Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடைகிறது தென்னாபிரிக்கக் கனவு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை உலகக் கிண்ணத்தைத் தூக்குவார்கள் என்று பலராலும் கருதப்பட்ட அணி. உலகின் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளரைக் கொண்ட அணி. தலை சிறந்த துடுப்பாட்டக் காரர்களையும், களத் தடுப்பாளர்களையும் கொண்ட அணி. இப்படிப் பலவிதமான பலரையும் கொண்ட அணி.

 

பலமுறை கிண்ணத்தைத் தூக்குவார்கள் என்று எதிர்வுகூறப்பட்டு எல்லாமுறைகளிலும் மிகவும் கேலித்தனமான முறைகளில் கிண்ணத்தைக் கோட்டைவிட்ட அணி. அதிலும் குறிப்பிடத்தக்க விடயம், வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும்கூட, அணித்தலைவரின் பிழையான கணக்கினால் (டக் வேர்த் லுயிஸைத்தான் சொல்கிறேன்)  அடுத்த கட்டத்திற்குப் போகக் கிடைத்த சந்தர்ப்பத்தை வேண்டாம் என்று தூக்கியெறிந்த அணி. இன்னொருமுறை இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் எடுத்தால் போதுமென்றிருக்க, லான்ஸ் குளூஸ்னர் இறுதி ஓவரின் முதலிரு பந்துகளிலும் 4, 4 ஓட்டங்களைக் குவித்து ஒரு ஓட்டமெடுத்தால் வெற்றி என்கிற நிலையிலிருந்து, தேவையில்லாமல் டொனால்ட் ரண் அவுட்டாகி ஆட்டமிழந்து தனக்குக் கிடைக்கவிருந்த அரிய சந்தர்ப்பத்தையும் தூக்கி இந்தாங்கோ என்று ஆஸி அணியிடம் கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டு நின்ற அணி.

 

நான் யாரைச் சொல்கிறேன் என்று இன்னும் யாருக்காவது சந்தேகமிருந்தால், அந்த அணி தென்னாபிரிக்கா என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

 

அப்படியே இந்தமுறையும் கடுமையான ஆர்ப்பாட்டங்களோடு களமிறங்கியிருக்கிறது தென்னாபிரிக்கா அணி. வழமைபோல கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தமது பாட்டைட்ப் பாடத் தொடங்கிவிட்டார்கள். அதாவது தென்னாபிரிக்கா இம்முறை கிண்ணத்தைத் தூக்கும் என்கிற அதே பாட்டு. அதற்கேற்றாப்போல அணிதலைவரும் அதிரடியாட்டம் ஆடுகிறார். 

 

இதுவரை இவர்கள் விளையாடிய 4 போட்டிகளில் இரண்டை மட்டும் இப்போது பார்க்கலாம். முதலாவது சிம்பாப்வேயுடனான போட்டி. இதில் டிவிலயர்ஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும் கூட பின்னால் வந்தவர்கள் அடித்தாடி 339 ஓட்டங்களைக் குவித்து வென்றார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டியது தென்னாபிரிக்கா முதலாவதாக துடுப்பெடுத்தாடியது.

 

