Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நியமனங்களில் தமிழர் புறக்கணிக்கப்படுவது மனித உரிமை மீறல்! - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sumanthiran-200-news6.jpg

அரச நியமனங்கள் வழங்குவதில் தமிழ் இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்படுவது மனித உரிமை மீறலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதன் ஊடாக அவர்களுக்கு நியமனங்கள் பெற்றுக் கொடுத்தமைக்கு, நாவலர் கலாச்சார மண்டபத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

   

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக எங்கள் பக்கமுள்ள சரியான ஆதாரங்களை முன்வைத்து நியமனங்களை பெற்றுக்கொண்டோம். நியமனங்கள் பெற்ற சகலரும் தமது செயற்றிறன்களைக் காட்டி மற்றவர்களுக்கு ஒரு சவாலாக விளங்கவேண்டும். குறித்த வழக்கானது 278 பேர் கொண்ட வழக்காக பதிவு செய்து முன்னெடுக்கப்பட்டது. நியமனங்கள் வழங்குவதற்கு முழுமூச்சாக நடைபெறுவதற்கு காரணமானவர்கள் இந்தப் பட்டதாரிகள். இலங்கையின் மற்றைய இடங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டமையும், தாங்கள் புறக்கணிக்கப்பட்டமையும் அவர்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியதில் இந்த வழக்கு வெற்றிபெற்றது.

இந்த வழக்குத் தொடர்ந்த பின்னர் மற்றைய மாகாணங்களில் வழங்கப்பட்ட நியமனங்கள் தவறான நியமனங்கள் எனவும் அதனை அகற்றப்போவதாக அரசாங்கம் கூறியிருந்தது. இதுவே இந்த வழக்கின் வெற்றிக்கு வழிவகுத்தது. தமிழர்கள் நியமனங்களில் புறக்கணிக்கப்படுவது வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் இது இடம்பெற்றுள்ளது. அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் நியமனம், முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் ஆகியவற்றில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டனர். அதற்கு எதிராகவும் மனுத்தாக்கல் செய்திருந்தோம்.

அதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் 3 வருடங்களுக்கு தமிழர்களுக்கு நியமனங்கள் இல்லையெனக்கூறியிருந்தார். தமிழ், இளைஞர் யுவதிகள் இவ்வாறு புறக்கணிக்கப்படுவது எந்தவகையில் நியாயமானது என்றும் இன்னுமொரு ஆயுதப்போராட்டத்துக்கு வழிவகுக்கின்றீர்களா என சட்டவல்லுநர்கள் ஆளுநரிடம் கேட்டிருந்தனர். இனிவருங்காலங்களில் நியமனங்கள் ஒழுங்குமுறையில் நடைபெறவேண்டும். உரிமை மீறல்கள் இடம்பெறக்கூடாது.

காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக 2176 வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளோம். மற்றைய அமைச்சுக்களின் அதிகாரங்களை பிடுங்கிக்கொள்ளும் பொருட்டு 2010ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டது. அது மஹிந்த ராஜபக்ஷவின் தம்பிக்காக உருவாக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இனி இல்லாமல் போனால் நல்லது. இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுவோம் என்றார்.

 

sumanthiran-vizha-020115-seithy%20(1).jp

 

 

sumanthiran-vizha-020115-seithy%20(2).jp

 

 

sumanthiran-vizha-020115-seithy%20(3).jp

 

http://seithy.com/breifNews.php?newsID=125825&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
இன்னுமொரு ஆயுதப்போராட்டத்துக்கு வழிவகுக்கின்றீர்களா என சட்டவல்லுநர்கள் ஆளுநரிடம் கேட்டிருந்த
சட்டம் தனது கடமையை செய்யும் என்று ஐயா சொல்லுகிறார்......இடக்கிட சட்டமேதைகளும் அவையளை சொல்லித்தான் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கு

இங்கை சில ஒன்றுக்கும் உதவாத வெத்து வேட்டுகள் சுமந்திரனுக்கு திட்டாத திட்டுகள் கிடையாது ,ஆனால் யாழிலை பொன்னாடை போர்த்தி பாராட்டு .

  • கருத்துக்கள உறவுகள்
தனக்கு வேலை வேண்டும் வசதி வேண்டும் என்றால் யாழ்பாணத்தான் கோத்தாபாயவிட்கே கழுவுவான்.........
இதிலை சுமந்திரனுக்கு பொன்னாடை போர்த்துவதில் என்ன இருக்கு ?
 
தமிழனின் குணம் தெரிந்த படியால்தான் சிங்களவன் கூட்டி வைச்சு  கும்மினவன்.
ஆடுமாடே குழுவாக நின்றால் மனிதர்கள் பயத்தில் ஓரமாக போகிறார்கள். 
யாழ்பாணத்து தமிழன் அடிவாங்கியவர்கள் எனக்கு சொந்தமில்லை என்று சொல்லுவான் என்று அடிப்பவனுக்கு நன்கு தெரியும். 
  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசுக்கும் பொன்னாடை போத்தினவர்கள்தான்... பயனடைந்தவன் போத்துவான்...அதற்காக யாழ்ப்பாணமே பொன்னாடை போத்திறமாதிரி கதைவிடாதீர்கள்.. ஹரி யாழ்ப்பாணியை இழித்தவாயனாக்க வேண்டாம்...

இங்கை சில ஒன்றுக்கும் உதவாத வெத்து வேட்டுகள் சுமந்திரனுக்கு திட்டாத திட்டுகள் கிடையாது ,ஆனால் யாழிலை பொன்னாடை போர்த்தி பாராட்டு .

அண்ணா கரி இங்க சுமந்திரனை மட்டுமல்ல தங்களுக்கு பிடிக்காத எல்லோரையும் எல்லோரும் திட்டுறாங்க. ஏன் நீங்க கூட உங்களுக்கு புடிக்காதவங்களை இங்க திட்டியிருக்கிறீங்க. சுமந்திரன் உங்க கட்சி அதுவும் அந்த கட்சிக்குள்ளும் உங்க கோஷ்டி தலைவரில ஒருவர் என்றதால உங்களுக்கு கோபம் வந்திச்சுதுங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.