Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் 17 பாடசாலைகளின் மாணவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர் – சில பிரச்சனைகளுக்கு உடன் தீர்வு

Featured Replies

துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடார்புபட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றத்தின் ஊடாக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார்;.

அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் மீள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் ஏற்பட இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (26) காலை யாழ்ப்பாணத்திற்கு திடீரென மேற்கொண்ட விஜயத்தின்போது வடமாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்தபோதே இவ்வாறு வலியூறுத்தினார்.

இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வட மாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்து உரையாடினார்.

சுமார் 17 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டதுடன் அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதைத் தொடர்ந்து அவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் கேட்டறிந்தார்.

தமது பாடசாலைகளில் காணப்படும் ஒரு சில குறைபாடுகள் தொடர்பாக மாணவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கமூட்டினர்.

உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவின்மை, விளையாட்டு மைதான நிர்மாணிப்பு, ஆசிரியர்களின் பற்றாக்குறைகளைப் போன்று, விசேடமாக வவூனியா பாடசாலை மாணவHகள் எதிர்கொண்டுள்ள போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு விளக்கமூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு சில பிரச்சினைகளுக்கு சனாதிபதி அதே சந்தHப்பத்தில் உhpய உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொண்டு தீர்வூகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

எழுத்துமூலம் பலப் பிரச்சினைகள் சமHப்பிக்கப்பட்டதுடன் இதற்காக தனியான உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு பாடசாலை மாணவர்களுக்கிடையே அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு விளக்கமூட்டப்பட்டதுடன், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரை அறிவூறுத்தி விசேட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

அதனைத் தொடர்ந்து சனாதிபதி யாழ் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்தார். அவர்களிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் இது குறித்து தான் பொலுதும் கவலையடைவதாக ஜனாதிபதி கூறினார்.

அதனைத் தொடர்ந்து யாழ் நாக விஹாரைக்குச் சென்ற சனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீHவாதம் பெற்றுக்கொண்டாh;.

விஹாராதிபதியை சந்தித்த ஜனாதிபதி அவருடன் உரையாடியதுடன் விஹாரையின் குறைபாடுகள் தொடர்பில் விஹாராதிபதி விளக்கமூட்டினார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோர் ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர்.

http://globaltamilnews.net/gtmn/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120175/language/ta-IN/article.aspx

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
நீதிமன்ற தாக்குதலில் கைதான மாணவர்களை விடுவியுங்கள்; கூட்டாக இணைந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை
229cce6a8aa66ee3b83e84e09543a050.jpg
நீதிமன்ற வளாகம் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டவர்களுள்  பாடசாலை மாணவர்களும் உள்ளனர் எனவே அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு மாணவர்கள், ஆசிரியர்கள், வடக்கு முதல்வர் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களும்  கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். 
IMG_7978%281%29.jpg
 
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி  யாழ். வேம்படி  பெண்கள் உயர்தரப்பாடசாலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
 
அதன்போதே அனைவரும் கூட்டாக இணைந்து மேற்குறிப்பிட்ட கோரிக்கையினை முன்வைத்தனர். 
 
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 
 
குங்குடுதீவு மாணவி வன்புணர்வின்  பின்னர் கொலை செய்யப்பட்டார்.அதன்பின்னர் யாழ்ப்பாணத்தின்  பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 
 
கடந்த 20 ஆம் திகதி யாழ்.நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாகமாறி 130 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்தனர்.
IMG_7963%281%29.jpg
 
இவர்களுள் சமபவத்தில் பங்கு கொள்ளாத மாணவர்களும் வேடிக்கை பார்க்க வந்த மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இவர்களில் பலர் உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர். பரீட்சைக்காலம் நெருங்குவதனால் அப்பாவி மாணவர்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டனர்.
 
