Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம் பெயர்வாழ் ஈழத் தமிழச்சிகளின் தமிழ் உணர்வு?????

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர்வாழ் ஈழத் தமிழச்சிகளின் தமிழ் உணர்வு?????

சிறு வயதில், தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்து விட்ட எனக்கு தமிழ் உணர்வுள்ள ஈழத் தமிழச்சியை வாழ்க்கைத் துணையாக அமைத்துக் கொள்ளவே விருப்பம். ஆனால் நான் கண்ட தமிழ் பெண்களுக்கும் தமிழுணர்வுக்கும் வெகு தூரம். என்னுடன் படிக்கும் தமிழ் பெண்களுக்கு நான் விளக்கம் சொல்லியே ஓய்ந்து போனேன்.

என்னுடன் படிக்கும் செக் நாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி எங்களிடம் வந்து எங்களின் நாட்டைக் கேட்டா. நான் உடனே தமிழீழம் என்றேன். கூட இருந்த தமிழ்ப் பெண்கள் இல்லை இல்லை சிறிலங்கா எண்டிச்சினம். எனக்கு விசர் வருமா வராதா. நான் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தை விளங்கப் படுத்தும்போது அந்தப் பெண் மிக ஆர்வமாய் கேட்கத் தொடங்கினா. உடனே நமது பச்சைத் தமிழச்சிகள் எனக்கு வேற வேலை வெட்டி இல்லையா எனத் திட்டத் தொடங்கிச்சினம். ஆனால் அந்த செக் நாட்டுக்காரிக்கு என்னைப் பிடித்துப்போய் விட்டது. தனது நாடு விடுதலை அடைந்த வரலாற்றை எனக்குக் கூறினா. அதைப்போல் ஒரு வாக்கெடுப்பு வழியாக உங்கள் நாட்டுக்கு விடுதலை கிடைக்காத என ஆதங்கத்துடன் கேட்டா. இந்த ஆதங்கம் நம்ம பச்சைத் தமிழச்சிகளுக்கு இல்லையே என்பதை நினைக்கும்போது எனக்கு வேதனைதான் மிச்சம். நானும் அந்தப் பெண்ணும் தற்போது வெறும் நண்பர்கள்தான். ஒருவேளை எங்களுக்குள் காதல் மலர்ந்தால் நான் அந்த செக் நாட்டுக்காரியை திருமணம் செய்வது நல்லதா அல்லது அந்தப் பச்சைத் தமிழச்சிகளில் ஒருத்தியைச் செய்யவா???

புலம்பெயர் சமூகத்தில் ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கு தமிழின உணர்வு குறைவாக இருக்கிறது என்பதுதான் நான் கண்ட வேதனையான உண்மை.

வாகரையில் நம் தமிழ் உறவுகள் மடிந்த அந்தத் துயரம் நிறைந்த செய்தியை நான் அந்தத் தமிழச்சிகளுக்கு முதன் முதலாக சொன்ன போது எந்தவித கவலையையும் காட்டினாதாகத் தெரியவில்லை. ஆனால் அந்த செக் நாட்டுக்காரிக்குச் சொன்னபோது குறைந்தபட்சம் அனுதாபத்தையாவது தொவித்தாள்.

தமிழீழத் தனியரசுத் தீர்மானம் யாரால் எங்கு எப்போது நிறைவேற்றப்பட்டது என்று கேட்டுப்பாருங்கள் அவர்களுக்குத் தெரியாது. அனால் செல்வி தொடரில் ராதிகாவின் முன்னால் கணவரின் முன்னால் காதலியின் அண்ணனின் மகளின் காதலனின் தங்கையின் பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்டுப்பாருங்கள் சரியாகச் சொல்லிவிடுவார்கள். இதுதான் இன்றைய புலம்பெயர் வாழ் தமிழ்ப் பெண்களின் லட்சணம்.

