Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆறாவது திருமணத்துக்கு தயாரான சுவிஸ் கல்யாண இராமன் கைது

Featured Replies

article_1423635953-Handcuff300.jpg

 

5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது,  
'56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய யுவதியொருவரை திடீரென திருமணம் செய்யவுள்ளதாக அந்தப் பிரதேச சிவில் குழுவினர் எமக்குத் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, குறித்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினோம்.  
 
தான் சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்ததாக அந்த நபர் கூறிய போதிலும் அவரிடம் கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இருக்கவில்லை.  இந்நிலையில், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டோம்.
 
இதன்போது, அச்சந்தேகநபர் திருகோணமலையில் இரு பெண்களையும், வரணி பகுதியில் இரு  பெண்களையும், யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பெண்ணையும் திருமணம் செய்து ஏமாற்றியமை தெரியவந்தது.
 
தனது மகளைத் திருமணம் செய்வதாகக்கூறி சந்தேகநபர் 15 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாக இன்று (செவ்வாய்க்கிழமை) திருமணம் செய்யவிருந்த யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
 
இதேவேளை, திருமணத்துக்கு தயாரான யுவதி நெஞ்சுவலி காரணமாக தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைபேசி அழைப்பின் மூலம் திருமண சம்மதம் ஏற்படுத்தப்பட்டு, திருமணம் நடத்தவிருந்ததாக பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்திலும் இப்பிடி ஏமாறுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இனிமேல் ஒரிஜினல் சுவிஸ் மாப்பிளைமாருக்கும் வீணான பிரச்சினை.. :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சடங்கோட வெளிநாட்டுக்கு பிளேன் ஏறிடனும்.. சுகபோகம் காணனுன்னு ஈழத்துப் பெண்களுக்கு ரெம்ப... சோம்பேறி.. ஆசை. சும்மா வந்தா கிருமிநாசினியை கொக்காகோலான்னு.. குடிக்கக் கூடிய எங்கட சனம்.. உதை விடுங்களா..?! அதன் பலாபலன்களே இவை. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது பெண்பிள்ளைகளை வீட்டைவிட்டு துரத்தினால் போதும் என்ற எண்ணத்தில் பூரணமாக விசாரிக்காமல் திருமண ஏற்பாடு செய்து அவசராவசரமாக கட்டிக்கொடுத்து விட்டு தமது கடமை முடிந்ததாக நினைக்கின்றனர். பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோரின் அலச்சியமே இப்படியான சம்பவங்கள் நடக்க காரணமாகவுள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது பெண்பிள்ளைகளை வீட்டைவிட்டு துரத்தினால் போதும் என்ற எண்ணத்தில் பூரணமாக விசாரிக்காமல் திருமண ஏற்பாடு செய்து அவசராவசரமாக கட்டிக்கொடுத்து விட்டு தமது கடமை முடிந்ததாக நினைக்கின்றனர். பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோரின் அலச்சியமே இப்படியான சம்பவங்கள் நடக்க காரணமாகவுள்ளனர்.

அது சரிதான்.

ஆனால் 56 க்கு, 20 வது, அதுவும் 15 இலட்சம் சீதனம் கொடுத்து?!!

தகப்பனுக்கு அறளை பெயர்ந்து விட்டதா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து பொண்ணுங்க எல்லாம் எவனையாச்சும் கட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு போனா காணும் வெளிநாடு சொர்க்கம் என்ற நினைப்பில இருக்கும் போது இப்பிடியானதுகள் நடக்க தான் செய்யும்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் படிப்புக்கும் தமிழர் கலாச்சாரத்துக்கும் பெயர் போன யாழ்ப்பாணத்தில் தான் 56வயது swiss நாட்டு தமிழ் பிரஜை ஒருவருக்கு 15லட்சம் ரூபாய் சீதனமும் குடுத்து ஒரு 20 வயது பெண்ணின் தகப்பன் திருமணம் முடித்து கொடுக்க பாத்திருகின்றார் இதில் என்ன காமடி என்றால் இது அவருக்கு ஆறாவது திருமணமாம்.......வெளிநாட்டு மோகத்தில் தலைகால் புரியாமல் ஆடுகின்றார்கள்......எப்பிடியாவது பெண்ணை தள்ளிவிட்டால் காணும் பிறகு குடும்பத்தை நல்லாக்கிடுவாள் என்ற பெற்றோரின் பேராசை

.........

யாழ்ப்பாணத்து பொண்ணுங்க எல்லாம் எவனையாச்சும் கட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு போனா காணும் வெளிநாடு சொர்க்கம் என்ற நினைப்பில இருக்கும் போது இப்பிடியானதுகள் நடக்க தான் செய்யும்.....

 

இங்கு உள்ள சில பதிவுகள் பெண்ணை இழிவுபடுத்தும் நோக்கத்தை பிரதிபலிப்பதாகவே தெரிகின்றது. தாய் தந்தையரின் முடிவை எதிர்க்க திராணியற்ற இவ்வாறான பெண்களின் மனநிலையை யாராவது பிரதிபலித்து கருத்திடலாமே.
 
இன்றைய யாழில் வெளிநாட்டு மோகம் இருப்பது உண்மை. இங்கு விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் பெற்றோர்களே தவிர பாதிக்கப்பட்ட பெண் இல்லை.

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.