Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் “புலி வால்கள்” களினால் எங்களுடைய மக்களுக்கு ஒரு காலமும் விடிவு வராது- சுமந்திரன்

Featured Replies

இம்முறை அமெரிக்காவின் பிடியிலிருந்து இந்தியாவோ இலங்கையோ சித்து விளையாட்டுக்களைக் காட்டி தப்ப முடியாதென்பது சுமந்திரனுக்கு வடிவாகத்தெரியும்.இவரும் மங்கள சமரவீரவும் கொஞ்சம் நெருங்கி அமெரிக்காவின் விசுவாசிகளாகவும் உள்ளனர்.இதை விட ரணிலைப்போன்றவர் தான் இந்த சுமந்திரனும்.ஆகவே வைரத்தை வெட்ட அமெரிக்கா பாவிக்கும் வைரம் இவர்களாகவிருந்தாலும் தப்பில்லை

 

சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு எதையும் விரும்பித்தராது என்பது முற்றிலும் உண்மை ஆனால் சர்வதேச அரசியல் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கண்டு பலவருடங்களாகிவிட்டது .

 

போர் முடிந்த பின் மகிந்தா சர்வதேசத்துடன் அனுசரித்து சில நெகிழ்வு போக்குகளை காட்டியிருந்தால் போர்க்குற்ற விசாரணைகளை கூட கிடப்பில் போட்டு சர்வதேசம் மகிந்தாவிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கும் ஆனால் போர்வெற்றி கொடுத்த களிப்பில் மகிந்தா இலங்கையில் தன்னை எவரும் அசைக்கமுடியாது என்ற நம்பிக்கையில் சர்வதேசத்தை உச்சி விளயாடநினைத்தார் .அதற்குள் சீனாவை வேறு இழுத்துவிட்டார் .

 

விளைவுதான் கடந்த ஜனாதிபதி தேர்தல் , மைத்திரி ,ரணிலுக்கு கூட ஒரு சந்தர்ப்பம் தான் கொடுத்திருக்கின்றார்கள் என்று நம்புகின்றேன் .(இன்றைய மனோ கணேசனின் அறிக்கையை படிக்கவும் அவர் முக புத்தகத்தில் இருக்கு ).

 

சேர் பொன் இராமநாதன் தொட்டு என்று எம்மவர் பலர் தொடங்கிவிடுவார்கள் (யாழிலும் பலர் அதே நிலைதான் ) .

ஆயுத போராட்டம் நாட்டில் தொடங்கி இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடங்கிய காலத்திலேயே தமிழர்களுக்கு ஒரு தீர்வு (தனிநாடு அல்ல )கொடுக்கவேண்டும் என்ற நிலைபாட்டை சர்வதேசம் எடுத்துவிட்டது .  புலிகளின் தமிழ் ஈழம் என்ற நிலைப்பாடும் போரும் அதை சாத்தியமில்லாமல் செய்துவிட்டது .

அன்று சர்வதேசம் எடுத்த நிலைபாட்டில் இருந்து இன்னமும் மாறவில்லை என்றே நம்புகின்றேன் .ஒரு இரவில் தீர்வு கிடைக்காவிட்டாலும் நிட்சயம் விரைவில் கிடைத்தே தீரும் என்று நம்புகின்றேன் .

 

மிகவும் யதார்த்தமான கருத்து. இவ்வாறான கருத்துக்களை என்றும் உங்களிடம் எதிர்பார்க்கும் ஒரு ஜீவன்(புனைப்பெயரில்லை சொந்தப் பெயர்தான்).

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு வரும்போலத்தான் இருக்கும் ஆனால் வராது.
முட்டாள் சிங்களவன் புத்திசாலியாகிப் பலகாலம் ஆகிவிட்டது.
புத்திசாலித் தமிழன் முட்டாளாகியும் பல காலம் ஆகிவிட்டது.

ஒவ்வொரு சிங்கள அரசிற்கும் ஒரு ராமநாதன் ஒரு டக்ளஸ்
ஒரு அருணாசலம் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்.

சர்வ தேசம் என்று ஒரு மாயையை உருவாக்கித் தமிழர்களை அதன் சூழ்ச்சிக்குள் சிக்க வைப்பதே ஒரு சிலரின் நோக்கம். வெள்ளைகள் தங்களுக்குத் தேவையான காலங்களில் தமிழர்களை ஊறுகாய் போலப் பாவித்துக் கொண்டிருப்பார்கள்.

மக்கள் விழிக்கும் வரை தீர்வும் மண்ணாங்கட்டியும்

மக்கள் விழிக்கும் வரை தீர்வும் மண்ணாங்கட்டியும்

 

மக்கள், மாணவர்கள், இளையோர் 1980களில் விழித்து பிஸ்ரலில் தொடங்கி தரைப்படை, கடற்படை, விமானப்படை எல்லாம் வைத்திருந்தும் எதுவும் நடக்கவில்லை. மக்கள் அனுபவங்களினூடாக விழித்துத்தான் உள்ளார்கள். கடந்த தேர்தல்கள் இதற்கு உதாரணம்.
 
மறுபடியும் மக்கள் விழித்து என்ன செய்வது. எவ்வாறு விழிப்பது.
  • கருத்துக்கள உறவுகள்

இது மே 02, 2014 இல் தரவேற்றப்பட்ட காணொளி. :D

இது மே 02, 2014 இல் தரவேற்றப்பட்ட காணொளி. :D

 

நன்றி இசைக்கலைஞன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்கள், மாணவர்கள், இளையோர் 1980களில் விழித்து பிஸ்ரலில் தொடங்கி தரைப்படை, கடற்படை, விமானப்படை எல்லாம் வைத்திருந்தும் எதுவும் நடக்கவில்லை. மக்கள் அனுபவங்களினூடாக விழித்துத்தான் உள்ளார்கள். கடந்த தேர்தல்கள் இதற்கு உதாரணம்.
 
