Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகார பரவலாக்கல் என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடமில்லை

Featured Replies

அதிகார பரவலாக்கல் என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடமில்லை
 
06-01-2015 07:21 AM
 
aa(150).jpg-யொஹான் பெரேரா, சனத் டேஸ்மண்ட்

'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்கலுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது' என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

'இந்த நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும் எனது முன்னணியும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். நான் பதவிக்கு வந்த பின்னர், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை ஒருபோதும் அகற்ற மாட்டேன்' என்றும் அவர் கூறினார்.

திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள எதிரணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், 'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்களுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது' என்றும் கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாங்கள் எவருடேனும் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. கடந்த காலங்களில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய மோசடிகளைச் செய்தது. அவை அனைத்தையும் நாம் பொறுத்துக்கொண்டோம். எமது வெற்றி உறுதி' என்றார்.

அத்துடன், 'நாம் எமது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே பலர் எம்முடன் இணைந்து கொண்டனர். நாம் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம். இந்த நாட்டை பிளக்கவும் புலிகள் மீண்டும் தலைதூக்கவும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எதிர்வரும் மூன்று நாட்களில் கடுமையான தேர்தல் வன்முறைகளில் ஈடுபட ஆளுந்தரப்பு முயற்சித்து வருகின்றது. நாம் சமாதானமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்க்கிறோம். பாரிய வெற்றியுடன் நாம் புதிய யுகத்தைப் படைப்போம்' என்றார்.

'பௌத்த மதத்தைப் போன்று ஏனைய மதங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். பதவிக்கு வந்த பின்னர் நாட்டைப் பிளவுபடுத்த புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு பொய்யானது. நாம் எவருடனும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை' என்றும் சிறிசேன இதன்போது உறுதியளித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/137041#sthash.UQjvLQS7.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரங்களைப் பரவலாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.எனது இந்த நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது.

-மைத்திரி-

இனி என்னத்தைப் புடுங்கப் போறிங்க????பேசாம கூட்டமைப்பிலிருந்து விலகி அவர்கள் கட்சியில் சேர்ந்து அன்னப்பறவை சின்னத்தில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்களுக்கு இடமில்லை என  எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
 
நாங்கள் எவருடேனும் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. எமது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே பலர் எம்முடன் இணைந்து கொண்டனர்.
 
 
நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும் எனது முன்னணியும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. இந்த நாட்டை பிளக்கவும் புலிகள் மீண்டும் தலைதூக்கவும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். 
 
எதிர்வரும் மூன்று நாட்களில் கடுமையான தேர்தல் வன்முறைகளில் ஈடுபட ஆளுந்தரப்பு முயற்சித்து வருகின்றது.  நாம் சமாதானமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்க்கிறோம்.
 
பாரிய வெற்றியுடன் நாம் புதிய யுகத்தைப் படைப்போம். பௌத்த மதத்தைப் போன்று ஏனைய மதங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நான் பதவிக்கு வந்த பின்னர் நாட்டைப் பிளவுபடுத்த புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
 
நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். ஆட்சிக்கு பதவிக்கு வந்த பின்னர், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை ஒருபோதும் அகற்ற மாட்டேன் அத்துடன் 'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்களுக்கு இடமில்லை.
 
சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=220763780806672951#sthash.9KivaOwi.dpuf

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பினர் படித்தவர்கள் அவர்கள் எதையும் தந்திரமாகவே கையாளுவார்கள்.
அதிகாரத்தை பரவல் ஆக்கினால் ....... அது பரவாலகி போய்விடும்.
தந்திரமாக தெற்கில் வைத்திருந்தால் அதிகாரம் சேதாராம் இல்லாமல் இருக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஒருவருக்கும் அரசியல் சாணக்கியம் இல்லையென்பது இதிலிருந்து தெரிகிறது. ஏனென்றால், நீங்கள் வரிகளுக்கிடையில் படிப்பதில்லை (Reading between lines). வெளியே அதிகாரப் பரவலாக்கல் இல்லையென்று சொன்னாலும், இராணுவத்தை அகற்றமாட்டேன் என்று அடம்பிடித்தாலும் கூட சம்பந்தர் ஐய்யாவுக்கும், மைத்திரிக்கும் இடையே ரகசியமாகச் செய்யப்பட்ட, எங்கும் பதியப்படாத, சாட்சிகளல்லாத "கணவான் ஒப்பந்தம்" ஒன்று இருக்கிறது.

 

இப்போது சிங்களவர்களின் வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ள மைத்திரி இப்படி மழுப்பினாலும் கூட, ஆட்சிக்கு வந்தவுடன் அவர் செய்யும் முதலாவது வேலை அந்த கணவான் ஒப்பந்தத்தை வெளியே எடுத்து அதிகாரத்தைப் பரவலாக்கி, இராணுவத்தை விலக்கி தமிழருக்கு உரிமை கொடுப்பதுதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


இந்தக் கூத்து எப்போது நடந்தது ? "நான் சிங்களவன், முடிந்தால் நான் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டிரு, இல்லாது விட்டால் போ, தமிழா " என்று கூறுகிறார் (நியாணியை நினைக்க நினைக்க ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது, அவன் என்று எழுதினால் "அவர்" என்று மாத்துகிறார்....) மகிந்த .

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.