Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுபடியும் உனக்கு மகனாய் பிறக்க வேண்டும்

Featured Replies

அம்மா.

உன்னை நினைக்கும்

போது எனக்குள்

எல்லா நரம்பும் இரத்தத்தை

கடத்தவில்லை – உன் உருவத்தையே

இரத்தமாய் கடத்துகிறது ….!!!

 

பிள்ளை பருவத்தில்

செல்ல காயம் வந்தால் கூட

விளையாட்டுக் காயங்கலாக

எடுக்காமல் -உன் கண்ணுக்கு

திரியை வைத்து விடிய விடிய

விளக்காய் எரிவாயே

தாயே ….!!!

 

சிறு வயதில் எல்லோருக்கும்

பசியதிகம் -பள்ளி விட்டு வந்து

படாத பாடு படுத்திவிடுவேன்

உன் காலை உணவை எனக்காக

வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய்

தாயே ……!!!

 

என் புத்தகச் சுமை

உன் வலது தோலில் சுமப்பாய் …

செருப்பில்லாத பாதங்களேடு….

இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய்.

வீடு வந்தவுடம் களைத்து விட்டாய்

மகனே என்று -உன் களைப்பை

பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு

தாயே …..!!!

 

அ – வரிசையில் சொற்கள் சொல்லடா

அம்மா என்பேன் -உலகிலேயே

அப்படி சொன்ன முதல் பிள்ளை

என்பது போல் இனிமேல் யாரும்

சொல்ல மாட்டார்கள் என்பது போல்

உள்ளம் குளிர்வாய் ..

தாயே …..!!!

 

நான் பெற்ற சின்ன வெற்றிகளை

உலகசாதனைபோல் ஊர் முழுக்க

தம்பட்டம் அடிக்கும் -உன்

கதையை மற்றவர்கள் -அலட்டல்

என்று சொல்வார்கள் -எனக்கு

அதுதான் தாயே எனக்கு -உன்

ஊட்ட பானம்

தாயே ….!!!

 

வேலை தேடும் வயதில்

வெறும் கையோடு வருவேன்

எல்லோர் முகத்திலும் சோர்வு

தாயே -உன் முகத்தில் மட்டும்

எதுக்கடா கவலை படுற

நாளை கிடைக்குமடா மகனே

என்று – ஆறுதல் கரமானது

நீட்டியது உன்னை தவிர யார்

தாயே ……!!!

 

எனக்கு வேலை கிடைத்தபோது

நான் வெறுமனே மகிழ்ந்தேன்

நீயோ உயிரை உருக்கி மகிழ்ந்தாய்

முதல் காசு எடுத்து உன்

முந்தானையில் முடிந்து

கோயிலுக்கு அர்ச்சனை செய்தாயே

தாயே …..!!!

 

எப்படியெல்லாம் வாழ்ந்த நான்

இப்போ தாயே நீயில்லாமல்

வாழும் உலகம் – மனிதரே

வாழாத செவ்வாய் கிரகத்தில்

வாழ்வதுபோல் இருக்கு

தாயே ….!!!

 

தாயே உன்னைப்போல்

போலியில்லா முகம் வேண்டும்

எதிர் பார்ப்பில்லாத அன்பு வேண்டும்

தியாகத்தில் எல்லையற்ற கடலே

மறுபடியும் உனக்கு மகனாய்

நான் பிறக்க வேண்டும் வா …

தாயே …..!!!

 

  • கருத்துக்கள உறவுகள்

-----

தாயே உன்னைப்போல்

போலியில்லா முகம் வேண்டும்

எதிர் பார்ப்பில்லாத அன்பு வேண்டும்

தியாகத்தில் எல்லையற்ற கடலே

மறுபடியும் உனக்கு மகனாய்

நான் பிறக்க வேண்டும் வா …

தாயே …..!!!

 

கவிப்புயல் இனியவன், உங்கள் கவிதையை.. வாசித்து, கண்கள் கலங்கி விட்டது.

தாய்க்கு.... நிகர், இந்த உலகத்தில் எதுவுமில்லை.