அடுத்தது மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டி. சில வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் வைத்து மரண அடி கொடுத்த அதே மெற்கிந்திய அணியை தென்னாபிரிக்கா எதிர்கொண்டது. தங்களைக் கண்டாலேயே டிவிலியர்ஸ் உசாராகிவிடுவார், உடம்பு ரண களமாகிவிடும் என்று தெரிந்திருந்தும், மேற்கிந்திய பந்துவீச்சாளர்கள் அவரது ஹிட்டிங் சோனிற்குள்ளேயே பார்த்துப் போட்டார்கள். மீண்டும் அதே அடி, அடியென்றால் அடி, காட்டடி கம்மட்டியடி. எங்கே போட்டாலும் விளாசித் தள்ளினார் டிவிலியர்ஸ். மேற்கிந்திய பந்துவீச்சாளர்களுக்கு அவர் அடிக்கத் தொடங்கியவுடன் எப்படிப் பந்துவீசுவதென்பதுகூட மறந்து போயிற்று என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அப்படியொரு அடி. 408 ஓட்டங்களைக் குவித்துவிட்டு ஏலுமென்றால் அடியுங்கோ பாப்பம் என்று மேற்கிந்திய அணியிடம் கொடுத்தார்கள். உதெல்லாம் எங்களுக்குச் சரிப்பட்டு வராது என்று மேற்கிந்திய அணி, அந்த  வெண்டுகோளை எள்ளளவும் தொட்டுப் பார்க்கவில்லை. இறுதியில் மீண்டும் வென்றுவிட்டோம் என்று மார்தட்டியது தென்னாபிரிக்கா. இங்கேயும் கவனிக்கப்படவேண்டிய விடயம், தென்னாபிரிக்காவே முதலில் துடுப்பெடுத்தாடியது. 


இப்போது இவர்கள் விளையாடிய மீதமுள்ள 2 போட்டிகளுக்கு வருவோம்.

 

இந்த இரு போட்டிகளிலும் தென்னாபிரிக்காவுக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

 

 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும், சாப்பிடச் சென்றுவிட்டேன் இடையில்................

 

சரி, தென்னாபிரிக்காவின் மற்றைய இருபோட்டிகளையும் பார்க்கலாம்.

 

முதலில் இந்தியாவுடனான போட்டி.

 

இந்தப் போட்டியிலும் தென்னாபிரிக்கா இந்தியாவை பூ.. என்று ஊதித் தள்ளிவிடும். தென்னாபிரிக்காவின் ஸ்டெயினின் பந்துவீச்சின் முன்னால் இந்தியாவின் மட்டைப் புலிகள் வாலைச் சுருட்டி காலுக்குள் வைத்துக்கொள்வார்கள். டிவிலியர்ஸ் புகுந்து விளையாடப் போகிறார் என்றெல்லாம் வர்ணனையாளர்கள் தமது பாட்டிற்கு கனவெல்லாம் கட்டிக்கொண்டிருக்க நிதானமாக முதலில் துடுப்பெடுத்தாடத் தொடங்கியது இந்தியா. அட, வடை போச்சே என்று நாணயச் சுழற்சியில் இந்தியாவிடம் பிடிகொடுத்த டிவிலியர்ஸ் நினைத்திருக்கலாம். ஆனாலும் ஸ்டெயின் இருக்கிறார், ஆகவே மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நூற்றைம்பது ஓட்டங்களுக்குள் இந்தியாவை சுருட்டி விடலாம் என்று கணக்குப் பார்த்தபடி அவர் விளையாடியிருக்கலாம். 

 

அவர் நினைத்தவாறே 200 ஓட்டங்கள் புகழ் ரோகித் ஷர்மா டிவிலியர்ஸினாலேயே ஓட்டமெதுவும் பெறாமலிருக்க  பிட்சின் இடையே ஓடி விளையாடி ரண் அவுட்டாகிவிட, டிவிலியர்ஸின் கண்களில் அந்தக் கனவு பளிச்சிட்டிருக்கும். ஆனால் அந்த கனவை சில பொழுதுகளிலேயே கலைத்துவிட்டு தவானும் கோலியும் துடுப்பெடுத்தாடினார்கள். சரி, விட்டுப் பிடிக்கலாம் என்று டிவிலியர்ஸ் பார்த்திருக்க சர்ச்சைகளின் நாயகன் புகழ் கோலி 46 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அதே கனவு பளிச்சிட்டது டிவிலியர்ஸுக்கு. 

