Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

66 நாட்கள் கடலில் தவித்தவர் உயிருடன் மீட்பு

Featured Replies

150403034843_louis_jordan_sailor_rescued

ஜெர்மன் நாட்டுக் கப்பல் ஒன்றின் மூலம் மீட்கப்பட்ட ஜோர்டன், ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

சுமார் இரண்டு மாதங்களாக கடலில் தன்னந்தனியாகத் தவித்துவந்த ஒருவர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். மீன்களை உண்டும் மழை நீரைக் குடித்தும் அவர் உயிரைத் தக்கவைத்திருந்தார்.
 
வியாழக்கிழமையன்று நார்த் கரோலினாவுக்கு 200 மைல் தொலைவில் தவித்துக்கொண்டிருந்த லூயிஸ் ஜோடர்ன் என்ற 37 வயது நபரை அந்த வழியாகச் சென்ற ஜெர்மன் நாட்டு டேங்கர் கப்பல் ஒன்று பார்த்தது.
அவர் சென்ற 35 அடி நீளமுடைய படகு தலைகீழாகக் கவிழ்ந்துவிடவே, அதன் முதுகுப் பகுதியில் அமர்ந்திருந்த அவர், இப்போது மீட்கப்பட்டுள்ளார்.
ஜனவரி மாத இறுதியில் அவர் காணாமல் போய்விட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஜோர்டன் மீட்கப்பட்ட பிறகு, அவரிடம் பேசிய, அவரது தந்தை, "நான் உன்னை இழந்துவிட்டேன்" என்றே நினைத்தேன் என்று கூறினார்.
 
150403023823_sp___louis_jordan_640x360_a
66 நாட்களுக்கு மீன்களையும் மழை நீரையும் அருந்தியே ஜோர்டன் தன் உயிரைத் தக்கவைத்திருந்தார்.
 
ஜெர்மன் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்தபடி தந்தையிடம் பேசிய ஜோர்டன், தான் இப்போது நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
அட்லாண்டிக் கடலில் தவித்துவந்த ஜோர்டன், மீன்களை பச்சையாக உண்டும், மழை நீரைக் குடித்தும் உயிர் பிழைத்திருந்ததாக மியாமியிலிருக்கும் கடலோரக் காவல் படையின் அதிகாரியான ரியான் தாஸ் கரோலினாவின் செய்தித் தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
 
ஹுஸ்டன் எக்ஸ்பிரஸ் என்ற ஜெர்மானியக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம் விர்ஜீனியாவின் நார்ஃபோக்கில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுபோல, ஒருவர் தாக்குப்பிடித்ததில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
தெற்குக் கரோலினாவில் இருக்கும் கான்வே என்ற இடத்திலிருந்து தன்னுடைய ஏஞ்சல் என்ற படகில் மீன் பிடிப்பதற்காக ஜனவரி 23ஆம் தேதி அவர் புறப்பட்டார்.
ஆனால், அந்தப் படகு ஏன் கவிழ்ந்தது என்பது தெளிவாகவில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்

அவரது படகு கவிழ்ந்த பின்பும்... அதன், முதுகுப் பகுதியில் இருந்து... 66 நாட்களாக, தனது உயிரை தக்க வைத்துள்ளார்.
ஒழுங்கான நித்திரை கூட இல்லாமல்... மிகவும் கடினமாக நாட்களாக அவை இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு நாட்களும் அவர் ஒரு பெரிய அலையையோ, சுறா, திமிங்கிலம் போன்றவற்றைச் சந்திக்காதது அவைகளின் தூரதிஸ்டமும் அவரின் அதிஸ்டமுமே...!

  • கருத்துக்கள உறவுகள்

All is lost படக் கதைபோல் இருக்கு.. :o

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் கப்பல், அமெரிக்கா வரை வந்து.... அவரை காப்பாற்ற வேண்டும் என்று அவரின் தலையெழுத்து என்றால்.
66 நாட்கள்  கடலில் தத்தளிக்கத் தான் வேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

நம்புகிற மாதிரி இல்லை

ஏதோ இருக்கு......? :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.