எனது, அம்மாவின் வயிற்றில்.... மீண்டும் மகனாக பிறக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாப் பிள்ளையின் அம்மாக் கவிதை ... வாழ்த்துக்கள் கவிப்புயல்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உருக்கமான கவிதை .

அம்மா கடவுளுக்கும் மேலானவர் . அம்மா தரும் உண்மையான அன்பை வேறு எவரிடமும் பெற முடியாது .

நானும் சில காலங்களுக்கு முன்னர் அம்மா பற்றி ஒரு கவிதையை வடித்திருந்தேன் . உங்களுக்கு பரவாயில்லை என்றால் எனது

கவிதையை இங்கே இணைத்துவிடுகிறேன் . உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் உடனே நீக்கி விடுவேன் .

எனக்காக வாழும் அம்மா நீ

அன்பும் நீ அம்மா

ஆசையும் நீ அம்மா

ஆருயிரை தந்தவளும் நீ அம்மா

அந்த ஆண்டவனும் நீயே அம்மா

 

நெஞ்சை பிளக்கும் துயரம் வந்தாலும்

நிலவாய் நின்று ஒளி தருவாயே

நெருப்பாய் நானும் கொதித்தெழுந்தாலும்

நீராய் தணலை அடக்கி விடுவாயே

 

பத்தும் மறக்கும் பசி எழுந்தாலே

பகல் இரவு பார்த்தாய் இல்லை

பரிவுடன் வாழ்வு தந்த - அந்த

பாரி வள்ளலும் நீ தானே அம்மா

 

காதலில் வீழ்ந்தாலும்

களியாட்டங்களில் மூழ்கினாலும்

கயவனாய் மாறினாலும் - அதனால்

கவலையில் நீ தவித்தாலும்

 

உத்தமன் என் பிள்ளை என்று

ஊரையே விரட்டி அடிப்பாய்

உயிரையே கொடுப்பாய்

உறக்கம் தனை மறப்பாய்

 

பாரெங்கும் தேடினாலும்

பாரினில் உண்டோ உன்னைப்போல்

பாசத்தை மட்டுமே பாலாக்கி

பருக்குவதற்க்கு வேறுயாருமுண்டோ  உன்னைப்போல்

 

ஊனை உருக்கினாய்  

உயிரை கொடுத்தாய்

உலகத்தை காட்டினாய்

உலகில் வாழச் சொன்னாய்    

 

அந்த ஆண்டவனே அம்மா உன்னிடம்

அடைக்கலம் கொள்கையில்

அடியேன் என்னால் முடியுமா உன்னிடத்தில்

ஆணவத்துடன் நடந்துக்கொள்ள  

 

எனக்காக வாழும் அம்மாவே  நீ

ஏழ் பிறப்பிலும் ஆதரிப்பாய் என்னை நீ

--- மீரா குகன்

 

 

பிகு . ஆண் கவி போல் எழுதியிருந்தாலும் , நான் பெண் தான் .

தாயே உன்னைப்போல்

போலியில்லா முகம் வேண்டும்

எதிர் பார்ப்பில்லாத அன்பு வேண்டும்

தியாகத்தில் எல்லையற்ற கடலே

மறுபடியும் உனக்கு மகனாய்

நான் பிறக்க வேண்டும் வா …

தாயே …..!!!

அமைதியாய் இருந்த மனங்களை அம்மா நினைவாகப் புயல் வீசி,

அலைகளை எழுப்பி வேடிக்கை பார்க்கிறார்  கவிப்புயல்.  வாழ்த்துகள்.

 

 

  • தொடங்கியவர்

கவிப்புயல் இனியவன், உங்கள் கவிதையை.. வாசித்து, கண்கள் கலங்கி விட்டது.

தாய்க்கு.... நிகர், இந்த உலகத்தில் எதுவுமில்லை.

எனது, அம்மாவின் வயிற்றில்.... மீண்டும் மகனாக பிறக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.