இப்போது நான் விடயத்திற்கு வருகிறேன். நான் ஒரு கதைக்கு அந்த செக்நாட்டுக்காரியைக் கட்டினால் எனது தமிழ்ப் பணிக்கு உதவியாய் இருப்பாளோ இல்லையோ இடைஞ்சலா இருக்க மாட்டாள். தமிழ் பெண்கள் யாரையாவது கட்டினால் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. இங்கு நான் பல கணவன்மாரை பார்த்திருக்கிறேன் கிழமைக்கு 90 மணித்தியாலம் உழைப்பார்கள் ஆனால் தனது தம்பியையோ தங்கையையோ கூப்பிட்டிருக்க மாட்டார்கள் ஆனால் அவர்களது மனுசிமார் தங்கள் குடும்பத்தையே கூப்பிட்டு விட்டிருப்பார்கள். ஆண்கள் வாங்கும் சீதனத்தை விட பல மடங்கு மோசமாய் உள்ளது. அந்த செக் நாட்டுக்காரியை கட்டினால் இதுபோன்ற சிக்கல்கள் இருக்காது. வருடத்திற்கு ஒரு முறை திருமண நாள் பிறந்தநாளின் போது பரிசு வாங்கிக்கொடுப்பதோடு சரி. அதைப்போல் அவளும் வாங்கிக் கொடுப்பாள் கணக்குச் சரியா இருக்கும். கூட்டுக் குடும்பத் தொல்லை இருக்காது. நான் என் பாட்டுக்குத் தமிழ்ப் பணி, இலக்கியப் பணி, பகுத்தறிவுப் பணி கூடவே வயிற்றைக் காப்பாற்றுவாற்கு வருமானப் பணி என்று என் காலத்தைக் கழிக்கலாம் அவளும் அவள்பாட்டுக்கு எதையாவது செய்யலாம். எல்லாக் கூத்தையும் முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பிய பின் இருவரும் மனம்விட்டுக் கதைக்கலாம், கொஞ்சலாம், குலவலாம், கூடலாம் நல்ல ஒத்துழைப்பும் கிடைக்கும். சங்கப் புலவர் வெள்ளிவீதியாரின் முத்தப் படலத்திலும் திருவள்ளுவரின் இன்பத்துப் பாலிலும் நன்றாக மூழ்கி எழலாம். (எங்கிட தமிழ் பெண்களுக்கு இவைகளைப் பற்றித் தனியே பாடம் எடுத்தாலும் ஏறாது.) கிழமைக்கு ஒரு தரம் டிஸ்கோவில் போய் ஆடலாம். (ஆண்டுக்கு ஒரு தடவை கோவிலில் காவடி எடுப்பதை விட இது உடலுக்கு நல்லதாம்) நீச்சல் குளத்திற்குப்போய் நீந்திவிட்டு கூடவே அவளுடன் சன்பாத் எடுக்கலாம் (சனிக்கு விரதம் இருப்பதை விட இதுவும் உடலுக்கு நல்லதாம்) மொத்தத்தில் நல்ல வாழ்க்கை வாழலாம்.

இது தொடர்பான கருத்துக்களை யாழ் இணையத்தள நண்பர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

அனைத்து தமிழ் பெண்களையும் இப்படி சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...(ஐ.நா. போல கண்டனத்தோடு மட்டும் நிறுத்தும் வழக்கம் எமக்கு இல்லை)

உங்களுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்யனுமா...செய்திட்டு போங்க..அது உங்க இஸ்டம்..

பிரபாகரன் பிறந்த மண்ணில் தான் கருணாவும் பிறந்தான்....அதற்காக ஒட்டு மொத்தமாக எல்லாரையும் சொல்வதா??

வேதனை!!!! வேதனை!!!! நீங்கள் சந்தித்த பெண்களை வைத்து இப்படி சொல்வது சரியல்ல

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு தமிழ் உணர்வு இருக்கிறது ஆனால் வெளியில் வெட்டிப் பந்தா. ஏதோ வெள்ளைக்காரன் தேசம் தான் தங்களின் தேசம் என்பது போல சிலருக்கு நினைப்பு.

