Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் பல மில்லியன் டொலர் ஊழல்கள் கண்டுபிடிப்பு , விசாரணைக் குழுவினர் அதிர்ச்சி

Featured Replies

 

air%20lanka3_CI.jpg
.இந்த ஊழல்கள் விசாரணைக் குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளன - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட குழுவினர் முன்னைய ஆட்சிகாலத்தில் அந்த விமானச்சேவை தொடர்பாக இடம்பெற்ற பல மில்லியன் டொலர் ஊழல்கள் குறித்து கண்டுபிடித்துள்ளனர். இந்த ஊழல்கள் அந்த  குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

விமானத்துடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் பொறுப்பை யாருக்கு வழங்குவது போன்ற விடயங்களில் ஆரம்பித்து ஊழல் சகல விடயங்களிலும் இடம்பெற்றுள்ளது.தகுதியற்ற பணியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இது தவிர பாதுகாப்பு நடைமுறைகளில் பாரிய மீறல்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட விசாரணைகளை மேற்கொண்ட மூத்த சட்டத்தரணி  ஜே.சி வெலியமுன தலைமையிலான குழுவினர் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் தலைவர் நிசாந்த  விக்கிரமசிங்க பாரிய அதிகார துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இளம்பணிபெண்கள் குறித்து அவர் கொண்டிருந்த ஆர்வம் ஏற்கனவே நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த விமானசேவையின் நிலையை மேலும் மோசமானதாக்கியுள்ளது.

 

nishantha_w_b1.jpg

ஸ்ரீலங்கன் விமானசேவை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு செலவு குறைவான வழிமுறைகள் காணப்பட்ட போதிலும் முன்னைய அரசாங்கம் 2.3 பில்லியன் செலவில் புதிய விமானங்களை கொள்வனவு செய்தல் போன்ற நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக முழுமையான குற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ள வெலியமுன குழுவினர், முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான நிசாந்த விக்கிரமதுங்கவை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைசெய்துள்ளது.

 

Nishantha_Wickramasinghe_China_kit1.jpg

முன்னாள் தலைவர் நிசாந்த  விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி  கபில சந்திரசேன ஆகியோர்தங்களது பாவனைக்காக அதநவீன ஆடம்பர விளையாட்டு கார்களை போலியான காரணங்களை , போலியான ஆவணங்களை பயன்படுத்தி பெற்றுக்கொண்டமையும் தெரிய வந்துள்ளது. இது தவிர ஆடம்பர கார்கள் பலவற்றையும் அவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

எனினும் இவற்றைவிட புதிய விமான கொள்வனவு மற்றும்,எயர் டக்சி சேவையை ஆரம்பித்தல் போன்ற நடவடிக்கைகளிலேயே மிகவும் பாரதூரமான ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. பல மில்லியன் டொலர் செலவில் ஆரம்பிக்கப்பட்ட எயர் டக்சி சேவையை பின்னர் கைவிட வேண்டிய நிலைஉருவானகு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் வேண்டுகோளின் பெயரில் விமானப்பணிப்பெண்  ஓருவரிற்கு ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதற்கு அனுமதி வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

எனினும் உண்மையில் இவர் நாமல்ராஜபக்ச கேட்டுக்கொண்டதின் பெயரில் அவரது அரசியல் வேலைகளுக்காகவே விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரிற்கு ஸ்ரீலங்கன்விமான சேவையே தொடந்தும் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கியுள்ளது.அவரிற்காக மாத்திரம் 4.2மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளனர்.எனினும் அவரின் சேவை என்னவென குறிப்பிடப்படவில்லை.

இந்த விடயம் தெரியவந்ததை தொடர்ந்து விசாரணைக்குழு குறிப்பிட்ட பணிப்பெண்ணிற்கு வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகளை மீளப்பெறுமாறு விசாரணைகுழு அறிவுறுத்தியுள்ளது.மேலும் மக்களின் வரிப்பணத்திலிருந்து இவ்வாறு அவரிற்கு அவசியமற்ற விதத்தில் பணத்தை வழங்குமாறு உத்தரவிட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் முன்னாள் தலைவர் ஸ்ரீலங்கன் விமானச்சேவைக்கான பிரான்ட் அம்பாசடர் என்ற புதிய பதவியை ஏற்படுத்தி தனக்கு நெருக்கமான விமானபணிப்பெண்ணை அதற்கு நியமித்துள்ளார்.இவர்கள் இருவரும் உலகம் முழுவதையும் சுற்றி வந்துள்ளனர்.

