Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்வீட்டாம்லேட்: 20 தமிழர்களுக்காக ஒலித்த இணையக் குரல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
andhra_2367313f.jpg
 

ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடத்துவதற்காக செம்மரம் வெட்டிய தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.

ஆந்திர போலீஸ் தரப்பு நடவடிக்கையை மனித உரிமை மீறல் என நீதி கேட்டு, ட்விட்டரிலும் தமிழ் இணைய ஆர்வலர்களால் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அவற்றின் சிறு தொகுப்பு - இன்றைய ட்வீட்டாம்லேட் பகுதியில்...

மை டியர் தல ‏@riyas - ஆந்திரா அரசை வன்மையாக கண்டிக்கிறோம்...!!! அப்பாவி எம் 20 தமிழ் மக்களை சுட்டு கொன்றவர்களை உடனே கைது செய்...!!!

வானவில் விஜய் ‏@VanavilVijay - 'ஆந்திரா வங்கி'ய முற்றுகையிட்டு என்ன பிரயோஜனம் ?? அதுல இருக்கிற துட்டு தமிழனோடது!!!

லாரிக்காரன் ‏@Lorrykaran - ஆந்திரா அஃபீசியல்ஸ்! இதே சின்சியாரிட்டிய மொதலியே காமிச்சிருந்தா நக்சலைட்டே இருந்துருக்க மாட்டாங்களே!!!

திகில்-நாவு ‏@Thiru_navu - ஆந்திரா போலீஸ் புது துப்பாக்கி வாங்கிட்டு டெஸ்ட் பண்ணி பார்த்திருக்காங்க போல!

சிவா ‏@siva_sankar - ஆந்திரா காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தலைவர்களே, பிழைப்புக்காக அங்கு போய் மரம் வெட்டுவதற்கு காரணமே நீங்கள் தானே.

வானவில் ‏@sarang - இந்த கடத்தல்களுக்கு ஆரம்பமே நாம் தானே...? முதலில் ஜவ்வாது மலை, பிறகு தமிழகத்தில் உள்ள முக்கால்வாசி வனங்களை சூறையாடிய பிறகு இப்போது ஆந்திரா..

govind ‏@villianboss - தன் இனம் அழிவதை... ஆதரிக்கும்...மெளனம் .. ஒரே இனம் தமிழினம் தான் ...எந்த பிரச்சனைக்குடா ஒண்ணு கூடுவிங்க #ஆந்திரா Andhra Pradesh...sad.:(

வம்பு நாயகன் ‏@nayakanism - ஆந்திரா மெஸ் இன்னைக்கு இருக்குமா என்பதே பலரது கவலை.

சயின்டிஸ்ட் சிவா ‏@DrSivaD - ஊரு விட்டு ஊரு போயி செம்மரக்கட்டைகளை திருட்டுத்தனமா வெட்டுனா அவார்டா தருவாங்க ? #இதுல ஆந்திர போலீஸ் அட்டூழியம்னு செய்தி வேற...

அஜித் ரினேஷ் ‏@Rineshraja - இது முதல் தாக்குதல் கிடையாது! மரத்திற்கு 20 மனிதன் பலி என்பது அதிகம்! இதில் அரசியல் தலையீடு அதிகம் இருக்கு. திட்ட மிட்ட கொலை! Environmental ethics படிக்கிற அளவுக்கு அவன் படிச்சவன் அல்ல! 3 வேள சோத்துக்கு செத்து பிழைக்கிறவன்!

ராம் கோவிந்த் ‏@RRamgovind - ஏற்கனவே பிஹார், ஆந்திரா கொள்ளைகாரன்களை தமிழக போலிஸ் சுட்டிருக்கே. அதுக்கு என்ன சொல்றது...

கொலை பண்ணியவன்கிட்டயே போய் விசாரணை நடத்துங்கனு சொல்றதுதான் இந்திய அரசு #அன்று_இலங்கை #இன்று_ஆந்திரா

வெள்ளிகிழமை ராமசாமி ‏@kingstonbrijoy - இலங்கை கொன்றால் தமிழன்?

ஆந்திரா கொன்றால் தமிழன்?

கேரளா, கர்நாடகா தண்ணி தரமாட்டாங்க? ஏன்னா தமிழன்!

எப்பொழுதுமே இந்தியனாக சாகவில்லை

இல்லாத தேசிய ஒருமைபாட்டுக்கு உயிர விடுறதும் தமிழன்!!!

ஜெயந்த் பிரபாகர் ‏@JPR - இனி யாராவது திருப்பதி வெங்கன் காப்பாத்துவான்னு ஆந்திரா பக்கம் போங்க ...அப்புறம் இருக்கு

ரௌத்திரம் பழகு ‏@vanithaj - ஏவி விடும் முதலைகளை விட்டுவிட்டு வெறும் அம்புகளை கொலை செய்து இருக்கிறது ஆந்திரா போலீஸ்..இது கோழைத்தனம் #ஆந்திராகொலை

கே7 ‏@classic_k7 - இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் கூட மொத்தமா 20 பேரை சுட்டு கொன்னதில்லைடா ? சும்மா எண்ணிக்கிட்டு தானடா இருக்கானுங்க # ஆந்திரா கொலை

நா.குமரேசன் ‏@kumaresann - தலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத செயல்களுக்கு சற்றும் குறைந்ததல்ல 20 தமிழ்க் கூலிகளை சுட்டுக்கொன்ற ஆந்திரா அரசின் செயல்!