ஆனால் ஒன்று சொல்லலாம் இவர்களை வெள்ளைக்காரன் புரிந்து கொள்ள முனையமாட்டான். தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள மட்டும் முனைவான்.

இது தமிழ் ஆண்களிடம் சிலரிடமும் மிகையாக இருக்கிறது. அதையும் சுட்டிக்காட்டுதல் தகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா

நான் கண்ட தமிழ்ப் பெண்கள் அத்தனை பேரும் அப்படி இருந்தால் நான் என்ன செய்வேன். படிக்கும் இடத்தில் மட்டுமல்ல வெளியிலும் இதே கோலம்தான். ஒரு நாள் Wembly Central தொடருந்து நிலையத்தில் எனது பழைய வகுப்புத் தோழி ஒருவரை சந்தித்தேன். அருமையான தத்துவத்தை அவா எனக்குச் சொன்னா. இலங்கையே ஒரு சின்னஞ் சிறு நாடு அதிலிருந்து ஒரு குட்டி நாடு தேவையா என்றா. எனக்கோ பக்கத்திலிருந்த Raju Pattni & Son இற்குப் போய் அவரின் கைகளுக்கு தங்கவளையல்களை வாங்கிப் போட்டுவிட வேண்டும் போல் இருந்தது. இன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ள சிங்கப்பூர், குவைத், கியூபா போன்ற மிகப் பெரிய நாடுகள் இருப்பது பாவம் அவாவுக்குத் தெரியவில்லை. கூடவே இன்னும் ஒன்றைச் சென்னா இலங்கை அரசுதான் தனது கடவுச் சீட்டில்கூட தழிழை போட்டுக்கொள்ள அனுமதிக்கிறதே பிறகு ஏன் உங்களுக்கு இவ்வளவு தமிழ்வெறி என்றார். செஞ்சோலையிலிருந்து குண்டடி பட்டுத் தப்பி வந்திருந்தால் எல்லாம் விளங்கியிருக்கும்.

விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் பெரும்பாலான புலம்பெயர் தமிழச்சிகள் இப்படித்தான் என்ற வேதனையான, கசப்பன உண்மையைத்தான் உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன் நண்பர்களே!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரப்போகும் பெண் திருமண பந்தத்தை மதித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருத்திக்கு ஒருவன் என்ற பண்பாட்டில், இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதாக இருந்தால் எந்த நாட்டுப் பெண்களும் தங்கங்களே! இதில் இலங்கையென்ன, இஸ்ரேலென்ன, எல்லாமே ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

வரப்போகும் பெண் திருமண பந்தத்தை மதித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருத்திக்கு ஒருவன் என்ற பண்பாட்டில், இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதாக இருந்தால் எந்த நாட்டுப் பெண்களும் தங்கங்களே! இதில் இலங்கையென்ன, இஸ்ரேலென்ன, எல்லாமே ஒன்றுதான்.

தங்கங்களைத் தேடும் ஆண்கள் தங்கங்களா என்று எப்படி உரசிப் பார்ப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

தூயா குறிப்பிட்டது போல எல்லாப்பெண்களும் தமிழ் உணர்வு குறைந்தவர்கள் அல்லாவிடினும், நான் சிட்னியில் சந்தித்த சில குடும்பங்களில் கணவர்மார் தமிழ் உணர்வு உள்ளவர்களாக இருக்க, அவரது மனைவிமார்கள் தமிழ் உணர்வு குறைந்தவர்களாக, அது பற்றிய அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அப்பெண்கள் ஈழத்தவர்களால் நடாத்தப்படும் வானொலிகள், தொலைக்காட்சியில் ஈழச்செய்திகள் பார்ப்பதில்லை. ஈழச் செய்திகள் சம்பந்தமான பத்திரிகைகள்,இணையத்தளங்கள் பார்ப்பது குறைவாக உள்ளது. ஈழப்பிரச்சனைகள் பற்றிக் கதைக்கும் போது,அதில் கலந்து கொள்வதில்லை.

