Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாபெரும் சக்தியான மாணவர் சக்தி வெடிக்கும்

Featured Replies

சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமானதான தாக்குதலை நிறுத்துவதற்கு வழிகோலுங்கள் இல்லையேல் மாபெரும் சக்தியான மாணவர் சக்தி வெடிக்கும் - மாணவர் ஒன்றியம்.

18-11-2006 அன்று வவுனியாவில் விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஐந்துபேர் சிறிலங்கா அரசால் கோரத்தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதனையும் 02-11-2006 அன்று கிளிநொச்சியில் விமானத் தாக்குதலின் மூலம் இரண்டு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதனையும் முல்லை. கிளிநொச்சி மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம். தமிழ் மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

காலம் காலமாக ஆட்சியில் இருந்து வந்த சிங்களத் தலைமைகள் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை போட்டி போட்டுக்கொண்டு நடத்திக்கொண்டே வந்துள்ளன. வருகின்றன. மனித உரிமைகள் சிறுவர் உரிமைகள் சிறுவர் பாதுகாப்பு மனிதநேயம் என்பன பற்றி பேசிக்கொண்டே எம்மக்களை அழித்தொழித்து வருகின்றனர். இந்த வகையில் ஒரு சமூகத்தின் முக்கிய வளமான மாணவர்களை அவ்வப்போது கொலை செய்தும், கடத்தல் செய்தும் அழத்து வருகின்றனர். ஒரு சமூகத்தின் சிற்பிகள் மாணவர்கள் என்பதால் அவர்களைத் திட்டமிட்ட முறையில் பல தடவைகள் வகைதொகையின்றி கொன்று குவித்துள்ளனர். இதற்கு ஆதாரமாக நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத்தாக்குதல், மடுதேவாலயம், மீதான எறிகணைத் தாக்குதல்.

நவாலி தேவாலயம் மீதான விமானத்தாக்குதல்களைக் குறிப்பிடலாம் அவ்வப்போது இத் தாக்குதல்கள் பற்றி சர்வதேச அமைப்புக்களிற்கு எடுத்து கூறியபோதும் தீர்வுகள் எட்டப்பட்டாதகவோ, சிறிலங்கா அரசு தனது தாக்குதல்களை நிறுத்திக் கொண்டதாகவோ இல்லை.

தற்போது நாட்டில் போர்நிறுத்தம் நடைமுறையில் இருக்கின்ற போதும் இன் அழிப்பும், ஆக்கிரமிப்பும் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டே இவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு தங்களை வேண்டுகின்றோம் இந்த வருடம் மட்டும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அரசினால் படுகொலை செய்யப்பட்டனர் இதில் மாணவர் தாக்குதல்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஜனவரியில் திருகோணமலையில் கடற்கரையில் நின்றிருந்த ஐந்து திருமலை இந்துக்கல்லூரி மாணவர்கள் சிறிலங்காப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த யூன் மாதம் கடையில் நின்ற மாணவர்கள் இருவரை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

கடந்த யூலை மாதம் திருகோணமலையில் பாடசாலை மாணவர் சிறிலங்காப் படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 14ம் திகதி செஞ்சோலை வளாகத்தின் மீது சிறிலங்கா வான்படை குண்டு வீசி 53மாணவிகளைக் கொன்றமை.

பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவர் ஒன்றிய தலைவர் கைது செய்யப்பட்டு காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை.

இம்மாதம் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் நான்குபேர் கடத்தப்பட்டு இருவர் கொலைசெய்யப்பட்டு வீதியில் வீசப்பட்டனர்.

இம்மாதம் வாகரையில் கதிரவெளி மகாவித்தியாலயத்தில் இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீது சிறிலங்காப் படையினர் எறிகணை வீசி ஐம்பது பேரைக் கொன்றனர். இதில் பெரும்பாலோனோர் மாணவர்களாவர்.

இவற்றோடு கடந்த 18-11-2006 அன்ற வவுனியா விவசாயக் கல்ல}ரியில் கற்றலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை மிகவும் கோழைத்தனமாகவும் எங்களை காப்பாற்றுங்கள் எனக் கூறி அலற அவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஐந்து மாணவர்களை கொலை செய்தும் பதினொரு மாணவர்களை காயப்படுத்தியுமுள்ளனர். காயமடைந்தவர்கள் பலர் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளனர். இந்த ஈனச்செயலை மாணவர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் அத்தோடு 02-11-2006 அன்று கிளிநொச்சி மத்தியகல்லூரி மாணவர்கள் இருவரை சிறிலங்கா வான்படையினர் குண்டுவீசி கொலை செய்தமையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சிறிலங்காவின் அரச தலைவர் திரு மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது பிறந்த நாளன்று தனது மக்களிற்கு பிறந்தநாள் கேக்கையும், இனிப்பையும் மகிழ்வையும் வழங்கிவிட்டு அப்பாவி தமிழ் மாணவர்களாகிய எமக்கு மரணத்தையும் இரத்தக்களரியையும் கொடூரத்தையும் வழங்குவது எந்தவகையில் நியாயமானது.

