Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாளை யாழ் செல்கிறார் ரணில்: விக்கினேஸ்வரனுடனான சந்திப்பு திட்டமிட்டு தவிர்ப்பு

Featured Replies

ranil-wiki-00.jpg?resize=600%2C300

 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் விஜயமாக நாளை வடக்­கிற்கு விஜயம் செய்­ய­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு பிர­தமர் செல்­ல­வுள்ளார்.

 

யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ள ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கமாட்டார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், முதலமைசரின் சந்திப்பு திட்டமிட்டமுறையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

இனப்படுகொலை தொடர்பாக வடமாகாண சபை நிறைவேற்றிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சரை ‘பொய்யர்’ எனவும் வர்ணித்திருந்தார்.

 

இந்த நிலையில் கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் யாழ்ப்பாணம் சென்ற ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சருடன் பேசுவதைத் தவிர்த்துக்கொண்டார். இருவருக்கும் இடையில் பனிப்போர் ஒன்று இடம்பெறுவதை அப்போது அவதானிக்க முடிந்தது.

 

இந்த நிலையில்தான் வடபகுதியில பல நிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சருடன் பேசுவதைத் தவிர்த்துக்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்­களில் யாழ்ப்­பா­ணத்தில் பல நிகழ்­வு­களில் கலந்து கொள்­ள­வுள்­ள­துடன், முக்­கிய பல பிர­மு­கர்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளார். ஞாயிறு தினத்­தன்று கிளி­நொச்­சியில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­திக்­க­வுள்­ள­து­டன், முல்­லைத்­தீ­விற்கும் பிர­தமர் விஜயம் செய்­ய­வுள்ளார்.

 

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பிறகு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ரல சிறி­சேன ,முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ,பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய மூவரும் கடந்த திங்­கட்­கி­ழமை வடக்­கிற்­கான விஜ­யத்தை மேற்­கொண்­டனர்.இந்­நி­லையில் பிர­தமர் மாத்­திரம் நாளை வடக்­கிற்கு விஜயம் செய்­ய­வுள்­ளமை விஷேட அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

 

இதன்­படி வௌ்ளிக்­கி­ழ­மை­யான நாளை யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நல்லுர் கோயில், நாவலர் ஜூம்மா மஸ்ஜித் ,மற்றும் ஆதினம் தேவஸ்­தானம் ஆகிய வணக்­கஸ்­த­ளங்­க­ளுக்கு சென்று வழி­பா­டு­களில் ஈடுப்­ப­ட­வுள்ளார்.மேலும் யாழ் .மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம், தென் இந்­திய அருட்­தந்தை டெனியல் தியா­க­ராஜா ஆகிய மதத்­த­லை­வர்­களின் ஆசி­யையும் பெற­வுள்ளார்.

 

இந்த விஜ­யத்தின் போது மீள்­கு­டி­யேற்ற வேலைத்­திட்டம் மற்றும் புனர்­வாழ்வு பெற்ற இளை­ஞர்கள் தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டிலும் பிர­தமர் பங்கு கொள்­ள­வுள்ளார்.மேலும் பெண்­களின் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­திக்­க­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கர்ப்­பி­ணித்­தாய்­மார்­க­ளுக்கு போசாக்கு உணவு வழங்கும் வேலைத்­திட்­டத்­திலும் கலந்து கொள்­ள­வுள்ளார்.அத்­தோடு மீன­வர்­க­ளையும் சந்­தித்து பேச­வுள்ளார். இதன் பின்னர் பருத்­தி­து­றை­யி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யாக கரு­தப்­படும் ஹார்ட்லி கல்­லுரி நிக­ழ­வொன்­றிலும் கலந்து கொள்­ள­வுள்ளார்.

 

இதே­வேளை சனிக்­கி­ழமை யாழ் மாவட்ட தேசிய பாட­சாலை அதி­பர்­களை சந்­தித்து தற்­போது மாவட்ட பாட­சா­லையில் காணப்­படும் பிரச்­சினை குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்க வடக்கு விஜ­யத்­தின்­போது நெடுந்­தீ­விற்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.

 

அத்­தோடு இந்த விஜ­யத்தின் போது பலாலி படைத்­த­லை­மை­ய­கத்­திற்கு சென்று பொலிஸ், விமா­னப்­படை உள்­ளிட்ட முப்­படை அதி­கா­ரி­க­ளுடன் விஷேட பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். மேலும் பலாலி பாது­காப்பு தளத்­தையும் பார்­வை­யி­ட­வுள்ளார். இதனை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ,கிளி நொச்­சிக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.

 

ஞாயிற்று கிழமை காலை 9.30 மணி­ய­ளவில் கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­திக்­க­வுள்ளார். இதன்­போது அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.

 

பிர­தமர் ரணில் வி்க்கிர­ம­சிங்­கவின் மூன்று நாள் விஜ­யத்தில் இறுதியாக முல்லைதீவிற்கு சென்று அங்குள்ள பொது மக்களை சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே இந்த விஜயத்தினை பிரதமர் முன்னெடுக்கவுள்ளமை விஷேட அம்சமாகவே கருதப்படுகிறது.

 

http://tamilleader.com/?p=47861

Edited by கலையழகன்

  • கருத்துக்கள உறவுகள்

இதன்­படி வௌ்ளிக்­கி­ழ­மை­யான நாளை யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நல்லுர் கோயில், நாவலர் ஜூம்மா மஸ்ஜித் ,மற்றும் ஆதினம் தேவஸ்­தானம் ஆகிய வணக்­கஸ்­த­ளங்­க­ளுக்கு சென்று வழி­பா­டு­களில் ஈடுப்­ப­ட­வுள்ளார். மேலும் யாழ் .மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம், தென் இந்­திய அருட்­தந்தை டெனியல் தியா­க­ராஜா ஆகிய மதத்­த­லை­வர்­களின் ஆசி­யையும் பெற­வுள்ளார்.

 

ஆரியகுளத்தடி புத்தவிகாரை, நயினாதீவு புத்தவிகாரை மற்றும் புதிதாக முளைத்த விகாரைகளைப்பற்றி ஏதும் குறிப்பிடவில்லையே. பிர­தமர் ரணில் வி்க்கிர­ம­சிங்­க திரும்பக் கொழும்பு செல்லவேண்டும். தேரர்கள் குழம்பாமல் இருந்தால் சரி. 
  • கருத்துக்கள உறவுகள்

மாவை கூப்பிட்டாமலே போய் குறுகிக் குனிவார்..!!  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
ரணில் தனது  சொந்த முகத்தை பட்ட பகலில் காட்டினாலும் ..
தமிழன் பார்க்க போவதில்லை .....
 
 
ரணில் வந்தால் .....
இனப்பிரச்சனை அதோடு முடியும் என்று வரும் தேர்தலில் 
பொங்கோ ...பொங்கோ .... என்று யாழ் களத்திலேயே பொங்குவார்கள். 
 
பொங்கல் சாப்பிட சரியான இனம் தமிழன்தான். 

வட மாகாண முதலமைச்சரை புறக்கணிக்கும் 
ரணிலை 
உண்மையான தமிழன் யாரும் சந்திக்க போக மாட்டான்.
 
ஆனால் இப்போ போபவர்கள்தான் ராஜ தந்திரிகளம்.
தமிழ் அகாரதியை முதலில் திருப்பி எழுதோணும் ..... ஒரே குழப்பமாக இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.