Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Oil-well-2-600x450.jpg

 

 

 

ஜீவா எண்ணியும் பார்த்ததில்லை தமக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்று. வழமையாக அதிகாலையில் நித்திரையால் எழுவதுதான். பாடசாலைக்குச் செல்லும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் காலை உணவு செய்து பாடசாலைக்கும் கட்டி ஒழுங்கு செய்ய எப்பிடியும் ஒன்றை மணி நேரம் கடந்துவிடும். அதன்பின் எல்லோரையும் எழுப்பி பால் காச்சித் தேத்தண்ணியும் போட்டு எல்லாருக்கும் சேவகம் செய்யவே நாரிப்பூட்டு விண்டுவிடும்.

 

இப்ப மேலதிகமாக டாங்கிகளில் வரும் தண்ணீரைப் பிடிப்பதற்கு அரை மணி முன்னதாக எழுந்து வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பிந்தினாலும் பிறகு அரைவாசி தண்ணீர்தான் கிடைக்கும். எதோ தான் மட்டுமே தண்ணீர் பாவிப்பதுபோல கணவன் ஒருநாள் கூட உதவி செய்வதில்லை. சரி அவர் படிப்பிக்கப் போகவேணும்தான். அதுக்காக இந்த உதவியை ஆவது செய்யலாம் தானே என்று மனம் அங்கலாய்க்க, வேறு வழியின்றி அலுமினியப் பானைகளை எடுத்துக்கொண்டு விமலா வீட்டுப் பக்கம் போனாள். அந்த நாற்சந்தியில் தான் இவர்களுக்குத் தண்ணீர் வழங்கும் லொறி வரும்.

 

இவளுக்கு முன்னரே ஆறு பேர் வந்து நின்றனர். டிவியில இப்பிடித் தண்ணிக்கு நிண்டு அடிபடுறதைப் பாத்திருக்கிறம். இப்ப நாங்களே நிக்கவேண்டி வந்திட்டுது என்றாள் சந்திரா. நீயுந்தானே சேர்ந்து சுண்ணாகத்தாரைத் திட்டினனி என்று கடுப்புடன் சொல்லிவிட்டு விமலா முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கோபத்துடன். தன்னாலே ஊறும் நீரைக் கொடுக்கவே எத்தனை வசைகளும் கோபமும் திட்டும் பெருமூச்சுடன் அவர்கள் தர்க்கத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாள்  ஜீவா சலிப்புடன்.

 

ஆறு மாதங்களின் முன் சுண்ணாகத்தில் இருந்து ஒவ்வொருநாளும் ஐந்து ஆறு பெரிய பரல்களில் இணுவிலுக்கு வந்து நீரை எடுத்துக்கொண்டு போகவாரம்பித்தனர். வரவர தண்ணி எடுப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க, ஒவ்வொரு கிணத்தடியும் அவர்களை தண்ணீர் எடுக்க வேண்டாம் என்று கொஞ்சம் கூட இரக்கமின்றி வேறு கிணற்றுக்குப் போகச் சொன்னதை நினைக்க இப்ப கூசியது. யாருக்குத் தெரியும் எங்கட கிணறும் எண்ணை கலக்கும் என்று.

 

முதலில இவர்களும் எதுவும் தெரியாமல் தான் தண்ணியைக் குடித்துக்கொண்டிருந்தார்கள். தண்ணீரில் எந்த எண்ணையும் வரவில்லை. மூத்தவளுக்கும் இரண்டாவதுக்கும் ஒண்டா வயிற்றோட்டமும் காச்சலும் வந்த உடன பாலாவிடம் கொண்டோடினது. டொக்டர் பாலா தான் சிலவேளை இங்க்கத்தேத் தண்ணியிலும் எண்ணெய் கலந்திட்டுதோ எண்டு குண்டைத்த் தூக்கிப் போட்டவர்.

 

ஜீவாவுக்கு எதோ எல்லாம் நினைச்சு வயித்தைக் கலக்க, அப்ப இனிமேல் தண்ணியை நாங்களும் குடிக்கக் கூடாதோ எண்டு ஆதங்கத்துடன் கேட்டாள். சூடாக்கிக் குடிச்சால் பிரகுச்சனை இல்லைத்தானே எண்டு தானே பதிலையும் சொல்லிக்கொண்டாள். சூடாக்கியும் குடிக்கக் கூடாது. ஆனால் உடன என்ன செய்யிறது. குடிக்கிறது சாப்பாட்டுக்கு நீங்களும் போத்தில் தண்ணியை வாங்கிப் பாவியுங்கோ. நான் ஒருக்கா AGA ஓட கதைக்கிறன் என்று கூறி அனுப்பினார்.

