Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

முகமூடி அணிவதில்லை..

நாங்கள் முகம் காட்ட ஒழிவதில்லை

வன்மையாய்ப் பேசினும்..

வாய்மையே பேசி

தென்றலிலும் இதமாய்..

நல் மனங்களில் வீசி..

பண்பு காக்க பேசும்

நாங்கள் நண்பரல்லவா..

தோழா நான் உன்னைச் சாடுவேனா..

Edited by vikadakavi

  • Replies 1.9k
  • Views 182.2k
  • Created
  • Last Reply

சாடவும் பாடவும்

வாய்வழிவந்த தமிழ்

இன்று தன்னிலை மறந்து

தன்னுடல் அழிந்து

அன்னிய தேசமதில்

அகதியாய் வாழ்கின்றது

தூக்கி நிறுத்தி

அதை துருவத்தில் ஏற்று

வெற்றி எமதேயென்று

வீறுகொண்டெழு

எழுதாத கவிதையாய்..

வரையாத ஓவியமாய்..

ஓடாத நதியாய்..

பொழியாத மழையாய்..

அவிழாத மொட்டாய்..

அரங்கேறாத பாடலாய்..

சுவைக்காத அமுதாய்..

யாருக்கும் இல்லாமல்..

எனக்குமில்லாமல்..

உனக்குள்ளே.. தூங்கும்

தமிழை நான்..தேடி..

காத்திருக்கிறேன்..

திக்குத்திணறும் தமிழை

தேனாக கொட்டுவாயென..

காத்திருக்கிறேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதாத கவிதையாய்..

வரையாத ஓவியமாய்..

ஓடாத நதியாய்..

பொழியாத மழையாய்..

அவிழாத மொட்டாய்..

அரங்கேறாத பாடலாய்..

சுவைக்காத அமுதாய்..

யாருக்கும் இல்லாமல்..

எனக்குமில்லாமல்..

உனக்குள்ளே.. தூங்கும்

தமிழை நான்..தேடி..

காத்திருக்கிறேன்..

திக்குத்திணறும் தமிழை

தேனாக கொட்டுவாயென..

காத்திருக்கிறேன்..

காத்திருக்கிறேன் நானும்

உன் கவிதை மழையில்

நனைந்தே மகிழ!

விரியும் போதே

மணம் பரப்பும் மலராய்!

பொழியும் போதே

மண் வாசம் எழுப்பும்

தூறலாய்!

உனக்குள் இருக்கும்

கவிதை கொட்டு!!!!

பார்த்திருக்கிறாள் இந்தச்சிட்டு!! :D

சிட்டுடன் சீண்ட

சிந்தையில் மகிழ

சிறுத்தை நானும்

காலமெல்லாம் காத்திருப்பேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிட்டுடன் சீண்ட

சிந்தையில் மகிழ

சிறுத்தை நானும்

காலமெல்லாம் காத்திருப்பேன்

காத்திருப்பேன் ஈழத்தின் வாசலின்

எங்கள் தாய்மண்ணில்! மூண்டுட்ட

போரில்! வெற்றிச்செய்தி எட்டும்வரை

நான் பார்த்திருப்பேன்!

தேசியக்கொடி காற்றில் பறந்தாட

கோட்டையில் ஏறும் நாளை

எண்ணிக் காத்திருப்பேன்!விடிகின்ற

நாள் தொலைவில் இல்லை

இதோ தெரிகிறதே வெற்றியின்

எல்லை!.

எல்லைகள் தகர்த்து

எதிரியை அழித்து

தன்னிகரில்லாத

தலைவனின் துணையுடன்

விண்ணதிர மண்ணதிர

மிடுக்குடனே பறக்கும்பார்

தேசத்தின் துயர் துடைத்த

தேசியக்கொடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லைகள் தகர்த்து

எதிரியை அழித்து

தன்னிகரில்லாத

தலைவனின் துணையுடன்

விண்ணதிர மண்ணதிர

மிடுக்குடனே பறக்கும்பார்

தேசத்தின் துயர் துடைத்த

தேசியக்கொடி

தேசியக்கொடி எம் வீரத்தின் கொடி!