மறுபடியும் மக்கள் விழித்து என்ன செய்வது. எவ்வாறு விழிப்பது.

 

 

நீங்கள் சொல்லும் மக்களை விடுங்கள்

நான் சொல்வது இலங்கையில் வாழும் தமிழ் மக்களை.

  • கருத்துக்கள உறவுகள்

இது மே 02, 2014 இல் தரவேற்றப்பட்ட காணொளி. :D

இது சம்பந்தரின் வாரிசும்,சுமந்திரனின் வால்பிடியுமான கரியின் ராசதந்திரம்
  • கருத்துக்கள உறவுகள்

கோழி குருடுதான் ஆனாலும் குழம்பு ருசி ஆகத்தான் இருக்கின்றது
காணொளி எப்போது வந்தாலும் இங்கே வரும் கருத்துக்களுக்குப் பதில் அளிக்கலாம் அல்லவா? :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுமந்திரன் காணொளியில் 16:00 நிமிடக்கணக்கில் என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனியுங்கள். இனப்படுகொலை என்பதை விசாரணை முடிந்தபின்னரே சொல்ல வேண்டும் என்கிறார். (இது ஒரு வழக்கறிஞரின் சிந்தனை.) வரிக்கு வரி நீதி விவகாரங்கள் எல்லாவற்றையும் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது என்று வேறு சொல்கிறார். (உண்மைதான்.)

ஆனால் இவர் சார்ந்திருக்கும் ததேகூட்டமைப்பின் யாழ் மாகாணசபை இனப்படுகொலை தீர்மானத்தை அண்மையில் நிறைவேற்றியிருக்கிறது. அப்படியானால் அதை நிறைவேற்றிய முன்னாள் நீதியரசருக்கும் சட்ட விளக்கம் குறைவா? :o

இதுக்குத்தான் சொல்வது வாயைவிட முன்னம் கொஞ்சம் யோசிப்பது நல்லது. இந்தக்காலத்தில் பழைய காணொளிகள் காட்டிக்கொடுத்துவிடும்.. :blink:

சரியான காணொளி...

 

 

 

வால் இருக்கு ஆனால் புலி இல்லை...............

 

சூடு பறக்குது...! :)

  • கருத்துக்கள உறவுகள்

"உங்கட ஆட்கள் தீர்மான வரைபை எரிக்கிறார்களே?!" என்று வெளிநாடுகள் கேட்டபோது இவர் என்ன பதில் சொல்லியிருக்க வேணும்?

"ஓம்.. அவர்கள் இந்தத் தீர்மானத்தை இன்னும் இறுக்கமாக்க வேண்டும் என்று போராடுகிறார்கள்.."

விசயம் முடிந்தது. இதுக்கு ஏன் இவ்வளவு கடுப்பு? :rolleyes:

நீங்கள் சொல்லும் மக்களை விடுங்கள்

நான் சொல்வது இலங்கையில் வாழும் தமிழ் மக்களை.

 

 

மக்கள், மாணவர்கள், இளையோர் 1980களில் விழித்து பிஸ்ரலில் தொடங்கி தரைப்படை, கடற்படை, விமானப்படை எல்லாம் வைத்திருந்தும் எதுவும் நடக்கவில்லை. மக்கள் அனுபவங்களினூடாக விழித்துத்தான் உள்ளார்கள். கடந்த தேர்தல்கள் இதற்கு உதாரணம்.

 
மறுபடியும் மக்கள் விழித்து என்ன செய்வது. எவ்வாறு விழிப்பது.
 

 

குறிப்பிட்டது சாட்சாத் தாயகத்தில் வாழும் எம் உறவுகளைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானத்தை எரித்தவர்களின் தலைமைத்துவம் மற்றும் இலங்கையில்  அவர்களின் வழிகாட்டலில் ஆடிக்கொண்டிருக்கும்  வால்கள் ஆகியோரினால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நன்மையையும் வரப்போவதில்லையாம்.

எதுவாக இருந்தாலும் அவருடைய கொடும்பாவியை எரித்தவர்களும் தீர்மானத்தின் பிரதியை சென்ற வருடம் எரித்தவர்களும் ஒரே தலைமையின் வால்கள் என்பதைக் கண்டறிந்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்டது சாட்சாத் தாயகத்தில் வாழும் எம் உறவுகளைத்தான்.

 

சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகளின் அட்டவணையில் பல தேர்தல் நடந்துள்ளன. அப்படியான தேர்தல்களை எத்தனை நாட்களுக்குத்தான்

உதாரணம் காட்டுவது.

 

சரியான காணொளி...

 

 

 

வால் இருக்கு ஆனால் புலி இல்லை...............

 

சூடு பறக்குது...! :)

 

நிழலி இந்தத் திரியில் பெருமாள் ஏற்கனவே முதலாவது இணைப்பில் இந்தக் காணொளியைத் தானே இணைத்திருந்தார்.

 

ஊடகப் பொறுப்பற்ற முறையில் அமைந்த இத்திரியின் தலைப்புச் செய்தி கள உறுப்பினர்களிடையே தேவையற்ற விவாதங்களை உருவாக்கியதால் இத்திரி பூட்டப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.