 

ஆனால் தவானும் கூட ஆட வந்த ரகானேயும் அவரின் கனவில் கல்லெறியத் தொடங்கினார்கள். 261 ஓட்டங்கள் பெற்றிருக்க தவான் ஆட்டமிழந்தபோது டிவிலியர்ஸின் தூக்கம் முற்றாகக் கலைந்திருந்தது. ஆனாலும் 308 ஓட்டங்களுக்கு மீதமுள்ள விக்கெட்டுகளையும் தென்னாபிரிக்கா புடுங்கிக் கொள்ள, இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறதென்று அவர் நினைத்திருக்கலாம். 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அவர் நினைத்ததுபோல இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் அவருக்கோ அவரது அணிக்கொ இந்தாங்கோ, அடியுங்கோ என்று பந்து வீசவில்லை. அதற்காக இந்தியப் பந்துவீச்சாளர்களை ஆகசாய சூரர்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது, எப்போதும்போலவே பந்துவீசினார்கள் என்று சொல்லலாம். ஆனால் தென்னாபிரிக்காவுக்கு இது புதுசாக இருந்தது. நாணயச் சுழற்சியில் வென்று எதிரணியை ஒரு வாட்டு வாட்டி விடுவோம் என்று எதிர்பார்த்திருந்த தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக் காரருக்கு இந்தியப் பந்து வீச்சாளர்களின் சாதாரன பந்துவீச்சுக் கூட எறிகுண்டு போல இருந்திருக்கும். 

 

புலெஸி மட்டுமே 55 ஓட்டங்களை தடவித் தடவி எடுக்க, மற்றையவர்கள் மைதானத்தில் நெடுநேரம் நிற்க விரும்பவில்லையோ என்னவோ, அதுதான் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்று கொன்டிருந்தார்கள். மேற்கிந்தியாவைக் கண்டால் அடி என்று புகுந்து விளையாடும் டிவிலியர்ஸின் விளையாட்டு இந்தியப் பந்து வீச்சாளர்களிடம் எடுபடவில்லை. 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு அவரும் வெளியேறினார். 

 

வெறும் 40 ஓவர்களில் 177 ஓட்டங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு தென்னாபிரிக்கா வெளியேறியது. 

 

தென்னாபிரிக்க உலகக் கிண்ண கனவின் சுவர்களில் வெடிப்புக்கள் தெரிய ஆரம்பித்தன அப்போது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பார்களே, அதுபோல இன்று பாக்கிஸ்த்தானுடன் விளையாடியது தென்னாபிரிக்கா. 

 

இந்தப் போட்டி பற்றி சொல்லமுதல் பாக்கிஸ்த்தான் பற்றிச் சொல்ல வேண்டும்.

 

தாம் எந்த அணியிடம் தோற்கக் கூடாது என்று விரும்புகிறார்களோ, தவறாமல் ஒவ்வொரு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் அந்த அணியிடமே (இந்தியாவிடம்) தோற்றுத்தான் போகிறது பாக்கிஸ்த்தான். 1996 இல் வெங்கடேஷ் பிரசாத்தின் பந்துக்கு 4 ஓட்டங்களை அடித்துவிட்டு பந்து பறந்து சென்ற திசையில் தனது மட்டையைக் காட்டி, "அடி எப்படி?" என்று அமீர் சொகெயில் கேட்டதும், அடுத்த பந்திலேயே அமீர் சொகயிலை பிரசாத் போல்ட் செய்து, "நீ போக வேண்டிய திசை அதுதான்" என்று கையைக் காட்டிக் கூறியதும் நினைவிலிருக்கு. ஆக இந்தப் பலப் பரீட்சையில் தவறாமல் பாக்கிஸ்த்தான் தோற்றுத்தான் வருகிறது. இவர்கள் இந்தப் போட்டியை ஏற்கனவே தீர்மானித்துவிட்டுத்தான் விளையாடுகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு அப்பப்ப வரும் ! சரி, அதை விடுவம் !

 

இண்டையான் போட்டி !