எம் சேதத்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் மேற்குலக நாடுகளின் பிரதிநிதியாகிய தங்களுக்கு, விநயமாக நாம் ஒன்று சொல்ல விரும்புகின்றோம் மாணவர்கள் மீதான எம் மக்கள் மீதானதும் சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமானதான தாக்குதலை நிறுத்துவதற்கு வழிகோலுங்கள் இல்லையேல் மாபெரும் சக்கதியான மாணவர் சக்தியினை ஒன்று திரட்டி இன விடுதலைக்கம் சுதந்திர வாழ்விற்குமான தேசியப் போராட்டத்தில் எம்மை முழுமையாக ஈடுபடுத்தும் சூழ்நிலை தவிர்க்க முடியாததாகும்.

கிளிநொச்சி,முல்லை தமிழ் மாணவர் ஒன்றியம்

சங்கதி.

ஒரு போதும் வெடிக்காது.

திலீபன் காலத்திலிருந்து இது இவ்வாறே கூறப்பட்டு வந்துள்ளது.

படுகொலை நடக்கும் போது பதறி அறிக்கை விடுவதும் பின்னர் அமைதியாகி மறந்து போவதுமே தொடர்கதையாக தொடரப்போகும் கதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு போதும் வெடிக்காது.

திலீபன் காலத்திலிருந்து இது இவ்வாறே கூறப்பட்டு வந்துள்ளது.

படுகொலை நடக்கும் போது பதறி அறிக்கை விடுவதும் பின்னர் அமைதியாகி மறந்து போவதுமே தொடர்கதையாக தொடரப்போகும் கதை.

சாணக்கியன் அவர்களே,

திலீபன் காலத்திலிருந்து போராட்டத்தில் இணைந்தவர்கள் மாணவர்கள் இல்லையா? இன்று போராட்ட களத்தில் நிற்பவர்கள் மாணவர்கள் இல்லையா? அதை விட இன்றும் இந்த வேளையில் தமது நாளாந்த கடமைகளில் ஒன்றாக, ஆயதப்பயிற்ச்சியையும் பெறுபவர்கள் மாணவர்கள் இல்லையா?எதையவது ஒன்றை சொல்லும் முன் ஒரு முறை யோசியுங்கள்.!

மாணவர் சக்தி வெடித்தல் என்றால், ஈழத்து மாணவர்கள் எல்லோரும் ஆயுதம் ஏந்தல் என்று அர்த்தம் கொள்ளல் மடமை.

இப்போது தமிழர் தரப்பு சவுண்ட் பாட்டிகளாகி விட்டது ;)

  • தொடங்கியவர்

பறவை, உங்கள் கருத்தில் நிஜாயம் இருக்கிறது. எமது தேச விடுதலைப் போராட்டத்துக்கு மாணவர் சமுதாயம் தொடர்ச்சியாக பெரிய பங்காற்றிவருகின்றது. அதை நாம் மறந்துவிடக்கூடாது.

Edited by YARLVINO

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது தமிழர் தரப்பு சவுண்ட் பாட்டிகளாகி விட்டது ;)

உங்களையும் சேரர்த்து தான் சொல்லுறீங்க சோழன்.! ;)

சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமானதான தாக்குதலை நிறுத்துவதற்கு வழிகோலுங்கள் இல்லையேல் மாபெரும் சக்தியான மாணவர் சக்தி வெடிக்கும் - மாணவர் ஒன்றியம்.

சாணக்கியன் அவர்களே,

திலீபன் காலத்திலிருந்து போராட்டத்தில் இணைந்தவர்கள் மாணவர்கள் இல்லையா? இன்று போராட்ட களத்தில் நிற்பவர்கள் மாணவர்கள் இல்லையா? அதை விட இன்றும் இந்த வேளையில் தமது நாளாந்த கடமைகளில் ஒன்றாக, ஆயதப்பயிற்ச்சியையும் பெறுபவர்கள் மாணவர்கள் இல்லையா?எதையவது ஒன்றை சொல்லும் முன் ஒரு முறை யோசியுங்கள்.!

மாணவர் சக்தி வெடித்தல் என்றால், ஈழத்து மாணவர்கள் எல்லோரும் ஆயுதம் ஏந்தல் என்று அர்த்தம் கொள்ளல் மடமை.

பறவைகள் அவர்களே,

நீங்கள் கூறுவதன்படியே ஏற்கனவே நடைபெறும் ஒன்றை இனிமேல் செய்யப் போவதாக எச்சரிக்கை விடுவதன் நோக்கம் என்ன?