காற்றில் பறந்தாடி களிப்புடனே

சிரிப்பதைப்பார்!. தமிழ் மானத்தை

புலி வீரத்தை! பறை சாற்றியே

பறப்பதைப்பார்!.

பார்......

வீறு கொண்டெழுந்தவர் போர் (முர)சங்கொலிக்க

மாறு பட்டு நம் நாடு விட்டகன்றவர்

கூறு போட்டெம் மின மானம் விற்க..!

சோறு கேட்டழும் பாலகர் முகம்

வறுமையில் வெறுமையாய் வாட

வேறு வேலை நமக்கெனப் பொழுதுகள்

பொறுமையாய் போக.....

கூறு ''தமிழா'' எம்மினம் காக்க

வேறு யார் வருவாரென.?? :D

வீறு கொள் தமிழா ..எம்மினம் காக்க!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்......

வீறு கொண்டெழுந்தவர் போர் (முர)சங்கொலிக்க

மாறு பட்டு நம் நாடு விட்டகன்றவர்

கூறு போட்டெம் மின மானம் விற்க..!

சோறு கேட்டழும் பாலகர் முகம்

வறுமையில் வெறுமையாய் வாட

வேறு வேலை நமக்கெனப் பொழுதுகள்

பொறுமையாய் போக.....

கூறு ''தமிழா'' எம்மினம் காக்க

வேறு யார் வருவாரென.?? :D

வீறு கொள் தமிழா ..எம்மினம் காக்க!!

காக்க எழுந்தவர் தானே

எம் புலிப்படைகள்?

தமிழ் மானம் காக்க!

நிமிர்ந்தவர் தானே எம்

தமிழ் படைகள்!!

பணமென்ன, பதவியென்ன

சோரம் போகா ஓர்

நேரிய தலைவன் வழி

நின்று செயலாற்றும்

எங்கள் படையணி!!இவர்களை

வெல்லப் பாரில் யார் இனி?!!

காக்க எழுந்தவர் தானே

எம் புலிப்படைகள்?

தமிழ் மானம் காக்க!

நிமிர்ந்தவர் தானே எம்

தமிழ் படைகள்!!

பணமென்ன, பதவியென்ன

சோரம் போகா ஓர்

நேரிய தலைவன் வழி

நின்று செயலாற்றும்

எங்கள் படையணி!!இவர்களை

வெல்லப் பாரில் யார் இனி?!!

பாரில் யார் இனி எனக்கு

பாவை உன்னை பார்த்த பின்பு..?

பார்வை ஒன்று

பார்த்தாய் பெண்ணே..

பாலகன் நான் -உன்

பாவலனானேன்!

பாடத்தில் கவனம் ஏது ?

பாவை உன்னை

பார்த்தபின்னர்

பாரினில் உன்னைவிட

பள்ளி ஏது..?

பாடம் ஒன்று

படிப்போம் 'வா' என்றால்

பாசாங்கு செய்கின்றாய்

பல்லிளித்துக் காட்டுகிறாய்! :P

Edited by gowrybalan

காட்டுகிறாய் வித்தை..என்

மெத்தையுன் சொத்தானதா...

புன்சிரிப்பால் தத்தை..என்

நெஞ்சமுன் பேர் தேடுதா...

உளம் குழையக் குழைய..

நான் உருமாறினேன்..அடி..

உனதுமடியில் தவழ

நான் வழிதேடினேன்..

சிறு மகவாய்..பெண்..

உறவாய்.உன்

நிழலாய் வருவேன்..

என்னை விட்டுப் போகாதடி..அன்பே..

உன் நினைவென்றும் தீராதடி..

நானும் நீயும் நெருங்க

மின்மினியும்

கண் மூடட்டும்.