 

இந்தப் போட்டியிலும் தென்னாபிரிக்காவுக்கு முதலில் துடுப்பெடுத்தாட வரம் கிடைக்கவில்லை. பாக்கிஸ்த்தானே முதலில் துடுப்பெடுத்தாடியது. நிதானமில்லாத அணி, பொருத்தமான நேரத்தில் காலை வாரிவிடும் துடுப்பாட்டக் காரர்கள். களத்தடுப்பில் கோட்டைவிடும் வீரர்கள் என்கிற நாமத்தைச் சுமந்துகொண்டு போட்டிக்கு வந்திருந்தது பாக்கிஸ்த்தான் அணி. இதற்கு மாறாக, இந்தமுறை நிச்சயம் கிண்ணம் தென்னாபிரிக்காவுக்குத்தான், அட்டகாசமான துடுப்பாட்டக் காரர்கள், ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்கள், மின்னல்போன்ற களத்தடுப்பாளர்கள் என்கிற சுமக்க முடியாத நாமத்தைச் சுமந்துகொண்டு போட்டிக்கு வந்திருந்தது தென்னாபிரிக்கா. 

 

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், ஸ்கை தொலைக் காட்சியில் இந்தப் போட்டிக்கான நேரடி வர்ணனையை வழங்கிக் கொண்டிருந்தவர்களில் முன்னால் பாக்கிஸ்த்தான் அணித்தலைவர் ரமீஸ் ராஜாவும் ஒருத்தர். மீதி வர்ணனையாளர்கள் ஒன்றில் தென்னாபிரிக்கர்கள் அல்லது தென்னாபிரிக்கக் கனவை இன்றுவரை வளர்த்துக்கொண்டுவரும் வர்ணனையாளர்கள். 

 

ஆக, இந்த வர்ணனையாளர்களின் வர்ணனைகளுக்கு மத்தியில் பாக்கிஸ்த்தான் துடுப்பெடுத்தாடியது. 8 ஓவர்கள் விளையாடிய நிலையில் முதலாவது விக்கெட்டை பாக்கிஸ்த்தான் இழந்தது. உடனேயே ஆகா, பார்த்தீர்களா?? தென்னாபிரிக்காவின் பந்துவீச்சை, சும்மா அதிருதில்லை ? என்று கனவுக் கோட்டை கட்டுபவர்கள் புலகாங்கிதமடைய, ரமீஸ் ராஜாவுக்கோ கடுப்பு. ஆனாலும் அதை வெளியே காட்டாமல், பேஷ் பேஷ், போலிங்னா இததான் போலிங் ! என்று பொய்யாகப் புழுகிக் கொண்டிருந்தார். 

 

தென்னாபிரிக்கா பாக்கிஸ்த்தானின் துடுப்பாட்ட வரிசையில் அவ்வப்போது ஓட்டைகளைப்  போட்டுக் கொண்டு வந்தாலும் கூட பாக்கிஸ்த்தானும் அஹமட் ஷெசாட், மிஸ்பா, யூனுஸ் கான் போன்றவர்கலின் உதவியுடன் சிறுகச் சிறுக ஓட்டங்களைச் சேர்த்துக்கொண்டு வந்தது. முடிவில் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை மட்டும் பெற்றது பாக்கிஸ்த்தான். உலகின் முதலாவது சிறந்த பந்து வீச்சாளர் 3 விக்கெட்டுகலையும் உலகின் இரண்டாவது சிறந்த பந்து வீச்சாளர்கள் மீதமுள்ள 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

 

கனவு காண்பவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை. பார்த்தீர்களா?? நாம சொன்னோமில்ல ? பாக்கிஸ்த்தானை வெறும் 222 ஓட்டங்களுக்கு வீழ்த்தி விட்டார்கள். இனித்தான் நம்மட ஆட்டமிருக்கு. 30 ஓவர்களில் இந்த ஆட்டத்தை முடித்துவிடுவார்கள் என்று சொல்லாத குறையாக புழுகித் தள்ளினார்கள். 

