Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வா கனகநாயகம் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரு செல்வா கனகநாயகம் ஆங்கில விரிவுரையாலார் ரொரன்ரோ பல்கலைக் கழகம் தமிழ் இலக்கிய வரலாரூ எழுதிய பேராசிரியர் வி செல்வநாயகம் அவர்கலாது மகனாவார், ஈழத்து தமிழ் கவிதை சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்களூள் முக்கியமானவர். 1970பதுகளின் பிற்பகுதியில் நான் யாழ் பல்கலைக் கழக மாணாவன்/மணவர் தலைவனாக இருந்தபோது அவருடைய நட்ப்புக் கிட்டியது. செல்வாவின் மனைவி திரு எங்கள் ஆங்கில விரிவுரையாளாராக இருந்தார். மொழிபெயர்ப்புகளூக்கூடாக  என்னையும் சேரனையும் புதுவை இரத்தினதுரையையும்  ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த பெருந்தகை.

 

மேலதிக தகவலுக்கு

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6630830.ece

 

 

EDITTED VERSION

TRIBUTE TO SELVA KANAGANAYAKAM

செல்வா கனகநாயகம் நினைவில்

-    வ.ஐ.ச.ஜெயபாலன்

 

பசித்த தாய்ப்புலிபோல

சொற்காடுகளில் அலைகிறேன்

உனக்கான அஞ்சலியைத் தேடி

 

செல்வா

திரை கடல்களுக்கு அப்பாலும்

என் செல்வங்களத் தேடவைத்த மாலுமிநீ.

ஏன் உன் கப்பல் திரும்பவில்லை

இம்மையின் திசை முடிவில் வழிதவறி

 எல்லை தாண்டிவிட்டாயா.

.

ஊகத்தில் மரணச் சடங்கை முடித்தவர்கள் போய்விட்டார்...

இன்னும் உன் உடனிருப்பில் திழைக்கிற திருமீது

தேய்ந்துபோன ஆறுதல் வார்த்தைகளை எப்படி நான் வீசுவது?

இன்னுமுன் காதலனின் நாவாய் திருப்பவில்லை.

எனினும் அஞ்சலியை எதிர்பார்க்காதே

 

செம்மண் தழுவிய மழை நீராய் உன் கைதழுவி

யாழ்பல்கலைக் கழகத்து முன்றலிலே

அவன் நடந்த அந்தப் பொன்நாட்க்கள்

ஒருபோதும் முடிவதில்லை.  

 

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பசித்த தாய்ப்புலிபோல

சொற்காடுகளில் அலைகிறேன்

உனக்கான அஞ்சலியைத் தேடி

 

அழகிய வரிகள்.  நல்ல கவிதையை பதிவு செய்தமைக்கு வாழ்த்துகள்!

கவிதையின் வரலாற்றுப் பின்னணி எனக்குத் தெரியவில்லை. மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செய்யோன் இதோ செல்வாபர்றீய சில தகவல்கள்.

 

திரு செல்வா கனகநாயகம் ஆங்கில விரிவுரையாலார் ரொரன்ரோ பல்கலைக் கழகம் தமிழ் இலக்கிய வரலாரூ எழுதிய பேராசிரியர் வி செல்வநாயகம் அவர்கலாது மகனாவார், ஈழத்து தமிழ் கவிதை சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்களூள் முக்கியமானவர். 1970பதுகளின் பிற்பகுதியில் நான் யாழ் பல்கலைக் கழக மாணாவன்/மணவர் தலைவனாக இருந்தபோது அவருடைய நட்ப்புக் கிட்டியது. செல்வாவின் மனைவி திரு எங்கள் ஆங்கில விரிவுரையாளாராக இருந்தார். மொழிபெயர்ப்புகளூக்கூடாக  என்னையும் சேரனையும் புதுவை இரத்தினதுரையையும்  ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த பெருந்தகை.

 

மேலதிக தகவலுக்கு

http://tamil.thehind...icle6630830.ece

நட்பின் அசைவுகள், இயங்குதல் இருக்கும் வரை நீளும்..

 

"ஒருபோதும் முடிவதில்லை" 

 

நினைவுப் பகிர்வுக்கு நன்றிகள் அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிஞர் நெதா. வாழ்த்துக்களூடன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா, ஒரு சிறந்த எழுத்தாளரைப் பற்றிய விவரங்களை எமக்கு தெரிவித்தமைக்கு நன்றி.

 

சேயோன் யாழ்வேந்தன்

Edited by seyon yazhvaendhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செய்யோன். ஆங்கில புலவன் செல்வா கனகநாயகம் மிகவும் முக்கியமானவர். அவர் இருந்தபோது அவரை நம்மவர்கள் கன்உகொல்ளாவுமில்லை நம் இலக்கிய மொழிபெயர்ப்புக்கு உதவி ஊக்குவிக்கவுமில்லை. அவர் மிகுந்த அர்பனிப்புடன் இயன்றதைச் செய்தார்.

 

சொந்த கலைஞர்களையும் அறிஞர்க்ளையும் பேணுவதையும், அவர்கள் பங்களிப்பை ஊக்குவிப்பதையும்  சிங்களவரிடமிருந்து கற்றூக் கொளாவேணும். இதுதான் அவர்களது வெற்றிகளின் இரகசியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிப்புயல் இனியவனுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஊகத்தில் மரணச் சடங்கை முடித்தவர்கள் போய்விட்டார்...

இன்னும் உன் உடனிருப்பில் திழைக்கிற திருமீது

தேய்ந்துபோன ஆறுதல் வார்த்தைகளை எப்படி நான் வீசுவது?

இதை நானும் வேறு சில மரணங்களின் போது உணர்திருக்கிறேன்.

அருமையான கவிதை.

செல்வா கனகநாயகம் அவர்களின் இழப்பு தங்களை வெகுவாகப் பாதித்துள்ளமையும்  அதன்  வலிகளும்   தங்களின் வரிகளில்  புரிகிறது. அவருக்கு எமது அஞ்சலியைத் இத்தால் தெரிவிப்பதுடன்.  தங்களின் அழகான வரிகளுக்கும் சிறப்பான உவமைகளுக்கும்  எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

பசித்த தாய்ப்புலிபோல

சொற்காடுகளில் அலைகிறேன்

உனக்கான அஞ்சலியைத் தேடி

Edited by Sembagan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி 

goshan_che நன்றி Sembagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.