எமது விசாரணைகள் மூலமாக முன்னாள் தலைவர் தன்னுடைய பணியாளர்களுடன் இணைந்து ஸ்ரீலங்கன் விமானசேவையை துஸ்பிரயோகம் செய்தார் என எங்களால் தெரிவிக்கமுடியும்,இதன் காரணமாக அவர் அந்த நிறுவனத்தின் பெயரிற்கு களங்கத்தை ஏற்படுத்தினார்,பாரிய நட்டத்தையும் உண்டாக்கினார் என விசாரணை குழு தெரிவித்துள்ளது.

விமானநிறுவனத்தின் தலைவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும்போது அது குறித்து விவாதிக்கும் கலாச்சாரம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் காணப்படவில்லை.பிரதம நிறைவேற்று அதிகாரிகயாக விளங்கிய சந்திரசேன அந்த பதவிக்கு பொறுத்தமற்றவர் எள்பதை கண்டுபிடித்துள்ளோம் எனினும் அவரிற்கு 1.5 மில்லியன் ஊதியமும் ஏனைய சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அவர் மிகின் எயர் மற்றும் மொபிடெல் ஆகியவற்றின் பிரதமநிறைவேற்று அதிகாரி எனவும்சம்பளம் பெற்றுள்ளார்,இவர்கள் குறித்து குற்றவியல் விசாரணைகள் இடம்பெறவேண்டும்.

 முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசிதவிற்கு மோட்டார் உதிரிபாகங்களை அனுப்பும் சட்டவிரோத நடவடிக்கையை கண்டுபிடித்து தடுத்த  பிரிட்டன் முகாமையாளரை மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளனர்.என விசாரணை குழு தெரிவித்துள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118346/language/ta-IN/article.aspx

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம் உள்ளவன் இதெல்லாம் செய்வான் என்பது சகலரும் அறிந்த விடயம் ...இதற்கு போய் அலட்டிக்கலாமா? :D மகிந்தவை தோல்வியுற செய்யவே இந்த முயற்சி.....

சொல்லாமல் பிடித்து அடையுங்கள் ... இப்படியே எவ்வளவு காலத்திக்கு சொல்லிகொண்டே இருப்பீர்கள் 

மில்லியன் கணக்கில் பிடித்த ஊழல்களை கூட்டிப்பார்த்தால், பில்லியன்..ட்ரில்லியன்.. கணக்கில் வருகுது

ஆனா ஒரு எலியை கூட கைது செய்ததாக தெரியவில்லை :icon_idea:

இதுதான் சொறிலங்காவின் அதிசயம் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்

யோசித ராஜபக்ச ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை பயன்படுத்தி வாகன உதிரிப்பாக வர்த்தகத்தில் ஈடுபட்டார்

yosith_CI.jpg



முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானசேவையை பயன்படுத்தி வாகன உதிரிப்பாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய தேசிய கட்சி அவர் தனது தந்தையின் அதிகாரத்தை துஸ்பிரயோகத்தை செய்தார் எனவும் குற்றம்சாட்டியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யோசிதவின் இந்த நடவடிக்கையை எதிர்த்த ஸ்ரீலங்கன்சின் லண்டன் கிளை முகாமையாளர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்,முன்னாள் ஜனாதிபதியே இந்த உத்தரவை வழங்கினார்.

நாங்கள் எவரையும் பழிவாங்கவிரும்பவில்லை, ஆனால் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்,பொதுமக்களின் வரிப்பணத்தை அவர்கள் தங்கள் நலனிற்காக பயன்படுத்தியதை மக்கள் அறியவேண்டும்,என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118445/language/ta-IN/article.aspx

 

ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து எதிர்கட்சியில் இருந்து எதிர் கட்சி மாதிரியே கதைச்சுக்கொண்டு இருக்கிறது

மில்லியன் கணக்கில் பிடித்த ஊழல்களை கூட்டிப்பார்த்தால், பில்லியன்..ட்ரில்லியன்.. கணக்கில் வருகுது

ஆனா ஒரு எலியை கூட கைது செய்ததாக தெரியவில்லை :icon_idea:

இதுதான் சொறிலங்காவின் அதிசயம் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

 

இதுதான் எனக்கும் புரியவில்லை, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு இன்னும் தமிழர்கள் சிறையில் வாடுகிறார்கள்.

 

பில்லியன் கணக்கில் கொள்ளையிட்டு கொலைகள் பல செய்த ஆதாரம் இருந்தும் இன்னும் ஒருவர்தானும் கைது செய்யப்படவில்லை. 

உங்க நடக்குறது ஒண்டும் விளங்கவில்லை

மகிந்த சே அல்லது மைத்திரி சே யாரும் இருந்தால் இதற்கு விளக்கம் தரவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.