Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொலிஸ், படையினர் வசமுள்ள கைதிகளின் விபரங்கள் வெளியிடப்படும்: மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகியவற்றில் சந்தேகத்தின் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் பெயர் விபரங்களை தரும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இன்று தேசிய நிறைவேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.

இன்று காலை நிறைவேற்று சபை கூடியபோது, கடந்த வாரம் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இலங்கை முழுக்க சிறைசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்கள் சபையில் சமர்பிக்கப்பட்டது.

இதையடுத்து பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்களையும் தரும்படி மனோ கணேசன் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த தகவல்களையும் போலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சுகளிடமிருந்து பெற்று சபைக்கு சமர்பிக்கும்படி, தேசிய நிறைவேற்று சபையின் செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு பணிப்புரை விடுத்தார்.

 

http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgp1.html

வரவேற்கின்றோம், இது நடந்தால் நன்றி மனோ கணேசனுக்கும் மைத்திரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இறுதி யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் பொதுமக்கள் பலரின் நிலை என்னவென்று தெரியவில்லை.இவர்களுக்கு என்ன நடந்தது என்றும் கண்டுபிடிக்க ஆவன செய்ய வேண்டும்.

 

மனே கணேசனுக்கு தமிழ் இனமே கடமைப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தல் வர வீரவசனம் பேசும் அரசியல் வாதிகள் எங்கே மனோ கணேசன் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புதிய அரச அதிபருக்கும் அவரது பரிவாரங்களுக்கும், அவர்களை முண்டுகொடுக்கும் தமிழர் தரப்பு, காணாமற்போனவர்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களது விபரங்களைக் கண்டறிவதற்கான சர்வதேச மற்றும் இலங்கைக்குள்ளாகத் தேர்வுசெய்யப்பட்ட நிபுணத்துவம்கொண்டவர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து எவ்வித இடைஞ்சல்களுமின்றி அவர்களது பணிகளை மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தல்வேண்டுமெனும் கோரிக்கையை அரசின்மீது வைத்திடல்வேண்டும்.

 

கைதுசெய்யப்பட்டோர், காணற்போனவர்கள், இறுதிப்போரின் இறுதிநாட்களிலும் அதன்பின்னரும் சரணடைந்தோர் பற்றிய எண்ணிக்கை மற்றும் விபரங்கள் முன்னுக்குப்பின்னராக முரணாண வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதுபற்றிச் சர்வதேச ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கபட்டு இறுதிப்பட்டியல் தயாரித்திடல் வேண்டும். அதன்பின்னரே உண்மைநிலை வெளியில்வரும்.

 

 

இங்கு சர்வதேசரீதியில் என நான் குறுப்பிடுவது போருக்குப்பின்னர் தமது உறவுகளை இழந்தோரில் அனேகர் புலம்பெயர்ந்து இலங்கைத்தீவினைவிட்டகன்றுள்ளனர்

 

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.