 

தென்னாபிரிக்கா ஆட மைதானத்திற்குள் நுழைந்தது. முதல் ஓவரிலேயே ரெண்டாவது பந்தில் குயின்ரன் டி கொக் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதெல்லாம் சும்மா ஜுஜுபி, இன்னும் ஆட்டக் காரர்கள் இருக்கிறார்கள், பொறுத்திருந்து பாருங்கள் என்று தொடர்ந்தும் கனவுகண்டார்கள் தென்னாபிரிக்க ஆதரவாளர்கள்.ஆமலாவின் அதிரடியாட்டம் இதற்குக் கைகொடுக்கவே அவர்களின் மகிழ்ச்சி எல்லை கடந்தது. ஆனால் அமலாவும் அணி 62 ஓட்டங்கள் பெற்றிருக்க ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து புலெஸி, மில்லர், டுமினி என்று தென்னாபிரிக்காவின் நட்சத்திரங்கள் உதிர்ந்து கொட்டுப்பட ஆரம்பித்தன. மறுபுறத்தில் டிவிலியர்ஸ் தனது அமர்க்களமான ஆட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். தனது ஹிட்டிங் சோனிற்குள் பாக்கிஸ்த்தான் பந்துவீச்சாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ போட்ட பந்துகளுக்கு செமைச் சாத்து. 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 55 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் டிவிலியர்ஸும் ஆட்டமிழக்க தென்னாபிரிக்கா சுருண்டு கொண்டது. 33 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது தென்னாபிரிக்கா. 2003 இல் தென்னாபிரிக்காவின் காலை வாரிய அதே டக் வேர்த் லுயிஸ் கணக்கு இம்முறையும் அவர்கள் 29 ஓட்டங்களால் தோற்றதாக அறிவித்தது. 

 

ஆக, வெறும் நிச்சயமில்லாத பாக்கிஸ்த்தான் அணியுடனான போட்டியயிலும் தென்னாபிரிக்கா சொதப்பியது. அவர்களின் கனவுச்சுவரின்  வெடிப்புகள் ஓட்டைகளாக மாறத் தொடங்கின !

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை தென்னாபிரிக்கா 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறது. இதில்2 போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. அதனது வெற்றிகள் சுமாரான ஸிம்பாப்வே அணிக்கெதிராகவும், விளையாட்டில் அக்கறையில்லாத மேற்கிந்தியத் தீவு அணிக்கெதிராகவும் எதிராகவும் பெறப்பட்டவை. இந்த வெற்றிகள் கூட தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட முடிந்ததால் பெறப்பட்ட வெற்றிகள். இதே போட்டிகளில், குறைந்தது மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்கா இரண்டாவதாகத் துடுப்பெடுத்து ஆடியிருந்தால் முடிவு சிலவேளை வேறுமாதிரி இருந்தாலும் இருந்திருக்கும். 

 

தோற்ற இரு போட்டிகளிலும் இம்முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக் கூடியவை என்று இதுவரையிலும் கிரிக்கெட் வர்ணணையாளர்களால் வர்ணிக்கப்படாத இந்தியா மற்றும் பாக்கிஸ்த்தான் அணிகளுக்கெதிராகப் பெறப்பட்டவை. இந்த இருபோட்டிகளிலும் தென்னாபிரிக்கா இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடியது. இதில் வெளிப்படையாகத் தெரியும் தென்னாபிரிக்காவின் குறைபாடு என்னவென்றால், சாதாரண ஓட்ட எண்ணிக்கையைக் கூட சேஸ் செய்யும்போது அது தடுமாறுகிறது. அனுபவமில்லாத பல வீரர்களை மத்தி, இறுதி மத்தி வரிசையில் கொண்டிருக்கும் தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வரிசை அழுத்தத்திற்கு அடிபணிந்து தள்ளாடுகிறது. இந்தக் குறைபாடு இனிவரும் போட்டிகளில் எதிரணிகளுக்குச் சாதகமாக அமையலாம். 