 

அயலட்டை எல்லாம் கதை பரவினாலும் ஒருத்தரும் நம்பேல்ல. ஜீவா வீடு மட்டும் போத்தில் தண்ணி பாவிக்க மற்றவை கிணத்துத் தண்ணியையே கொதிக்கவச்சுக் குடிக்கத் தொடங்கிச்சினம். மற்றவைக்கு எந்த வருத்தமும் வராததால ஜீவா பொய் சொன்ணாளோ எண்டும் தங்களுக்குள்ள குசுகுசுத்திச்சினம்.

 

ஒரு கிழமை கழிய இரண்டுபேர் வந்து எதோ சாமான்கள் எல்லாம் கொண்டுவந்து வச்சு தண்ணியையும் எடுத்துப் பாத்திட்டு எண்ணை கலந்திடுது போல தான் இருக்கு. எதுக்கும் நாளைக்கு அறிவிப்பம் என்டுவிட்டுப் போய் அடுத்த நாள் விதானையார் வீடுவீடா ஆட்களை அனுப்பியைக் குடிக்க வேண்டாம் எண்டு சொன்னாலும் பலர் அதைச் சட்டை செய்யாமல் குடிச்சபடிதான்.

 

ஒரு கிழமை கழியத்தான் லொறியில குடிநீர் தாறம் எண்டு சொல்லி கொண்டுவரத் தொடங்கிச்சினம். அப்பவும் எல்லாரும் வந்து வாங்கேல்ல. வந்தாப் பிறகு பாப்பம் எண்ட நிலை தான் எல்லார் வீட்டிலையும்.

 

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குத்தான் தண்ணீர் கொண்டு வருவார்கள் என்றில்லை. கிட்டத்தட்ட அரை மணித்தியாலமாவது காத்திருக்கவேண்டி வந்தது. ஆனாலென்ன செய்வது. நல்ல காலம் எங்கடை ஊர் தோட்டக் கிணறுகளுக்கு இன்னும் எண்ணெய் கலந்து கறுப்பா வரேல்லை.அதுவரையும் தோட்டங்கள் பிளைச்சுது என்று எண்ணிச் சிறிய சந்தோசமும் ஏற்பட்டது அவளுக்கு.  இப்பிடி எத்தினை நாள் தண்ணி பிடிக்க நிக்கவேணுமோ எண்டு எண்ணியபடி காத்திருக்கிறாள் ஜீவா.

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி வாதவூரன்

நல்லதொரு பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நேரத்தில் சரியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட , சமூகத்துக்கு தேவையான கருத்து...!

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவையறிந்த ஒரு பதிவு!

 

சில காசித்தும்பைகளுக்கும், கல்யாணி மரங்களுக்கும் ( பட்டிப் பூக்கள்) தண்ணீர் விடுவதற்காகவே,  காலையும் மாலையும்.. ஐந்து கிலோ மீற்றர்கள் நடந்து தண்ணீர் சுமந்திருக்கிறேன்!

 

எனினும், இப்போது நினைக்கும் போதும்.. அது 'வீண்' போலத் தெரியவில்லை!

 

இன்றும் தேவை ஏற்படின்... திரும்பவும் செய்வேன் என்றே எண்ணுகிறேன்!

 

தண்ணீரின் அருமை அவ்வளவுக்குப் பெரிது.. !

 

தொடருங்கள் சுமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் நவீனன்,சுவி அண்ணா,புங்கை, ஆகிய உறவுகளுக்கும் பச்சை வழங்கிய உறவுகள் ஆரதி, வாதவூரன்,நிலாமதி அக்கா, தமிழினி, நவீனன்,சுவி அண்ணா, புங்கை ஆகிய உறவுகளுக்கும் நன்றி.

 

என்ன கவலை என்றால் மூன்று வீடு தள்ளி எண்ணெய் கலந்த நீர். தம் வீட்டில் இன்னும் நஞ்சு கலக்கவில்லை என்று இன்னும் அந்தக் கிணற்று நீரைக் குடிப்பவர்களை என்ன செய்வது ??? ஒவ்வொருவர் ஒவ்வொருவராக எடுத்து விடயத்தைக் கூறினாலும் அவர்களால் அதன் முழுப் பாதிப்பையும் உணர முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.