Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு! கவலையோ, மகிழ்ச்சியோ இல்லை!- த.தே.கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள தீர்மானம், தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்டம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐநா மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் புதிய அரசு இந்த விஷயத்தில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்துவதாக உறுதியளித்து , விசாரணை அறிக்கையை வெளியிடுவதை ஒத்திவைக்கக் கோரியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு என்பது, இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் புதிய விஷயங்களை விசாரணைக் குழுவின் முன்னர் வைக்கவும் வழிவகுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த காலகட்டத்தில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலுடன் ஒத்துழைப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

tamilwin.com

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்பட்டாலும் ஒன்னும் ஆகப்போவதில்லை எனப்து வேறு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கை பிற்போடப்பட்டது எதற்காக?

 

இலங்கை அரசாங்கத்துக்கு இன்னும் காலக்கெடு கொடுப்பதற்கா அல்லது அறிக்கையை இன்னும் தீவிரமாக்குவதற்காகவா ?

 

புதிய அரசாங்கத்திற்கு சர்வதேசத்திடம் மரியாதை இருப்பதுபோலத் தெரிகிறது. ஏனென்றால் இந்த அரசாங்கத்தைக் கொண்டுவந்தவர்களே அவர்கள்தான். அதனால் தாம் கொண்டுவந்த அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தேவைக்கேற்ப, இந்தக் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம், நீட்டிக்கப்படும்போது விசாரணை அறிக்கையின் சரத்தும் குறைக்கப்படலாம்.  சிலவேளை விசாரணைக்கான தேவையே இல்லாமல்ப் போகலாம். சர்வதேசத்திற்கு அல்லது எந்த இலங்கையரசாங்கங்களுக்குமோ விசாரணை இல்லாமல் போவது கவலையான விடயமாக இருக்கப்போவதில்லை.

 

ஆனால் விசாரணை இல்லாமல்ப் போவதால் பாதிக்கப்படப்போவது தமிழர்களே. 

 

இந்த சர்வதேச விட்டுக்கொடுப்புகளில் இடையே அகப்பட்டு போர்க்குற்ற விசாரணையும் இல்லாமல் போய், தமிழர்க்கான தீர்வும் இல்லாமல்ப் போகுமென்றால் நாம் இந்த அரசாங்கத்தை ஆதரித்ததில் ஏதும் பிரயோசனம் இருக்குமென்று நான் நினைக்கவில்லை.

 

தமிழ்த் தலைவர்கள் இந்த புதிய மாற்றங்கள் பற்றி மிக அவதானமாகக் காய் நகர்த்துவது காலத்தின் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்க்கூட்டமைப்பின் தலைமைகள் ஐக்கியநாடுகளின் மனித உரிமைச்சபையின் அறிக்கை பற்றி அகமொன்றும் புறம் ஒன்றும் கூறக்கூடாது. ஒபாமாவுக்கான தமிழர்கள். 

http://www.tamilsfor..._Sri_Lanka.html

 

 

letter.jpg

 

தமிழ்க்கூட்டமைப்பின் தலைமைகள் ஐக்கியநாடுகளின் மனித உரிமைச்சபையின் அறிக்கை பற்றி அகமொன்றும் புறம் ஒன்றும் கூறக்கூடாது. ஒபாமாவுக்கான தமிழர்கள். 

அடுத்த மாதம் ஜெனிவாவில் வரஇருக்கும் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் பற்றிய விசாரணை அறிக்கையை தள்ளிப்போடுவதற்கு இலங்கைக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆதரவு தன்மையை கூறிக்கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுமான நிலைப்பாட்டினை காட்டிக்கொள்வது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று தவறாகும்.

