Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிசில் சினிமா போன்று சம்பவம், தீவிரவாதிகளை ஹெலிகாப்டர், கார்கள் மூலம் 'சேஸ் செய்யும்' போலீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

201501091520109422_Charlie-Hebdo-Attack-

பாரிஸ்,

பிரான்ஸ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள், செல்லும் காரை போலீசார் ஹெலிகாப்டர் மற்றும் கார்கள் மூலம் பின் தொடர்ந்து வருகின்றனர். தீவிரவாதிகள் காரில் இருந்த வண்ணம் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். போலீசாரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

பாரீஸ் நகரில் உள்ள ‘சார்லி ஹெப்டோ’ என்ற பத்திரிகை அலுவலகத்தில் நேற்று முன்தினம் 2 தீவிரவாதிகள் புகுந்து, நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு பயங்கர தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலில் தொடர்புள்ள 18 வயதான இளம் தீவிரவாதி ஹமித் மொராத் (18) நேற்று அங்குள்ள சார்லிவில்லி மெஜியரஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் பாரீசில் பிறந்த சகோதரர்களான செய்யது, செரீப் என தெரிய வந்துள்ளது. அவர்களது புகைப்படங்களை பாரீஸ் நகர போலீசார் வெளியிட்டு, தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். அவர்களோடு தொடர்பில் இருந்த 7 பேரை நேற்று அவர்கள் கைது செய்தனர். இந்நிலையில்  பாரீஸ் நகரில் நேற்று மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்ததால், பதற்றம் நிலவியது. 

இந்நிலையில் தீவிரவாதிகள் மீண்டும் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து வடகிழக்கு பாரிஸில் போலீசார் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளை போலீசார் வலைவீசி தேடிய நிலையில் தீவிரவாதிகள் கடத்திய காரை அடையாளம் கண்டு போலீசார் பின்தொடர்ந்தனர். கார் தலைநகர் பாரிசை நோக்கி வந்தது. அப்போது போலீசார் தங்களை துரத்துகின்றனர் என்று தெரிந்துக் கொண்ட தீவிரவாதிகள் காரை வேகமாக ஓட்டிய வண்ணம் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சாலையொர கடைகளிலும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகினார் என்றும் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் மேலும் பிரான்சில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நோக்கி செல்லும் தீவிரவாதிகளை போலீசார் விரட்டி வருகின்றனர். பிரான்ஸ் நெடுஞ்சாலையில் மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டு பேரையும் குறி வைத்து தாக்க முடியாத அளவிற்காக பிரான்ஸ் அரசு இருக்கின்றது?...உயிரோடு பிடிப்பதற்காக காத்துக் இருக்கிறார்களா?

உயிரோடு பிடிக்க முயற்சிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டு பேரையும் குறி வைத்து தாக்க முடியாத அளவிற்காக பிரான்ஸ் அரசு இருக்கின்றது?...உயிரோடு பிடிப்பதற்காக காத்துக் இருக்கிறார்களா?

 

உதெல்லாம் இந்திய பத்திரிகையில் வந்த செய்தி போலிருக்கு ரதி...

 

சும்மா ஏதோ எல்லாம் எழுதுகிறார்கள்......

உண்மையில் கொலையாளிகள் இன்னும் காவல்த்துறையின் கண்களில் படவில்லை.... :(  :(

தேடுகிறார்கள்

அவ்வளவு தான்... :(

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் நடாத்தி இரண்டு நாட்களுக்கு அப்புறம் இப்ப தான் French போலீஸ் சுற்றி வளைச்சிருக்காம்.......இதையாவது ஒழுங்கா வளைப்பாங்களா..... இல்லது ஓட்டைக்குள்ளால தப்ப விட்டிட்டு மீண்டும் கலைச்சிட்டு திரிவாங்களா?

பிரெஞ்சு போலீஸ் வீரத்தை பார்த்து வியக்குறேன்........

எங்க Aussie Aussie தாய்யா........

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் நடாத்தி இரண்டு நாட்களுக்கு அப்புறம் இப்ப தான் French போலீஸ் சுற்றி வளைச்சிருக்காம்.......இதையாவது ஒழுங்கா வளைப்பாங்களா..... இல்லது ஓட்டைக்குள்ளால தப்ப விட்டிட்டு மீண்டும் கலைச்சிட்டு திரிவாங்களா?

பிரெஞ்சு போலீஸ் வீரத்தை பார்த்து வியக்குறேன்........

எங்க Aussie Aussie தாய்யா........

ஒரு பைத்தியத்தை பிடிக்க நாலு பொதுமக்களை போட்ட அவுஸ்சின் வீரத்தை பிரான்ஸ் கூட ஒப்பிடாதீங்க சுண்டல்ஜி
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா வெளிநாடுகளில் பைத்தியம் என்பது சுலபமாக தப்பிக்க சொல்லப்படும் சாட்டு

ஒரு பைத்தியமா அவ்வளவு ஒருங்கிணைத்து அந்த தாக்குதலை செய்தது

மற்றது இறந்தது இரண்டு பொதுமக்கள் தான் சும்மா தமிழ் இணையங்கள மட்டும் படிச்சிட்டு இங்க வராதீங்க....

அதில் ஒரு பொதுமகன் இறந்தது துப்பாக்கி தாரியின் துப்பாக்கியால்......

பிரான்ஸ் இல் அண்மையில் கார் ஏற்றி கொன்றவரையும் பைத்தியம் என்று தான் சொன்னார்கள்....:D

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் இந்திய பத்திரிகையில் வந்த செய்தி போலிருக்கு ரதி...

 

சும்மா ஏதோ எல்லாம் எழுதுகிறார்கள்......

உண்மையில் கொலையாளிகள் இன்னும் காவல்த்துறையின் கண்களில் படவில்லை.... :(  :(

தேடுகிறார்கள்

அவ்வளவு தான்... :(

ஆபத்தான  உண்மை. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.