Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் மீதான கொலைக்கு கருணாகுழுவினர் உரிமை கோரல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.nerudal.com/content/view/3207/70/

சீறும் படை என்ற பெயரில் துண்டுப்பிரசுரம்!

இன்று காலை கொழும்பில்வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இனுடைய படுகொலைக்கு கருணா குழுவினர் உரிமைகோரியுள்ளனர். மட்டக்களப்பு சீறும்படை என்றபெயரில் இன்றுமாலை துண்டுப்பிரசுரமொன்றை மட்டக்களப்பில் விநியோகித்துள்ளனர். அந்தத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

எமது எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்தும் வன்னிப்புலிகளின் அடிவருடிகளாகச் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் இன்றுகாலை கொழும்பில் வைத்து தமிழின விடியலுக்காக கொன்றொழிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி கிழக்கின் எமது தாயகத்தில் இருந்து கொண்டு வன்னிப்புலிகளுக்காக குரல் கொடுத்துவந்த ஜோசப் பரராஜசிங்கம் எமது தண்டனைக்குள்ளாகியதும் அதன் தொடர்ச்சியே இன்றைய ரவிராஜ் மீதான தாக்குதலாகும்.

தமிழ் மக்களின் இன்னல்களையோ அல்லது அவர்களின் இடர்களையோ புரிந்துகொள்ளாமல் வெறுமனே புலிகளுக்காக வக்காலத்து வாங்குவதும் வேடிக்கை காட்டுவதையுமே மக்கள் பணியென்று கருதுகிறீர்கள்.

கொழும்பில் அரச பாதுகாப்புடன் இருந்து கொண்டு எமது மக்களின் அவலங்களைப் புரிந்து கொள்ளாத இவர்களெல்லாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கவேண்டுமா?

கொழும்பு என்ன வன்னியிலிருந்தாலும் இப்போலிப் பிரதிநிதிகளான உங்களுக்கு பாதுகாப்பில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எமது இவ் இரண்டாவது எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் ஏனையவர்கள் செயற்படுவார்களேயானால் ஜோசப்புக்கும் ரவிராஜ்க்குமிடையே வழங்கப்பட்ட ஒருவருடகால அவகாசம் தங்களுக்குக் கிடையாது. இதனைப் புரிந்து கொண்டு உடனடியாக புலிகளுடனான உறவை விலக்கிக்கொண்டு உங்கள் குடும்பங்களுடன் எஞ்சிய காலங்களைக் கழிப்பது நல்லது. இல்லையேல் துரோகிகள் பட்டியலில் நீங்கள் அனைவரும் இணைக்கப்படுவது தவிர்க்கமுடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்று அந்தத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரின் பலஇடங்களிலும் இன்று மாலை 6மணியளவில் வெள்ளைநிற டொல்பின் வானில் ஆயுதங்களுடன் வந்த கருணா குழுவினர் சுமார் 10பேர் இந்த துண்டுப்பிரசுரங்களை நகரில் மற்றும் இருதயபுரம் கல்லடி ஆகிய பிரதேசங்களில் விநியோகித்துள்ளதுடன் பொது இடங்களிலும் சந்திகளிலும் ஒட்டிவிட்டுச்சென்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் படுகொலையால் அதிர்சியும் கவலையும் அடைந்துள்ள மட்டக்களப்பு மக்கள்- இந்தத்துண்டுப்பிரசுரத்தால் ஆத்திரமும் விசனமுமடைந்துள்ளனர்.

மீனகன் (நெருடல் மட்டு. செய்தியாளர்)

http://www.nerudal.com/content/view/3207/70/

ஸ்கொட்லன்ட்யார்ட் என்ன FBI வந்தாலும் பிடிக்க முடியாது.

அலரிமாளிகைக்குள் மோப்ப நாய்கள் செல்ல அனுமதிப்பார்களா?

அப்படியென்றால் சிறிலங்கா பொலிஸ் கையாலாகாததா?

அரச அதிபரே இவ்வாறு சொன்னபின் ஏனைய கொலைகளுக்கு மட்டும் சிறிலங்கா பொலிசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை நீதிக்கு முன்னிறுத்த வெளிநாடுகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுவதேன்?

