Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் தேசிய அரசு குறித்த கூட்டமைப்பின் முடிவை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப் போகிறாராம் சம்பந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தேசிய அரசு குறித்த கூட்டமைப்பின் முடிவை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப் போகிறாராம் சம்பந்தன்! 

[Wednesday 2015-02-11 07:00]             
samapanthan-200-news.jpg
கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்புத் தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும்,இது தொடர்பில் கூட்டமைப்பின் இறுதி முடிவை திருகோணமலையில் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி அறிவிப்போம்." என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சிமைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்த வேளையில் மு.காவின் தலைமை மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கைகோர்த்து ஆட்சியமைத்தது. அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மு.காவின் இந்தச் தன்னிச்சையான முடிவை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வன்மையாகக் கண்டித்திருந்தனர்.

"தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல் - அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வழங்கிய ஆணையைத் தூக்கியெறிந்துவிட்டு பதவிக்காகவும், சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது" என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. கடுமையாகச் சாடியிருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில், மத்தியைப் போன்று கிழக்கு மாகாணசபையிலும் தேசிய அரசை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பன முன்வரவேண்டும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பையடுத்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தேசிய அரசுக்கான அழைப்பை சாதகமாகப் பயன்படுத்தவேண்டும் என்று இந்தச் சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது எனத் தெரியவந்தது. இதன் பின்னர் மு.கா. உயர்மட்டக் குழுவுக்கும் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன எனத் தகவல் வெளியானது.

கிழக்கில் தேசிய அரசு அமையும்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தவிசாளர் பதவியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உப தவிசாளர் பதவியுடன் 2 அமைச்சுகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஓர் அமைச்சும், முதலமைச்சர் பதவியைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஓர் அமைச்சும் வழங்கப்படும் என்று கூட்டமைப்புடனான சந்திப்பில் மு.காவினர் தெரிவித்தனர் என்றும் அந்தத் தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், கிழக்கில் தேசிய அரசு அமைக்க கூட்டமைப்புக்கு மு.கா. விடுத்த அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியிடம் வினவியபோது அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்புத் தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். கிழக்கில் தேசிய அரசு அமைப்பது தொடர்பில் மு.காவின் உயர்மட்டக் குழுவுக்கும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையில் பேச்சுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பேச்சுகளின் பின்னர் கிழக்கில் மு.கா. அமைக்கவுள்ள தேசிய அரசில் பங்கேற்பதா, இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவெடுப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவை திருகோணமலையில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி அறிவிப்போம் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=126348&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை அற்ற கிழக்கு மாகாண சபையை கலைத்து.. தேர்தலை நடத்துவதே சிறந்தது. தேசிய அரசாங்கம்.. அதுஇதெல்லாம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள். :icon_idea:

சுத்துமாத்து நிறைந்த இந்த கிழக்கு மாகாணசபை கலைக்கபட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  

 

காத்தான்குடி வளந்த அளவிக்கு மட்டுநகர் வளரவில்லை.

Edited by Sooravali

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழமே மலரவில்லை எப்படித் தேசிய அரசு? தேசியக்கட்சிகளாகவே முடியவில்லை இதில் தேசிய அரசவேறு. முழு இலங்கை அல்லது ஒரு நாட்டை நிர்வகிப்பதே தேசிய அரசாகும். மாகாண அரசு எப்படித் தேசிய அரசை அமைக்க முடியும். மக்களை ஏமாற்றும் சொல்லாடல்களை இந்தக் குரங்கு அப்பம் பிய்த்ததுபோல் பிய்க்கும் கட்சிகள் பயன்படுத்தி ஏமாற்றுவதைக் கைவிட்டு ஒருமொழிபேசும் வெ வ்வேறு மதங்களைக் கொண்டஎமக்கு அழிவு மட்டுமே மிஞ்சியுள்ளது. எப்போது சிந்திப்பீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.