கொழும்பில் சிங்களவர்களோடு 70, 80களில் இருந்தவர்கள் பலரைப்பார்த்திருக்கிறேன். யூலைக்கலவரத்தில் அடி வாங்கியும், தமிழ் உணர்வு அற்றவர்களாக இருக்கிறார்கள்.

சிட்னியில் சில குடும்பங்கள் மாவீரர் தினத்துக்கு போக மாட்டினம்.ஆனால் இந்திய சுதந்திரதின விழாவுக்கு தங்கட பிள்ளைகளுடன் போவினம். இதுகளைச் சொல்லித்திருத்தேலாது.

அப்படி அவர்கள் இருக்க வேறு பல காரணங்களும் இருக்கு கந்தப்பு..

தூயா

நான் கண்ட தமிழ்ப் பெண்கள் அத்தனை பேரும் அப்படி இருந்தால் நான் என்ன செய்வேன். படிக்கும் இடத்தில் மட்டுமல்ல வெளியிலும் இதே கோலம்தான். ஒரு நாள் Wembly Central தொடருந்து நிலையத்தில் எனது பழைய வகுப்புத் தோழி ஒருவரை சந்தித்தேன். அருமையான தத்துவத்தை அவா எனக்குச் சொன்னா. இலங்கையே ஒரு சின்னஞ் சிறு நாடு அதிலிருந்து ஒரு குட்டி நாடு தேவையா என்றா. எனக்கோ பக்கத்திலிருந்த Raju Pattni & Son இற்குப் போய் அவரின் கைகளுக்கு தங்கவளையல்களை வாங்கிப் போட்டுவிட வேண்டும் போல் இருந்தது. இன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ள சிங்கப்பூர், குவைத், கியூபா போன்ற மிகப் பெரிய நாடுகள் இருப்பது பாவம் அவாவுக்குத் தெரியவில்லை. கூடவே இன்னும் ஒன்றைச் சென்னா இலங்கை அரசுதான் தனது கடவுச் சீட்டில்கூட தழிழை போட்டுக்கொள்ள அனுமதிக்கிறதே பிறகு ஏன் உங்களுக்கு இவ்வளவு தமிழ்வெறி என்றார். செஞ்சோலையிலிருந்து குண்டடி பட்டுத் தப்பி வந்திருந்தால் எல்லாம் விளங்கியிருக்கும்.

விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் பெரும்பாலான புலம்பெயர் தமிழச்சிகள் இப்படித்தான் என்ற வேதனையான, கசப்பன உண்மையைத்தான் உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன் நண்பர்களே!!!!

ஓ அப்படியா? நம்பமுடியவில்லை எனக்கு

காரணம் நான் வாழும் சமூகத்தில் அப்படியல்ல....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு அவர்கள் குறிப்பிட்ட இந்திய மாயை ஈழத்தவர் மத்தியிலும் ஊடுருவப் பார்க்கிறது. அதற்குக் காரணம் தமிழ்நாட்டுச் சினிமாவும் தொடர்களும்தான். இதைப் பற்றி நான் பிறகு வருகிறேன். தூயாவிற்கும் அவரைச்சார்ந்த பெண்களுக்கும் தமிழ் பற்று இருந்தால் அந்தத் தமிழ்பற்றுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நீங்கள் சொல்பவர்களை பற்றி கேட்க எனக்கு வேதனையாக உள்ளது..

என் அண்ணனின் தோழி ஒரு சிங்கள பெண்...

எம்முடன் ஒவ்வொரு முறையும் மாவீரர் தினத்திற்கு வருவார்..

