Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உறவு சுமேரியர் அம்மாவின் தந்தையார் காலமாகிவிட்டார்.

Featured Replies

தந்தையை இழந்து தவிக்கும் சுமேக்கும் அவர் குடும்பத்தினருக்கும்இ எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • Replies 82
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

அமரரான தமிழாலயத் தந்தை உயர்திரு. இராமலிங்கம் நாகலிங்கம் அவர்களின்

 

இறுதி வணக்க நிகழ்வில் யாழ்கள உறவுகள் சார்பாக திரு.பாஞ்ச், தமிழ்சிறி மற்றும் வாத்தியார்

 

ஆகியோர் கலந்து அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படங்கள்..

 

 

ny5zkw.jpg

 

 

11bmf49.jpg

 

 

10gi9mo.jpg

 

 

mvspa9.jpg

 

 

2i0vxg3.jpg

 

 

13z3pk.jpg

 

 

28cit5t.jpg

 

 

123xfeb.jpg

 

 

xfqdex.jpg

 

 

15mjzsy.jpg

 

 

107qnn9.jpg

 

 

படங்கள் : தமிழ்சிறி

 

உங்கள் தந்தையின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தையை இழந்து வாடும் சுமேரியருக்கும் அவர்  குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

சேயோன் யாழ்வேந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/MG79HQDIDzM

 

 

ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க..

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க..

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க..

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில்
புதியது இல்லை!

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை!

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை!

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை!

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே..

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக..

மண்ணில் பிறந்தது
மண்ணுடல் சேர்க..

எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக..

எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க..

பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை!

இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை!

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை..

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை..

கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை..

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை..

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்..

மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்..

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்..

வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்..

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்..

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்..

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்..

நித்திரை போவது
நியதி என்றாலும்..

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்..

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்..

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்..

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்..

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்..

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !

 

 

-வைரமுத்து

  • கருத்துக்கள உறவுகள்

என் தந்தையின் இழப்புக்காக இரங்கற் செய்தியைத் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

 நான் நாட்டில் இல்லாதபடியால் எதுவுமே தெரியாது.எனது செல்பேசியைக்கூடத்தொட்டுப்பார்க்கவில்லை.செல்பேசியை இயக்கிய போது சுமேரியரின் காணவில்லை என்ற செய்தியைத்தான் பார்த்தேன்.ஆனால் உங்களின் அப்பாவின் செய்தியை இப்போதுதான் படித்தேன் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

எனக்கும் பறக்க முன் தமிழ் சிறியை சந்திக்க வேண்டும் கணக்குகளை சரி பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டுதான்.....  :unsure:  :icon_mrgreen:

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6.4.2015 at 1:57 PM, BLUE BIRD said:

 நான் நாட்டில் இல்லாதபடியால் எதுவுமே தெரியாது.எனது செல்பேசியைக்கூடத்தொட்டுப்பார்க்கவில்லை.செல்பேசியை இயக்கிய போது சுமேரியரின் காணவில்லை என்ற செய்தியைத்தான் பார்த்தேன்.ஆனால் உங்களின் அப்பாவின் செய்தியை இப்போதுதான் படித்தேன் ஆழ்ந்த அனுதாபங்கள்.

எனக்கும் பறக்க முன் தமிழ் சிறியை சந்திக்க வேண்டும் கணக்குகளை சரி பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டுதான்.....  :unsure:  :icon_mrgreen:

காலம், கை கூடினால்....  சந்திக்க எனக்கும் ஆசை. நீலப் பறவை..  
கனடாவும், ஜேர்மனியும்... பத்து மணித்தியால பிரயாணம் தானே..... 
எங்கே... உங்களை, கனகாலம்... யாழ்கள பக்கம், காணவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.