இந்த கவிதை எழுதும் போதும் இப்போதும் என் கண்களில் வரும் கண்ணீரை நானும் மறைந்த தாயும் 
தான் புரிவோம் இது கவிதை இல்லை என்னை பொருத்தவரை உச்ச கட்ட உணர்வு 
 
தாயை மதிப்பவர்கள் நினைப்பவர்கள் தெய்வத்தோடு வாழ்கிறார்கள் என்பது என் கருது 

அம்மாப் பிள்ளையின் அம்மாக் கவிதை ... வாழ்த்துக்கள் கவிப்புயல்...!

இந்த கவிதை எழுதும் போதும் இப்போதும் என் கண்களில் வரும் கண்ணீரை நானும் மறைந்த தாயும் 
தான் புரிவோம் இது கவிதை இல்லை என்னை பொருத்தவரை உச்ச கட்ட உணர்வு 
 
தாயை மதிப்பவர்கள் நினைப்பவர்கள் தெய்வத்தோடு வாழ்கிறார்கள் என்பது என் கருது 
  • தொடங்கியவர்

உருக்கமான கவிதை .

அம்மா கடவுளுக்கும் மேலானவர் . அம்மா தரும் உண்மையான அன்பை வேறு எவரிடமும் பெற முடியாது .

நானும் சில காலங்களுக்கு முன்னர் அம்மா பற்றி ஒரு கவிதையை வடித்திருந்தேன் . உங்களுக்கு பரவாயில்லை என்றால் எனது

கவிதையை இங்கே இணைத்துவிடுகிறேன் . உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் உடனே நீக்கி விடுவேன் .

எனக்காக வாழும் அம்மா நீ

அன்பும் நீ அம்மா

ஆசையும் நீ அம்மா

ஆருயிரை தந்தவளும் நீ அம்மா

அந்த ஆண்டவனும் நீயே அம்மா

 

நெஞ்சை பிளக்கும் துயரம் வந்தாலும்

நிலவாய் நின்று ஒளி தருவாயே

நெருப்பாய் நானும் கொதித்தெழுந்தாலும்

நீராய் தணலை அடக்கி விடுவாயே

 

பத்தும் மறக்கும் பசி எழுந்தாலே

பகல் இரவு பார்த்தாய் இல்லை

பரிவுடன் வாழ்வு தந்த - அந்த

பாரி வள்ளலும் நீ தானே அம்மா

 

காதலில் வீழ்ந்தாலும்

களியாட்டங்களில் மூழ்கினாலும்

கயவனாய் மாறினாலும் - அதனால்

கவலையில் நீ தவித்தாலும்

 

உத்தமன் என் பிள்ளை என்று

ஊரையே விரட்டி அடிப்பாய்

உயிரையே கொடுப்பாய்

உறக்கம் தனை மறப்பாய்

 

பாரெங்கும் தேடினாலும்

பாரினில் உண்டோ உன்னைப்போல்

பாசத்தை மட்டுமே பாலாக்கி

பருக்குவதற்க்கு வேறுயாருமுண்டோ  உன்னைப்போல்

 

ஊனை உருக்கினாய்  

உயிரை கொடுத்தாய்

உலகத்தை காட்டினாய்

உலகில் வாழச் சொன்னாய்    

 

அந்த ஆண்டவனே அம்மா உன்னிடம்

அடைக்கலம் கொள்கையில்

அடியேன் என்னால் முடியுமா உன்னிடத்தில்

ஆணவத்துடன் நடந்துக்கொள்ள  

 

எனக்காக வாழும் அம்மாவே  நீ

ஏழ் பிறப்பிலும் ஆதரிப்பாய் என்னை நீ

--- மீரா குகன்

 

 

பிகு . ஆண் கவி போல் எழுதியிருந்தாலும் , நான் பெண் தான் .

உருக்கமான கவிதை .

அம்மா கடவுளுக்கும் மேலானவர் . அம்மா தரும் உண்மையான அன்பை வேறு எவரிடமும் பெற முடியாது .