அரச ஆதரவு ஆயுத குழுக்கள் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நேரில் பார்த்த பின்னும் அவர்களைக் கட்டுப்படுத்த மாட்டோம் என வெளிப்படையாக சொல்லும் அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்காது உதவிகள் வழங்கும் நாடுகளே இக் கொலைக்கு பொறுப்பு.

பெரிய திருடன் சொன்னானாம் சின்னத் திருடனிடம் உன் கட்டுப்பட்டில் உள்ள உதிரித் திருடர்களை கொஞ்சம் தட்டிவை என்று.

செய்வதையும் செய்து விட்டு யார் மீதாவது தூக்கிப் போட வேண்டியது தானே. ஸ்கொட்லனட் எதுக்கு யாராவது கைசுப்பித் திரியும் குழந்தைகளிடம் கேட்டாலும் சொல்லுமே யார் செய்தது என்று. 'அம்பந்தோட்டைக்கான பாதையை மூடிவிட்டு கப்பல் மூலம் பொருட்களை மகிந்த எடுத்துச் செல்லட்டும்" இந்த ஒரு வார்த்தை காணாதா யார் குற்றவாளி என்பது.

ஈழத்திலிருந்து

ஜானா :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக கருணா கும்பல் நடத்தும் நாடகமாகவே இது இருக்கும். சமீபகாலங்களாக மகிந்த அரசோடு கடுமையாக முரண்பட்டு, ஆர்ப்பாட்டங்களுக்கு வழிகாட்டிகாக நின்றவர் மாமனிதர் ரவிராஜ் அவர்கள்.

இந்த சமயத்தில் கருணா கும்பலோடு எவ்வித கோபதாபங்களையும் பேணியதாக அறியமுடியவில்லை. கருணா கும்பலோடு இதை விட கடுமையாக நின்றவர்களை விட்டு, விட்டு ரவிராஜ் குறி வைக்கப்பட்டிருப்பார் என்றும் நினைக்கவில்லை.

ஆனால் இராணுவப் புலனாய்வாளர்கள் செய்கின்ற கொலைகளை வழமை போல தான் உரிமை கோருவதன் மூலம், இலங்கையரசைக் காப்பாற்றி தியாகிப் பட்டததை வாங்கலாம் என்று கருணா கும்பல் நினைத்திருக்கலாம். ஆனால் உண்மையில் ஏற்கனவே கருணா மீது வெறுப்புணர்ச்சியைக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு, இன்னும் ஒரு அசிங்கமான குழப்பாவாதியாகத் தான் அடையாளப்படுத்த இடமுண்டு. இயக்கத்தில் இருந்து பிரிந்தபோதும் முட்டாள் தனமாக நடந்த கருணா, தானாகவே தன் பெயரை அசிங்கம் செயயும், விதம் சேற்றை அள்ளிப்பூசிய இழி நிலையாகத் தானிருக்கும்.

ஆனால் கடப மகிந்த அரசு இதனால் பழியில் இருந்து தப்பித்துக் கொள்ளும். இழிச்சவாய் கருணா தன் தலையில் சுமக்கும். சில முட்டாள்களின் தலையில் சாணியரைக்க இலங்கையரசு தெளிவாகவே புரிந்து வைத்திருக்கின்றது.

மாமனிதர் ரவிராஜ் சில மாதங்களாக, சிங்களத் தொலைக்காட்சிகளில் தெளிவான வார்த்தைப் பிரயோகங்களோடு தமிழர் நிலையை உரைத்து வந்தார். நேற்றுக் கூட மரணிக்கும் வேளையில் கூட, அவர் அம்பாந்தோட்டைக்கு எல்லாத் தடையையும் ஏற்படுத்தி விட்டு, கப்பலில் உணவு அனுப்புங்கள் என்று, மகிந்த அரசு யாழ்பாணத்தில் உணவுத் தடையைப் போட்டுக் கொலை செய்த விதத்தைதொலைக்காட்சியில் கண்டித்தவர்.