நாணம் கொண்டு தள்ள..

நம் சயனம் சூடாகட்டும்..

இன்பம் என்ற சொல்லே..

நீதானே காட்டினாய்..

துன்பக்கடலிலிருந்து எனைக்

கரையேற்றினாய்.

தனிமரமாயிருந்தேன்

பூந்தோப்பாகினேன்..

உன்னாலே அடி உன்னாலே..

Edited by vikadakavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடி உன்னாலே வாங்கினேன் ஆத்திரம் தீருமட்டும்

தடி கொண்டு தந்ததாலே தழும்புகள் ஏராளம்

ஆடி இறுதி வரும்வரை பொறுத்திரு படம் எடுத்திடும் பையனே

கூடி வருவேன் கூட்டாளிகளுடன் சேர்ந்தே வருவேன்

படிதனில் வரவேற்க காத்திரு காத்திரு

காத்திருந்து காத்திருந்து

காலம் கரைந்தோடுதடி

காத்திருக்கும் காலமெல்லாம்

ஏதோ ரணம் மனம் நோகுதடி..!

பூத்திருக்கும் பாவையுனை

வீட்டில் யாரு பூட்டி வைத்தார்..?

காத்தினிலே தூதனுப்பி

காலமெல்லாம் காத்திருக்கேன்.....

உன்னிமைகள் துடிப்பது கேக்குதிங்கே

என்னிதையம் துடிப்பதறிவாயா....???

Edited by gowrybalan

துடிப்பதையறிவாயா

என் நெஞ்சம்

உனை நினைத்து

நீ வரும்நாளை

எதிர்பார்த்து நான்

நாட்காட்டியுடன்

காத்திருப்பதை

அறிவாயா நீ

கலங்கிய கண்களுடன்

உனக்காக நான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்காக நான் மாறிக்கொண்ட போது

உள்ளத்தில் பட்டுத்தெறித்ததோ அன்பும் மரியாதையும்

உணர்விழந்து போய் கிறுக்கி விட்ட வேகத்தில்

ஆத்மாவும் தவித்து நொடித்துப்போய் துடிக்குதே

துடிக்கும் மனதோடும்

வெடிக்கும் கந்தகத்தோடும்

அடுக்கடுக்காய் சரியும்

ஆருயிர்களுடனும்

கால் கடுக்க

காத்திருக்கின்றேன்

விடியல் என்வாசல்

விரைவில் வருமென்று

வருமென்று காத்திருந்தால்

என்று வரும் விடியல்

தமிழா என்று வரும் விடியல்

ஒன்றுபடும் நெஞ்சிருந்தால்

வென்று தரும் விடியல்

புலி வென்று தரும் விடியல்

குடும்பி மலை ஏறி ஒரு

குரங்கு ஆடும் ஆடல்

குரங்கு ஆடினாலும் அதன்

குடும்பி எங்கள் கையில்

Edited by vettri-vel

கையில் பிடித்தது வாலென்றறியாமல்

துள்ளிக்குதிக்குது துட்டகைமுனு

திரும்பிப்பார்த்து சிறுத்தை சிலிர்த்தால்

கலங்கியோடிடும் கைமுனுக்கூட்டமும்

பொறுத்திரு தமிழா

பொறுத்திரு

புலி புவியாழும் நாள்

புலர்ந்திடும் விரைவில்

வல்வையின் மைந்தன்

வாய்த்தது எமக்கொரு கொடை

அவன் தன்னிகரில்லா

துணிவுடன் துணையுடன்

தொலைத்திடுவோம் துட்டகைமுனுவை

வையத்தின் ஒளி விழக்கே

உன் கன்னத்தில் ஏன்

வை க்கிறாய் கை...?

ஊர் விட்டுப் போன அண்ணன்

போராடப் போயிருக்கு..