நானும் சில காலங்களுக்கு முன்னர் அம்மா பற்றி ஒரு கவிதையை வடித்திருந்தேன் . உங்களுக்கு பரவாயில்லை என்றால் எனது

கவிதையை இங்கே இணைத்துவிடுகிறேன் . உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் உடனே நீக்கி விடுவேன் .

 

என்ன தாயே 
உங்கள் கேள்வி இந்த உலகில் எனது உனது என்ற வேறுபாடு அறியாதவன் வார்த்தைகள் 
எல்லாமே பிரபஞ்ச்சத்தில் இருந்து எடுக்கபட்டது . நான் அம்மா கவிதை எழுத நீங்ககள் எழுதிய கவிதையை 
நீங்க சொல்வேனா ...? அப்போ நான் எழுதிய கவிதை வெறும் வரியா ...? உங்களை போல் நீங்கள் எழுதியது போல் உணர்வுதானே ....
 
அம்மா உங்கள் கவிதை மிக மிக அழகாக இருக்கிறது 
தாயை பற்றி யார் கவிதை எழுதினாலும் அற்புதமாய் இருக்கும் 
நன்றி நன்றி 
  • கருத்துக்கள உறவுகள்

தாயே உன்னைப்போல்
போலியில்லா முகம் வேண்டும்
எதிர் பார்ப்பில்லாத அன்பு வேண்டும்
தியாகத்தில் எல்லையற்ற கடலே
மறுபடியும் உனக்கு மகனாய்
நான் பிறக்க வேண்டும் வா …
தாயே …..!!!

 

கவிதைக்கு நன்றி இனியவன்.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உருக்கமான கவிதை .

அம்மா கடவுளுக்கும் மேலானவர் . அம்மா தரும் உண்மையான அன்பை வேறு எவரிடமும் பெற முடியாது .

நானும் சில காலங்களுக்கு முன்னர் அம்மா பற்றி ஒரு கவிதையை வடித்திருந்தேன் . உங்களுக்கு பரவாயில்லை என்றால் எனது

கவிதையை இங்கே இணைத்துவிடுகிறேன் . உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் உடனே நீக்கி விடுவேன் .

 

என்ன தாயே 
உங்கள் கேள்வி இந்த உலகில் எனது உனது என்ற வேறுபாடு அறியாதவன் வார்த்தைகள் 
எல்லாமே பிரபஞ்ச்சத்தில் இருந்து எடுக்கபட்டது . நான் அம்மா கவிதை எழுத நீங்ககள் எழுதிய கவிதையை 
நீங்க சொல்வேனா ...? அப்போ நான் எழுதிய கவிதை வெறும் வரியா ...? உங்களை போல் நீங்கள் எழுதியது போல் உணர்வுதானே ....
 
அம்மா உங்கள் கவிதை மிக மிக அழகாக இருக்கிறது 
தாயை பற்றி யார் கவிதை எழுதினாலும் அற்புதமாய் இருக்கும் 
நன்றி நன்றி 

 

 

 

 

 

உங்கள் பெருந்தன்மைக்கு மிகவும் நன்றி .நீங்கள் என் கவிதையை பாராட்டியதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .

Edited by Meera Kugan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 

 

 

உங்கள் பெருந்தன்மைக்கு மிகவும் நன்றி .நீங்கள் என் கவிதையை பாராட்டியதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .

 

:)  :)  :)  :)  :)  :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன். தாயின் அணைப்பில் மட்டுமே வளர்ந்தவன். தாயின் அன்பில் தாயைமட்டும் காணவில்லை. தந்தையையும் கண்டேன்.    

  • தொடங்கியவர்

நான் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன். தாயின் அணைப்பில் மட்டுமே வளர்ந்தவன். தாயின் அன்பில் தாயைமட்டும் காணவில்லை. தந்தையையும் கண்டேன்.    

அப்பாவாகவும் அம்மாவாகவும் இருக்க கூடிய ஆற்றல் அம்மாவால் தான் முடியும் 
நன்றி நன்றி 
உங்கள் உணர்வை பதிவு செய்தமைக்கு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.