 

அவுஸ்த்திரேலிய, நியுசிலாந்து மைதாங்களின் வேகப் பந்துவீச்சு நிமைகளுக்கு விளையாட திரனற்றவர்கள் என்று பொதுவாகவே மேற்கைத்தைய வர்ணணையாளர்களால் வர்ணிக்கப்படும் இந்தியா பாக்கிஸ்த்தான் அணிகளிடமே தென்னாபிரிக்கா அவமானகரமாகத் தோற்றிருக்கிறது. 

 

ஆனால், இந்த மைதானங்களின் சூரப் புலிகளான அவுஸ்த்திரேலியா நியுசிலாந்து அணிகளுடன் இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை தென்னாபிரிக்கா மோதவில்லை. இந்தியா பாக்கிஸ்த்தான் அணிகளுடனான போட்டிகளில் தென்னாபிரிக்கா விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது, நியுசிலாந்து அவுஸ்த்திரேலியாவுடனான அதன் போட்டிகள் எப்படி இருக்கலாம் என்பதை ஓரளவிற்கேனும் ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் கடந்த காலங்களில் அவுஸ்த்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்கா அனைத்துப் போட்டிகளிலும் அடிவாங்கியதும், நியுசிலாந்தணி அவர்களுக்கு தமது ஊரில் வைத்துப் பாடம் எடுத்ததும் நினைவில் இருக்கிறது. 

 

ஆக, ஒரு சாதாரண ( இது கொஞ்சம் ஓவரோ ???!!!!) அணியை, ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளி, பப்பா மரத்தில் ஏத்து ஏத்தென்று ஏத்தி, பிறகு குப்புற விழுத்தி உடம்பை ரணகளமாக்கி ஒரு வழிப்பண்னாமல்  இந்த வர்ணணையாளர்களும் நிபுணர்களும் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது. பாக்கிஸ்த்தான் அணியுடனான ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே தென்னாபிரிக்கா எந்த அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் என்று தொலைக்காட்சி வர்ணணையாளர்கள் எதிர்வு கூறத் தொடங்கிவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !

 

அட நிபுணர்களே, அவர்களை அவர்கள் போக்கில் ஆட விட்டுத்தான் பாருங்களேன். முதலில் குழு நிலைப் போட்டிகளில் வெல்லட்டும், பிறகு கால் இறுதி, அரை இறுதி, இறுதி என்று யோசிக்கலாம். 

 

பருத்தித்துறை ஊராம்...பவளக்கொடி பெயராம் !!!!!

 

அதுசரி, தென்னாபிரிக்கா வெல்வதில் எனக்கேன் கறள் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒரே காரணம், இவ்வளவு நடந்தபின்னரும் கூட தென்னாபிரிக்கா கிண்ணத்தைத் தூக்கும் என்கிற பயம்தான். இதனால் எனது அபிமான அணிக்கு இந்த முறை சந்தர்ப்பம் கிடைக்காது என்கிற பயம்!!!

 

எந்த அணியென்று மட்டும் கேட்க வேண்டாம் !

Edited by ragunathan

 

எந்த அணியென்று மட்டும் கேட்க வேண்டாம் !

 

அது எனக்கு தெரியுமே :icon_mrgreen::lol:

இன்று இவர்கள் தோல்வி அடைந்ததும் நன்மைக்கே :D

 

உங்கள் நேரத்துக்கும் ஆய்வுகும் நன்றி ரகு.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான வர்ணனை ரகு...! கீப் இட் அப்...!! என் பேனாவிலும் பச்சை மை முடிஞ்சுது...!!  :D  :icon_mrgreen:

 

ஆனாலும்  தென் ஆபிரிக்காதான் வெல்லும்...!  நான் அதை டிக் பண்ணிட்டன்...!!  :huh::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.