Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லோர் வழி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நல்லோர் வழி :rolleyes:

 

 

mspillai.jpg?w=604

 

 

அந்த சின்ன ஊரில் 'குப்புசாமி' தான் நிறைய படைத்த புத்திசாலி மனிதர்.  அவர் தனக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமாக கடவுளை வேண்டி கடுமையாக தவம் இருந்தார்.

தவத்தின் வலிமையை உணர்ந்து, ஒரு நாள் கடவுள் நேரில் தோன்றி “பக்தா.. என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்டார்

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமாக “கடவுளே, எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு வரம் வேண்டினார்..

“சரி பக்தா, அப்படியே ஆகட்டும்”னு சொல்லி வரம் அளித்து கடவுள் மறைந்து விட்டார்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாக வீடு நோக்கி நடையை கட்டினார். வழியில் முன்பின் அறியாத ஒருத்தர் குப்புசாமியை கவனித்து அருகே வந்து “ஐயா, உங்க பேரு என்ன?" ன்னு வினவினார்..

அதுக்கு குப்புசாமி அவரோட பேரை சொல்லமுடியாமல்

“குப்புமி”

“குப்புமி”

“குப்புமி”ன்னு சொன்னார்..

பாவம், கடைசிவரை பெரியவருக்கு ”சாவே” வரவில்லை..! :lol:

 

அப்படிபட்ட அறிவாளி குப்புசாமி மீது ஊர் மக்கள் நிறைய மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.அவர் சொன்னால் எந்த செயலையும் ஊர் மக்கள் தட்டாமல் செய்து வந்தார்கள். இப்படியே அவருடைய காலமும் போய்க்கொண்டிருந்தது.

அவருக்கு ஒரு சின்ன மனக்குறை ரொம்ப நாளாகவே இருந்தது. நம்மோட அறிவு, இந்த சின்ன கிராமத்துக்குள்ளேயே முடங்கி போய்விடக்கூடாது, கொஞ்சம் வெளியே போய் வெளி உலகம் எப்படி இருக்குதுன்னு பார்த்துவிட்டு வந்து, அதை இந்த கிராமத்து மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென நினைத்தார்..

இந்த ஆசையை தன் ஊர் மக்களிடம் சொல்ல, அவர்களும் அதை ஆமோதித்து, அவரை மகிழ்வுடன் அனுப்பி வைத்தார்கள்.

முதலில் ஒரு ஊருக்கு குப்புசாமி போனார். அங்குள்ள மக்களுக்கு இவரைப் பற்றி ஏற்கெனவே கொஞ்சம் தெரிந்திருந்ததால், அவர் தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து அவரை பார்க்க கூட்டமாக வந்தார்கள். வந்ததோடுமட்டுமில்லாமல் பெட்டி பெட்டியாக காணிக்கைகளும் நிறைய கொண்டு வந்தளித்தார்கள்..

குப்புசாமிக்கு ரொம்ப மகிழ்ச்சி...

கொஞ்சநாள் அங்கே தங்கிவிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பினார்.அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த ஊர் மக்களும் பெட்டி பெட்டியாக காணிக்கைகள் தந்து அவரை திக்குமுக்காட வைத்தார்கள்..இப்படி போன இடம் எல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய ஊருக்குப் போய்விட்டு இறுதியாக குப்புசாமி தன்னோட சொந்த ஊருக்கு வந்தார்.

தன்னோட அனுபவங்களை தன் மக்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டார்..அனைவரையும் ஒரு பொது இடத்திற்கு வரச்சொன்னார்..

ஒவ்வொரு ஊரிலேயும்  தனக்கு கிடைத்த மரியாதையையும், வெகுமதிகளையும் பற்றி பெருமையாக சொன்னார். ஊர்  மக்கள்  ரொம்பவே  சந்தோசப்பட்டார்கள்..

குப்புசாமி தனக்கு கிடைத்த வெகுமதிகளை தன்னை மதிக்கும் ஊர் மக்களுக்கும் கொடுக்க ஆசைப்பட்டார்.

பெட்டிகளை எல்லோர் முன்னிலையிலும் பிரித்தார்..

உள்ளே பார்த்தால்... எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி..

பெட்டிக்குள் ஒரு பை இருந்தது..

அந்த பைக்குள் அத்தனையும் சின்னச் சின்ன Syrup பாட்டில்கள்..

யாருக்கும் எதுவும் புரியவில்லை..!

புத்திசாலியான குப்புசாமி மெதுவாக சொல்லி சமாளித்தார்...

"கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம்

சிறப்புன்னு [Syrup] இதைத்தான்

அந்தக் காலத்தில் சொல்லியிருக்கிறார்கள்..!" :o

 

நீதி:  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு..!

 

 

- இணையத்தில் படித்தது

  • கருத்துக்கள உறவுகள்

 

:rolleyes: நல்லோர் வழி :rolleyes:

 

 

mspillai.jpg?w=604

 

பாவம், கடைசிவரை பெரியவருக்கு ”சாவே” வரவில்லை..! :lol:

#######

பெட்டிக்குள் ஒரு பை இருந்தது..

அந்த பைக்குள் அத்தனையும் சின்னச் சின்ன Syrup பாட்டில்கள்..

யாருக்கும் எதுவும் புரியவில்லை..!

புத்திசாலியான குப்புசாமி மெதுவாக சொல்லி சமாளித்தார்...

"கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம்

சிறப்புன்னு [Syrup] இதைத்தான்

அந்தக் காலத்தில் சொல்லியிருக்கிறார்கள்..!" :o

 

 

குப்புமியை...  கடவுள் தான்,  கலாச்சுவிட்டார் என்றால், அயல் ஊர் மக்களுமா?

பாவம்... குப்புமி. :D

 

அட... இதை வாசிச்ச#ப் பிறகு, எனக்கும் ச# வரமாட்டேங்குது. :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! ராவன்னியன். அட.... சே, எனக்கும் 'ச' வரமாட்டேங்குது.  :(

  • கருத்துக்கள உறவுகள்

குப்புமி சிரப்போடு வாழட்டும்...! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரசித்த உள்ளங்களான தமிழ்சிறி, பாஞ்ச் மற்றும் சுவி ஆகியோருக்கு மிக்க நன்றி..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.