அத்துடன்  நீதிமன்ற வளாகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அவற்றை ஜனாதிபதியிடம் வழங்கியதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
IMG_0073.jpg
 
இதனையடுத்து அவர்கள்  மத்தியில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,  நீதிமன்றம்  தாக்கப்பட்ட விடயம்  தொடர்பில் நான் அறிவேன். அதில் பாடசாலை மாணவர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர் என வடக்கு முதல்வர் உள்ளிட்டவர்கள் எனக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 
 
எனவே மிகவிரைவில் அவர்களுக்கு விசாரணை நடாத்தி குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்படுமிடத்தில் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=450964052926359894#sthash.14AQ22Xe.dpuf

 

வித்தியா படுகொலை வழக்கு சிறப்பு நீதிமன்றம் மூலம் துரிதமாக விசாரணை – மைத்திரி உறுதி MAY 26, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள்

maithiri-jaffna-3-300x200.jpgபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம் ஊடாக துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

வித்தியா படுகொலையை அடுத்து எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து நேரில் பார்வையிடுவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

இன்று காலை 10.15 மணியளவில் யாழ். மாநகரசபை மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய சிறிலங்கா அதிபரை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து, யாழ். வேம்படி உயர்தர பெண்கள் பாடசாலைக்குச் சென்ற சிறிலங்கா அதிபர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

வட மாகாணத்தில் உள்ள 17 பாடசாலை மாணவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட, மைத்திரிபால சிறிசேன, அவற்றைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.

maithri-jaffna-1.jpgmaithri-jaffna-2.jpgmaithri-jaffna-3.jpgmaithri-jaffna-4.jpgmaithri-jaffna-5.jpgmaithri-jaffna-6.jpg

குறிப்பாக வித்தியா படுகொலையை அடுத்து மாணவிகளுக்கு எழுந்துந்ந பாதுகாப்பு பிரச்சினை மற்றும் பாடசாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ள பாதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை குறித்தும் சிறிலங்கா அதிபருக்கு மாணவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு, மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம் ஊடாக துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்கா அதிபர் உறுதியளித்தார்.

அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை நாட்டில் ஏற்பட இடமளிக்கமாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக, பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்தி சிறிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுனரின் அதிகாரபூர்வ வதிவிடத்துக்குச் சென்ற, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அங்கு,  மாணவி வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரனைச் சந்தித்து, கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதன் பின்னர், யாழ். நாகவிகாரைக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு விட்டு கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அதன் பின்னர், யாழ். நாகவிகாரைக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு விட்டு கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றார்.

 

 

 

வந்த பிரதான நோக்கத்தை நிறைவு செய்யாமல் போக முடியுமா என்ன. :o:icon_idea::rolleyes:

புங்குடுதீவுக்குப் போகப் பாதுகாப்புப் பிரச்சனை. அதுவும் ஹெலியில. ஆனால் நாகர்விகாரைக்குப் போக ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் கல்லெறி.. வன்முறை நடந்தது.. யாழ்ப்பாணத்தில். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG_7963%281%29.jpg

 

 

ஆண்டவா அளவுக்கு மிஞ்சி நீண்டவா.....
 

 

maithri-jaffna-1.jpg

 

என்னானுடைய சிவனே போற்றி...

IMG_7963%281%29.jpg

 

 

ஆண்டவா அளவுக்கு மிஞ்சி நீண்டவா.....
 

 

maithri-jaffna-1.jpg

 

என்னானுடைய சிவனே போற்றி...

 

உங்களுக்கு ஒரு நக்கல்  பொறுத்திருந்து பாருங்கள்  சாதிக்கப் பிறந்த மனுஷன் (விக்கி ஐயாவை  சொல்கின்றேன்)

  • கருத்துக்கள உறவுகள்

யாரும்.... எதிர் பாராத ஒரு விடயத்தை.....
வடமாகாண முதலமைச்சர் விக்கியுடன் இணைந்து மைத்திரி செய்தமை பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்வில்... சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களது தலை தென்படாதது இன்னும் சிறப்பு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.