைவ உணவுத் தயாரிப்புக்காக

மார்க்கெட்டில் இருந்து திரும்புகின்றனர்

அப்பாவும் சித்தப்பாக்களும்

மெலிதான டாஸ்மாக் வாசனையுடன்

அவரவர் ஞாயிற்றுக்கிழமை

அவரவர் விருப்பம்போல

ஆனால்

அன்றாடம்போலவே

அடுப்படியில் தொடங்கி

அங்கேயே முடிகிறது

அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை!

_/\_அம்மா_/\_

  • தொடங்கியவர்

------------------------------------------------------------------------

நட்பென்றால் நாம் என்போம்

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு..

  • தொடங்கியவர்

----------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்

"நீதி கதை"

ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.

அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார்.அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.

வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது. நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.

# நீதி

எதையுமே நாமளா நாடிப்போனா குறைவா தான் கிடைக்கும் அதுவா தேடி வந்தா அதிகமா கிடைக்கும்...

  • 1 month later...
  • தொடங்கியவர்

லாக்ஸ் ப்ளீஸ்

.

ஒரு கார்ப்பரேட் நீதி கதை

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது.

மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது.

புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது.

இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான்.

கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான்.

வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது.

அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11143276_712006135591516_417413304579615

  • தொடங்கியவர்

நட்பென்றால் நாம் என்போம்

.

ஒரு அறிவாளி தன்னைச்சூழ அமர்ந்திருந்தவர்களுக்கு ஒரு நகைச்சுவை கூறினான். அனைவரும் நீண்டநேரம் கைதட்டிச் சிரித்தனர். பின்னர் மீண்டும் அவன் அதே நகைச்சுவையை கூறினான். அப்போதும் பலர் கைதட்டிச்சிரித்தனர். மீண்டும் அதே நகைச்சுவையை அவன் சொன்னான். அப்போது சிலர் மட்டும் சிரித்தனர். மீண்டும் அவன் அதே நகைச்சுவையைச்சொன்னபோது எவரும் சிரிக்கவில்லை.

அப்போது அந்த அறிவாளி சொன்னான்” ஒரு நகைச்சுவையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது தொடர்ந்து எங்களால் சிரித்து மகிழமுடியவில்லை அல்லவா?”

ஆனால் எதற்காக நாம் எல்லோரும் வாழ்வில் நடந்த ஒரு சில துன்பங்களை மட்டும் மீண்டும் மீண்டும் நினைத்து கவலைப்படுகிறோம்?

இதேபோல ஒரு துன்பதிற்காக வாழ்நாள் முழுவதும் எதற்காக கவலைகொள்ளவேண்டும்!!!!!!

...................................................................................................................................................................................................................................................................

நட்பென்றால் நாம் என்போம்

.

மிகவும் அதிர்ச்சியான சம்பவம்!!!!!!!!!

இது 2011 ல் சென்னையில் நடந்த

சம்பவம் !!!!!!!!!!

பிரியா என்ற காலேஜ் பெண்

சிறிது நாட்கள் முன்

ஒரு லாரி இடித்து இறந்தார்.

அவர் ஒரு call சென்டரில்

வேலை பார்த்து வந்தார்.

அவருக்கு சந்தர் என்கிற Boyfriend

இருந்தார்.

அவர்கள் இருவரும் காதலர்கள்.

எப்பொழுதும் மொபைல்போன்இல்

பேசிகொண்டே இருப்பார்கள்

அவளை நீங்கள் மொபைல்போன்

இல்லாமல் பார்கவே முடியாது.அவள் தன்

கனெக்ஷனை airtel

இருந்து hutchக்கு மாற்றிகொண்டாள்.

இருவர் network same ஆக இருந்தால் cost

save ஆகும் என்று.

ஒரு நாளில் பாதி நாள் சந்தருடன்

பேசுவதிலயே கழித்தாள். சந்தர் அவள்

familykkum மிகவும் தெரிந்தவன்.