உண்மையில் மகிந்த அரசுக்கு, கருணா போன்ற இழிச்சவாய்க் கும்பல்களால் நிறைய பலன் இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலவேளை ஸ்கொட்லாந்தான் ரவிராஜை கொலைசெய்ய திட்டம் தீட்டிகொடுத்துதோ தெரியாது...

இவ்வளவுநாடுகள் இருக்க மகிந்த ஏன் ஸ்கொட்லாந்தை வரசொல்லி சொல்லவேண்டும்? பொதுவாகவே வெளிநாடுகள் என்ற சொல்லை பாவிச்சிருக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

கருணா குழு என்று ஒன்று இருப்பதற்கு. எந்த ஆதாரமுமில்லை!

இப்படியான கொலைகளுக்கு உரிமை கோருவதற்காக. அரசாங்கமும் அதன் அருவருடிகளும்தான் கருணா குழுவை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள் போல் உள்ளது. கருணா இப்போது இந்தியாவின் பிடியில் ஈன்டில்வ் உடன்தான் வாழ்ந்து வருகின்றார்..... அவருடன் சேர்ந்து ஓடியவர்களிடமேயே அவர் நம்பிக்கை வைக்க முடியாத அளவிலேயே மாறி மாறி போட்டு தள்ளி விட்டு பல பேர் புலிகளுடன் திரும்பி போய் சேர்ந்துவிட்டார்கள். இன்னமும் யார் நல்ல தருணத்துக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் தூயவன் மற்றும் சானக்கியன் எழுதிய கருத்துக்கள் நெருடல் இனைய தளத்தில் வந்து இருக்கின்றதே... :mellow:

தமிழர் தேசிய கூட்டமைப்பு எம்பி ரவிராஜ் கொலையை தொடர்ந்து கண்டனங்கள் தன்மீது பாயும் என்று இலங்கை அரசுக்கு நன்றாகவே தெரியும். அப்படி ஒரு நிலையை தவிர்த்து சர்வதேசம் மற்றும் ஊடங்களின் பார்வையில் தனக்கு கொலையுடன் தொடர்பேதும் இல்லை என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே வெளிநாட்டு அமைப்பான ஸ்கொட்லண்ட் யார்டின் உதவியை சிங்கள அரசு கோரியிருக்கின்றது போல தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே, மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், சிவராம், நடேசன் கொலைக் குற்றவாளிகளையும் பிடிச்சுத் தாறது நல்லது. அதற்கு முதல், அதற்கு என அமைத்த பொலிஸ் கமிசன், ஆணைக்குழு, எல்லாம் எங்கே என்று ஸ்கொட்லண்ட் பொலிஸ்காரர்கள் கண்டு பிடிச்சுத் தருவினமோ என்றும் விசாரித்துப் பாருங்கோ!

கொலைகாரர்களே, சட்டத்தைக் காப்பதாக வெளிக்கிட்டால், என்ன ஆகும் என்பதற்கு இலங்கை அரச பயங்கரவாதிகள் தான் சரியான உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் தூயவன் மற்றும் சானக்கியன் எழுதிய கருத்துக்கள் நெருடல் இனைய தளத்தில் வந்து இருக்கின்றதே... :lol:

யாரோ யாழ்கள உறவு ஒருத்தரின் விளையாட்டு எண்டு மட்டும் விளங்குது. :mellow::rolleyes::rolleyes:

உண்மையில், குற்றவாளிகளாக சிறிலங்கா அரசு இருக்கும்போது, நாங்கள் தமிழ்குழுக்களைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால், சிறிலங்கா அரசு தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுப்பது போலாகி விடும்.

டக்ளஸ் தேவனந்தாவை உடனே எம் கள உறவுகள் சந்தேகத்தோடு பார்த்தபோது அவ்வாறு தான் தோன்றியது.