ஐரோப்பாவில் உள்ள அரச சார்பற்ற அமைப்பு ஒன்றுடன் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, ஜெனீவாவில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றிய விசாரணை அறிக்கை உரிய நேரத்தில் வெளியாகுமா என வினாவியோது, இலங்கை அரசு விசாரணை அறிக்கை வெளியாவதை ஒத்தி வைக்குமாறு கோரியிருந்தனர். நாம் இதுபற்றி தமிழ்க்கூட்மைப்பு என்ன கூறியது என்று கேட்போது, அவர்கள் (தமிழ்க்கூட்மைப்பு) அதற்கு அதுபற்றி அவர்கள் இலங்கை அரசின் கோரிக்கையை மறுதலிக்கவிலை (We don't mind) என்று கூறினார்கள். இதனால் அவ் விசாரணை அறிக்கை வெளியாவது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளனர். எனவே அப்படி ஒத்தி வைக்க கோரிய தமிழ் கூட்டமைப்பின் தலைமை யார் என்ற கேள்வி எழுகின்றது. 

மேலும் நேற்றைய தினம் 16.02.2015 யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையில் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள திரு சுமந்திரன் அவர்கள், நிபந்தனையின் படி இலங்கை அரசாங்கம் நடந்து கொண்டால் விசாரணை அறிக்கை வெளியாவதன் காலத்தினை நீட்டிக்கலாம் என்றும் சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்ளக விசாரணைக்கு அதரவு தெரிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இச்செய்தியானது, போரில் கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களுக்கும், காணாமல் போன உறவுகளுக்கும் மற்றும் போரில் இடம்பெயர்ந்து சென்ற அனைத்து உறவுகளுக்கும் கடுமையான விசனத்தினையும், கவலையையும் ஏற்படுத்தும்.

உதயன் பத்திரிகையில் வெளியாகிய விடையங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு:

http://www.onlineuth...463874815750775

1. 'ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை இடம்பெறுவதற்கு உத்தரவாதம் கொடுத்தால் அதை நாம் வரவேற்போம்.'

(இது சர்வதேச விசாரணையை நிராகரிக்கும் செயலாகும். இந்த உள்நாட்டு விசாரணை கம்போடியாவிலும் நடைபெற்று தோல்வி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது என ஒபாமாவுக்கான தமிழர்கள் தெரிவித்துள்ளனர்)

2. 'ஐ.நா. விசாரணையின்போது விசாரணையாளர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடைய காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணையை நடத்த இலங்கை அரசு இடமளித்தால்இ காலத்தை நீடிக்க நாம் இணக்கம் தெரிவிக்கலாம்.'

வெளிவகார அமைச்சர் திரு மங்கள சமரவீர அவர்கள் வாசிங்டனில் வைத்து அமெரிக்க ராஜதந்திரிகளிடம் பேசும் போது வெளிநாட்டு விசாரணையாளர்களுக்கு 07.02.2015 அன்று அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்தே திரு சுமந்திரனும் மேற்சொன்ன விடையத்தினை கூறியிருப்பதானது திட்டமிட்ட ஒரு செயற்பாட்டினையும், விசாரணை அறிக்கையை வெளியாவதை ஒத்திவைப்பதற்கு உள் இணக்கம் ஏற்படுத்திவிட்டு விடப்படும் அறிக்கை போன்றே தோன்றுகின்றது.

மேலும் திரு மங்கள சமரவீர அவர்கள் வாசிங்டனில் வைத்து அமெரிக்க ராஜதந்திரிகளிடம் பேசும் போது 1965ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்க்கூட்டமைப்புத் தலைமைகள் சுதந்திர நிகழ்வில் கலந்து கொண்டமையானது, புதிய அசராங்கத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், தாம் எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு அவர்கள் ஆதரவுத்தன்மையை வெளிப்படுத்துவதாகும் இருப்பதாக கூறினார்.

இப்படியாக தமிழ் கூட்மைப்பின் தலைமை நடந்துகொள்வதால், சர்வதேச விசாரணையின் மூலம் நீதியையும் அரசியல் தீர்வினையும் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்து மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தினையும், எமது மக்களின் இன்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்ல உழைத்த புலம்பெயந்த மக்களுக்கும் இதற்காக உழைத்த பல சர்வவேச அமைப்புக்கள் ஆகியற்றிக்கு மிகுந்த ஏமாற்றத்தினையும், சலிப்பினையுமே ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமாவுக்கான தமிழர்கள்.

 

கவலையோ மகிழ்ச்சியோ எந்த உணர்வும் இல்லை. மரத்து போய்விட்டோம் என்று அர்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.