ராஜ்மோகன்... ‏@billumohan - துப்பாக்கிசூடுக்கு பழிவாங்க ஆந்திரா பஸ்களை அடிக்காதீர்கள். ஆந்திராவில் உள்ள தமிழன், உயிரை கையில்பிடித்து ஓடுவான் வன்முறை இருபக்கமும் கூர்மையான ஆயுதம்.

கிரிகாலன் ‏@girikaalan - குற்றம் செய்தவனை செய்ய தூண்டியவனுக்கு தானே தண்டனை அதிகம்... அப்ப அந்த கடத்தல்காரனுக்கு என்ன/எப்ப தண்டனை கொடுப்பீங்க ஆந்திரா போலீஸ்கார்?

சிலம்பரசன் ‏@chilamb - கென்யா சம்பவுத்துக்கெல்லாம் அறிக்கைவிடும் மோடி, ஆந்திரா 20 பேர் படுகொலைக்கு ஏன் டிவீடிட்டு போடல அந்த #விளம்பர விரும்பி

எம்பிஆர் ‏@actormpr - 20தமிழர்கள் பலிக்கு பதில் சொல்லுமா ஆந்திரா அரசு…: ஈ.வி.கே.எஸ்

# பல லட்சம் இலங்கை தமிழர்களை கொன்றதற்கு காங்கிரஸ் பதில் சொல்லுமா ?

இரவுப்பறவை ‏@iravuparavai - ஆந்திரா தமிழ்நாடு அரசியல் வேண்டாம் இயற்கை ஆர்வலர் போர்வையும் இல்லை சாதாரணமாக கேட்கிறேன் மான் வேட்டையாடியவன் சினிமா நடிக்கிறான் அவன சுடுங்க.

யாழினி அப்பா ‏@rajeshkmoorthy - கேரளா Damக்கு அடிக்கிறான்,

கர்நாடகா தண்ணிக்கு அடிக்கிறான்,

ஆந்திரா காட்டுல சுட்டு தள்றான்...

ஆனா நாம?....வந்தாரை வாழவைக்கிறோம் #தமிழ்நாடு

தமிழரசி ‏@barathi - அவங்க ஊர்ல எடுக்கிற மாதிரி லாஜிக்கே இல்லாத நல்ல மசாலா கதையா ரெடி பண்ணிருப்பாங்க போல இந்த ஆந்திரா போலீஸ்!

ஞானக்குத்து @Gnanakuthu - 20 பேர் நம் இனம் என்பதற்காக பேச வேண்டாம். ஆனால் ஏதோ பெரிய முதலை தப்பிக்க தான் இந்த நடவடிக்கை என்றாவது புரிந்து கொள்ளுங்கள் #மனிதஉரிமைமீறல்

சரண் @sarankaran - தமிழன், தெலுங்கன் பிரச்சனை இல்லை. அப்பட்டமான மனித உரிமை மீறல். ஒத்துக்கிறீங்களா?

ரத்தினகிருஷ்ணன் @ratharakki - ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்கள் பலி. பெரிய மனித உரிமை மீறல். ஏடுகொண்டலவாலா, வேங்கடரமணா, கோவிந்தா. இந்த கொடுமையெல்லாம் கேக்கமாட்டியாப்பா.

அர்பின் சச்சாரியாஸ் @arbinhere - ஆந்திரா காவல்துறையால் 20 மர கடத்தல்காரர்கள் எவ்வித விசாரணையும் இன்றி சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்றால் இது மனித உரிமை மீறல் அல்லவா!?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வானவில் விஜய் ‏@VanavilVijay - 'ஆந்திரா வங்கி'ய முற்றுகையிட்டு என்ன பிரயோஜனம் ?? அதுல இருக்கிற துட்டு தமிழனோடது!!!

லாரிக்காரன் ‏@Lorrykaran - ஆந்திரா அஃபீசியல்ஸ்! இதே சின்சியாரிட்டிய மொதலியே காமிச்சிருந்தா நக்சலைட்டே இருந்துருக்க மாட்டாங்களே!!!

திகில்-நாவு ‏@Thiru_navu - ஆந்திரா போலீஸ் புது துப்பாக்கி வாங்கிட்டு டெஸ்ட் பண்ணி பார்த்திருக்காங்க போல!