யாழ் களத்தில் தூயவன் மற்றும் சானக்கியன் எழுதிய கருத்துக்கள் நெருடல் இனைய தளத்தில் வந்து இருக்கின்றதே... :mellow:

என் கருத்துக்கள் யாவருக்கும் பொதுவானவை. நான் கொண்ட அதே நோக்கோடு அதை பிரசுரிப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை. எம் மக்கள் சார்பில் கருத்துக்களை பகிர வாய்ப்பளித்த யாழ்களத்திற்க்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் பிரசுரிக்கும் டிஎமது கருத்துதுக்கள் செய்தித்தளங்களின் ஊடாக பலரைச் சென்றடைகது மகிழ்ச்சியான செய்திதானே.. நாம் ஒன்றும் பூட்டிய கருத்துக்களத்தினுள்ளே இரகசியங்களை கதைக்கவில்லையே..

யாழ் களத்தில் தூயவன் மற்றும் சானக்கியன் எழுதிய கருத்துக்கள் நெருடல் இனைய தளத்தில் வந்து இருக்கின்றதே... :D

இன்று சக்தி டிவியின் மின்னல் நிகழ்ச்சியில் ஒரு பா.உ தொலைபேசியூடாக ஈபிடிபி தலைவனையே குற்றம் சாட்டுவது போல் பேசியிருந்தார். இந்தக் கயவன் பணத்திற்கு பதவிக்கு வால்பிடிப்பதற்கு எதுவும் செய்யக் கூடிய கொடியவன். ஸ்கொட்லண்யாட் வரட்டும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கப் போகின்றவர்கள் யார்? பேரினத்தின் காவல் படைகள் தான். அதற்குள் இருக்கும் சில பெரிய தலைகளே இனவாதிகள். இவர்களால் தவறாக வழிகாட்ட முடியாதா? வெறும் கண் துடைப்பு இதுவும் பத்தோடு பதினோன்று தான்.

ஈழத்திலிருந்து

ஜானா :D:D

தொடரும் துரோகிகள் பட்டியலில் ரவிராஜ்!

எமது எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்தும் வன்னிபுலிகளின் அடிவருடிகாக செயற்பட்டுவரும் தமிழ் கூட்டமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் இன்றுகாலை கொழும்பில் வைத்து தமிழின விடியலிற்காக கொன்றொழிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி கிழக்கின் எமது தாயகத்தில் இருந்துகொண்டு வ.புலிகளிற்காக குரல்கொடுத்துவந்த ஜோசப் பரராஜசிங்கம் எமது தண்டனைக்கு உள்ளாகியதும், அதன் தொடர்ச்சியே இன்றைய ரவிராஜ் மீதான தாக்குதலாகும். தமிழ்மக்களின் இன்னல்களையோ அல்லது அவர்களது இடர்களையோ புரிந்துகொள்ளாமல். வெறுமனவே புலிகளிற்காக வக்காலத்து வாங்குவதும், வேடிக்கை காட்டுவதுமே மக்கள் பணி என்று கருதுகின்றீர்கள். கொழும்பில் அரச பாதுகாப்புடன் இருந்து கொண்டு எமது மக்களின் அவலங்களை புரிந்து கொள்ளாத இவர்கள் எல்லாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமா? கொழும்பு என்ன வன்னியில் இருந்தாலும் இவ் போலிப்பிரதிநிதிகளான உங்களிற்கு பாதுகாப்பில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். எமது இவ் இரண்டாவது எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் ஏனையவர்கள் செயற்படுவார்களேயானால் ஜோசப்பிற்கும் ரவிராஜிற்குமிடையே வழங்கப்பட்ட ஒருவருட கால அவகாசம் தங்களிற்கு கிடையாது. இதனை புரிந்துகொண்டு உடனடியாக புலிகளுடனான உறவினை விலக்கிக்கொண்டு உங்கள் குடும்பங்களுடன் எஞ்சிய காலங்களை கழிப்பது நல்லது. இல்லையேல் துரோகிகள் பட்டியலில் நீங்கள் அனைவரும் இணைக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சீறும்படை

கல்லடி

மட்டக்களப்பு

10.11.2006

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

கைக்குள்ளேயே கொலைகாரரை வைத்துக் கொண்டு பிறகு ஏன் தான் ஸ்கொட்லாண்டிடம் ஓடுகிறார்.

நல்ல கேள்வி. கண்துடைப்பு நாடகத்துக்குத்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.