நாடாண்ட நம்ம இனம்

வேரோடு சாய்க்குமந்த

கோணோடு சண்டை செய்து

தாய் நாடோடு திரும்பி வரும்...!

காணாமல் போன அப்பன்

கண்டு பிடிக்கச் சொல்லித்தானே

கண்காணிப்புக் குழுவுக்கு

கடுதாசி போட்டிருக்கு..

நாடுவிட்டுப் போன (இந்த) அண்ணன்

நலமாய்த்தான் இங்கிருக்கு

ஊனோடு உருகும் என் தங்கையே....

உன் நினை வோடு நானிருகேன்

இன்னுமொரு ஒப்பந்தம் செய்யும் போது

(பாது)காப்போடு நான் வருவேன்...

:mellow:

Edited by gowrybalan

வருவேன் நங்கையே..

நாளை உன்னிடம்

நிச்சயம் வருவேன்..

நீ எனக்கு..

தங்குவதற்கு தனியறை

தூங்குவதற்கு சொகுசு கட்டில்

துடைப்பதற்கு புதுத் துவாய்

தரத் தேவையில்லை...

ஆனால்..

கவனமாய் உன்வீட்டு

இண்டர்நெட் கனக்சனை நீ

சரிபார்த்து வைத்திரு..

எம்.எஸ்.என் மெசஞ்சர்

இல்லாவிட்டால் எனக்கு

உயிர்மூச்சு நின்றுவிடும்!

அதனால்தான் சொல்கின்றேன்..

நீ எனக்கு..

தங்குவதற்கு தனியறை

தூங்குவதற்கு சொகுசு கட்டில்

துடைப்பதற்கு புதுத் துவாய்

தரத் தேவையில்லை...

ஆனால்..

கவனமாய் உன்வீட்டு

இண்டர்நெட் கனக்சனை நீ

சரிபார்த்து வைத்திரு..

எம்.எஸ்.என் மெசஞ்சர்

இல்லாவிட்டால் எனக்கு

உயிர்மூச்சு நின்றுவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் மூச்சு நின்று விடும்!

உள் ஆத்மா பறந்து விடும்!

உயர உயர அது பறந்து!

உன் பாதமதில் சரணடையும்!

மீன்டுமது திரும்பி வந்தால்!

தமிழீழ வித்துக்களில் சங்கமிக்கும்!

விதைக் கருவில் முளைத்தெழுந்து!

வீர மறவர் புகழ் பாடும்....

பாடும் ஓசைகள்

காதில் கேட்கும்..

கேட்ட பொழுதினில்

கனவுகள் பிறக்கும்..

உந்தன் ஞாபகம்

உயிரினில் கலக்கும்..

கலங்கும் நெஞ்சம்

தனிமையில் தவிக்கும்..

உணர்வு மிகுதியில்

உள்ளம் கொதிக்கும்..

காதில் மீண்டும்

ஓசைகள் கேட்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்கும் உந்தன் குரல்

எட்டுத்திசையும் எகிறி பாய்ந்திடட்டும்

அரங்கேறும் உன் பாடலும் ஒருநாள் மேடைதனில்

அக்கினியாய் உரைத்த வார்த்தைகள் மட்டும்

இக்கரைதனில் ஒலித்ததாலே மனமும்

அடங்காமலே ஓலமிடுகின்றது தினமும்

ஆடி அடங்கும் வாழ்க்கையிலே

இதயச்சுவர்களுக்குள் மட்டும் ஏனிந்த வலி

ஏனிந்த வலி

எனக்குள் மட்டும்

நான் உன்னை

நம்பியதால் தானா

இந்த வலி என்

இதயத்தை தாக்கியது

வா காதலனே

வாழ்க்கை ஓர்

நெடுந்தூர பயணம்

நடந்து தனியே போனால்

கால் வலிக்கும்

எனவே

கூடவே என் துணையாக

கை பிடித்து சேர்ந்தே

நடந்து பயணத்தை

சந்தோசமாக முடிப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.