அவள் எப்பொழுதும்தன் friends

கிட்டே நான் இறந்தால்கூட என் phoneii

என்னுடன் எடுத்து செல்வேன் என்ன

கூறுவாள். ஒரு நாள் அவள் suddenly

accidentல் இறந்து விடுகிறாள்.

அவளை burry பண்ண தூக்கினால் அவள்

body யை யாராலும் நகர்த்த

முடியவில்லை. எல்லோருக்கும்

புரியவில்லை.பின் அவள் நண்பர்கள்

அவளுடைய கடைசி ஆசையை கூறியவுடன்

mobile phone உடன் அடக்கம் செய்தனர்.

நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்

ப்ரியா parents அவள்

இறந்ததை பற்றி சந்தருக்கு தெரிவிக்கவில்லை

என்று!!

இரண்டு vaarangal கழித்து சந்தர் phone

செய்து `aunty, நான்

இன்று வீட்டுக்கு வரேன்,

எதாவது சாப்பிட பண்ணி வையுங்கள்`

என்றான்.

Priya க்கு சொல்லதீர்கள் surprise ஆக

இருக்கட்டும் என்றான்.

பிரியா அம்மாவும் நீ

வீட்டுக்கு வா உன்னுடன்

பேசவேண்டும் என்று கூறி அவன்

வந்தவுடன் பிரியா இறந்த

விஷயத்தை கூறினார். அவன்

அதை கேட்டு சிறிது விட்டு,aunty என்ன

விளையாடுகிறீர்கள் , நான் அவளுடன்

தினமும் phone

பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றான்.

அவர்கள் கடைசியில் death certificate

காண்பித்தவுடன் அவனுக்கு வியர்க்க

ஆரம்பித்தது.

அவன் உடனே ப்ரியாக்கு phone

செய்து ஸ்பீக்கர் modeல்

எல்லோருக்கும் போட்டு பேசினான்.

ஒரிஜினல் Priya

குரல்,ஒரு தங்கு ,தடை இல்லாமல்

ஒலித்தது. எல்லோருக்கும் ஆச்சர்யம்.

உடனே ஆத்மா உடன் பேசும்

ஒருவரை அழைத்து என்ன

என்று கண்டு பிடிக்க

சொன்னார்கள்.அவர் தன் குருவுடன்

உட்கார்ந்து 5 மணிநேரம்

tryசெய்து கண்டுபிடித்தது எல்லோரையும்

ஆச்சர்யப்பட வைத்தது.

அவர்கள் சொன்னது என்னதெரியுமா...

.........

Vodafone has the Best Coverage,

"wherever you go, our network follows".......

உங்க கண்ணுல kolaveri தெரியுது.......

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

281928_1500935526828709_8902185698867092

ஒரு பொண்ணு 20வது மாடில இருந்து கீழ விழுந்துருச்சு,
15வது மாடில ஒரு பையன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,
நான் உன்ன காப்பாத்துரேன், நீ என்ன மேரேஜ் பண்ணிக்க,
சீ நாயே விடு என்ன, விட்டான் திரும்ப கீழ விழுந்துருச்சு,
10வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,...
நான் உன்ன காப்பாத்தணும்னா எனக்கு முத்தம் கோடு,
சீ பொறுக்கி,
அவனும் விட்டான் திரும்ப விழுந்துருச்சு,
5வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,
இந்த தடவ பயத்துல அந்த பொண்ணு அவன்கிட்ட.. ஓகே நான் உனக்கு முத்தமும் தரேன், உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ன கீழ விட்டுடாத,.......
சீ ரொம்ப கேவலமான பொண்ணா இருப்பா போல,,,
"சாவுடி"னு அவனும் கீழ விட்டுட்டான்
# எல்லா ஆணையும் தப்பா நெனச்சா சாவ வேண்டியதுதான்.

See More
Malai Murasu Murali's photo.
Like · Share · 5430
 
கடைசி ஆள் நம்மட( ........)மாதிரி
  • 5 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.