அவருகே புரிந்தது ஏன் எம்மின பெண்களுக்கு புரியவில்லை

அல்ல யாரும் புரியவைக்க முயற்சி செய்யவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்பவர்களை பற்றி கேட்க எனக்கு வேதனையாக உள்ளது..

என் அண்ணனின் தோழி ஒரு சிங்கள பெண்...

எம்முடன் ஒவ்வொரு முறையும் மாவீரர் தினத்திற்கு வருவார்..

அவருகே புரிந்தது ஏன் எம்மின பெண்களுக்கு புரியவில்லை

அல்ல யாரும் புரியவைக்க முயற்சி செய்யவில்லையா?

இவர்கள் செக் காரிகளுக்குப் பின்னால் திரிய அவர்கள் செக் காரங்களுக்குப் பின்னால் திரிய கணக்குச் சரி.

மேற்கு ஐரோப்பா முழுவதும் கிழக்கு ஐரோப்பியக் கூட்டந்தானே பெருகிக் கிடக்கிறது. அதுகளுக்கும் மொழிப்பிரச்சனை இவைக்கும் அதுதான் பிரச்சனை...இங்கிலிஷ் பேசுறதுகள் இவைய அண்டாதுகள்..சோ...இவைக்கு அந்த அரை லூசுகளோடுதான் காலந்தள்ளச் சரி. இதுக்குள்ள எங்க புரிய வைக்கிறது. :rolleyes: :P :)

முதல்லயே கேட்க வேண்டும் என நினைத்தேன்.... ஹி ஹி தப்பாக நினைக்க வேண்டாம்...நீங்கள் ஏன் செக்பெண்ணை திருமணம் செய்வதிலேயே நிற்கிறிங்க.. :rolleyes:

உங்கள் வட்டத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள்...

மனம் ஒப்பி விட்டால் ஒன்றும் செய்யமுடியாது, காதல் மகத்தானது. ஆனால் நீங்கள் திருமணத்துக்கு பெண் பார்க்கிறீர்கள் என்றால், எல்லோரும் ஒரேமாதிரி இருப்பதில்லை, சிலர் நீங்கள் கூறியது போல் இருப்பார்கள், இருப்பதில் நல்லவற்றை தெரிவு செய்து கொள்வது எமது கடமை.

"எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவது இழுக்கு"

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு சிட்டிகை சர்க்கரை(சீனி) போன்றவர், ஜரோப்பிய சமூகம் ஒரு வாளி தண்ணீர் போண்றது, நீங்கள் தனித்து இருக்கும் வரைதான், நீங்கள் சர்க்கரை உங்களிடம் தனித்துவம் இருக்கும், வாளித்தண்ணீருக்குள் சிட்டிகை சர்க்கரையை போட்டு விட்டால், அதன் தனித்துவம் எங்கு? பின் வருபவர்களுக்கு அதற்குள் சர்க்கரை இருக்கிறது என்பதை விளங்க படுத்துவதிலேயே உங்கள் வாழ்கை முடிந்து விடும்.

உங்கள் தனித்துவம்,பண்பாடு,கலாச்சாரம

முதல்லயே கேட்க வேண்டும் என நினைத்தேன்.... ஹி ஹி தப்பாக நினைக்க வேண்டாம்...நீங்கள் ஏன் செக்பெண்ணை திருமணம் செய்வதிலேயே நிற்கிறிங்க.. :rolleyes:

உங்கள் வட்டத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள்...

:) இதையே தான் நானும் நினைத்தேன்

வட்டமே தெரியாட்டி என்னண்டு வெளியால வாறது,தெரின்சிருந்தா இப்படி ஆகி இருக்கமாட்டர் இளங்கோ.தெரியவில்லை என்ற படியால் தானே தேடுகிறார் அந்தத் தமிழச்சியை?

ஆனால் அவர் சொன்னது உண்மை தான் பல பெண்களுக்கு இவை பற்றி அதிக கரிசனைகள் கிடையாது தான்.

இதற்கு காரணம் என்ன நாரதர்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.