அறிக்கை விட்டவர்களின் மனதில் தோன்றும் புரட்சி என்பது மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வீதிகளில் இறங்கி போரில் ஈடுபடும் சினிமாப்பாணியே.

அவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தால் வளாவிருப்பது தான் ஏன்? புலிகள் கோபித்துக் கொள்வார்கள் என்பதனாலா?

அல்லது அவர்களது வேண்டுகோளுக்கு எதிரி செவிசாய்பான் என்ற நப்பாசையா?

தற்போது தேவை அறிக்கையல்ல செயற்பாடுகளே. எதிரி முழுநேர மற்றும் முழுபலத்துடனான செயற்பாட்டை ஆரம்பித்து விட்டான்.

விவேகமான இரண்டு வழிகள் எனில் அவையாவன, எதிரிக்கு எதிரான உணர்ச்சிவசப்படாத விவேகமான செயற்பாடு. அல்லது அறிக்கை விட்டு ஆபத்தை விலைக்கு வாங்காமல் அமைதி காத்து முடிந்தால் தன்னையும் தன்னுடன் கூட உள்ளவர்களையும் காப்பது.

(இங்கே நான் ஏற்கனவே இணைந்து செயற்படுபவர்களை பற்றி குறிப்பிடவில்லை)

தற்போது நம்முன்னேயுள்ள பிரச்சனை எதிரியின் முற்றுகைக்குள் அகப்பட்டுள்ள மக்களைளும் மாணவர்களையும் திட்டமிட்ட இன அழிப்பிலிருந்து காப்பது எப்படி என்பதே என்பதை மனதில் கொள்ளவும்!

Edited by saanakiyan

இப்படியான அறிக்கைகளை விட்டுவிட்டு அவர்கள் போராடுகின்றார்களோ இல்லையோ?? ஆனால் இப்படியான அறிக்கைகள் மேன்மேலும் பல அப்பாவித் தமிழ் மாணவர்களை சிங்கள அரசாங்கம் இதையே காரணம் காட்டி கொன்று குவிக்கவே உதவும். :):)

Edited by Vasampu

எம்மீதான அச்சுறுத்தலை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.

இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களாகிய நாம் வாசலில் காத்து நின்ற சிங்களப் படைகளால் பலத்த கொடுபிடிகளுக்கு உள்ளாகி உள்ளோம். தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்கள்இ ஆசிரியர்கள் அனைவரையும் சரீர சோதனைக்கும்இ உடமைச் சோதனைக்கும் உட்படுத்திய படையினர் எம்மை கடுமையாக அச்சுறுத்தி பாடசாலைக்கு அனுப்பினர்.

மிகுந்த அச்சத்துடனேயே பாடசாலை நேரத்தை கழிக்கும் நாம் பாடசாலை செல்ல அஞ்சுகின்றோம். எமது பாடசாலைகளுக்கு சிங்களப்படைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் எம்மை படையினர் கடுமையாக அச்சுறுத்தி உள்ளனர்.

சுதந்திரமாக கற்கும் உரிமை பறிக்கப்பட்ட எமக்கிருந்த பாடசாலைக்கு சும்மாவாவது சென்றுவரவிருந்த அற்ப சுதந்திரத்தையும் படையினர் பறித்துள்ளனர். சிறுவர் அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புகளும் இவ்வாறான அச்சுறுத்தல்களை பார்த்துக் கொண்டு சும்மா இருத்தல் கூடாது. உடனடியாக அரச படைகளிடமிருந்து எம்மை பாதுகாக்குமாறு மன்றாட்டமாக வேண்டுகின்றோம்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

அறிக்கை விடுவது யாரோ அனுபவிப்பது யாரோ?

பகிஸ்கரிப்பு மறியல் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது.

மீதமிருப்பவர்களை மீட்டு எடுப்பதே இப்போதுள்ள பிரச்சனை!

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகள் அவர்களே,

நீங்கள் கூறுவதன்படியே ஏற்கனவே நடைபெறும் ஒன்றை இனிமேல் செய்யப் போவதாக எச்சரிக்கை விடுவதன் நோக்கம் என்ன?

அறிக்கை விட்டவர்களின் மனதில் தோன்றும் புரட்சி என்பது மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வீதிகளில் இறங்கி போரில் ஈடுபடும் சினிமாப்பாணியே.

அவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தால் வளாவிருப்பது தான் ஏன்? புலிகள் கோபித்துக் கொள்வார்கள் என்பதனாலா?

அல்லது அவர்களது வேண்டுகோளுக்கு எதிரி செவிசாய்பான் என்ற நப்பாசையா?

தற்போது தேவை அறிக்கையல்ல செயற்பாடுகளே. எதிரி முழுநேர மற்றும் முழுபலத்துடனான செயற்பாட்டை ஆரம்பித்து விட்டான்.