சிவா ‏@siva_sankar - ஆந்திரா காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தலைவர்களே, பிழைப்புக்காக அங்கு போய் மரம் வெட்டுவதற்கு காரணமே நீங்கள் தானே.

govind ‏@villianboss - தன் இனம் அழிவதை... ஆதரிக்கும்...மெளனம் .. ஒரே இனம் தமிழினம் தான் ...எந்த பிரச்சனைக்குடா ஒண்ணு கூடுவிங்க #ஆந்திரா Andhra Pradesh...sad. :(

வம்பு நாயகன் ‏@nayakanism - ஆந்திரா மெஸ் இன்னைக்கு இருக்குமா என்பதே பலரது கவலை.

அஜித் ரினேஷ் ‏@Rineshraja - இது முதல் தாக்குதல் கிடையாது! மரத்திற்கு 20 மனிதன் பலி என்பது அதிகம்! இதில் அரசியல் தலையீடு அதிகம் இருக்கு. திட்ட மிட்ட கொலை! Environmental ethics படிக்கிற அளவுக்கு அவன் படிச்சவன் அல்ல! 3 வேள சோத்துக்கு செத்து பிழைக்கிறவன்!

வெள்ளிகிழமை ராமசாமி ‏@kingstonbrijoy - இலங்கை கொன்றால் தமிழன்?

ஆந்திரா கொன்றால் தமிழன்?

கேரளா, கர்நாடகா தண்ணி தரமாட்டாங்க? ஏன்னா தமிழன்!

எப்பொழுதுமே இந்தியனாக சாகவில்லை

இல்லாத தேசிய ஒருமைபாட்டுக்கு உயிர விடுறதும் தமிழன்!!!

ஜெயந்த் பிரபாகர் ‏@JPR - இனி யாராவது திருப்பதி வெங்கன் காப்பாத்துவான்னு ஆந்திரா பக்கம் போங்க ...அப்புறம் இருக்கு

ரௌத்திரம் பழகு ‏@vanithaj - ஏவி விடும் முதலைகளை விட்டுவிட்டு வெறும் அம்புகளை கொலை செய்து இருக்கிறது ஆந்திரா போலீஸ்..இது கோழைத்தனம் #ஆந்திராகொலை

கே7 ‏@classic_k7 - இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் கூட மொத்தமா 20 பேரை சுட்டு கொன்னதில்லைடா ? சும்மா எண்ணிக்கிட்டு தானடா இருக்கானுங்க # ஆந்திரா கொலை

நா.குமரேசன் ‏@kumaresann - தலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத செயல்களுக்கு சற்றும் குறைந்ததல்ல 20 தமிழ்க் கூலிகளை சுட்டுக்கொன்ற ஆந்திரா அரசின் செயல்!

சிலம்பரசன் ‏@chilamb - கென்யா சம்பவுத்துக்கெல்லாம் அறிக்கைவிடும் மோடி, ஆந்திரா 20 பேர் படுகொலைக்கு ஏன் டிவீடிட்டு போடல அந்த #விளம்பர விரும்பி

எம்பிஆர் ‏@actormpr - 20தமிழர்கள் பலிக்கு பதில் சொல்லுமா ஆந்திரா அரசு…: ஈ.வி.கே.எஸ்

# பல லட்சம் இலங்கை தமிழர்களை கொன்றதற்கு காங்கிரஸ் பதில் சொல்லுமா ?

இரவுப்பறவை ‏@iravuparavai - ஆந்திரா தமிழ்நாடு அரசியல் வேண்டாம் இயற்கை ஆர்வலர் போர்வையும் இல்லை சாதாரணமாக கேட்கிறேன் மான் வேட்டையாடியவன் சினிமா நடிக்கிறான் அவன சுடுங்க.

யாழினி அப்பா ‏@rajeshkmoorthy - கேரளா Damக்கு அடிக்கிறான்,

கர்நாடகா தண்ணிக்கு அடிக்கிறான்,

ஆந்திரா காட்டுல சுட்டு தள்றான்...

ஆனா நாம?....வந்தாரை வாழவைக்கிறோம் #தமிழ்நாடு

சரண் @sarankaran - தமிழன், தெலுங்கன் பிரச்சனை இல்லை. அப்பட்டமான மனித உரிமை மீறல். ஒத்துக்கிறீங்களா?

ரத்தினகிருஷ்ணன் @ratharakki - ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்கள் பலி. பெரிய மனித உரிமை மீறல். ஏடுகொண்டலவாலா, வேங்கடரமணா, கோவிந்தா. இந்த கொடுமையெல்லாம் கேக்கமாட்டியாப்பா.

 

நல்ல கருத்துக்கள். இணைப்பிற்கு, நன்றி பெருமாள்.

தமிழக மக்கள் தெளிவாகத்தான் இருக்கிரார்கள், அவர்களின்... அரசியல் தலைமை தான், கேள்விக்குறி.

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் துவேசகுணம் இரத்தத்தில் ஊறவேண்டும். வந்தாரை வாழவைத்ததெல்லாம் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் ஆந்திராவில் வாக்கு செலுத்து முடியாது என்பதால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்...!

ஆனால் திமுகவுடன் கூட்டு வைத்துக்கொண்டு சந்திரபாபு நாயுடுகூட தமிழகத்தில் வெற்றி பெறலாம். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.