விவேகமான இரண்டு வழிகள் எனில் அவையாவன, எதிரிக்கு எதிரான உணர்ச்சிவசப்படாத விவேகமான செயற்பாடு. அல்லது அறிக்கை விட்டு ஆபத்தை விலைக்கு வாங்காமல் அமைதி காத்து முடிந்தால் தன்னையும் தன்னுடன் கூட உள்ளவர்களையும் காப்பது.

(இங்கே நான் ஏற்கனவே இணைந்து செயற்படுபவர்களை பற்றி குறிப்பிடவில்லை)

தற்போது நம்முன்னேயுள்ள பிரச்சனை எதிரியின் முற்றுகைக்குள் அகப்பட்டுள்ள மக்களைளும் மாணவர்களையும் திட்டமிட்ட இன அழிப்பிலிருந்து காப்பது எப்படி என்பதே என்பதை மனதில் கொள்ளவும்!

அறிக்கை விட்டவர்கள் செயற்பாட்டளர்கள் இல்லாமல் புகலிடத்தில் ஓடி ஒளிந்திருக்கும் எம்மை போன்றவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் சார்பான 100 வீதம் சரியான கருத்தே! ஆனால் அறிக்கை விட்டவர்களும், அறிக்கை விடப்பட்ட இடமும் செயலாலும் உணர்வாலும் ஒன்றித்து நிற்க்கும் இடம் என்பதையும், அந்த மாணவர் சக்தி பல வெளிச் சொல்ல முடியாதவற்றை தமிழீழத்திற்காய் அற்பணிப்புடன் செய்கின்றார்கள் என்பது நம்மை போல் ஓடி வந்தவர்களுக்கு தெரியாது.

நீங்கள் சொல்லும் எதிரியின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அவர்கள். இன்றும் கிபீர் சத்தங்களை கேட்டு படிப்பை பாதியில் விட்டுத்தான் ஓடிகின்றனர். போடும் குண்டில் இந்த மாணவர் சமூதாயமும் தான் அழிகின்றது. அதையும் கவனத்தில் எடுத்து கருத்து வையுங்கள்,

இதை தவிர தமிழீழத்தை நாங்கள் அளவுக்கதிகமாக நேசித்தாலும், அந்த மண்ணில் வாழும் தமிழீழத்தமிழர்களது அறிக்கைகளையோ, ஆதங்கங்களையோ விமர்சிக்கும் அளவுக்கு உரிமையற்றவர்களாகவே நாம் இருக்கின்றோம். ஏனெனில் அர்பணிப்பு நிறைந்த செய்ற்ப்பாட்டையும், இழப்பையும் தாங்குவது அந்த உறவுகளே!

இப்படியான அறிக்கைகளை விட்டுவிட்டு அவர்கள் போராடுகின்றார்களோ இல்லையோ?? ஆனால் இப்படியான அறிக்கைகள் மேன்மேலும் பல அப்பாவித் தமிழ் மாணவர்களை சிங்கள அரசாங்கம் இதையே காரணம் காட்டி கொன்று குவிக்கவே உதவும். :lol::lol:

உங்களுக்கும் சிலருக்கும் வம்பு பண்ணுவதும், தேவையற்றவற்றை இணைத்து சொல்வதும் தொழிலாகிவிட்டது போல, அவர்கள் அறிக்கையையாவது விட்டார்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்? யாழ் இணையத்தில் வந்து எவன்டா புலிகளுக்கெதிராய் கதைப்பான் எப்படா அவனுக்கு ஆதரவாக பேசலாம் என்று தானே பாத்து கொண்டிருக்கின்றீர்கள், இவற்றிலும் அவை மேல் வசம்பு அவர்களே!

வாய் இருந்தால் பேசலாம், எதையும் எப்படியும் எங்கேயும்,

உணர்விருந்தால் புரியும், உரிமையின் முக்கியம், உறவின் இழப்பு, விடுதலையின் வேண்டல் உணர்விலிருந்தே பல செயற்பாடுகளின் வடிம் பெறுகின்றன. யாழ் களம் உட்பட!

அறிக்கை விடுவது யாரோ அனுபவிப்பது யாரோ?

பகிஸ்கரிப்பு மறியல் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது.

மீதமிருப்பவர்களை மீட்டு எடுப்பதே இப்போதுள்ள பிரச்சனை!

சாணக்கியன் ரொம்ப புத்தி சாலி என்று நினைச்சன்பா பட் நீங்களும் உணர்வுக்கு அடிமை என்றதை காட்டீட்டீங்க பறவாயில்லை. சரி போனவர்கள் போகட்டும் என்று விட்டாலும் மீதமிருப்பவர்களை மீட்க உங்க சாணக்கியத்தை காட்டுங்களன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.